Jump to content

முதலில் தம்மை, குடும்பத்தை பற்றி அல்ல, நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும்


Recommended Posts

முதலில் தம்மை, குடும்பத்தை பற்றி அல்ல, நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும்

முதலில் தம்மை, குடும்பத்தை பற்றி அல்ல, நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும்

தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக நிர்மாணிக்கப்பட்ட “டொம்லின் பூங்கா” மற்றும் “சஹஸ் உயன” நகர்ப்புற வாகன நிறுத்தப் பூங்கா ஆகியவை நேற்று (16) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் மூலோபாய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் ஊடாக இந்தப் பூங்காக்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

டொம்லின் பூங்காவின் நினைவு பலகையை பிரதமர் திறந்து வைத்தார். பிரதமர் அங்கு கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டதுடன், திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் முதன்மை ஆலோசகர் எம்.எம்.ஜே.இ.ஜி.பண்டார விளக்கமளித்தார்.

யாத்திரிகர்கள் இளைப்பாறுவதற்கு அறைகள், சுகாதார வசதிகள் மற்றும் 16 விற்பனை நிலையங்களை கொண்ட டொம்லின் பூங்காவை நிர்மாணிப்பதற்காக உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் செலவான தொகை 374 மில்லியன் ரூபாயாகும்.

அதனை தொடர்ந்து சஹஸ் உயன ´நகர்ப்புற வாகன நிறுத்தப் பூங்கா´-இற்கு விஜயம் செய்த பிரதமர் அதன் நினைவு பலகையை திறந்து வைத்தார். திறந்தவெளி அரங்கு, கைவினைப்பொருட்கள் கட்டிடத்தொகுதி, உணவருந்தும் பகுதி மற்றும் குழந்தைகள் பூங்கா ஆகியவற்றைக் கொண்ட இந்த பூங்காவில் ஓய்வெடுக்கும் பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் 531 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நகர்ப்புற வாகன நிறுத்துமிட பூங்கா ஏற்கனவே இந்த வாகன நிறுத்தப் பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் நியங்கொட விஜிதசிறி தேரர் அவர்களும் இதன்போது பங்கேற்றிருந்தார்.

அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் வெண்டறுவே உபாலி தேரர் இதன்போது அனுசாசனம் நிகழ்த்தினார்.

“இந்த நகரம் 1312 ஆம் ஆண்டு நான்காம் பராக்கிரமபாகு மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்டது. 21 ஆம் நூற்றாண்டில், நமது தற்போதைய அதிமேதகு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில், அந்த நகரத்தின் செல்வ வளத்தை எமக்கும், நமது நாட்டிற்கும், நமது குடிமக்களுக்கும் திரும்பக் கொடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இன்றைய ஜனாதிபதி இந்த நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். வரலாற்றில் மிகவும் வலுவான தலைமை மற்றும் வலுவான அரசாங்கத்தின் கீழேயே வளமான மக்கள் இருந்துள்ளனர். நமக்கு பல ஆட்சியாளர்கள் இருக்கலாம் ஆனால் தலைவர்கள் அவசியம்.

எனவே அந்தத் தலைமையின் கீழ் தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் அமர்ந்து இந்நாட்டுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கருத்துகளும் அணுகுமுறைகளும் குறிப்பாகத் தேவை. நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், நான்கு காரணிகள் கவனிக்கப்பட வேண்டும்.

முதலில் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். இரண்டாவது விடயம் அவர்களின் கடமையைப் பற்றி சிந்திக்க வேண்டும். மூன்றாவதாக, தமது குடும்பம் குறித்தும் அடுத்ததாக தம்மை பற்றியும் சிந்திக்க வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் அதனை தலைக்கீழாகவே பின்பற்றுகிறார்கள், முதலில் தங்களைப் பற்றியும், பின்னர் குடும்பத்தைப் பற்றி, பின்னர் கடமையைப் பற்றி, இறுதியாக நாட்டைப் பற்றி சிந்திக்கிறார்கள். எனவே, அந்தப் பாதையை மாற்றுவதற்கான நாட்டின் தலைமை இப்போது எங்களிடம் உள்ளது.

எனவே நாம் நமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். நாட்டில் நாம் எதிர்கொள்ளும் சவால்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் பிரதமருக்கு ஜனாதிபதிக்கு மட்டும் பொறுப்புகள் வழங்கப்படுமானால் இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவது கடினமாகும். எனவே, குடிமக்களாகிய நாம் அதற்கு ஆதரவளிக்க வேண்டும். ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருக்கும் ஒரு அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது உண்மையில் முக்கியமானது. அதிகாரப் போட்டியை வீழ்ச்சியடையச் செய்ய அதனை உதாசீனப்படுத்த முற்பட்டால், மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும், விமர்சனம் செய்ய வேண்டும், ஆனால் இது போன்ற நல்ல வேலையை இங்கே பாராட்ட வேண்டும்” என வணக்கத்திற்குரிய அனுநாயக்கர் தெரிவித்தார்.

வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் மற்றும் சமூகப் பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ திலும் அமுனுகம,

“கண்டி அதிவேக நெடுஞ்சாலை என்பது உங்கள் காலத்தின் அடிக்கல்லை அமைக்க நீங்கள் கனவு கண்ட ஒரு முன்னாள் திட்டமாகும். உங்களைப் போலவே மஹாநாயக்க தேரர்கள், அனுநாயக்க தேரர்களை சந்திக்க செல்லும் போது அவர்கள் கேட்பதும் அதிவேக நெடுஞ்சாலை செயற்பாடுகள் எப்படி என்றே எம்மிடம் கோருவர். நேற்றைய தினம் எங்களுக்கு நம்பிக்கையைத் தந்த மற்றொரு நாள்.

எஞ்சியவற்றை கலகெதர மற்றும் கடவத்தை மீரிகம பகுதி வரையான பகுதிகளை ஒன்றரை அல்லது இரண்டு வருடங்களுக்குள் முடிக்குமாறு பிரதமர் தெளிவான உத்தரவை வழங்கியதை நாம் பார்த்தோம்.

அத்துடன் எமது தலதா மாளிகையில் தரிசனம் செய்ய வரும் மக்களுக்கும் பக்தர்களுக்கும் அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு கண்டியில் இடமில்லை. இத்திட்டத்தின் மூலம் வெகு தொலைவில் இருந்து பேருந்தில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், தம்மை சுத்தம் செய்து கொள்வதற்கும், பூஜைக்கு தயார் செய்து கொள்வதற்கும், வழிபாட்டிற்கு தயாராவதற்கும் என நான்கு மாடி கட்டிடம் இத்திட்டத்தின் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.”

கண்டி மேயர் கேசர சேனாநாயக்க,

“30 வருடகால பயங்கரவாதத்தை ஒழித்து இந்த நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டைக் காத்த துணிச்சல்மிக்க தலைவராக பிரதமர் இலங்கை வரலாற்றில் இடம்பெறுகிறார். பிரதமர் மக்களால் மதிக்கப்படும் மக்கள் தலைவர் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு இன்றுடன் 52 ஆண்டுகள் பூர்த்தியாகிறது. கொவிட் தொற்றுநோயால் நாம் அனைவரும் பல சவால்களை எதிர்நோக்கி வரும் இவ்வேளையில் இந்த அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க கிடைத்தமையினால் நாமும் கண்டி மக்களும் பாக்கியவான்கள். இதற்காக கண்டி மாநகர சபையின் சார்பில் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்” எனத் தெரிவித்தார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் அதனை தலைக்கீழாகவே பின்பற்றுகிறார்கள், முதலில் தங்களைப் பற்றியும், பின்னர் குடும்பத்தைப் பற்றி, பின்னர் கடமையைப் பற்றி, இறுதியாக நாட்டைப் பற்றி சிந்திக்கிறார்கள்.

 

3 hours ago, nunavilan said:

பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும், விமர்சனம் செய்ய வேண்டும், ஆனால் இது போன்ற நல்ல வேலையை இங்கே பாராட்ட வேண்டும்”

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியுள்ளார். புகழ்வதுபோல் புகழ்ந்து, வேறு யாரையோ சுட்டுவது போல் சுட்டி தப்பித்துக்கொண்டார் புத்திசாலி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் @ரதி அக்கா சொல்கிறா அபிவிருத்திக்கு என்று வந்த நிதியில் கொஞ்ச அபிவிருத்தியை செய்திவிட்டு மிகுதியை ராஜபக்ச குடும்பத்தினர் கொள்ளையடித்துவிட்டனர் என.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் அதனை தலைக்கீழாகவே பின்பற்றுகிறார்கள், முதலில் தங்களைப் பற்றியும், பின்னர் குடும்பத்தைப் பற்றி, பின்னர் கடமையைப் பற்றி, இறுதியாக நாட்டைப் பற்றி சிந்திக்கிறார்கள். எனவே, அந்தப் பாதையை மாற்றுவதற்கான நாட்டின் தலைமை இப்போது எங்களிடம் உள்ளது.

ஒரே ஊமை குத்தா கிடக்கே.! நேரடியாக தலைவரை பற்றி கதைக்க ஏலாது என்டு சாடைமாடையாக குத்தி காட்டுகினமா.😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.