Jump to content

மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவிலுக்குக் குண்டெறிந்தது எனது தந்தையே, நல்லூர் முருகன் ஆலயத்தை இடித்து மலசலகூடம் கட்டுவேன் - அருண் சித்தார்த்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

ලංකාවම කළඹමින් යාපනේ ද්‍රවිඩ තරුණයෙක් කළ හෙළිදරව්ව | Exclusive Interview  With Arun Siddharth - YouTube

சிரச தொலைக்காட்சியின் அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் முடித்தவுடன் அருண் சித்தார்த் எனும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளரின் செவ்வியொன்றினை நேற்றுப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அச்செவ்வியினை இங்கே ஊர்ப்புதினத்தில் பேசலாமா என்று தெரியவில்லை. நிர்வாகம் இடம் மாற்றினாலும் எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை என்று கூறிக்கொண்டு அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில விடயங்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

இந்நிகழ்ச்சி பேட்டியாக நடந்திருந்தாலும்கூட, இதில் பேசப்பட்ட விடயங்களைச் சாராம்சமாகத் தொகுத்துத் தருகிறேன். 

குறிப்பு : அருண் சித்தார்த் எனும் நபரே யாழ்ப்பாணத்தில் அவ்வபோது இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாகவும், புலிகளை வன்மையாக விமர்சித்தும் தடாலடியாக கூட்டங்களை வீதியோரங்களில் நடத்தி வருபவர். 

அருண் சித்தார்த் எனும் இந்த நபரை முதலில் அரசியல் மேடையில் ஏற்றியது யாழ்ப்பாண சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அங்கஜன் ராமனாதனும் அவரது மாமனாரான ராஜன் எனும் செல்வந்த வியாபாரியும்தான் என்று குறிப்பிடத் தக்கது. யாழ்ப்பாணத்தில் பெளத்த சமயத்தை நிறுவுவதும், பெளத்த கோயில்களைக் கட்டுவதுமே தனது குறிக்கோள் என்று கூறிய அருண், அங்கஜன் வெல்லவேண்டும் என்பதற்காகவே தான் யாழ்ப்பாணத் தேர்தல் கூட்டங்களில் சுதந்திரக் கட்சிக்குச் சார்பாகவும் அங்கஜனுக்குச் சார்பாகவும் பிரச்சாரம் செய்ததாகவும் கூறினார். அத்துடன் , யாழ்ப்பாணத்தில் சுதந்திரக் கட்சிக்கு 48,000 வாக்குகளைத் தான் பெற்றுக்கொடுக்க உதவியதாகக் கூறிய அருண், சிங்கள பெளத்த கட்சியொன்றிற்கு யாழ்ப்பாணத்து மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்று நிலவிய சூழ்நிலையினை உடைத்து, அங்கிருந்து 48,000 வாக்குகளை அள்ளீயது பெளத்த சிங்களவர்களுக்கு கிடைத்த வெற்றிதான் என்று இறுமாப்புடன் கூறினார்.

நல்லூர்க் கந்தன் கோயிலை இடித்து மலசலகூடம் கட்டுவேன் என்று எதற்காகக் கூறினீர்கள் என்று முடித்த அவரிடம் கேட்டபோது, "1956 ஆம் ஆண்டு நல்லூர்க் கோயிலுக்கு எனது பாட்டனார் செல்ல முயன்றபோது அங்கிருந்தோர் நாம் பனையேறும் சாதியினர் என்பதால் உள்நுழைய விடவில்லை. அந்த நடவடிக்கைக்குப் பழிவாங்கவே எனது தகப்பனார் மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோயிலுக்குள் குண்டெறிந்தார். என்னைப்பொறுத்தவரை இது ஒரு பெருமையான நிகழ்வு. குறைந்த சாதியினர் என்று எம்மை அன்று மறித்தனர். ஆனால் நான் இன்று நல்லூருக்குள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. அன்று எமக்கு நடந்த அவமானத்திற்காக நல்லூர்க் கோயிலை இடித்து மலசல கூடங்களைக் கட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று அவர் கூறினார். 

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் சாதிவேற்றுமைகள் இன்றும் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா என்று கேட்டபோது, ஆம், இருக்கின்றது, அவ்வப்போது கிராமம் கிராமமாக கொலை, குத்து வெட்டு என்று செய்கிறார்கள். அதானாலேயே நான் பெளத்தனாக மாறினேன். இந்தியாவின் அம்பேத்காரைப் போன்று யாழ்ப்பாணத்தில் பெளத்த மதத்தினைப் பரப்பி, புத்த விகாரைகளைக் கட்டுவதே எனது நோக்கம் என்று அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் புத்த விகாரைகளைக் கட்டுவது சாத்தியமா, மிகப் பெரும்பான்மையினராக தமிழ் இந்துக்கள் வாழும் யாழ்ப்பாணத்தில் பெளத்த விகாரைகளைக் கட்டுவது சாத்தியமா என்று முடித்த கேட்டபோது, "அவர்கள் நாட்டின் எல்லாவிடங்களிலும் இந்துக் கோயில்களைக் கட்டமுடியும் என்றால், நான் யாழ்ப்பாணத்தில் பெளத்த விகாரைகளைக் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது. இது எல்லோருக்குமான நாடு, இங்கே ஒரு மக்கள் கூட்டத்தினர் தமக்கென்று ஒரு பகுதியைக் கேட்பதை இந்த நாட்டையும், மக்களையும் விரும்பும் ஒருவன் என்கிற வகையில் ஏற்றுக்கொள்ளமுடியாது" என்று அவர் கூறினார்.

புலிகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறீர்கள். அவர்கள் இன்று இல்லாத நிலையிலும், யாழ்ப்பாணத்திற்குச் சென்று புலிகளை கடுமையாக விமர்சித்து உங்களால் அரசியலில் வெல்ல முடியுமா என்று கேட்டபோது, "ஆம், அங்கஜனுக்குக் கிடைத்த வாக்குகள் புலிகளுக்கெதிரான வாக்குகள், கெளரவ டக்கிளஸ் அவர்களுக்குக் கிடைத்த வாக்குகள் புலிகளுக்கெதிரான வாக்குகள். இது இனியும் தொடரும்" என்று கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஓட்டுக்காகத்தான்.. தமிழ்நாட்டிலை பாக்கேல்லயா ஓட்டுக்காக என்ன கூத்து எல்லாம் செய்ய்கிறார்கள் எண்டு… அதுமாதிரி இனி இங்கயும் வரும்.. சுமந்திரன் உழுதது.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

அம்பேத்காருக்கும் பௌத்தருக்கும் என்ன தொடர்பு?

அதென்ன சைவ பௌத்த சங்கம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

சுமந்திரன் உழுதது.. 

நிற்கிறார், வெளிப்புறங்கள், மரம் மற்றும் , ’நான்காவது படத்துக்கு லொக்கேசன் தேடும் போது’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

வடலிக்க...  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேற ஒன்றுமில்ல

குளிர்  விட்டுப்போச்சு???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கெதிராக போதைப்பொருள் கடத்தல், இந்தியாவிலிருந்து ஹெரோயினைக் கொண்டுவந்தது என்று பல வழக்குகள் இருக்கின்றனவே என்று கேட்டபோது, "என்மீது கூட்டமைப்பு, கஜேந்திரன் அணி, விக்னேஸ்வரன் அணியென்று தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகப் பேசும் எல்லோருமே எதிராகச் செயற்படுகிறார்கள். தவறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி எனது பேச்சுச் சுதந்திரத்தினைப் பறிப்பதே இவர்களின் நோக்கம். இதற்கு யாழ்ப்பானத்துப் பொலீஸாரும் உதவுகின்றனர்" என்று கூறினார்.

யாழ்ப்பாணத்துப் பொலீஸாரா? அவர்கள் தமிழ்த்தேசியவாதிகளுக்கு உதவுவது எங்கணம் என்று கேட்கப்பட்டபோது, "இப்போது பல தமிழர்கள் பொலீஸில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மூளையெல்லாம் பிரபாகரனிடமே இருக்கின்றது. வெறும் சீருடையினை மட்டுமே அணிந்துகொள்வதால் அவர்கள் நாட்டிற்கு விசுவாசமான பொலீஸாராக மாறப்போவதில்லை. அவர்கள் மனதளவில் இன்னமும் புலிகளை ஆதரிக்கிறார்கள்" என்று கூறினார்.

அப்படியானால், பிரிவினைவாதமும், தீவிரவாதமும் இன்னமும் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது என்கிறீர்களா? என்று கேட்டதற்கு, "நிச்சயமாக. அவர்களின் மனதில் அது இன்னமும் இருக்கிறது. ஆனால் அதனை நான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. நான் இருக்கும்வரை பயங்கரவாதிகள் மீளத் தலைதூக்குவது சாத்தியமில்லை. எனது மகன் உயர்தரத்தில் படித்து வருகிறான். பொலீஸ் விசேட அதிரடிப்படையில் இணைய விரும்புகிறான். அவனை நானே சென்று இணைக்கவிருக்கிறேன். எனது தாய் நாட்டின் பாதுகாப்பிற்கு தமிழ்ப் பயங்கரவாதிகள் குந்தககம் விளைவிக்க நினைத்தால் அவர்களை எதிர்த்து ஆயுதம் தூக்கும் முதலவாது இலங்கையின் மகனாக நானிருப்பேன்.  அவர்களின் நோக்கம் ஈடேற நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை" என்று கூறினார்.

இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையினருக்கும் உங்களுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக பத்திரிக்கைச் செய்திகள் வந்தனவே? உங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? ராணுவம் உங்களுக்கு சம்பளம் தருவதில்லையென்றால், உங்களின் செயற்பாடுகளுக்கு எங்கிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்கிறீர்கள்? இரு வருடங்களாக உங்களுக்கென்று வழங்கப்பட்ட டிபென்டர் ரக ராணுவ வாகனமும், மெய்ப்பாதுகாவலர்களும் யாரால் எதற்காக வழங்கப்பட்டார்கள்? என்று கேட்டபோது, "எனக்கு ராணுவம் சம்பளம் தருகிறதென்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? எனக்கு பனம் தருபவர்கள் குறித்து நான் கூறவேண்டிய அவசியமில்லை. நான் இன்றும் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவையினையே பாவித்துவருகிறேன், அரசாலோ ராணூவத்தாலோ வாகனமோ, பாதுகாப்போ எனக்கு வழங்கப்பட்டால் நான் வேண்டாம் என்று கூறப்போவதில்லை. நிச்சயமாக எனக்கு ராணுவ புலநாய்வுத்துறையினருடன் தொடர்பிருக்கிறது. இந்த நாட்டிற்கு வரும் சகல ஆபத்துக்களையும் இல்லாதொழிப்பதற்கு நான் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்கிறேன். நான் மட்டுமல்ல, இந்த நாட்டின் அனைவருமே புலநாய்வுத்துறைக்கு உதவினால்த்தான் எமது தாய்நாட்டினைப் பாதுகாக்க முடியும்" என்று கூறினார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஊத்தை வாளி  தனது அலுவலகத்தை பகலிலேயே படுக்கையறையாக்கியவர்.

சொன்னதை செய்தாலும் ஆச்சரியம் இல்லை.

