Jump to content

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ் விவாகரத்து என்பது பலர் எதிர்பார்த்த ஒன்றுதான், ரஜனியின் காலத்தின் பின்னர் அது நடக்கும் என்று பலர் நினைத்தார்கள்  முன்னதாகவே பிரிந்துவிட்டார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பிரச்சினையாம்.
தனுஸ்…. அடக்கமான பெடியன்.
ஐஸுதான்…. அலுப்பு  கொடுத்திருக்கும் போலை கிடக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஐஸ்வர்யாவா…. ஐக்கிய நாடுகள் சபையில், பரத நாட்டியம் ஆடினது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குச்சி சரியான கில்லாடி. சவுந்தர்யாவையும் தான் வச்சிக்கப்போறன் என்று அப்ப அடம்பிடிச்சபோதே பிரிவு தொடங்கீட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்த ஐஸ்வர்யாவா…. ஐக்கிய நாடுகள் சபையில், பரத நாட்டியம் ஆடினது. 😁

அவங்களேதான் , ஐநா சபையில ஆட்டுக்கு குழை வெட்டினமாதிரி இவங்க ஆடின ஆட்டம் இன்னும் கண்ணுக்குள்ளயே நிக்குது .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பு இன்னும் சிங்களாத்தானே இருக்காரு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

என்ன பிரச்சினையாம்.
தனுஸ்…. அடக்கமான பெடியன்.
ஐஸுதான்…. அலுப்பு  கொடுத்திருக்கும் போலை கிடக்கு. 

ஒரு விசயத்தை கண்டியளே?
சுள்ளான் கனகாலம் கட்டிப்புடிச்சு வாழ்ந்ததை விட்டுட்டு இப்ப ஓம் நமச்சிவாயத்தை கட்டிப்புடிச்சிருக்கிறான் 😎

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

என்ன பிரச்சினையாம்.
தனுஸ்…. அடக்கமான பெடியன்.
ஐஸுதான்…. அலுப்பு  கொடுத்திருக்கும் போலை கிடக்கு. 

இல்லியே அண்ணாச்சி,  கிசு கிசு வேற மாதிரி எல்லோ போகுது.

பாதிக்கப்படப் போறது லிங்காவும் யாத்ராவும் தான் .... Image preview

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாலி said:

குச்சி சரியான கில்லாடி. சவுந்தர்யாவையும் தான் வச்சிக்கப்போறன் என்று அப்ப அடம்பிடிச்சபோதே பிரிவு தொடங்கீட்டுது.

ம்
இந்த குச்சியால தான் எல்லா பிரச்சனையுமே.

நான் தனுசை சொன்னன்.

Link to comment
Share on other sites

ஒரு அதிர்ச்சியும் இல்லை. வருத்தமும் இல்லை. சினிமா உலகம் காலம் காலமாக இப்படித்தானே இருக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-GIF-afraid-creepy-disappointed-disgusted-do-not-want-fear-scared-shocked-GIF.gif

உலகமே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது.

ஐ.நா சபை உடனடியாக இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ராசவன்னியன் said:

-GIF-afraid-creepy-disappointed-disgusted-do-not-want-fear-scared-shocked-GIF.gif

உலகமே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது.

ஐ.நா சபை உடனடியாக இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்..!

ஒன்றுக்கும் எடுபடாத வன்னியரையே அசைக்கப் பண்ணுமென்றால், விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான் போல கிடக்கு .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை தனுசின் புதுபடம் ஏதாவது வெளிவரப் போகுதோ?

அதற்கான விளம்பரமோ?

மாமனின் கலையை பின்பற்றுகிறாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சாமானியன் said:

ஒன்றுக்கும் எடுபடாத வன்னியரையே அசைக்கப் பண்ணுமென்றால், விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான் போல கிடக்கு .......

காலையில எழுந்து செய்தியை வாசிக்கலாமென கைப்பேசியை திறந்தால், இம்மாதிரி ஒன்றுக்கும் பயனில்லாத, அதுவும் அமங்களமான செய்தி திறக்கிறதென்றால் ஊடகங்களின் மீது கடுப்பாகுமா இல்லையா..?🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

காலையில எழுந்து செய்தியை வாசிக்கலாமென கைப்பேசியை திறந்தால், இம்மாதிரி ஒன்றுக்கும் பயனில்லாத, அதுவும் அமங்களமான செய்தி திறக்கிறதென்றால் ஊடகங்களின் மீது கடுப்பாகுமா இல்லையா..?🙄

அவனவன் தீகுளிக்க தயாராகிறான்.
நீங்க இப்படி வேற நினைக்க.

