Jump to content

மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவிலுக்குக் குண்டெறிந்தது எனது தந்தையே, நல்லூர் முருகன் ஆலயத்தை இடித்து மலசலகூடம் கட்டுவேன் - அருண் சித்தார்த்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவன் பற்றிய இன்னும் சில சிங்களக் காணொளிகளை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இன்று, கோட்டாபய மற்றும் மகிந்தவுக்கு எதிரான, ஆனால் 2019 வரை அவர்களைத் தீவிரமாக ஆதரித்து வந்த சிங்கள ஊடகவியலாளர்கள், கலைத்துறையினர் ஆகியோர் இவன் போன்றவர்களைத் தேடித்தேடி தமது களங்களில் பேசவைத்து வருகிறார்கள். 

உதாரணத்திற்கு சேபால் எனப்படும் பிரபல சிங்கள யூடியூப் ஊடக அரசியல் விமர்சகர் தனது பதிவொன்றில் இவனையும் முன்னாள் சிங்கள நீதியரசர் ஒருவரையும் ஒருங்கே அழைத்து, கேள்வி பதில் நிகழ்ச்சியாக ஒன்றினை நடத்தியிருக்கிறார். சேபாலின் காணொளிகளில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த பதிவாக இது அமைந்திருந்தது.

அக்காணொளியின் சாராம்சம் இதுதான். 

செல்வநாயகம் முதல், காங்கிரஸ், கூட்டணி, தமிழரசுக் கட்சி, புலிகள், ஏனைய ஆயுதக் குழுக்கள், கூட்டமைப்பு, விக்னேஸ்வரன், கஜன் அணி ஆகிய எல்லோருமே தமிழ்த் தேசியவாதம் எனும் அதிதீவிர மாயைக்குள் வாழ்கிறார்கள். தமிழர்களை சிங்கள மக்களுடன் ஒன்றுபட்டு ஒரு நாட்டிற்குள் வாழ்வதைத் தடுப்பது இவர்கள்தான். தமது அரசியல் ஆதாயத்திற்காக சிங்கள மக்களுக்கெதிரான அரசியலையும், பயங்கரவாதத்தினையும் தூண்டிவிட்டிருக்கிறார்கள். இனங்களுக்கிடையிலான வேற்றுமைகளைக் களைய கலப்பு இடம்பெறவேண்டும். தமிழர்களிடையே பெளத்தமதம் பரவ வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் தமது செல்வாக்கினையும், பலத்தினையும் பாவித்து சிங்கள மக்களுக்கும், ராணுவத்திற்கும் எதிரான பிரச்சாரத்தினை முடுக்கி விட்டிருக்கிறார்கள். ஆனால், தனது அரசியல் செயற்பாட்டினால் இக்கட்சிகள் ஆட்டம் கண்டுவருவதுடன், தமிழர்கள் தமது வன்முறைப் பாதையினை, தீவிர தேசியப் பாதையினை கைவிட்டு, அந்நிய சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்கள். சிங்கள மக்களால் எக்காலத்திலும் தமிழர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படவில்லை. 

தமது மேலாதிக்கத்தை, பெரும்பான்மையின அதிகாரத்தினை, பெளத்த மதத்தினை ஏற்றுக்கொண்டு, தமிழர்களின் அவலங்களை இல்லையென்று நிராகரித்துக்கொண்டு, அவர்களின் அரசியல் அபிலாஷைகளை தீவிரவாதம் என்று வர்ணித்துக்கொண்டு, பெளத்த சிங்களக் கலாசாரத்தை தமிழர்களின் இதயப்பகுதியில் நிலைநாட்டச் செயற்பட்டுக்கொண்டு, தம்மால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை இல்லை என்று சத்தியம் செய்துகொண்டு செயற்பட்டு வரும் இவன் போன்றவர்கள் இச்சிங்களத் தேசியவாதிகளைப் பொறுத்தவரை வராதுவந்த மாமணியாகத் தெரிகிறார்கள். அதனாலேயே இவனைப் போட்டி போட்டுக்கொண்டு தமது களங்களில் வரவழைத்து, மகுடம் சூட்டி அழகுபார்க்கிறார்கள். இனங்களுக்கிடையே சமத்துவத்தை, சமாதானத்தை ஏற்படுத்தவந்த நவீன காந்தியாக ஏற்றுக்கொள்ள விரும்புகிரார்கள். 

