Jump to content

கிளிநொச்சியில் கம்பன் கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் கம்பன் கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

 

 

 

கம்பன் கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கம்பவாரிதி ஜெயராஜ் தலைமையில் இடம்பெற்றது.

அகில இலங்கை கம்பன் கழகத்தின் சிந்தனைக்கு அமைவாக இளைஞர்களை வளப்படுத்தும் கம்பன் கலைக்கூடத்திற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன், யாழ். மாநகர சபை மேஜர் மணிவண்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், வடமாகாண அவை தலைவர் உள்ளிட்ட பலர் வருகைத்தந்தனர்.

வருகை தந்திருந்த விருந்தினர்கள் விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு வாழ்த்துரைகள் இடம்பெற்றன.

அதனைத்தொடர்ந்து குறித்த கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://athavannews.com/2022/1262291

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னேறிட்டாங்கய்யா! புளியடி, மதவடி, சந்தி. இப்போ  கலைக்கூடமாக மாறியிருக்கு. எதிலும் மாற்றம் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பியர் 1996 காட்சிகளை மறந்திட்டார். இதே குத்தியர் தான் சிங்கள இராணுவத்தோடு நின்று கொண்டு சூரியக் கதிர் ஒன்று நடவடிக்கையில்.. நல்லூரில் கட்டப்பட்டிருந்த கம்பன்கோட்டத்தை.. பிரபாகரனின் மாளிகை.. சொகுசு வாழ்க்கை என்று காட்டிப் பிரச்சாரம் செய்தவை. அப்ப குடும்பியர் மறுதலிக்கவே இல்லை.. காரணம்.. குடும்பியர் அப்ப கொழும்புக்கு புதிசு.. தூக்கி உள்ள வைச்சிட்டாங்கள். கடைசியா.. ஒரு தமிழ் பொலிஸ் அதிகாரிதான் உந்தக் கூழாத்தை விடுவிக்க உதவினது. 

இப்ப எல்லாம் மறந்து.. நடக்கட்டும் நடக்கட்டும்.

கம்பன் வம்பன் தான்.. ஆனால் நன்றி மறப்பவன் அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாணவரகளிற்கு இராணுவ பயிற்சி வேண்டும் - கம்பவரிதியின் புலம்பலை "ஆ"வென கேட்ட அரசியல்வாதிகள்

பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் ஒரு சில நாட்கள்
தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கலாம். என கம்பவாரிதி ஜெயராஜ் கூறிய நிலையில் அந்த
சபையிலிருந்து பல தமிழ்தேசிய அரசியல் கட்சிகளை சேர்ந்த  பிரமுகர்கள் மௌனம் காத்ததை காணகூடியதாக இருந்தது.

நேற்று (17) திங்கட்கிழமை கிளிநொச்சி பகுதியில் அமையவுள்ள கம்பன் கழகத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் சிங்கள சமூகத்தை விட தமிழ் சமூகத்திலேயேஆளுமையுள்ள பலர் உருவாகினர். ஆனால் தற்போது தமிழ் சமூகத்திலிருந்து ஆளுமையுள்ள பலரை உருவாக்க முடியாமல் போனமை வருத்தத்துக்குரிய விடயம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகம் எனக் கூறி அதற்கு பரிகாரம் கண்டு வருகிறோம். ஆனால் எதிர்காலத்தை எவ்வாறு மாற்றவேண்டும் என சிந்திக்கவில்லை. இலங்கையில் இனிவரும் காலங்களில் இரண்டு மொழிகளைப் பேசத் தெரிந்தால் மட்டுமே எமக்கான அங்கீகாரத்தை பெற முடியும்.

கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்படும் கம்பன் கழகத்தின் ஊடாக பல செயற்பாடுகளை மேற்கொள்ளதிட்டமிட்டுள்ள நிலையில் எமது எதிர்பார்ப்புகள் இப்போது கற்பனையாக உள்ள நிலையில் அதனை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.எமது கழகத்தின் ஊடாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குசெல்லும் வரை உள்ள காலப்பகுதியில் அவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியை வழங்குவதற்கு கம்பன் கழகம் திட்டமிட்டுள்ளது.

