Jump to content

தமிழ் முஸ்லிம்களின் பொங்கல் கொண்டாட்டம் கொண்டிருக்கும் சேதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் முஸ்லிம்களின் பொங்கல் கொண்டாட்டம் கொண்டிருக்கும் சேதி

கோம்பை அன்வர்

நீங்களும் - அதாவது முஸ்லிம்களும் - பொங்கல் கொண்டாடுவீர்களா?

சந்தேகமும் ஆச்சர்யமும் கலந்த பல நண்பர்களின் கேள்விகள், எனக்கோ அல்லது என் குடும்பத்தினருக்கோ புதிதல்ல. ஒன்றல்ல, இரண்டல்ல; 16 வகை காய்கறிகளுடன் காலகாலமாகப் பொங்கலைக் கொண்டாடிவரும் எங்களுக்கு இது போன்ற கேள்வி வேடிக்கையாக இருக்கும் என்றால் மிகையாகாது.

spacer.png

கோம்பை அன்வர் தன் குடும்பத்துடன், பொங்கல் விருந்தில்

spacer.png

இருப்பினும் இந்தக் கேள்விக்குப் பல காரணங்கள் உள்ளதை மறுக்க முடியாது. அவற்றில் மிக முக்கியமானது இஸ்லாம் மற்றும் தமிழக இஸ்லாமியர் குறித்த தட்டையான புரிதல் ஆகும். இஸ்லாம் குறித்த தட்டையான புரிதலுக்கு பல இஸ்லாமியர்களும் விலக்கல்ல. அதுபோலவே இந்து - முஸ்லிம் வரையறைகளைக் கடந்த தமிழ்ப் பண்பு ஒன்று பொங்கலுக்கு உண்டு என்பதை இந்துக்களிலும் பலர் அறிந்திருப்பதில்லை.

டெல்லி சுல்தான்களையும் முகலாயரையும் வைத்துப் பெரும்பாலும் கட்டமைக்கப்பட்ட இந்திய வரலாற்றில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஓர் இஸ்லாமிய சமூகம் தமிழகம், இலங்கை மற்றும் தென் கிழக்கு ஆசியா வரை பரவிக் கிடப்பதும், அது தனக்கென்று பல தனித்துவக் கூறுகளைக் கொண்டிருப்பதும் பலருக்கும் தெரியாது.

வரலாறு தெற்கில் ஆரம்பிக்கிறது

சங்க காலம் தொட்டே தமிழகத்திற்கும் அரேபியா உட்பட்ட மேற்கு ஆசியாவிற்கும் இடையே கடல்வழி வணிகத் தொடர்புகள் இருந்ததைப் பல சங்கப் பாடல்களும், சமீபத்திய அகழ்வாராச்சிகளும் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. அரேபிய பாலைவனத்தில் 7ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் பரவத் தொடங்கிய சமகாலத்திலேயே அது வணிகர்கள் மூலமாக தமிழகத்தை வந்தடைந்தது. இங்கு நிலவிய சமூகச் சூழல், இறைநேசர்கள் எனப்படும் சூபிக்களின் பரப்புரை மற்றும் தமிழக அரசர்களின் ஆதரவுடன் இஸ்லாம் தமிழகத்தில் வேரூன்றியது. இதற்குக் கிட்டதட்ட 500 வருஷங்களுக்குப் பிறகே வட இந்தியாவில் இஸ்லாம் ஒரு வலுவான மதமாகப் பரவியது என்ற தகவல் இங்கே முக்கியமானது. அதிலும், அங்கே போர்கள், படையெடுப்புகள் இதில் முக்கியப் பங்கு ஆற்றின. இங்கே வாணிபரீதியிலான உறவு மிக இணக்கமான ஓர் உறவை உருவாக்கியிருந்தது.

spacer.png

திராவிடக் கட்டிடக் கலையில் கட்டப்பட்ட கீழக்கரை  பள்ளிவாசல்

திராவிடக் கட்டிடக் கலையில் கட்டப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான பள்ளிவாசல்கள், பிற சமயங்களுக்கு இணையாக தமிழ் இலக்கியத்திற்கு இஸ்லாமியரின் பங்களிப்பு, சிலம்பம் என்று தமிழ் மண்ணோடு இஸ்லாம் ஐக்கியமானது. பன்மைத்துவம் இறைவாக்காக திருக்குரானில் (சூரத்துல் ஹுஜுராத் 49.13) அமைந்திருக்கையில், இது இயல்பானதுதான்.