தமிழ்நாடா கொக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ் - ஐஸ்வர்யா: "கூடினோம், வாழ்ந்தோம், பரஸ்பரம் பிரிகிறோம்"

17 ஜனவரி 2022
 

தனுஷ்

பட மூலாதாரம்,DHANUSH

நடிகர் தனுஷும் அவரது மனைவி மற்றும் ரஜினிகாந்தியின் மகளுமான ஐஸ்ர்யாவும் பிரிந்து வாழப்போவதாகக் கூறி பரஸ்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக இதுவரும் அவரவர் சமூக ஊடக பக்கங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை கையெழுத்து போடும் பகுதியில் பெயரையும் அதற்கு முன்பாக சில வார்த்தைகளை மட்டும் மாற்றிக் கொண்டு வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், "நண்பர்களாகவும், தம்பதியாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் 18 வருடங்கள் இணைந்திருத்தோம். எங்களுடைய பயணத்தில் வளர்ச்சி, புரிதல், சரிப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் மாற்றியமைத்தல் என இருந்தோம்.

இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.. தனுஷும் நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம், மேலும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவுசெய்துள்ளோம்.

தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும் என்று இருவரும் கூறியுள்ளனர்.

இதன் கீழே தனுஷ், ஓம் நமசிவாய, அன்பை பரப்பவும் என்றும் ஐஸ்வர்யா, "உங்கள் மீது எப்போதும் மிகுந்த அன்பு" என்று குறிப்பிட்டு புன்னகைக்கும் எமோஜியுடன் "கடவுளின் வேகம்" என்று தெரிவித்துள்ளார்.

வயதில் சிறிய தனுஷை காதல் திருமணம் முடித்த ஐஸ்வர்யா

தனுஷ் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்த 2000களில் அவருக்கு பக்கபலமாக அவரது இருந்தவர் ஐஸ்வர்யா.

 

தனுஷ்

பட மூலாதாரம்,AISHWARYA

இருவரும் தமிழ் திரையுலகின் பிரபல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ். ஐஸ்வர்யா தமிழ் முன்னணி நட்சத்திரம் ரஜினிகாந்தின் மகள்.

இந்த இருவருக்குமே நடந்த திருமணம், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடந்தது. ஆனால், அதற்கு முன்பாக வெறும் ஆறு மாதங்கள் காதலித்த பிறகு அந்த திருமணம் நடந்தது.

அதுவும் தனுஷ் தனது 23 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்கள் வாழ்க்கையை ஒன்றாகக் கழிக்க முடிவு செய்தபோது, அவர்களின் வயது வித்தியாசம் காரணமாக அவர்களின் ஜோடி பொருந்தவில்லை என்று சமூகத்தில் ஒரு பிரிவினர் உணர்ந்தனர். தனுஷை விட ஐஸ்வர்யா இரண்டு வயது மூத்தவர், ஆனால் அது இருவருக்கும் இடையில் எப்போதும் குறிகேகே வந்ததில்லை என இருவரும் தெரிவித்தனர்.

 

தனுஷ்

பட மூலாதாரம்,DHANUSH

இந்தஇருவரும் எப்படி காதலித்தனர் என்பதை அறிய வேண்டுமா? அது...

தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படம் வெளியான தருணம். அப்போதுதான் இருவரும் முதலில் சந்தித்தனர். திரையரங்க உரிமையாளர் ஒருவர் ஐஸ்வர்யாவை தனுஷிடம் அறிமுகப்படுத்தியபோது, அவரது நடிப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் ஐஸ்வர்யா.

அடுத்த நாளே, ஐஸ்வர்யாவிடமிருந்து ஒரு வாழ்த்துக் குறிப்புடன் ஒரு பூங்கொத்தை பெற்றார் தனுஷ். ஐஸ்வவர்யாவின் இயல்பான குணத்தை நடிகர் தனுஷ் பாராட்டினார். ஆனால் அந்த நேரத்தில் இருவருக்கும் இடையில் அதற்கு மேல் எதுவும் இல்லை.

