Jump to content

4-0 என்ற கணக்கில் இங்கிலாந்‍தை தோற்கடித்து ஆஷஸ் கிண்ணத்தை கைப்பற்றிய ஆஸி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

4-0 என்ற கணக்கில் இங்கிலாந்‍தை தோற்கடித்து ஆஷஸ் கிண்ணத்தை கைப்பற்றிய ஆஸி.

ஹோபார்ட்டில் நடந்த ஐந்தாவது இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 146 ஓட்டங்களினால் இங்கிலாந்தை தோற்கடித்த அவுஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Image

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. 

4 போட்டிகள் முடிவில் அவுஸ்திரேலியா 3-0 என தொடரைக் கைப்பற்றி இருந்தது. இதில் ஒரு போட்டி சமனிலையில் முடிந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆவதும் இறுதியுமான டெஸ்ட போட்டி ஹோபர்ட்டில் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 303 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி சதமடித்து 101 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து சார்பில் பந்து வீச்சில் பிராட், மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரோபின்சன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 188 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

அணி சார்பில் அதிகபடியாக கிறிஸ் வோக்ஸ் 36 ஓட்டங்களையும், ஜோ ரூட் 34 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலண்ட் ஒரு விக்கெட்டினையும் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனால் 123 ஓட்ட முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 155 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 37 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும், பிராட் 3 விக்கெட்டுகளையும் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 271 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பேர்ன்ஸ், ஜாக் கிராலி ஆகியோர் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 68 ஓட்டங்களை சேர்த்தது. 

பின்னர் ரோரி பேர்ன்ஸ் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கிராலி 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

இதன்போது இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 82 ஓட்டங்களை எடுத்திருந்தது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் நீண்ட நேரம் தாக்கு பிடிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 124 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Image

இதனால் அவுஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை கைப்பற்றியது.

ஆட்ட நாயகன் விருதும் தொடர் நாயகன் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது.

Image
 

 

https://www.virakesari.lk/article/120824

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தை “வைட் வோஷ்” செய்திருக்கவேண்டும். கவலையாக இருக்கிறது.☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.