😏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் தீவிரவாதம் மீளவும் தலைதூக்குகிறது என்கிறீர்களா? என்று கேட்டபோது, "ஆம். அப்படித்தான் நினைக்கிறேன்" என்று கூறினார்.
அப்படியானால், ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் அங்கே நடமாடுகிறார்கள் என்று கூறுகிறீர்களா? என்று கேட்டபோது, "ஆயுதங்களுடன் வெளிப்படையாக அவர்கள் உலாவுவதாக நான் நினைக்கவில்லை. இன்றிருக்கும் வாள்வெட்டுக் குழுக்கள், முன்னாள் ராணுவ அமைப்புக்களான டெலோ, ஈ பி ஆர் எல் எப் ஆகியனவற்றின் உறுப்பினர்கள் மற்றும் சமூக விரோதிகளை இதற்காக ஒரு சக்தி பாவிக்க ஆரம்பித்திருக்கிறது" என்று கூறினார். 

யாழ்ப்பாணத்தில் தீவிரவாதத்தினை உசுப்பும் சக்தி யார் என்ற கேள்விக்கு, "வேறு யார், எல்லாமே இந்தியாதான். அவர்களுக்கு இலங்கையினை மீளவும் சுடுகாடாக்க இங்கே தமிழ்ப் பயங்கரவாதம் தேவைப்படுகிறது. அதனாலேயே இதனைச் செய்கிறார்கள். உதாரனத்திற்கு அண்மையில் மாவீரர் தினத்திற்கு அமைவாக கந்தர்பமடத்தில் இருக்கும் கிட்டுப் பூங்காவின் சிரமதான நிகழ்வுக்கு யாழ்ப்பாண இந்தியத் தூதர் சென்றிருந்தார். புலிப்பயங்கரவாதிகளின் மலரினை அணிந்துகொண்டு சிரமதானத்திலும் பங்கெடுத்தார். இதிலிருந்து என்ன புரிகிறது உங்களுக்கு? இந்தியா முலிகளின் மீளுருவாக்கத்திற்கு தன்னை ஆயத்தப்படுத்துகிறது என்பதைத்தானே? 1980 இலிருந்து இலங்கையினை அழிக்க இந்தியா தமிழ்ப் பயங்கரவாதிகளைப் பாவித்து வருகிரது. 1987 இல் தானே முன்னின்று இந்நாட்டு மக்களைக் கொன்றது. ஆனால், தமிழர்கள் யாரும் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட தமது மக்கள் பற்றிப் பேசுவதில்லை, அடக்கியே வாசிக்கிறார்கள். ஆனால், புலிப்பயங்கரவாதிகளை அழிக்க எமது ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையினை மட்டும் விமர்சிக்கிறார்கள். போர்க்குற்றம், இனவழிப்பென்று சர்வதேசத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்" என்று கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பேசுறத பாத்தா… என்ன இவன் என்னயவிட பெரிய இனவெறியனா இருக்கிறான்.. என்ர பதவிக்கே ஆப்படிச்சுடுவான் எண்டு… கோத்தபாயவே இவர புடிச்சு எதிர்காலத்தில ஜெயில்ல போட சந்தர்ப்பம் இருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இந்துசமயத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, பெளத்தனாக மாறிவிட்டதாகக் கூறுகிறீர்கள், அப்படியானால் உங்களின் அரசியல் வழி எது என்று கேட்டபோது, "நான் ரஷ்ஷியாவில் படித்தகாலத்திலிருந்தே மார்க்ஸியவாதியாக மாறிவிட்டேன். நான் இன்றும் ஒரு மார்க்ஸியவாதிதான். அதேவேளை யாழ்ப்பாணத்திலும் ஏனைய தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் சைவசமயத்தை அழித்து பெளத்த மதத்தினைப் பரப்புவதே எனது நோக்கம்" என்று கூறினார்.

கொழும்பில் உங்களுக்கெதிராகப் பிடிவிறாந்துகள் இதுவரையில் குறைந்தது 5 முறையாவது பிறப்பிக்கப்பட்டிருந்தன. ஆனாலும், இதுவரையில் உங்களுக்கெதிராக எவருமே நடவடிக்கையெடுக்கவில்லை. இதனை எப்படி விளக்குவீர்கள் என்று கேட்டதற்கு, "இவை எல்லாமே தவறான குற்றச்சாட்டில் என்மீது சுமத்தப்பட்டவை. விவாகரத்தான எனது முன்னாள் மனைவி, எனது மகளிற்கான மாதாந்தக் கொடுப்பனவு தாமதமாகிவிட்டதனால் என்மீது பொய்யான வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்தார். இப்படித்தான் எல்லாமே சோடிக்கப்பட்ட வழக்குகள். அதனாலேயே, என்னை எவரும் கைதுசெய்ய நினைக்கவில்லை" என்று கூறினார்.

அப்படியானால், பெண்களைக் கடத்தியது, விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது, போதைப்பொருட்களைக் கடத்தியது, அதீத போதைப்பொருள் பாவனை ஆகியவற்றிற்காக வழக்குகள் பதியப்பட்டனவே என்று கேட்டபோது, " நான் போதைப்பொருள் பாவிப்பதில்லை, ஆனால் மது அருந்துவேன், யார்தான் மது அருந்துவதில்லை? பெண்களைக் கடத்திச்சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக என்மீது பொய்யாகவே வழக்குகள் போடப்பட்டன. நான் போதைப்பொருள் கடத்துவதாக உங்களால் நிரூபிக்க முடியுமா?" என்று அவர் மேலும் கேட்டர்.

