Jump to content

அனல் மின் நிலையத்தையும் இந்தியாவிற்கு வழங்கும் இக்கட்டான நிலையில் மின்சாரத்துறை அமைச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

(இராஜதுரை ஹஷான்)

அனல் மின் நிலையத்தையும் இந்தியாவிற்கு வழங்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு மின்சாரத்துறை அமைச்சு தள்ளப்பட்டுள்ளது என மின்சாரத்துறை சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மின்சாரத்துறை அமைச்சுக்கு மின் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளதால் மின் உற்பத்தி மற்றும் மின் விநியோக கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என வலுசக்தி துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது.

மின்சார சபை டொலர் வழங்கினால் தான் டொலர் விநியோகிக்க முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட முடியாது. நாட்டில் எரிபொருள் இறக்குமதி மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கான உரிமை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மாத்திம் உண்டு.

தேசிய மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து அக்கறை கொள்ளாமல் மின்சாரத்துறை அமைச்சரும்,வலுசக்தி துறை அமைச்சரும் முரண்பட்டுக் கொள்கிறார்கள்.மின் மற்றும் எரிபொருள் விடயதானம் குறித்து இருவருக்கும் தெளிவில்லை என்றே குறிப்பிட வேண்டும்.

மின்உற்பத்தி மற்றும் மின்விநியோகத்திற்கு தேவையான எரிபொருளை இந்தியாவின் ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது என்றும் அவர் கூறினார்.

அனல் மின் நிலையத்தையும் இந்தியாவிற்கு வழங்கும் இக்கட்டான நிலையில் மின்சாரத்துறை அமைச்சு - தொழிற்சங்கம் கடும் சாடல் | Virakesari.lk

Link to comment
Share on other sites

என்றாவது ஒரு நாள் இலங்கையை தமிழர்களுடன் சேர்ந்து இந்தியா கைப்பற்றி விடும் என்பது தான் சிங்கள மக்களின் இரத்தத்துடன் கலந்து இருக்கும் அச்சம். சில சிங்கள பேராசிரியர்கள் சொல்லியுள்ளார்கள், இந்தியா மட்டும் அருகில் இருந்திராவிடின் இலங்கையில் சிங்கள மேலாதிக்கத்தை பேணுவதற்கான காரணமே சிங்களவர்களுக்கு கிடைத்து இருக்காது என்று.

ஆனால் இன்று இந்தியா எந்த முயற்சியும் எடுக்காமல் இலங்கையே தன்னை இந்தியாவுக்கு தாரை வார்க்கும் போல தெரிகின்றது. சீனா மட்டும் இல்லையெனில் இந்தியா இலங்கையை கடன் கொடுத்தே வாங்கி விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி வாங்கினாலும் ,சிங்கள அரசியல்வாதிகள் தமிழனுக்கு உரிமைகளை கொடுக்க கூடாது என கத்தி கொண்டிருப்பார்கள் .....நாடு இந்தியாவுக்கு அடிமையாகி விட்டதே என கவலை படமாட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்முன்னே அழிந்து  கொண்டிருக்கும்

தன்னைத்தானே  புதைகுழிக்குள்  மூழ்கடித்துக்கொண்டிருக்கும் 

எதிரியைப்பார்த்து 

அடக்கி வைத்த  அத்தனை ஆத்திரத்தையும் சேர்த்து கத்தணும் போல இருக்கு...

ஆனால்  எம் மக்களும் சேர்த்து மூழ்கிக்கொண்டிருப்பதை  பார்க்கும்போது.....???😭

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.