ஆகவே, தமிழர் திருநாளான பொங்கலையும் தமிழ் முஸ்லிம்கள் இஸ்லாமிய நெறிகளுக்கு உட்பட்டு கொண்டாடிவருகின்றனர். இங்கே இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். தமிழகம் முழுக்கப் பிராந்தியத்திற்கும், சாதிக்கும் ஏற்ப சின்னச் சின்ன வேறுபாடுகளுடனேயே பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. உதாரணமாக, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மற்றும் சைவ பிள்ளைமார் சமூகத்தினர் சங்கு ஊதி பொங்கலைக் கொண்டாடுவார்கள்.  

ஊருக்கேற்பக் கொண்டாட்டம்

இதுபோலவே விவசாயத்தைச் சார்ந்து வாழும் தமிழ் இஸ்லாமியரிடையே பொங்கல் கொண்டாட்டங்கள் பிராந்தியத்திற்கு ஏற்றவாறு மாறும். தேனி மாவட்டத்தில் உள்ள எங்கள் வீட்டில் சர்க்கரைப் பொங்கலுடன் ஆரம்பிக்கும் திருநாள் மதிய விருந்தில் 16 வகை காய்கறிகளுடன் களை கட்டும். அன்று மட்டும் கவிச்சி கிடையாது. பரிமாறப்படும் பெரும்பாலான காய்கறிகள் வயலிலிருந்து வந்தவையாக இருக்கும். மாட்டுப் பொங்கல் அன்று பண்ணை மாடுகள் குளிப்பாட்டி அலங்கரித்து, கொம்புக்கு வர்ணம் பூசி ஊரை வலம் வரும்.

மதுரை மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டி கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டத்தில் பரம்பரை பரம்பரையாக, பங்காளிகளாக, மஞ்சு விரட்டு இன்றும் பங்கேற்கும் முஸ்லிம் குடும்பங்களும் (நாலு வீட்டுக்காரங்க குடும்பம்) உண்டு.  

spacer.png

நாவினிப்பட்டி முஸ்லிம்கள் கொண்டாட்டம்

சுமார் 50/60 ஆண்டுகளுக்கு முன் மேலத்தஞ்சை - கீழத்தஞ்சை என அழைக்கப்பட்ட ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தின் கீழ்ப்பகுதியின் பெரும்பாலான கிராமங்கள் முஸ்லிம் மிராசுதாரர்களை கொண்டது.

மிராசுதாரர்கள் என்பவர்கள் நிலச்சுவான்தார்கள், இவர்களின் வாழ்வாதாரமே விவசாயம். “பொங்கல் வருவதற்கு முன்பே, வயலிலிருந்து ஒரு மூட்டை நெல் மட்டும் அறுவடைசெய்து மிராசுதார் வீட்டுக்கு வரும். மூட்டையுடன் ஒரு பெரிய கட்டு அடிக்கப்படாத நெற்கதிர்கள் வரும். சிட்டுக்குருவிகள் சாப்பிடுவதற்காக நெற்கதிர்களை முற்றத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடுவார்கள். நெல்லை அவித்துக் காயவைத்து தை முதல் நாள் சமைப்பதற்கு ஏதுவாக கைக்குத்தல் அரிசியாக மாற்றி, தை முதல் நாள் அதாவது பொங்கலன்று அதை சமைத்து விருந்துண்டு கொண்டாடுவார்கள். இந்தக் கொண்டாட்டத்துக்கு ‘புது அரிசிச் சோறு விருந்து’ என்று பெயர். அக்கம் பக்கம் வீட்டார்களையும் உறவினர்களையும் அழைத்து இந்த விருந்தோம்பல் நடக்கும்.