UNITY MARCH'' final day speech by Arun Siddharth in Tamil at Veerasingam  hall in Jaffna.05/03/2021 - YouTube

பி டு பி  எனும் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டிற்கெதிராக நீங்கள் யுனிட்டி மாச் என்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஒரு யாத்திரிகை ஒன்றினைச் செய்தீர்கள். அதற்கு குறைந்தது 10 பேரூந்துகளாவது பாவிக்கப்பட்டிருந்தன. இவற்றிற்கான பணத்தினையும், பாதுகாப்பினையும் எப்பிடிப் பெற்றீர்கள்? என்று கேட்டபோது, " நாட்டினை நேசிக்கும் மக்களும், அரசாங்கத்தில் சில அமைச்சர்களும் ராணுவமுமே எனக்கு உதவினார்கள். அதனாலேயே அந்த பவணி வெற்றியாக அமைந்தது" என்று கூறினார்.

ஆனால், உங்களின் யுனிட்டி மாச் படுதோல்வியில் முடிவுற்றதாகவும், குறைந்தது 3 பேரூந்துகளாவது வவுனியாவிற்கு போகும் முன்னரே மீளவும் யாழ்நோக்கித் திரும்பிவிட்டதாகவும். இன்னொரு பேரூந்தில் சில குண்டர்கள் இருந்ததாகவும், பலரை நீங்கள் பணம்கொடுத்தே அழைத்து வந்திருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது. இறுதியாகச் சென்ற பேரூந்தில் நீங்கள் போதைப்பொருட்களைக் கடத்திவந்ததாக பவணியில் கலந்துகொண்டோர் கூறியிருந்தார்கள். ஈற்றில், பவணிக்கென்று அழைத்து வரப்பட்டவர்கள் எல்லோருமே திரும்பிச் சென்றநிலையில் அநுராதபுரத்தோடு உங்களின் பவணி கைவிடப்பட்டதாக நாம் அறிந்துகொண்டோமே? என்று கேட்டபோது,
 "மூன்று பேரூந்துகள் வேண்டுமென்று திரும்பவில்லை. இயந்திரக் கோளாறு காரணமாகவே அவை யாழ் திரும்பவேண்டியேற்பட்டது. மக்கள் எல்லோரும் திரும்பிச் சென்றதால் எமது பவணி கைவிடப்படவில்லை. மாறாக நாமே பவணியை மாத்தறை நோக்கிச் செலுத்தாமல்  அநுராதபுரத்துடன் முடித்துக்கொண்டோம். அங்கே நான் ஆற்றிய உரையினைக் கேட்டிருப்பீர்கள், அது ஒரு பாரிய வெற்றி" என்று கூறினார். 

மக்களற்ற பவணி எப்படி வெற்றியாகும் என்று கேட்டபோது, "கூட்டமைப்பின் செயற்பாட்டிற்குப் பதிலடியாக இந்நாட்டு மக்கள் செயற்படவேண்டும் என்பதற்காகவே அதனைச் செய்தேன்" என்று கூறினார்.

புலிகளுக்கெதிராகக் கடுமையான , மிகவும் காரசாரமான விமர்சனத்தை முன்வைத்து வருகிறீர்கள். அதுவும் அவர்களின் கோட்டையான யாழ்ப்பானத்தில் இதனைச் செய்கிறீர்கள். இதனால் உங்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து வரும் என்று நினைக்கவில்லையா? என்று கேட்டதற்கு, " புலிகள் மிகவும் மிலேச்சத்தனமான பயங்கரவாதிகள், பெளத்தர்களையும், குருமாரையும் கொன்றவர்கள். அரந்தலாவை, அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் பெளத்தர்களைக் கொன்றவர்கள் அவர்கள். சிங்கள பெளத்தர்களை அழிப்பதே அவர்களின் நோக்கம். அதுமட்டுமல்லாமல், தங்களை எதிர்த்தவர்களையும் அவர்கள் அழித்தார்கள். எனது மனைவியின் தகப்பனாரையும் இன்னும் நான்கு சகோதரர்களையும் தங்களுக்கெதிராகச் செயற்பட்டத்தற்காக அவர்கள் கொன்றார்கள். எனது குடும்பத்தில் இதுவரை 16 உறுப்பினர்கள் ஒன்றில் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமலாக்கப்பட்டார்கள். ஆகவே, நான் சாகும்வரை புலிகளை அழிப்பதும், விமர்சிப்பதும், அவர்கள் மீள எழுவதை தடுப்பதுமே எனது வேலையாகும். நான் எவருக்குமே அஞ்சப்போவதில்லை. எனது பாதுகாப்புக் குறித்து எனக்குக் கவலையில்லை." என்று கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அண்மையில் கொழும்பிலிருக்கும் ஐ நா மனிதவுரிமை செயலகத்திற்குச் சென்று அவர்களிடம் மனுவொன்றினைக் கையளித்ததை பத்திரிக்கையில் கண்டோம், எதற்காக அங்கே சென்றீர்கள்? 

Arun Siddharthan arrested for trying to attack police in Sri Lanka -  time.news - Time News

"நான் உள்ளே செல்லவில்லை. அவர்களின் வாசலுக்குச் சென்று எனது மனுவைக் கையளித்தேன். நாட்டைக் காக்கும் புனிதப் போரில் ஈடுபட்ட எமது பெளத்த ராணுவத்திற்கெதிராக புலம்பெயர்ந்த தேசங்களில் வசிக்கும் புலி ஆதரவாளர்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். எமது ராணுவத்தினை போர்க்குற்றங்களிலும், மனித நேயத்திற்கெதிரான குற்றங்களிலும் ஈடுபட்டதாக பொய்களைப் பரப்பி, மேற்குநாட்டு அரசுகளை நம்பவைத்து வருகிறார்கள். இதனாலேயே இந்த நாடுகள் எமக்கெதிராக நடவடிக்கை எடுக்க முனைகின்றன.  முக்கியமாக மனிதவுரிமை பற்றிப் பேசும் யஸ்மின் சூக்கா போன்றவர்கள் புலிகளிடமிருந்து பெருமளவு பணத்தினைப் பெற்றுக்கொண்டே எமது ராணுவத்திற்கெதிரான பாரிய புனைகதைகளை வெளியிட்டு வருகிறார். புலம்பெயர் புலிகளின் அமைப்புக்களிடமிருந்து வருடம்தோறும் சுமார் 50,000 டொலர்களை இந்த முக்கியஸ்த்தர்கள் பெற்றுவருகிறார்கள் என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. புலிப்பயங்கரவாதிகளின் முகவர்கள் இந்த மனிதவுரிமை அமைப்புக்களை விலைக்கு வாங்கிவைத்திருக்கிறார்கள். ஆகவேதான், இதனைத் தடுத்து நிறுத்துவதற்கும், புலிகளால் கொல்லப்பட்ட பெளத்தர்களுக்கு நீதிகேட்டும், எமது ராணுவத்திற்கெதிரான போர்க்குற்ற விசாரணைகளை சர்வதேசம் கைவிடவேண்டும் என்று கோரியுமே எனது மனுவைக் கையளித்தேன்" என்று கூறினார். 