இந்த காலக்கட்டத்தில்தான் தனுஷும் ஐஸ்வர்யாவும் அடிக்கடி ஒருவரையொருவர் பார்க்கிறார்கள் என்று ஊடக செய்திகள் தலைப்புச் செய்திகளாயின. சினிமா சிசுக்களும் வெளிவந்தன. அந்த நேரத்தில், தனுஷ் தனது சகோதரியின் தோழி தான் என்றும், வேறு ஒன்றும் இல்லை என்றும் கூறியதை மறுத்து பேட்டியும் கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் இந்த ஜோடி சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள் என்று இருவரது குடும்பத்தினர் நினைத்தனர்.

இதைத்தொடர்ந்து விரைவில், இரு வீட்டாரும் கூடி திருமண நிச்சயதார்த்தம் மற்றும் ஏற்பாடுகளைச் செய்தனர். ஒரு சினிமா இதழுக்கு அளித்த நேர்காணலில், ஐஸ்வர்யாவின் உறவைப் பற்றிய சிறந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார் தனுஷ்.

"எங்கள் உறவின் சிறந்த விஷயம் என்னவென்றால், நாங்கள் ஒருவருக்கொருவர் மற்றவருக்கான இடத்தை அதிகமாக கொடுப்பதுதான். நாங்கள் இருவரும் மற்றவருக்காக மாறுவதை நம்புவதில்லை. நாங்கள் ஒன்றாக இருக்க விரும்புகிறோம். நீங்கள் 20-களின் நடுப்பகுதியில் இருக்கும்போது, நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதில் உங்கள் மனம் அமைகிறது, உங்களை மாற்றுவது மிகவும் கடினம்," என்று கூறியிருந்தார்.

இந்த ஜோடியின் திருமணம் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட், ஹாலிவுட் என நடிகர் தனுஷ் பயணப்பட, தமிழ் சினிமா தயாரிப்பு, த்ரீ டி பட இயக்கம், திரைக்கதை இயக்கம் என தனி பாதையில் பரிணமிக்கிறார் ஐஸ்வர்யா. இந்த இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-60030353

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஏராளன் said:

இந்த ஜோடியின் திருமணம் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடந்தது

இதுவே ரொம்ப லேட் என்டு நினைக்குறன் .. நீங்க ரெல் மீ.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகும் மனித  வாழ்வும் சொர்க்கமானது

மிக மிக அழகானது இனிமையானது

அதை சந்தோசமாக இன்பமாக எந்தவித மனச்சங்கடங்களுமின்றி அனுபவிக்கணும்

அது சரிவராத  இடத்து

அல்லது வாழ்வு நரகமாகும்போது

பிரிதல் என்பதே அடுத்த  கட்டங்களையாவது ஆவது அனுபவித்துசெல்ல  நன்று

யாருக்காகவோ  வாழ்ந்த  பலர் தம்வாழ்வையே முடித்ததை  பார்த்தவன் என்றரீதியில்...

அதை விட இது  கோடி தரம்  நன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதுவே ரொம்ப லேட் என்டு நினைக்குறன் .. நீங்க ரெல் மீ.?

தோழரே! ஆண்பாவம் பொல்லாதது. அன்று அழத்தொடங்கியவன் இன்னும் நிறுத்தவேயில்லை.
 

டப்பிங்கில் கதறி அழுத சிம்பு: வைரலாகும் வீடியோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு: திருமணம் உறவில் சேர்ந்து வாழ்வதை போலவே பிரிவையும் இயல்பாக்க வேண்டியது ஏன்?

  • ச. ஆனந்தப்பிரியா
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

AishDha

பட மூலாதாரம்,INSTAGRAM- @AISHWARYAA_R_DHANUSH

நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிவதாக நேற்று இரவு தங்களது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தனர்.

பிரிவை அறிவித்த தனுஷ்- ஐஸ்வர்யா

நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004ம் ஆண்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள்.

