Jump to content

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை – சம்பந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை – சம்பந்தன்

spacer.png

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்த கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளதாக அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்த போதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடன் இதுவரை உத்தியோகபூர்வ சந்திப்பை நடத்தவில்லை.

கடந்த வருடம் அரச தலைவர் செயலகத்தால் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் அது இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இம்மாத இறுதியில் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கூட்டமைப்பும் அதற்கான பதிலை வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், பேச்சுவார்த்தைக்கான உத்தியோகபூர்வ அழைப்பு இதுவரை கிடைக்கவில்லை என கூறினார்.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க தாம் விரும்பவில்லை என்றும் இந்த விடயத்தை ஜனாதிபதியுடனான சந்திப்பின் பொது நேரில் தெரிவிப்போம் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நிரந்தர அரசியல் தீர்வுக்கு வழியமைக்கும் வகையில் அந்தப் பேச்சு இடம்பெற வேண்டும் என குறிப்பிட்ட சம்பந்தன், அதை விடுத்து இனியும் ஏமாறத் தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டார்.
 

 

https://athavannews.com/2022/1262405

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க தாம் விரும்பவில்லை என்றும் இந்த விடயத்தை ஜனாதிபதியுடனான சந்திப்பின் பொது நேரில் தெரிவிப்போம் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அட கடவுளே! எழுபது வருடத்திற்கு பிறகா இந்த முடிவை எடுக்க வேண்டும்?  ஒருவேளை தனது மூப்பை எண்ணி இந்த முடிவை எடுத்திருப்பாரோ? 

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க தாம் விரும்பவில்லை என்றும் இந்த விடயத்தை ஜனாதிபதியுடனான சந்திப்பின் பொது நேரில் தெரிவிப்போம் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கையில் இருந்தது கல் (விடுதலைப் புலிகள்) அல்ல. நழுவவிட்ட பின்புதான் சம்பந்தருக்குத் தெரிகிறது அது வைரம் என்று.

Link to comment
Share on other sites

கோட்டபய தனது கட்சி தேர்தலில்  தோற்கும் எனும் நிலை வரும் போது கூட்டமைப்புடன் பேசலாம். அது வரை கூட்டமைப்பை தட்டிக்கழிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை – சம்பந்தன்

 

ஐயா இப்பத்தான்  அரசியலுக்கு வாறார் போலும்...

70 வருடங்களாக  தமிழினத்துக்கு  இப்படி  பேசக்கூடிய செய்யக்கூடிய  ஆள் கிடைத்திருந்தால்???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை

ஒம் சம்பந்தன் ஐயா......எல்லாம் செய்து பாத்தாச்சுது
இனி குங் பூ ஒண்டுதான் மிச்சம்...

Gif GIF - Gif GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை – சம்பந்தன்

அவர் சொல்வதை நீங்கள் விழங்கிக் கொள்ளவில்லை.

அவர் சொல்வதன் அர்த்தம்.
இனிமேல் என்னால் பேச முடியாது.
கடிதத்தில் தொடர்பு கொள்வோம் என்பது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பொங்கலுக்காவது தீர்வு வருமா..? எங்களாலும் காலத்தை வீணடிக்க முடியாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தை என்ற ஒன்றை எப்ப நடத்தினனீங்கள் சம்புந்தர். அது புலிகளோட போயே போச்சு. சும்மா போய் குந்தி இருந்து மிக்ஸர் சாப்பிட்டிட்டு கொட்டாவி விட்டிட்டு வந்தெல்லாம் பேச்சுவார்த்தை ஆகாது. 

அதுசரி.. பேச்சு வார்த்தை முடிஞ்சு.. அடுத்து என்ன..??! கோலாட்டம் சிலம்பாட்டமா..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அடுத்த பொங்கலுக்காவது தீர்வு வருமா..? எங்களாலும் காலத்தை வீணடிக்க முடியாது..

கேட்டுப்பாருங்கோ கால அவகாசம் குடுக்க முடியுமா சார் எண்டு?

எனக்கு நல்லவடிவாய் தெரியும் கேட்டால் இல்லையெண்டு சொல்லாமல் கால அவகாசம் தருவுவினம்.....அப்பிடியான கொடை வள்ளல் கூட்டம் அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுபது வருடம் வீணிலே கழிந்து, எண்ணடங்கா உயிர்களும், உடமைகளும் அழிந்தது இழப்பாகவே யாருக்கும் தெரியவில்லை. இப்போ தான் காலத்தைப்பற்றி அழுகிறார்கள் காரணம் காலம் அவர்கள் வாழ்வில் மாறுதலை ஏற்படுத்தியபடியால், காலங்கடந்த ஞானம் பேசுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் கடத்துவதற்கு அவருக்கு அதிக காலமில்லை, எல்லைக்கு வந்தாச்சு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.