சிலர் ஒருபடி மேலே போல், இன்றிருக்கும் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளை தடைசெய்து இவனையும், கருணா, பிள்ளையான், அங்கஜன், டக்கிளஸ் போன்றவர்களையும் முன்னிறுத்தி தமிழர்கள் அரசியல் செய்யவேண்டும் என்றும், இவனை யாழ்ப்பாணத்து முதலமைச்சராகவோ அல்லது ஆளுநராகவோ அரசாங்கம் அமர்த்தவேண்டும் என்றும் கோரிக்கையினை சமூகவலைத்தளங்களில் முன்வைத்து வருகிறார்கள். 

அங்கஜனின் அரசியல் ஆதாயத்திற்காக யாழ்ப்பாணத்தில் இறக்கப்பட்ட இந்த நச்சுப் பாம்பிற்கு தமிழர்கள் தலையில் அடிக்கவேண்டும். இவனை முன்னிறுத்தி சிங்களப் பயங்கரவாதம் செய்யவிரும்பும் அரசியலினை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். 

ஆனால், சலுகைகளுக்காகவும், பணத்திற்காகவும் விலைபோகும் சமூகம் ஒன்று தமிழர் தாயகத்தில் வளர்ந்துவரும் இவ்வேளையில் இந்தப் பாம்புகளின் விஷத்தை அழிப்பது கடிணமாகவே இருக்கப் போகிறது.

இவனை ஒரு போதைக்கு அடிமையான ராணுவக் கைக்கூலிதானே என்று புறந்தள்ளிவிட்டுச் செல்லாமல் இவன் முன்னெடுக்கும் அழிவு அரசியலை அழிப்பதே நாம் இன்று செய்யவேண்டியது. 

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

இவன் பற்றிய இன்னும் சில சிங்களக் காணொளிகளை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இன்று, கோட்டாபய மற்றும் மகிந்தவுக்கு எதிரான, ஆனால் 2019 வரை அவர்களைத் தீவிரமாக ஆதரித்து வந்த சிங்கள ஊடகவியலாளர்கள், கலைத்துறையினர் ஆகியோர் இவன் போன்றவர்களைத் தேடித்தேடி தமது களங்களில் பேசவைத்து வருகிறார்கள். 

உதாரணத்திற்கு சேபால் எனப்படும் பிரபல சிங்கள யூடியூப் ஊடக அரசியல் விமர்சகர் தனது பதிவொன்றில் இவனையும் முன்னாள் சிங்கள நீதியரசர் ஒருவரையும் ஒருங்கே அழைத்து, கேள்வி பதில் நிகழ்ச்சியாக ஒன்றினை நடத்தியிருக்கிறார். சேபாலின் காணொளிகளில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த பதிவாக இது அமைந்திருந்தது.

பதிவிற்கு நன்றி ஐயா! 🙏

உங்களைப்போன்ற  சிங்கள மொழி தெரிந்தவர்கள் சிங்கள ஊடகங்களில் என்ன நடக்கின்றது என்பதை தமிழ் வெளியுலகிற்கு கொண்டு வரவேண்டும். இன விடுதலை ஏன் வேண்டும் என புரியாதவர்களுக்கும் புரிய/விளங்க வழிவகை செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

பதிவிற்கு நன்றி ஐயா! 🙏

உங்களைப்போன்ற  சிங்கள மொழி தெரிந்தவர்கள் சிங்கள ஊடகங்களில் என்ன நடக்கின்றது என்பதை தமிழ் வெளியுலகிற்கு கொண்டு வரவேண்டும். இன விடுதலை ஏன் வேண்டும் என புரியாதவர்களுக்கும் புரிய/விளங்க வழிவகை செய்யுங்கள்.

உங்களின் ஆதரவுக்கு நன்றியண்ணா. இவனின் மறுபக்கம் தொடர்பாக எம்மில் பலர் இதுவரை அறியவில்லை. அதனாலேயே இதனை எழுதுகிறேன். 