பல்கலைக்கழகம் தெரிவாகும் மாணவர்களை தெரிவின் அடிப்படையில் ஒரு பகுதியினரை தெரிவுசெய்து வெள்ளைக்காரர் ஒருவரை அழைத்து ஆங்கில மொழி பயிற்சி வழங்கப்படும். அதேபோல் சிங்கள மொழிப் பயிற்சிக்காக சிங்கள குடும்பம் ஒன்றில் இருவரை அனுப்பி ஒருவார காலம் அவர்களுடன் தங்கவைக்க வேண்டும். சிங்கள குடும்பத்துடன் தங்கும்போது அவர்களுக்கு மொழிகலாச்சாரம் மற்றும் புரிந்துணர்வை வழர்க்க முடிவதோடு இதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் கிடையாது. மேலும் இராணுவ முகாம்களுக்கு பல்கலைக்கழகமாணவர்ளை ஓரிரு நாட்கள் அனுப்புவதன் மூலம் தலைமைத்துவத்தை கற்பிப்பது உதவியாக இருக்கும் இதைப் பலர் ஏற்காமல் போகலாம் ஆனால் நான் உண்மையை கூறுகிறேன்.

அதுமட்டுமல்லாது தலைமைத்துவத்தை நடைமுறையில் கற்பதற்காக அரசியலில் உள்ளவர்கள் மற்றும்அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் வீடுகளுக்கு மாணவர்களை ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் பழகும்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

ஆகவே எமக்கு தென்னிந்திய அரசியல் தலைமைகளுடன் நல்ல தொடர்புகள் இருக்கிற நிலையில்வேண்டுமென்றால் அங்கேயும் சென்று பயிற்சிகளை பெற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனஅவர் மேலும் தெரிவித்தார். இந் நிகழ்வில் கடற்தொழில் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ,மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே சிவாஜிலிங்கம், கேசவன் சயந்தன், முன்னாள்மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா,முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே சிவஞானம், மற்றும் யாழ்.மாநகர ஆணையாளர் ஜெசீலன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

https://www.thaarakam.com/news/99556799-ad7a-4727-b5e1-74fac62524bb

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இராணுவ முகாம்களுக்கு பல்கலைக்கழகமாணவர்ளை ஓரிரு நாட்கள் அனுப்புவதன் மூலம் தலைமைத்துவத்தை கற்பிப்பது உதவியாக இருக்கும்

ஏது ....  மாணவர்கள் இராணுவத்துக்கு தலைமைத்துவம் கற்பிக்கப்போகிறார்களா?  எங்களின் அரசியல் கைதிகளுக்கு தலைமைத்துவம் கற்பித்து விட்டார்கள், முள்ளிவாய்க்காலில் அகப்படட பொதுமக்களுக்கு தலைமைத்துவம் கற்பித்து விட்டார்கள், இனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு கற்பிக்கபோகினம். இவர்களின் தலைமைத்துவதை பார்த்து வியந்த வெளிநாடுகள் தங்கள் நாடுகளுக்கு இவர்கள் வேணாம் என்று துரத்துகினம். இவருக்கோ இந்த காட்டேரிகள் தலைமைத்துவமாய் தெரிகிறது. இருக்கிற மரியாதையையும் இழக்கப்போகிறார் ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

இலங்கையில் இனிவரும் காலங்களில் இரண்டு மொழிகளைப் பேசத் தெரிந்தால் மட்டுமே எமக்கான அங்கீகாரத்தை பெற முடியும்.

அப்ப எனி இலங்கையில் கம்பன் வீட்டுத் தறியும் சிங்களம் பேசும் என்றீங்க. காலண்டா. குடும்பியர் எப்படி எல்லாம் ஆட்டிற்றார் குடும்பியை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்ப வாரிதியின் ஆரம்ப நாட்களில் அவர் எனது கல்லூரி நிகழ்வொன்றிற்கு வந்து அங்கு சொற்பொழிவாற்றும்போது "தான் வேலை எதுவும் இல்லாது திரியும்போது தனது தாயார் தன்னை ஏசி வீட்டிலிருந்து விரட்டியதாகவும், தான் சொற்பொழிவாற்றத் தொடங்கி சிறிது சிறிதாக பிரபலமடையத் தொடங்கியதன் பின்னரே அவரது ஏச்சு குறைந்ததாக" கூறியது இப்போதும் என் நினைவில் நிற்கிறது. (அவர் St. John's College மாணவர் என்பது என் நினைவு )

தாயார் இன்னும் கூடுதலாக ஏசியிருக்கலாமென்று தற்போது தோன்றுகிறது. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பவாரிதி எங்கண்ட யfனா ஹின்டு! 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்படி இருக்கு....மெல்ல மெல்ல இராணுவமும் பொலிஸும் நல்லவங்க என சொல்ல வாராங்கள் ....எது எப்படியோ கடைசியில் பணம் கேட்பது புலம்பெயர்ந்தவனிடம்...
சிறுவர்கள் பொலிசிலும் இராணுவத்திலும் இணையப்போகினமாம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.