18 ஆண்டுகள் திருமண பந்தத்திற்கு பிறகு இருவரும் பிரிகிறோம், எங்கள் முடிவிற்கு மதிப்பளிக்க வேண்டுகிறோம் என இருவரும் தனித்தனியாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் நேற்று இரவு பதிவிட்டார்கள்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த தம்பதியினரின் எதிர்பாராத இந்த முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, இருவர் திருமண பந்தத்தில் இணைவது எப்படி இயல்பான ஒன்றோ அது போன்றே பிரிவதும் இயல்பான ஒன்றாக்க வேண்டும் எனவும் குழந்தைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர்கள் தவிர்த்திருக்கலாம் என்றும் கலவையான பதிவுகளை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

மேலும் ரஜினிகாந்திற்கு ஆறுதல் கூறியும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் 'WE ARE WITH YOU DHANUSH', 'WE LOVE DHANUSH' என்ற ஹேஷ்டேக்குகளை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

விவாகரத்து இயல்பானதாக்க வேண்டும்

தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவை போலவே சமந்தா - நாக சைதன்யா தம்பதி கடந்த வருடத்தில் பிரிவை அறிவித்த போதும் 'Normalising Divorce' என்ற கருத்தை அதிகம் சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது. உண்மையில் நம் சமூகத்தில் விவாகரத்து எப்படி பார்க்க படுகிறது, அதன் பின்னுள்ள அழுத்தம் என்ன இதை எப்படி கையாள வேண்டும் என்பது தொடர்பாக எழுத்தாளர் கொற்றவையிடம் பிபிசி தமிழுக்காக பேசினேன்,

 

எழுத்தாளர் கொற்றவை

பட மூலாதாரம்,FACEBOOK- KOTRAVAI N

 

படக்குறிப்பு,

எழுத்தாளர் கொற்றவை

"இன்று நான் பார்த்த பல பதிவுகளிலுமே இவர்களது பிரிவு குறித்து எதிர்மறையான கருத்துகளைத்தான் பார்த்தேன். 'இருவரும் சேர்ந்து வாழ முடியவில்லை என்றால் எதற்கு திருமணம் செய்து கொள்கிறார்கள், குழந்தைகள் பற்றி யோசிக்க மாட்டார்களா? குழந்தைகள் தவித்து போவார்கள்' என்ற ரீதியிலான பதிவுகள்தான் அதிகம். இவை அனைத்துமே முட்டாள்தனமான பதிவுகள் என்பேன்.

இருவர் சேர்ந்து வாழ்வதும், பிரிவதும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை. ஆனால் இங்கு குடும்பம் என்பது சமூகத்திற்காக என்று மாறிவிட்ட நிலையில் எல்லாரும் அதில் கருத்து சொல்லி கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு என்ன புரியவில்லை என்றால் நம் வாழ்வின் நோக்கமே திருமணம் மற்றும் அதன் பிறகு குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்பதுதான் என்று கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றுமே கிடையாது. திருமணம் என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே," என்கிறார் கொற்றவை.

காணொளிக் குறிப்பு,

வயதில் சிறிய தனுஷை காதல் திருமணம் முடித்த ஐஸ்வர்யா

குழந்தைகளை காரணம் காட்டுவது சரியல்ல

"அதில் நமக்கு பொருந்தக்கூடிய துணைகளோடு மட்டும்தான் வாழ முடியும். எப்பொழது அது பொருத்தமாக இல்லை என்று நினைக்கிறோமோ அப்போது பிரிவது என்பது மிக இயல்பாக நடக்க வேண்டிய ஒன்று. இங்கு எல்லோரும் குழந்தைகளை காரணமாக காட்டுகிறார்கள். அம்மா அப்பா சண்டை போட்டு கொண்டு மகிழ்ச்சி இல்லாத குடும்பமாக இருந்தால் அந்த சூழ்நிலைதான் குழந்தைகளுக்கு இன்னும் கடினமான ஒன்று."

"அம்மா அப்பா மகிழ்ச்சியாக இல்லை, அவர்களுக்குள் ஏதோ பிரச்னை என்பதை எல்லாம் குழந்தைகள் மிக எளிதாக புரிந்து கொள்வார்கள். அப்படியான சூழ்நிலை அவர்களுக்கு ஆரோக்கியமானது கிடையாது. அதற்கு பதிலாக குழந்தைகளுக்கு சூழ்நிலையை புரிய வைத்து, கணவன் மனைவியாகதான் நாங்கள் பிரிகிறோம் அம்மா அப்பாவாக எப்பொழுதும் குழந்தைகளை வளர்க்க முடியும் என்ற புரிதலை அவர்களுக்கு கொடுக்க முடியும். என்னுடைய வாழ்க்கையே அதற்கு உதாரணம். "

"இதுபோன்ற ஒரு முடிவு எடுத்ததற்காக எப்பொழுதும் என் மகள் என் மீது வருத்தம் கொள்ளவில்லை. இந்த முடிவு பற்றி அவளிடம் கேட்டபோது கூட, 'உனக்கு எது மகிழ்ச்சியோ அதை செய்' என்றுதான் சொன்னாள். அந்த அளவுக்கு குழந்தைகள் தயாராகி விடுகிறார்கள். இதுபோன்ற பிரிந்த பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகள் இன்னும் சுந்தந்திரமாக, பக்குவப்பட்டவர்களாகவே வளர்கிறார்கள். ஆனால் சமூகம் இன்னும் பழங்கால கதைகளையும் ஆணாதிக்க சிந்தனைகளையும் திணித்து கொண்டிருக்கிறது."