spacer.png

கீரனூர் முஸ்லிம்கள் கொண்டாட்டம்

கிட்டத்தட்ட கூட்டாஞ்சோறுபோலத்தான் இதுவும். இதுதான் தஞ்சை ராவுத்தர் வீட்டு பொங்கல்” என்று நினைவுகூர்கிறார் கூத்தாநல்லூரைச் சார்ந்தவரும், ‘முஸ்லிம் முரசு’ இதழின் முன்னாள் ஆசிரியருமான சடையன் அமானுல்லா.

“ராவுத்தர் வீட்டுப் பொங்கல் என்றால், கவிச்சி இல்லாமலா? ஆகையால், புது அரிசிச் சோறு விருந்துக்கு இறைச்சி ஆணமோ அல்லது தால்ச்சாவோ சமைத்துப் பரிமாறுவார்கள். அனைத்து மிராசுதாரர்களின் வீட்டிலும் புது அரிசிச் சோறு விருந்து ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தாலும், ஒரே நாளில் விருந்து வைத்தால் யாரும் சாப்பிட வர மாட்டார்கள் என்பதால், முதல் மூன்று நாட்களோ அல்லது ஏழு நாட்களோ தங்களுக்குள் கிழமையைப் பிரித்துக்கொண்டு விருந்துபசாரம் நடக்கும்.

வீட்டில் விருந்து நடப்பதற்கு முன்னால் அந்த முஹல்லாவில் இருக்கும் பள்ளிவாசல் இமாமிற்கும் மோதியாருக்கும் மற்ற பள்ளிவாசல்களின் ஊழியர்களுக்கும் மறக்காமல் தூக்குச் சட்டியில் சாப்பாடு அனுப்பிவைப்பார்கள். இதுதான் தஞ்சை முஸ்லிம்கள் கொண்டாடும் பொங்கல்” என்று அடுக்குகிறார் சடையன் அமானுல்லா.  

மாட்டுப் பொங்கலும் உண்டு

அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் நாளன்று, மிராசுதார் வீட்டு உழவு மாடு, கறவை மாடு வில் வண்டி இழுக்கும் மாடுகள் அனைத்தும் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு, மதுரை - தேனி மாவட்ட முஸ்லிம்களைப் போல் மாடுகளைக் குளிப்பாட்டி வண்ணச் சாயங்கள் பூசி, நெட்டியால் (pith) செய்யப்பட்ட மாலைளை கழுத்து, கால், நெற்றி என அணிவித்து, மாட்டுக்குப் பொங்கல், வாழைப்பழம், கரும்பு கொடுத்து சுதந்திரமாக விட்டுவிடுவார்கள். சிறுவர்கள் மாடுகளை ஊர்வலமாக அழைத்து சென்று, வீட்டுக்கு வீடு மாட்டுக்காகக் கொடுக்கப்படும் வாழைப்பழம், கரும்பு, அகத்தி கீரைகளை வாங்கி மாடுகளுக்குக் கொடுப்போம். அது ஒரு காலம்” என்கிறார் சடையன் அமானுல்லா. 

மிராசுதாரர்களோ இல்லையோ, குமரி மாவட்ட முஸ்லிம்களிடம் ‘புது அரிசிச் சோறு விருந்து’ போன்றவை புழக்கத்தில் இருந்துள்ளன.

