Jump to content

யாழ். போதனா வைத்தியசாலையில் திரவ ஒட்சிசன் தாங்கி திறப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Published by T. Saranya on 2022-01-18 15:04:26

 
 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒட்சிசன் தாங்கி திறந்து வைக்கப்பட்டது.

01__3_.jpg

இன்று காலை 11.30 மணியளவில் வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர்களான ச.சிறீபவானந்தராஜா மற்றும் சி.யமுனாநந்தா ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

01__1_.jpg

குறித்த திரவ ஒட்சிசன் தாங்கி வடக்கு மாகாணத்தில் முதல் தடவையாக மத்திய சுகாதார அமைச்சினால் 24 மில்லியன் ரூபா செலவில் 10 ஆயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வைத்தியசாலைக்கு தேவையானஒட்சிசன்  குழாய் வழி மூலமாக விடுதிகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், 10 நாட்களுக்கு ஒரு முறை இதனை நிரப்பினால் போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். போதனா வைத்தியசாலையில் திரவ ஒட்சிசன் தாங்கி திறப்பு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரவ ஒட்சிசன் தாங்கி, யாழ். மருத்துவ மனைக்கு கிடைத்தது நல்ல விடயம்.
ஆனால்… அதன் பராமரிப்பில், அலட்சியம் காட்டாமல் இருக்க வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்… வட இந்திய மருத்துவமனை ஒன்றில்…
இது வெடித்து, பல உயிர்களை பலி கொண்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்......பாராட்டுக்கள்........!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பராமரிப் பதுதான் மிகக்கவனமானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

இதற்கும் ஒரு விழா ? 

🤦🏼‍♂️

எதுவேமே இல்லாத நாட்டில் இருந்தால் இவற்றுக்காக கையெடுத்து கும்பிட தோன்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

எதுவேமே இல்லாத நாட்டில் இருந்தால் இவற்றுக்காக கையெடுத்து கும்பிட தோன்றும்.

எவற்றிற்கெல்லாம் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம் ?

மலசல கூடம் கட்டி, அதன் திறப்பு விழாவிற்கு வரிசையில் நிற்காதவரைக்கும் சகித்துக்கொள்ளலாம். 

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

எவற்றிற்கெல்லாம் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம் ?

மலசல கூடம் கட்டி, அதன் திறப்பு விழாவிற்கு வரிசையில் நிற்காதவரைக்கும் சகித்துக்கொள்ளலாம். 

😉

இன்று எது முக்கியமோ அதற்கு முக்கியத்துவம்/மரியாதை கொடுப்போம். அது யர் செய்தாலும்....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

இன்று எது முக்கியமோ அதற்கு முக்கியத்துவம்/மரியாதை கொடுப்போம். அது யர் செய்தாலும்....
 

மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் இவற்றிற்கெல்லாம் திறப்பு விழா. அதற்கு வரிசையில் நின்று படம் வேறு? 

மூன்றாம் உலகம் என்று கூறுவது  சரிதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் இவற்றிற்கெல்லாம் திறப்பு விழா. அதற்கு வரிசையில் நின்று படம் வேறு? 

மூன்றாம் உலகம் என்று கூறுவது  சரிதான். 

ஆரியகுள திறப்புவிழாவில் பிக்கு கண்டிய நடன சகிதம் ஆசீர்வதிக்க வந்தபோது தாங்கள் மௌனம் காத்தது ஏனோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2022 at 08:24, குமாரசாமி said:

ஆரியகுள திறப்புவிழாவில் பிக்கு கண்டிய நடன சகிதம் ஆசீர்வதிக்க வந்தபோது தாங்கள் மௌனம் காத்தது ஏனோ?

அரசியல்வாதிகளும் அவர்களின் நோக்கங்களும், வைத்தியர்களும்  அவர்களது சேவைகளும் ஒன்றா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

அரசியல்வாதிகளும் அவர்களின் நோக்கங்களும், வைத்தியர்களும்  அவர்களது சேவைகளும் ஒன்றா ? 

பிக்கு கண்டி டான்ஸ் சகிதம் வந்தது அரசியல் ரீதியாகவா சார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

பிக்கு கண்டி டான்ஸ் சகிதம் வந்தது அரசியல் ரீதியாகவா சார்?

வைத்தியர் அரசியல்வாதிகள் அல்லவே 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

வைத்தியர் அரசியல்வாதிகள் அல்லவே 😀

யார் சொன்னது?

ஜேர்மனியின் சுகாதார அமைச்சர் ஒரு டாக்டர். அவர் இனி இல்லையென்ற பெரிய அரசியல்வாதி. இன்னும் பலர் இருக்கின்றார்கள்.

டாக்டர்களுக்குள்ளும் அரசியல் இருக்கும்.இலங்கையின் வட பகுதியில் பல டாக்டர்கள் அரசியல் ரீதியாக கொல்லப்பட்டுள்ளார்கள் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

யார் சொன்னது?

ஜேர்மனியின் சுகாதார அமைச்சர் ஒரு டாக்டர். அவர் இனி இல்லையென்ற பெரிய அரசியல்வாதி. இன்னும் பலர் இருக்கின்றார்கள்.

டாக்டர்களுக்குள்ளும் அரசியல் இருக்கும்.இலங்கையின் வட பகுதியில் பல டாக்டர்கள் அரசியல் ரீதியாக கொல்லப்பட்டுள்ளார்கள் தெரியுமா?

யாழ் வைத்தியசாலை வைத்தியர்களை அரசியல்வாதிகள் என்கிறீர்கள்...ம்..ம்ம்..நீங்கள் கூறுவது சரியாகவும் இருக்கலாம். யார் கண்டார்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

யாழ் வைத்தியசாலை வைத்தியர்களை அரசியல்வாதிகள் என்கிறீர்கள்...ம்..ம்ம்..நீங்கள் கூறுவது சரியாகவும் இருக்கலாம். யார் கண்டார்.😀

நான் எங்கும் எந்த இடத்திலும் அந்த வைத்தியர்களை அரசியல்வாதிகள் என சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

நான் எங்கும் எந்த இடத்திலும் அந்த வைத்தியர்களை அரசியல்வாதிகள் என சொல்லவில்லை.

மீனுக்கு வாலும் பாம்புக்குத் தலையும் ....ம்ம்ம..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kapithan said:

மீனுக்கு வாலும் பாம்புக்குத் தலையும் ....ம்ம்ம..😀

என்னிடம் அந்த விலாங்கு குணம் அறவேயில்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

என்னிடம் அந்த விலாங்கு குணம் அறவேயில்லை....

உங்கள் குணத்தை குறை ஏதும் கூறவில்லையே 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

உங்கள் குணத்தை குறை ஏதும் கூறவில்லையே 😀

நல்லாரைக் காண்பதுவும் நன்றே. நலம் மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே. நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே. அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று...நன்றே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நல்லாரைக் காண்பதுவும் நன்றே. நலம் மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே. நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே. அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று...நன்றே.

இணங்கி இருக்கிறேன், சாமியாரே..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2022 at 09:41, குமாரசாமி said:

டாக்டர்களுக்குள்ளும் அரசியல் இருக்கும்.

தமிழரசுக் கட்சிக்குள் ஒரு வைத்தியர் இருக்கிறார் கண்டு பிடியுங்கள் ....... கண்டுபிடித்து சொல்பவருக்கு சிங்கபூரிலை கலியாணமாம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.