பெண்களுக்கே பாதிப்பு அதிகம்

இதுபோன்ற கட்டாய சூழ்நிலைகளில் வாழ்வதால் குறிப்பாக பெண்களுக்கு அதிகம் மனநிலை தவறிய சம்பவங்களும் உண்டு. இது மட்டுமில்லாமல் பயம், மன அழுத்தம், உடல் ரீதியிலான கொடுமைகள் என அனைத்தும் நடக்கிறது. இதற்கெல்லாம் சமூகம் என்ன பொறுப்பெடுத்து கொள்ளும்? ஒத்து வரவில்லை என்றால் பிரிவதுதான் ஆரோக்கியமான விஷயம் என்பதை இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் இது போன்ற பிரபலங்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கும்.

அதன் காரணமாகவே அவர்கள் உடனடியாக இந்த முடிவு எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட மாட்டார்கள். தங்களுக்குள்ளேயே சரி செய்துவிடதான் முனைவார்கள். பின்பு முடியாது என்ற சூழலில் பிரிந்து விடுகிறார்கள்.

இங்கு யாருமே சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை குறித்து யோசிக்காமல், குடும்பம் என்ற கட்டமைப்பை புனிதப்படுத்துவதைதான் நோக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

பிரிவை ஏற்று கொள்ள முடியாமல் அந்த உறவில் சேர்ந்திருந்து குழந்தைகளுக்கு வருங்காலத்தில் உன்னுடைய துணையை இப்படியும் நடத்தலாம் என்ற தவறான முன்னுதாரணத்தை தான் காட்டுவோம். அதற்கு புரிதலோடு பிரியும் போது இபப்டியும் உன் துணையை சந்தோஷமாக நடத்தலாம் என அந்த குழந்தை கற்கும். இவ்வளவு விஷயங்கள் இதில் இருக்கிறது.

பிரபலங்கள் பிரிவிலே கூட பெரும்பாலும் பெண்ணையே குற்றம் சொல்லும் சமூகத்தில் சாதாரண தம்பதிகள் பிரிவிலும் இங்கு அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. 'படித்து வேலைக்கு செல்லும் திமிரு' என காரணம் வேறு சம்பந்தமே இல்லாமல் சொல்வார்கள்.

முன்பெல்லாம் குடும்பங்கள் பிற்போக்குத்தனமாக இருந்து பெண்கள் ஆண்களை சார்ந்தே இருந்ததால் விவாகரத்துக்கு பயப்பட்டார்கள். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டதால் பெண்கள் துணிச்சலாக அந்த முடிவை எடுக்கிறார்கள்.

அதனால் ஓர் உறவை பிரிந்த பின்பு எப்படி நண்பர்களாகவும், குழந்தைகளுக்கு நல்ல அம்மா அப்பாவாக பயணிக்க முடியும் என்பதைதான் பார்க்க வேண்டும். எல்லா வீடுகளிலும் அம்மா அப்பா 24 மணி நேரமும் சேர்ந்தேவா இருக்கிறார்கள். கல்யாணம் முடித்து அப்பா வேறு ஓர் ஊரில் கூட வேலை செய்யலாம்.