கிழக்கு ராமநாதபுரம் வட்டார முஸ்லிம்களின் பொங்கல் கொண்டாட்டங்கள் சற்றே மாறுபடுகின்றன. “விளைந்தது வீட்டிற்கு வருவதை வரவேற்க போகி நாளில் வீட்டைக் கழுவி சுத்தம்செய்து வைப்பார்கள். தை முதல் நாளன்று புது நெல்லை குத்தி அரிசியாக்கி அதைப் பொங்கல் வைப்பர். இதன் பெயர் பாச்சோறு. புத்தரிசியை உரலில் இடித்து துள்ளும் பக்குவம் வந்தவுடன் அத்தோடு கருப்பட்டி அல்லது வெல்லம் கலந்து அதைக் கொழுக்கட்டைபோல் பிடித்து வைப்பர். இதன் பெயர் துள்ளுமாவு. பாச்சோற்றுடன் துள்ளுமாவு வைத்து ஏழு அல்லது பதினோரு கன்னி வைத்து கட்டப்பட்ட மரிக்கொழுந்தையும் வைத்து இறைவனுக்கு நன்றி சொல்லி பிரார்த்துவிட்டு அதனை அனைவருக்கும் பகிர்ந்துண்ணக் கொடுப்பர்.

வீட்டில் நெல்லைச் சேமித்து வைக்கும் மரசலின் நான்கு மூலைகளிலும் சிறிது பாலை ஊற்றி ஊதுபத்தி கொளுத்தி வைத்து இறைவனிடம் வேண்டியபின் புது நெல்லைக் கொட்டி சேமித்து வைப்பர். வீட்டில் மாடு கன்று வைத்திருப்போர் அவற்றைக் குளிப்பாட்டி செந்துருக்கப் பொட்டு வைத்து கொம்பிற்கு வர்ணம் பூசி, படைத்த பாச்சோறில் அதற்கான பங்கையும் வாழை இலையில் வைத்து கொடுத்து மகிழ்வர் என்கிறார் முதுகுளத்தூரைப் பூர்விகமாக கொண்ட வரலாற்று ஆய்வாளர் ஜாகிர் ஹுசைன்.

இது போன்று ஊர் ஊருக்கு, சிறு மாற்றங்களுடன் விவசாயத்தோடு ஒன்றிப்போன தமிழ் முஸ்லிம் சமுதாயம் பொங்கலை இஸ்லாமிய நெறிக்குள் கொண்டாடிவருகின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடல் கடந்து தென் கிழக்கு ஆசியாவில் வணிகம்செய்தவர்கள் தமிழ் முஸ்லிம்கள். இப்படி வெளிநாடு சென்ற இடத்திலும் கொண்டாட்டம் தொடரும். மலேசியாவின் ஈப்போ நகரில் உள்ள தமிழ் முஸ்லிம் சமுதாயம் பொங்கலைக் கொண்டாடிவருகின்றனர்.

spacer.png
மலேசிய தமிழ் முஸ்லிம்கள் கொண்டாட்டம்

மாறும் தவறான புரிதல்கள்

இவ்வாறு பரவலாக தமிழ் முஸ்லிம்கள் பொங்கல் கொண்டாடினாலும் இதிலிருந்து மாறுபட்டவர்களும் உண்டு. கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, தட்டையான புரிதலுடன், அரபுக் கலாச்சாரத்தை இஸ்லாமிய வழிமுறைகளாக குழப்பிக்கொள்ளும் இயக்கவாதிகளின் பிரச்சாரத்தால் இத்தகு கொண்டாட்டங்கள் அந்தந்த வீட்டோடு முடங்கியதும் உண்டு. ஆனால், காலம் மாறுகிறது. திராவிட இயக்கமும், தமிழக அரசும் அதனை மதம் கடந்த தமிழர்த்  திருவிழாவாக முன்னிறுத்துவதும் இந்த மாற்றத்திற்கான முக்கியமான காரணம் ஆகும்.