இந்தியாவை எதிர்ப்பதாகக் கூறும் நீங்கள், இலங்கைப் புலநாய்வுத்துறையினரிடம் வைத்திருக்கும் தொடர்புகளைப்போல், இந்திய உளவுத்துறையினரிடமும் நெருக்கமான தொடர்பிலிருப்பதாக அறிகிறோம். இந்தியாவை விமர்சித்துக்கொண்டு, அவர்களின் புலநாய்வுத்துறையினருடன் தொடர்பில் இருப்பது எப்படி? உங்களுக்கு இந்திய புலநாய்வு அதிகாரி ஜெகந்நாத்திற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? இரு தரப்பினரிடமிருந்தும் பெருமளவு பணத்தினை நீங்கள் பெற்றுக்கொள்வதாகக் கூறப்பட்டிருக்கிறது, இதுபற்றி விளக்குவீர்களா?

"நான் எல்லோருடனும் பேசவே விரும்புகிறேன். எனக்கு எவருமே விதிவிலக்கல்ல. அந்தவகையில் சில இந்திய அதிகாரிகளுடன் நான் பேசியிருக்கலாம். எனக்குப் பணம் தருபவர்களை நான் வேண்டாம் என்று சொல்வதில்லை. இந்த நாட்டிற்குச் சேவை செய்வதற்கு எனக்குப் பணம் தேவைப்படுகிறது. ஆனால், நான் பணத்திற்காக மட்டுமே செயற்படுபவன் அல்ல" என்று கூறினார்.

வெளிநாட்டில் வசிக்கும் பல சிங்களவர்களிடம் உங்களுக்குத் தொடர்பிருக்கிறது. பல அரச அமைச்சர்கள், அரச அதிகாரிகளுடன் உங்களுக்குத் தொடர்பிருக்கிறது. பல புலம்பெயர்ந்த சிங்களவர்கள் உங்களுக்குப் பணம் அனுப்பிவருகின்றனர், தமது முகப்புத்தகம் மற்றும் கீச்சகப் பதிவுகளில் உங்களை ஒரு வீரராகப் போற்றுகின்றனர், இதுபற்றிய உங்கள் கருத்தென்ன? பின்வரும் பெயருடைய சிங்களவர்கள் (புலம்பெயர் சிங்களவரின் பெயர்ப் பட்டியல் வாசித்துக் காட்டப்படுகிறது) உங்களுக்குப் பாரிய உதவிகளை செய்துவருகிறார்கள் என்று கூறப்படுகிறதே?

"எனது பெளத்த செயற்பாடுகளுக்கும், தமிழ்த்தேசியவாதிகளுக்கெதிரான செயற்பாடுகளுக்கும் உள்ளூர் அமைச்சர்கள் முதல், புலம்பெயர் சிங்களவர்கள்வரை பாரிய உதவியினையும், எனது அமைப்பிற்கான பிரச்சாரத்தையும் செய்துதருகிறார்கள். இந்நாட்டில் நான் நடத்தும் போராட்டங்களுக்கான உதவிகள் பாதுகாப்பு முதல் பல விடயங்களில் அமைச்சர்களும், ஜனாதிபதியும் தமது ஆசீரையும், உதவியினையும் அவ்வப்போது வழங்கிவருகிறார்கள். நீங்கள் கூறிய பெயர்ப் பட்டியலில் இருக்கும் சிங்களவர்கள் தொடர்பாக நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை. அவர்கள் எனக்கு பெருமளவு பணத்தினை வழங்கினார்கள் என்பதை உங்களால் நிரூபிக்க இயலாது."

"நான் கெளரவ ஜனாதிபதி கோட்டாபயவையும், கெளரவ பிரத மந்திரி மகிந்தவையும் நேசிக்கிறேன். இந்தநாட்டினை தமிழ்ப் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்து, அமைதிப் பூங்காவாக மாற்றியதற்கு நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். அவர்களின் ஆசீருடன் எனது பயணம் தொடரும்" என்றும் கூறினார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

Bild

அம்பேத்காருக்கும் பௌத்தருக்கும் என்ன தொடர்பு?

அதென்ன சைவ பௌத்த சங்கம்?

இந்தியாவில் இந்துமதவாதிகளால் கீழ்ச்சாதியினர் ஒதுக்கப்பட்டபோது கீழ்ச்சாதியில் இருந்துவந்து, படித்த மேதையான அம்பேத்கார் தன்னை பெளத்தத்தில் இணைத்துக்கொண்டார். அவரைத் தொடர்ந்து பல கீழ்ச்சாதி இந்துக்களும் பெளத்த மதத்தினைத் தழுவினர். 

அங்கே அம்பேத்கார் செய்தது பாரிய புரட்சி. ஆனால் அரச ராணுவத்தின் கைக்கூலியான அருண் சித்தார்த் செய்வது சுத்த புலியெதிர்ப்பு, யாழ் விரோத அரசியல். அவனைக் களமிறக்கியவர்கள் சிங்கள அடிமைகளான அங்கஜனும், அவனது மாமனும். 