அதனால், இந்த பழமைவாத சிந்தனைகளை தவிர்த்து விட்டு குடும்பத்திற்குள் தலையிடுவதை சமூகம் நிறுத்த வேண்டும். பிரிவையும் இயல்பாக்க வேண்டும் " என்கிறார்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-60036721

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி டி  Happy அண்ணாச்சி

Link to comment
Share on other sites

48 minutes ago, ஏராளன் said:

இதுபோன்ற ஒரு முடிவு எடுத்ததற்காக எப்பொழுதும் என் மகள் என் மீது வருத்தம் கொள்ளவில்லை. இந்த முடிவு பற்றி அவளிடம் கேட்டபோது கூட, 'உனக்கு எது மகிழ்ச்சியோ அதை செய்' என்றுதான் சொன்னாள். அந்த அளவுக்கு குழந்தைகள் தயாராகி விடுகிறார்கள். இதுபோன்ற

தனக்கு சாதகமாக பிள்ளைகள் கருத்து சொல்லும் போது மட்டும் அவர்களின் கருத்து சரியாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரும்பாத துணையர்களாக வாழ்வதைக் காட்டிலும் விலகிக் கொள்வது ஆரோக்கியமானதுதானே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிந்தவர்களுக்கு ஜாலி,சந்தோசம்,கும்மாளம்.. பிள்ளைகளுக்கு பூமி நழுவி தலையில் வீழ்ந்தது போல் துயரம்.. என்னய கேட்டா நானும் சொல்லுவன் கலியாணம் கட்டினதில இருந்து மனிசற்ற நிம்மதியே போச்சு.. வேலையால வந்து கொஞ்சநேரம் கதிரையில சரிஞ்சு இருந்து நிம்மதியா யாழிலை எழுத முடியல.. எந்த நேரமும் போனுக்க தலைய கவுண்டு கொண்டு.. உந்த நேரத்துக்கு பிள்ளையளுக்கு குளிக்கவாத்து வீடு கிளீன் பண்ணி வீட்டு வேலையல் செய்யலாம்தான எண்டு புறுபுறுப்பு.. லீவு நாளையில நிம்மதியா படுத்து ரெண்டு மூண்டு மணிக்கு எழும்புவம் எண்டால் விடிஞ்சாப்பிறகும் வீட்டில படுத்திருந்தால் வீட்டுக்கு தரித்திரமாம்.. நிம்மதியா மனுசர் லீவு நாள் எண்டு நித்திரை கொள்ள முடியுதில்ல.. வேலையால வந்தா பிள்ளையளுக்கு பால் முடிஞ்சுது பழம் முடிஞ்சுது கடைக்கு போ எண்டா வேலை உடுப்பும் மாத்தாமால் அந்தக்களையோட கடைக்கு ஓடோனும்.. ஒரு பக் நிம்மதியா குடிக்கேலா.. ஏச்சு பேச்சு.. வீட்டில இறைச்சி சமைக்கிறதெண்டா பெரும் சண்டை.. நான் மட்டும்தான் சாப்பிடுறது.. கிழமையில அஞ்சு நாள் மாமிசம் இல்ல.. தனிய இருக்கேக்க நானே ராஜா நானே மந்திரி.. ஊர் ஊரா.. நாடு நாடா சுத்துவன்.. கலியாணம் கட்டி எல்லாம் போச்சு..😢😢😂.. என்னய இப்ப கேட்டா நானும் டைபேர்ஸ்க்கு டபில் ஓகே சொல்லுவன்..😂 ஆனால் பிள்ளையள என்னட்ட தரோனும்..

எனக்கு வேலையால வந்து கதவு திறக்க பிள்ளயள் ஓடிவந்து கட்டிப்பிடிச்சு கொஞ்ச எல்லா களைப்பு கவலை எல்லாம் போயிடும்.. இப்ப கொரோனாவால வந்து குளிச்சுதான் பிள்ளையள தூக்கோனும்.. அதே எவ்வளவு கஸ்ரமா இருக்கு குளிக்கும் வரையும் வெயிட் பண்னுறது.. என்னால எல்லாம் பிள்ளையள விட்டிட்டு வாழுற ஒரு வாழ்க்கையை கனவிலும் நினைத்து பார்க்க முடியாது.. அதற்காக நான் என்னுடைய எல்லா சந்தோசங்களையும் இழக்க தயார்..