வரலாற்று ஆய்வாளர் ஜாஹிர் ஹுசைன் கூற்றுப்படி, “மார்க்கத்தை ஏற்ற பின்னே எங்களுக்குக்  கிடைத்தவைதான் நோன்புப் பெருநாளும் தியாகத் திருநாளும். அதற்கும் மூத்த எங்களின் பண்பாட்டுத் திருநாள் பொங்கல் என்பதை நாம் மறந்துவிட முடியாது. பொங்கல் தமிழர்கள் நம் அனைவருக்குமான திருநாள். எங்களின் பண்பாட்டு வேர்களை எதன் பெயராலும் பட்டுப்போகச்செய்ய முடியாது.”

அரசியல் சூழலில் ஏற்படும் மாற்றங்களும் பண்பாட்டுத் தளத்தில் மாற்றங்களைக் கோருகின்றன. முன்னெப்போதையும்விட பொதுச் சமூகத்துடன் பிணைந்து நிற்பதை விரும்பும் முஸ்லிம் சமூகம் தனக்கான பண்பாட்டு வேர்களை மீண்டும் தேடிப் பிடிக்கிறது. மதரீதியிலான பிளவுகளைப் பரப்பப்படும் அரசியலுக்கு மொழிரீதியிலான ஒற்றுமை மூலம் அது பதில் கொடுக்கிறது. தமிழ்ப் பொங்கல் இனி கூடுதலாகத் தித்திக்கும்!

படங்கள் :

முகம்மது காசிம், ஜாஹிர் ஹுசைன் திவான், புர்ஹான் முகம்மது, கோம்பை அன்வர் 

 

https://www.arunchol.com/kombai-anwar-article-on-tamil-muslims-pongal

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

எங்கட நாட்டிலையும் கொஞ்சப்பேர் இருக்கினம் பாருங்கோவன்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

 

எங்கட நாட்டிலையும் கொஞ்சப்பேர் இருக்கினம் பாருங்கோவன்... 

அந்த சிவத்த தொப்பியோ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

 

எங்கட நாட்டிலையும் கொஞ்சப்பேர் இருக்கினம் பாருங்கோவன்... 

உலகம் மின்சார வாகனம்களுக்கு அவசர அவசரமாய் தாவிப்பாயுது இன்னுமொரு பத்து  வருடம் கணக்க  இல்லை அமீரகத்தில் எண்ணெய் கிணறுகள் நிறுத்தவேண்டிய நிலை வரும் அதோடை இவை பொங்கல் என்ன கதிர்காமத்துக்கு காவடி எடுத்தாலும் ஆச்சரியப்படுவதுக்கு இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, alvayan said:

அந்த சிவத்த தொப்பியோ/

😂😂
கொஞ்சம் உயரமான சிவப்புத் தொப்பி, தெரியுமோ அவையளை? கண்டிருக்கிறியளோ?

 

1 hour ago, பெருமாள் said:

உலகம் மின்சார வாகனம்களுக்கு அவசர அவசரமாய் தாவிப்பாயுது இன்னுமொரு பத்து  வருடம் கணக்க  இல்லை அமீரகத்தில் எண்ணெய் கிணறுகள் நிறுத்தவேண்டிய நிலை வரும் அதோடை இவை பொங்கல் என்ன கதிர்காமத்துக்கு காவடி எடுத்தாலும் ஆச்சரியப்படுவதுக்கு இல்லை 

ஆனால் அவங்களும் அதுக்கு ஏற்ற மாதிரி மாறீட்டாங்கள் என்டால் என்ன செய்ய?

 

1 hour ago, பெருமாள் said:

6 பேர் மற்றும் நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் இன் படமாக இருக்கக்கூடும்

இரத்தினபுரியில(?) படத்துக்கு போஸ் குடுத்தா மட்டும் காணாது, அதே மாதிரி எப்பவும் இருக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

ஆனால் அவங்களும் அதுக்கு ஏற்ற மாதிரி மாறீட்டாங்கள் என்டால் என்ன செய்ய?

பணம் இருக்கனும் சோழன் பணம் இப்ப சொறிலங்கா சீட்டு கட்டு சரிவதைப்ப்போல் சரியுது நம்ம சனம் பல களம்கள்  கண்டதுகள்   பிழைத்து விடும் சிங்களத்தால் முடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2022 at 01:12, நன்னிச் சோழன் said:

ஆனால் அவங்களும் அதுக்கு ஏற்ற மாதிரி மாறீட்டாங்கள் என்டால் என்ன செய்ய?