யாழ்ப்பாணத்தில் தம்மை பெளத்தர்களாக அடையாளப்படுத்தும் நோயொன்று சில சைவர்களிடையே ஆரம்பித்திருக்கிறது. சமய நல்லிணக்கம், தமிழ் பெளத்தர்கள் என்கிற பெயரில் இந்தக் குழு செயற்பட்டுவருகிறது. சுரேன் ராகவன் எனும் படித்த முன்னாள் இந்துவும், இந்நாள் பெளத்தனுமானவன் வட மாகாண ஆளுநராக பேரினவாதிகளால் நியமிக்கப்பட்ட காலத்தில் வடக்கிலேயே பெளத்த மாநாட்டினை நடத்திக் காட்டினான்.

பெளத்த இனக்கொலையாளிகளின் ஆசீரோடும், பாரிய நிதியுதவியோடும் வடக்கில் பெளத்தமயமாக்கல் நடைபெற்று வருகிரது.

இதன் ஒரு அங்கமே இந்த கோடரிக் காம்பின் செயற்பாடுகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் இதை தொகுத்து எழுதியமைக்கு மிக்க நன்றி.

காலாகாலமாக காக்கைவன்னியனில் இருந்து இவன்வரை காட்டிக் கொடுப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
சில சமயங்களில்  வெற்றியும் அடைகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் உங்களை தமது அரசியல் நலனுக்காகத் தேர்தலில் பாவித்த அங்கஜனும், அவரது மாமனாரும் இபோது தூக்கியெறிந்துவிட்டார்களே?

"உண்மைதான். நானும் இது நடக்கும் என்று தெரிந்துதான் அதனைச் செய்தேன். எனக்கு எனது கொள்கையினை முன்னெடுக்க மேடையொன்று தேவைப்பட்டது. அவர்களுக்குத் தமது தேர்தல் பிரச்சார மேடையில் பேசுவதற்கு ஆள் தேவைப்பட்டது. ஆகவே, அவர்கள் என்னைப் பாவித்ததுபோல, நானும் அவர்களது பணத்தில் எனது செயற்பாடுகளை முன்னெடுத்தேன். அவர்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் எனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. சிங்கள பெளத்த கட்சியின் ஆதரவாளனும், பெளத்த மதத்தினை வடக்கில் முன்னெடுக்க விரும்புவனுமான  எனக்கு யாழ்ப்பாண இந்துக்களில் 48,000 பேர் வாக்களித்தனர்".

உங்களுக்கு யாழ்மக்கள் வாக்களித்தனரா? கொழும்பு மட்டக்குளியில் வாழ்ந்துவரும் உங்களை, யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதிலும் குறிப்பாக யாழ் இந்துக்களை எதிர்த்து, தமிழ்த் தேசியத்தை எதிர்த்து நீங்கள்  செய்யும் அரசியலை அவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அப்படியிருக்க உங்களுக்கு அவர்களில் 48,000 மக்கள் வாக்களித்தனர் என்று சொல்வது, அங்கஜனிற்குக் கிடைத்த வாக்குகளை நீங்கள் உரிமை கோறுவது போன்றதாகி விடுகிறதே?

"எனக்கு நேரடியாக வாக்களிக்காவிட்டாலும்கூட, அங்கஜனுக்குக் கிடைத்த வாக்குகள் எனக்குக் கிடைத்த வாக்குகளாகவே நான் பார்க்கிறேன். எனது பேச்சு வல்லமையினாலேயே அங்கஜனுக்கு மக்கள் வாக்களித்தார்கள். நான் மட்டக்குளியைச் சேர்ந்தவன் இல்லை. எனது தந்தையார் கொழும்பில் வசித்தவர். தினகரன் பத்திரிக்கையில் வேலை பார்த்தவர். நானும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவன் தான். புலம்பெயர் புலிப் பயங்கரவாதிகளும், தமிழ்த்  தேசியவாதிகளும் பேசுவதுபோல நீங்களும் பேசுகிறீர்கள்". 

யாழ் இந்துக்கள் மீதான உங்களின் வெறுப்பு எதனால் ஏற்பட்டது? இன்றும் அதேவெறுப்பும் ஆத்திரமும் இருக்கிறதா?

"எனது குடும்பத்திற்கு அவர்கள் செய்த அநீதியை ஒருநாளும் மறக்கமாட்டேன். அவர்கள் மீதான வெறுப்பு ஒருபோதும் என்னை விட்டு அகலாது. அவர்களைப் பழிவாங்கும் எண்ணம் முன்னைய காலத்தைப் போலல்லாமல் சற்றுக் குறைந்திருக்கிறது. எல்லோருடனும் பேசி, எமது நாட்டினை பெளத்த சமய ரீதியில் வளர்த்தெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன், இதனால் எனது பழிவாங்கும் உணர்வை தற்போதைக்கு கட்டுப்படுத்தியிருக்கிறேன், ஆனால் எனது கோபம் ஆறாது". 

உண்மையைச் சொல்லுங்கள், நீங்கள் எதற்காக வடக்கில் இப்போது செயற்படுகிறீர்கள், எல்லாமே ஒரு பாராளுமன்ற ஆசனத்திற்காகத்தானே?

"ஆம், அதற்காகத்தான். எனது எல்லா நடவடிக்கைகளும் எனது கையில் அதிகாரத்தினைக் கொண்டுவரும் நோக்கிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கையில் அதிகாரம் இல்லாமல் நான் எனது நடவடிக்கைகளை செய்வது முடியாத காரியம். ஆகவே வடக்கில் நான் முன்னெடுக்கும் பெளத்த மத நடவடிக்கைகளை எனது பாராளுமன்ற அதிகாரம் மூலம் தீவிரப்படுத்துவதே எனது அரசியல் இலட்சியம்".