 

கலியாணம் கட்டிட்டு டைவேர்ஸ் எடுக்குரது ஒரு பிரச்சினையே இல்லை.. அது அவரவர் சுதந்திரம் எண்டிட்டு போகலாம்.. ஆனால் பிள்ளைகளை பெற்ற பின்பு டைவேர்ஸ் எடுப்பது என்பது மிகப்பெரிய ஒரு முடிவு.. மிகத்துயரமானது… குழந்தை உள்ளவர்களுக்கிடையே நடக்கும் ஒவ்வொரு டைவேர்சிலும் இருவரில் யாரோ ஒருவர் குழந்தைகளை விட்டு பிரிகிறார்கள் தம் சுயநலன்களுக்காக.. எப்படி இப்படி சுயநலவாதி ஆகிறார்களோ தெரியவில்லை.. ஆராய்ந்துபார்த்தால் தம்பதிகளில் டைவேர்ஸ்க்கு காரணமான அந்த ஒருவரோ அல்லது இருவரோ இவர்களின் ஏதோ ஒரு குழந்தைகளை விட முக்கியமான சுயநலம் இருக்கும்(உ+ம்- குடிகார கணவனுக்கு பிள்ளைகளை விட குடி முக்கியம்) குழந்தைகளுக்காக உங்கள் சுயநலன்களை விடமுடியாதவர்கள் திருமணம் செய்தபின் கொஞ்சகாலம் எடுத்து யோசிச்சு நமக்கு இது ஒத்துவருமா எண்டு சிந்தித்து விட்டு பிள்ளபெறுவது உத்தமம்.. உங்கள் சுயநலன்களுக்காக பிள்ளைகளை கேட்காமல் நீங்களா பெத்த பிள்ளைகளை நீங்களே தண்டிக்க குடாது..

பி.கு- கலியாணம் கட்டாமல் இருக்கும் பசங்க என்னமாரி பொறுப்பில்லாமல் ஜாலியா இருக்கவேணும் எண்டு ஆசைப்பட்ட தயவு செய்து கலியாணம் கட்டாதைங்கோ.. பிறகு கு.சா அண்ணை போட்ட படம் மாதிரி அழுத கண்ணீரும் சோறும்தான்..😂😂😂

4 hours ago, குமாரசாமி said:

தோழரே! ஆண்பாவம் பொல்லாதது. அன்று அழத்தொடங்கியவன் இன்னும் நிறுத்தவேயில்லை.
 

டப்பிங்கில் கதறி அழுத சிம்பு: வைரலாகும் வீடியோ!

அன்ரன்பாலசிங்கம் அண்ணை சொன்னமாதிரி.. அது ஒரு துன்பியல் சம்பவம்… அதை ஏன் கேக்குரியல்..😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

28 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிரிந்தவர்களுக்கு ஜாலி,சந்தோசம்,கும்மாளம்.. பிள்ளைகளுக்கு பூமி நழுவி தலையில் வீழ்ந்தது போல் துயரம்.. என்னய கேட்டா நானும் சொல்லுவன் கலியாணம் கட்டினதில இருந்து மனிசற்ற நிம்மதியே போச்சு.. வேலையால வந்து கொஞ்சநேரம் கதிரையில சரிஞ்சு இருந்து நிம்மதியா யாழிலை எழுத முடியல.. எந்த நேரமும் போனுக்க தலைய கவுண்டு கொண்டு.. உந்த நேரத்துக்கு பிள்ளையளுக்கு குளிக்கவாத்து வீடு கிளீன் பண்ணி வீட்டு வேலையல் செய்யலாம்தான எண்டு புறுபுறுப்பு.. லீவு நாளையில நிம்மதியா படுத்து ரெண்டு மூண்டு மணிக்கு எழும்புவம் எண்டால் விடிஞ்சாப்பிறகும் வீட்டில படுத்திருந்தால் வீட்டுக்கு தரித்திரமாம்.. நிம்மதியா மனுசர் லீவு நாள் எண்டு நித்திரை கொள்ள முடியுதில்ல.. வேலையால வந்தா பிள்ளையளுக்கு பால் முடிஞ்சுது பழம் முடிஞ்சுது கடைக்கு போ எண்டா வேலை உடுப்பும் மாத்தாமால் அந்தக்களையோட கடைக்கு ஓடோனும்.. ஒரு பக் நிம்மதியா குடிக்கேலா.. ஏச்சு பேச்சு.. வீட்டில இறைச்சி சமைக்கிறதெண்டா பெரும் சண்டை.. நான் மட்டும்தான் சாப்பிடுறது.. கிழமையில அஞ்சு நாள் மாமிசம் இல்ல.. தனிய இருக்கேக்க நானே ராஜா நானே மந்திரி.. ஊர் ஊரா.. நாடு நாடா சுத்துவன்.. கலியாணம் கட்டி எல்லாம் போச்சு..😢😢😂.. என்னய இப்ப கேட்டா நானும் டைபேர்ஸ்க்கு டபில் ஓகே சொல்லுவன்..😂 ஆனால் பிள்ளையள என்னட்ட தரோனும்..