 அவர்களால் முடியாது ஏனென்றால் மின்சார வாகனம்களுக்கு தேவையான மிக முக்கிய  மின்கல தயாரிப்பில்  மூலப்பொருள் லித்தியம் தென்அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் சிலி ஆகிய நாடுகளில் குவிந்துள்ளது.அதே போல் மின்கல தயாரிப்பில் முக்கிய அடுத்த  மூலப்பொருளான cobalt காங்கோ ஜனநாயகக் குடியரசு வில் உலகத்தின்  கோபால்ட்டின் முக்கிய இருப்பு குவிந்து இருக்கிறது இவற்றை விட அவுஸ்ரேலியா லித்திய ஏற்றுமதியில் தற்போது முன்னிலையில் உள்ளத்துடன் அதிகப்டியான  லித்திய இருப்பும் உண்டு .

இப்படி மூலப்பொருள்கள் வேறு நாடுகளில் உள்ளது அரபு திமிர் உலகில் அல்ல  வரும் 20 ஆண்டுகளில் 500மில்லியன் மின்சார வாகனம்கள் இந்த பூமியில் சவாரி விடபோகினம் என்று எதிர்வு கூறல் உண்டு  அவை அனைத்தும் சிலிண்டருக்குள் வெடித்து கிளம்பும் நெருப்பு சக்தியின்றி  சேமிப்பு மின்சாரம் மூலம் இயங்க போகின்றன .

பணம் இருக்குது என்றவுடன் ஆடின ஆட்டம் இப்பவே உலகம் வேறுபக்கம் ஓடதுவங்கி விட்டது எனவே கவலைப்பட வேண்டாம் கொஞ்ச நாளில் முள்ளுக்காவடி தூக்குவினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 18/1/2022 at 12:10, பெருமாள் said:

பணம் இருக்குது என்றவுடன் ஆடின ஆட்டம் இப்பவே உலகம் வேறுபக்கம் ஓடதுவங்கி விட்டது எனவே கவலைப்பட வேண்டாம் கொஞ்ச நாளில் முள்ளுக்காவடி தூக்குவினம் .

எனக்கு இந்த விடையத்தில் அவ்வளவு அறிவில்லை. ஆனால் இவனுகள் வாங்கிக்கட்டினால் மகிழ்ச்சியே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நன்னிச் சோழன் said:

எனக்கு இந்த விடையத்தில் அவ்வளவு அறிவில்லை. ஆனால் இவனுகள் வாங்கிக்கட்டினால் மகிழ்ச்சியே!

உலகம் மின்சார கார்களுக்கு மாறும்போது மத்தியகிழக்கு எண்ணெய்  உற்பத்தி தேவை குறையும் உலகெங்கிலும் உள்ள செல்வத்தை சும்மா இருந்து சம்பாதித்தவை வருமானம் நின்றுவிடும் இலங்கை முஸ்லிம்களுக்கும் அரபுலகில் இருந்து வரும் நிதி வராது அப்போ வாயில் தவழும் தமிழ் ஏன் என்று சிந்திப்பார்கள் பழைய பூர்விகத்தை தேடுவார்கள் விடை அப்போ தெரியும் இப்ப தெரியாது .

கொசுறு லித்தியம் cobalt தயாரிக்கும் நிறுவனத்தின்  பங்குகள் இனி ஏறுமுகம்தான் அதிலும் எலான் மாஸ்க் லித்தியம் உப்பு மூலம்  பிரிந்தெடுக்கும் முறை மூலம் 30வீதம்  அதிகப்படியான செலவை குறைக்கும் முறைக்கு காப்புரிமை எடுத்துள்ளார் இனி அவரின் நிறுவனமும் மேலேதான் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.