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஈழப்பிரியன் said:

ரஞ்சித் இதை தொகுத்து எழுதியமைக்கு மிக்க நன்றி.

காலாகாலமாக காக்கைவன்னியனில் இருந்து இவன்வரை காட்டிக் கொடுப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
சில சமயங்களில்  வெற்றியும் அடைகிறார்கள்.

இவன் பேசுவதைக் கேட்கும்போது நீங்கள் பொறுமையினை இழந்துவிடுவீர்கள். இவனது எகத்தாளமும், தமிழ்மக்கள் மீதும், விடுதலைப் போராட்டம் மீதும் இவன் கொண்டிருக்கும் வெறுப்பும், காழ்ப்புணர்வும் இவனது வார்த்தைகளில் கொப்புளிக்கிறது. இவன்பற்றி எல்லோரும் அறியவேண்டும் என்பதனாலேயே பற்களைக் கடித்துக்கொண்டு இந்த கோடரிக் காம்பின் செவ்வியினைக் கேட்டேன். இவனைப் பேட்டிகண்ட சிங்கள தொகுப்பாளருக்கு தமிழ் மக்கள் மீதிருக்கும் கருணையோ அல்லது அவர்களின் அரசியல் தொடர்பான பிரக்ஞையோ இவனுக்குத் துளியளவும் இருக்கவில்லை. 

ஆனால், இவனின் பின்னால் ராணுவ புலநாய்வுத்துறையும், அரச தலைமைப் பீடமும் இருக்கிறது. மகிந்த, கோத்தாவுக்கு தான் நெருக்கமானவன் என்பதைக் கூற அவன் தயங்கவில்லையென்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டிய கோடரிக் காம்புகளில் இவனும் ஒன்று.

Link to comment
Share on other sites

இவ்வளவு நாளும் உங்களுக்கு இந்த நபரைப் பற்றி தெரியாமல்  இருந்தது ஆச்சரியமாக இருக்கு ரஞ்சித். இவ் நபர் பற்றி யாழிலும் சில செய்திகள் உள்ளன. மாவீரர் வாரம், தலைவரின் பிறந்த நாள், மே 18 போன்ற நாட்களில் இந் நபர் யாழ்ப்பாணத்தில் செய்யும் அட்டகாசங்கள் பல. 

2009 இன் பின் நடந்த ஒரு பாராளுமன்ற தேர்தலிலோ அல்லது மாகாண சபைத் தேர்தலிலோ, தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சி சார்பாக போட்டியிட முயன்று, முதலில் பேச்சளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின் அவரது சாதி காரணமாக நிராகரிக்கப்பட்டவர் என சிலர் சொல்வதை கேட்டுள்ளேன். அதன் பின்னர் தான் அங்கஜனுடன் சேர்ந்தாராம். 

தன்னை ஒரு ஒதுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்று முதலில் காட்டி பின்னர் ஒட்டுமொத்த தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தி தமிழிலும் சிங்களத்திலும் பிரச்சாரம் செய்யும் நபர் இவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

உந்த ஊத்தை வாளி  தனது அலுவலகத்தை பகலிலேயே படுக்கையறையாக்கியவர்.

சொன்னதை செய்தாலும் ஆச்சரியம் இல்லை.

😏

அந்த….  அருவருப்பான, காணொளியை முன்பு வாட்சப்பில் ஒருவர் அனுப்பியிருந்தார்.
பார்த்த மறுணமே… அழித்து விட்டேன். அந்த அளவு கேவலமாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

2021ஆம் ஆண்டு பெப்ரவரிக்கு கிட்டவாக அந்த ஐநாவிற்கான(!?) ஒரு போராட்டத்தின்போது சில தமிழ்ப்பெண்களை ஒருங்கிணைத்து சாலையோரத்தில் பந்தலிட்டு வெளிநாடுகளில் நடந்த அந்த போராட்டத்தை திசை திருப்புவதற்காக ஒரு நாடகம் ஆடியவன் இந்த ஊத்தைவாளி என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

  • இந்தக் கயவன் தொடர்பாக இதற்குள் பாருங்கள்:

https://www.youtube.com/c/ArunSiddharth-JaffnaCivilSocietyCenter/videos

 

https://www.youtube.com/results?search_query=அருண்+சித்தார்த்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இவ்வளவு நாளும் உங்களுக்கு இந்த நபரைப் பற்றி தெரியாமல்  இருந்தது ஆச்சரியமாக இருக்கு ரஞ்சித். இவ் நபர் பற்றி யாழிலும் சில செய்திகள் உள்ளன. மாவீரர் வாரம், தலைவரின் பிறந்த நாள், மே 18 போன்ற நாட்களில் இந் நபர் யாழ்ப்பாணத்தில் செய்யும் அட்டகாசங்கள் பல. 

2009 இன் பின் நடந்த ஒரு பாராளுமன்ற தேர்தலிலோ அல்லது மாகாண சபைத் தேர்தலிலோ, தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சி சார்பாக போட்டியிட முயன்று, முதலில் பேச்சளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின் அவரது சாதி காரணமாக நிராகரிக்கப்பட்டவர் என சிலர் சொல்வதை கேட்டுள்ளேன். அதன் பின்னர் தான் அங்கஜனுடன் சேர்ந்தாராம். 

தன்னை ஒரு ஒதுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்று முதலில் காட்டி பின்னர் ஒட்டுமொத்த தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தி தமிழிலும் சிங்களத்திலும் பிரச்சாரம் செய்யும் நபர் இவர்.