எனக்கு வேலையால வந்து கதவு திறக்க பிள்ளயள் ஓடிவந்து கட்டிப்பிடிச்சு கொஞ்ச எல்லா களைப்பு கவலை எல்லாம் போயிடும்.. இப்ப கொரோனாவால வந்து குளிச்சுதான் பிள்ளையள தூக்கோனும்.. அதே எவ்வளவு கஸ்ரமா இருக்கு குளிக்கும் வரையும் வெயிட் பண்னுறது.. என்னால எல்லாம் பிள்ளையள விட்டிட்டு வாழுற ஒரு வாழ்க்கையை கனவிலும் நினைத்து பார்க்க முடியாது.. அதற்காக நான் என்னுடைய எல்லா சந்தோசங்களையும் இழக்க தயார்..

 

கலியாணம் கட்டிட்டு டைவேர்ஸ் எடுக்குரது ஒரு பிரச்சினையே இல்லை.. அது அவரவர் சுதந்திரம் எண்டிட்டு போகலாம்.. ஆனால் பிள்ளைகளை பெற்ற பின்பு டைவேர்ஸ் எடுப்பது என்பது மிகப்பெரிய ஒரு முடிவு.. மிகத்துயரமானது… குழந்தை உள்ளவர்களுக்கிடையே நடக்கும் ஒவ்வொரு டைவேர்சிலும் இருவரில் யாரோ ஒருவர் குழந்தைகளை விட்டு பிரிகிறார்கள் தம் சுயநலன்களுக்காக.. எப்படி இப்படி சுயநலவாதி ஆகிறார்களோ தெரியவில்லை.. ஆராய்ந்துபார்த்தால் தம்பதிகளில் டைவேர்ஸ்க்கு காரணமான அந்த ஒருவரோ அல்லது இருவரோ இவர்களின் ஏதோ ஒரு குழந்தைகளை விட முக்கியமான சுயநலம் இருக்கும்(உ+ம்- குடிகார கணவனுக்கு பிள்ளைகளை விட குடி முக்கியம்) குழந்தைகளுக்காக உங்கள் சுயநலன்களை விடமுடியாதவர்கள் திருமணம் செய்தபின் கொஞ்சகாலம் எடுத்து யோசிச்சு நமக்கு இது ஒத்துவருமா எண்டு சிந்தித்து விட்டு பிள்ளபெறுவது உத்தமம்.. உங்கள் சுயநலன்களுக்காக பிள்ளைகளை கேட்காமல் நீங்களா பெத்த பிள்ளைகளை நீங்களே தண்டிக்க குடாது..

பி.கு- கலியாணம் கட்டாமல் இருக்கும் பசங்க என்னமாரி பொறுப்பில்லாமல் ஜாலியா இருக்கவேணும் எண்டு ஆசைப்பட்ட தயவு செய்து கலியாணம் கட்டாதைங்கோ.. பிறகு கு.சா அண்ணை போட்ட படம் மாதிரி அழுத கண்ணீரும் சோறும்தான்..😂😂😂

அன்ரன்பாலசிங்கம் அண்ணை சொன்னமாதிரி.. அது ஒரு துன்பியல் சம்பவம்… அதை ஏன் கேக்குரியல்..😂😂😂

ஓணாண்டி வேலைக்கு ஒஞ்சி விவாகரத்து என்பது மேட்டரே இல்லை வாழ்வோம் என்று எத்தனிப்பதும் ஒவ்வொரு கட்டத்திலும் தோற்று விரக்தியடைந்து மன அழுத்தங்களுக்கு உள்ளாகி இருசாரரும் தமக்கு தாமே உபத்திரமாவது மட்டுமின்றி தம்மைச் சார்ந்தவர்களுக்கும் பிரச்சனையானவர்களாக மாறுவதைக் காட்டிலும் அந்நிலையில் இருந்து விலகிச் செல்லலாம். நீங்கள் குறிப்பிடும் வாழ்க்கை இரசனைக்கு உரியது. செல்லச் சண்டைகள். அன்பான ஊடல்கள் உரிமைகளை உணரவைக்கும் சின்னச்சின்ன கண்டிப்புகள் ரம்மியமானவை. இவை விவகாரத்துக்கு ஒரு காலமும் அடிகோலாது😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.