4 minutes ago, குமாரசாமி said:

உங்களைப்போன்ற  சிங்கள மொழி தெரிந்தவர்கள் சிங்கள ஊடகங்களில் என்ன நடக்கின்றது என்பதை தமிழ் வெளியுலகிற்கு கொண்டு வரவேண்டும்.

இதில் உள்ள ஒரே பிரச்சினை அவர்கள் எமக்கெதிராகக் கக்கும் அசிங்கமான பேரினவாத சிந்தனைதான். கேட்க அருவருப்பாகவும், அதேவேளை தாங்கொணா கோபத்தினையும் ஒருங்கே ஏற்படுத்துகின்றன. சிலவேளை, இவன்போன்ற சாக்கடைகளைக் கடந்து சென்றுவிடலாமோ என்றும் நினைப்பதுண்டு. ஆனால், இவனை களமேற்றும் சிங்களப் பேரினவாதம் தொடர்பாக நாம் அறியவேண்டும் என்பதால் தொடர்ந்து பார்க்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான தறுதலைகள் மீது.. இன ஒற்றுமையை தகர்க்கிறான்.. இன ஐக்கியத்தை.. புடுங்கிறான்.. மத நல்லிணக்கத்தை கெடுக்கிறான்.. சட்டங்கள் பாயாது.

இதையே தலதா மாளிகை நோக்கிச் சொல்லிப் பார்த்தீங்கன்னா.. எல்லா சட்டமும் பாயும்.

ஆக.. இப்படியான தறுதலைகளை தூண்டி விடுபவர்கள் தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதனால்.. தான் இந்த வெறிபிடித்த நாய் குரைக்க முடியுது இப்படி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் வீட்டில் இருந்து தானோ  வேலை 🤔
 

12 hours ago, nedukkalapoovan said:

இப்படியான தறுதலைகள் மீது.. இன ஒற்றுமையை தகர்க்கிறான்.. இன ஐக்கியத்தை.. புடுங்கிறான்.. மத நல்லிணக்கத்தை கெடுக்கிறான்.. சட்டங்கள் பாயாது.

இதையே தலதா மாளிகை நோக்கிச் சொல்லிப் பார்த்தீங்கன்னா.. எல்லா சட்டமும் பாயும்.

ஆக.. இப்படியான தறுதலைகளை தூண்டி விடுபவர்கள் தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதனால்.. தான் இந்த வெறிபிடித்த நாய் குரைக்க முடியுது இப்படி. 

உங்களை போன்ற சிலர்  தான் இவரை தூக்கி பிடிப்பது ..ஊரில் இருப்பவர்களுக்கு இவர் யாரென்றும் தெரியாது ...தெரிந்த சிலரும் இவரை ஏனென்றும் கணக்கெடுப்பதில்லை 
 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சசிவர்ணம்... கேட்டுக் கொண்டதற்கு இணங்க... 
இந்தப் பதிவு தோண்டி எடுக்கப் படுகின்றது.  🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்ச அடி போட்டால் தான் என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sasi_varnam said:

இன்னும் கொஞ்ச அடி போட்டால் தான் என்ன? 

இவனை இப்ப போட்டால் ஏனென்று கேட்கக் கூட ஆட்கள் இல்லை. பொலீஸ் கூட அவனைக் காப்பாற்ற முயற்சிக்குதே ஒழிய, ஆரையும் கைதுசெய்ய விரும்பவில்லை. எத்தினை காலத்துக்குத்தான் அவங்களும் கோத்தாவின்ர வேட்டை நாய்களாக வலம் வருவது? ஆனால் அந்தக் கறுப்பு டீ சேர்ட் போட்ட எடுபிடிக்கு அடியெண்டால் அடி, நெருப்படி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, ரஞ்சித் said:

இவனை இப்ப போட்டால் ஏனென்று கேட்கக் கூட ஆட்கள் இல்லை. பொலீஸ் கூட அவனைக் காப்பாற்ற முயற்சிக்குதே ஒழிய, ஆரையும் கைதுசெய்ய விரும்பவில்லை. எத்தினை காலத்துக்குத்தான் அவங்களும் கோத்தாவின்ர வேட்டை நாய்களாக வலம் வருவது? ஆனால் அந்தக் கறுப்பு டீ சேர்ட் போட்ட எடுபிடிக்கு அடியெண்டால் அடி, நெருப்படி!