இவன்பற்றி செய்திகளில் பார்த்திருக்கிறேன். பின்புலம் தெரிந்திருக்கவில்லை. சிரச தொலைக்காட்சியில் தோன்றுமளவிற்கு இவனை வளர்த்துவிட்டிருக்கிறார்கள். அவனது செவ்வியைக் கண்டவுடன் அதுபற்றி எழுத எண்ணினேன். தமிழர்கள் ஒதுக்கவேண்டிய நாசகாரி இவன். 

Link to comment
Share on other sites

ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளனுக்கப்பால்  ஒரு சிங்களவனுக்கு தமிழன் என்ற இனம் மீது இருக்கும் பார்வை கூட இவனிடம் இல்லாதது இவனது பிறப்பை  சந்தேகிக்க  வைக்கிறது ்  

இரண்டு முக்கிய  கேள்விகளை எதிர்பார்த்தேன் 1,இவ்வளவு  பற்றும் பாசமும் உள்ள நீங்கள் 2009ஆண்டு மட்டும் ஏன் பார்வையாளனாய் மாத்திரம் இருந்தீர்கள் புலிக்கு எதிராக ஆயுத த்தை  புலியின் எந்த குணம் உங்களுக்கு பயத்தை காட்டியது.                   2, உங்களது எத்தினையாவது மனைவியின் அப்பாவை புலிகள் கடத்தினார்கள்.                                   3.           இந்த இரண்டு கேள்வியும் கேட்டிருந்தால் பேட்டி மகுடம் சூடி இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

இவ்வளவு நாளும் உங்களுக்கு இந்த நபரைப் பற்றி தெரியாமல்  இருந்தது ஆச்சரியமாக இருக்கு ரஞ்சித். இவ் நபர் பற்றி யாழிலும் சில செய்திகள் உள்ளன. மாவீரர் வாரம், தலைவரின் பிறந்த நாள், மே 18 போன்ற நாட்களில் இந் நபர் யாழ்ப்பாணத்தில் செய்யும் அட்டகாசங்கள் பல. 

2009 இன் பின் நடந்த ஒரு பாராளுமன்ற தேர்தலிலோ அல்லது மாகாண சபைத் தேர்தலிலோ, தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சி சார்பாக போட்டியிட முயன்று, முதலில் பேச்சளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின் அவரது சாதி காரணமாக நிராகரிக்கப்பட்டவர் என சிலர் சொல்வதை கேட்டுள்ளேன். அதன் பின்னர் தான் அங்கஜனுடன் சேர்ந்தாராம். 

தன்னை ஒரு ஒதுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்று முதலில் காட்டி பின்னர் ஒட்டுமொத்த தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தி தமிழிலும் சிங்களத்திலும் பிரச்சாரம் செய்யும் நபர் இவர்.

இவரது கோபத்தின் பின்னாலிருக்கும் நியாயமான காரணம் புரிந்துகொள்ளத்தக்கதே.

ஆனால் சாதிப் பாகுபாடுதான் இவரது கோபத்திற்கு பின்னாலிருக்கும் உண்மையான  காரணமென்றால் அதற்கெதிராகத்தானே இவரது போராட்டம் இருந்திருக்க வேண்டும். 

ஆனால்  இவரது செய்கை தேசியம், சைவ சமயம், தமிழ் இனத்திற்கெதிரானதாக இருக்கிறது . அப்படியென்றால் இவரது செய்கைகள் அனைத்தும் இவரது சுயநலமான சிந்தனையின்பாற்பட்டதே. 

அற்பன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருண், பாடசாலை முடிந்து அம்மாவின் முந்தனையை பிடித்துகொண்டு நீங்கள் சிறுவனாக இருந்தபோது கொட்டாஞேனை ‍மட்டக்குளி பஸ்ஸில் பயணித்த காலம் நினைவில் வந்து போகின்றது.   
சிங்களவன் கூட இவ்வளவு துவேசமாக இருக்க மாட்டான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு மன நோயாளி என்பதை முகத்தை பார்த்த உடனேயே ஊகிக்க முடியும். இவர் மனத்தில் பல வருடங்களாக வளர்தெடுத்த இனவெறி, காழ்ப்புணர்வு, பழிவாங்கும் வக்கிர உணர்வு, சுய சிந்தனையற்ற பேச்சு, சுயலாபத்திற்கு ஒட்டு மொத்த மக்களையும் கண்மூடித்தனமா பழிவாங்க துடிக்கும் ஆவல் அனைத்தும் இவரிடம் இருக்கிறது. 

இவை போன்ற குணங்கள் சாதாரண மனிதனொருவனுக்கு இருக்காது. இவரை சுதந்திரமாக உலவ விடுவது முழுத் தமிழினத்துக்கே ஆபத்து. மொத்தத்தில் இவர் சிங்கள இனவெறி ஆட்சியாளருக்கு கிடைத்த வரப்பிரசாதம். இவரின் உடனடித்தேவை மன நல மருத்துவ உதவியும் சரியான உளவியல் கவனிப்பும்.

இவர்போல சிங்கள மக்கள் மத்தியிலும் பலர் இருப்பார்கள். அவர்களை நாங்கள் சிங்களவர்களுகெதிராக திருப்பிவிடுவது தான் இவர் போன்ற மன நோயாளிப் பயங்கரவாதிகளை பயன்படுத்தும் இனவெறியர்களுக்கு நாங்கள் வழங்கும் சரியான பதில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்னொரு மக்கள்  சமூகத்தை அதன்  பண்பாட்டு வழிமுறைகளை மதிக்காதவன்

அதனை அழிப்பேன்  என்று கர்ச்சிப்பவன்

தான்  தாழ்த்தப்படுவதாக ஓலமிடுவது ??????

நான்  அடிக்கடி  சொல்வது தான்

சாதி என்பது  இவர்  போன்றவர்களின் கையில் போவதைவிட இப்ப இருப்பதே  பரவாயில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.