 

 

ரஞ்சித் அவர்களே, 5:57 இல் கவனிச்சியளே ஒரு விசத்தை, (ஆளைப் பாக்க தமிழ் மாதிரி தெரியுது) இதான் வாய்ப்பெண்டு சிறீலங்காக் கொடியை கீழ போட்டு உழக்கி முறிச்சுப் போட்டுட்டா🤣🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சண்டைப்பயிற்சி  சூப்பர் சுப்பராயனோ 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and people standing

இவன், செருப்பால் அடி வாங்கும் காட்சியை... 
வைத்த கண் வாங்காமல் பார்க்க வேண்டும் போலுள்ளது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நன்னிச் சோழன் said:

 

ரஞ்சித் அவர்களே, 5:57 இல் கவனிச்சியளே ஒரு விசத்தை, (ஆளைப் பாக்க தமிழ் மாதிரி தெரியுது) இதான் வாய்ப்பெண்டு சிறீலங்காக் கொடியை கீழ போட்டு உழக்கி முறிச்சுப் போட்டுட்டா🤣🤣

 

 

பார்த்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இவன், செருப்பால் அடி வாங்கும் காட்சியை... 
வைத்த கண் வாங்காமல் பார்க்க வேண்டும் போலுள்ளது. 

இந்த நேரம் பார்த்து நம்ம ஆட்கள் அதாங்க  சம் சும் நாதஸ்வர கோஸ்ட்டி ஏதாவது உளறி கொட்ட மாட்டாங்களாம் என்று தவியாய் தவிக்கிறேன் சனம் பசியிலும் விசரிலும் நிக்குது அடுத்த தீபாவளிக்கு தீர்வு என்று சொல்லி வாய் மூடமுன் வேட்டி அவிழ அவிழ சாத்துப்படி பூஜை கொடுக்கும் காணொளியை பார்க்க துடியாய் துடிக்கிறேன் வாயை இறுக மூடிக்கொண்டு திரியினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2022 at 21:04, Kapithan said:

இவரது கோபத்தின் பின்னாலிருக்கும் நியாயமான காரணம் புரிந்துகொள்ளத்தக்கதே.

ஆனால் சாதிப் பாகுபாடுதான் இவரது கோபத்திற்கு பின்னாலிருக்கும் உண்மையான  காரணமென்றால் அதற்கெதிராகத்தானே இவரது போராட்டம் இருந்திருக்க வேண்டும். 

ஆனால்  இவரது செய்கை தேசியம், சைவ சமயம், தமிழ் இனத்திற்கெதிரானதாக இருக்கிறது . அப்படியென்றால் இவரது செய்கைகள் அனைத்தும் இவரது சுயநலமான சிந்தனையின்பாற்பட்டதே. 

அற்பன். 

 

இவற்றை சாதாரணமாக கடந்துவிட முடியாது நாம் எல்லோரும் புத்திசாலிகள் என்று எண்ணி கொண்டிருப்போம் வாழ்க்கை தேயும்போது திரும்பி பார்க்கையில் எல்லாவற்றாலும் ஏமாற்றப்படடோம் என்பது கேள்வியாக மிஞ்சும். 

இவனை போன்றவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை மிகுந்த அறிவாளிகள் 
இவனிடம் பௌத்தமும் இல்லை இலங்கை விசுவாசமும் இல்லை அவர்களை எவ்வாறு ஏய்த்து 
பிழைப்பது என்பது பக்காவாக தெரிந்தவன். ஆனால் சிங்கள பேரின வாதிகளுக்கு இவன் டக்ளஸ் கருணா பிள்ளையான் போன்றவர்கள் அவல் மாதிரி மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருப்பார்கள்.

90களில் இந்தியா இலங்கை அரசுக்கு புலிகளுக்கு எதிரானவர்கள் என்ற பாசாங்கு காட்டிக்கொண்டு 
உள்ளுக்குள் தான் இலங்கையில் செய்த அடடூழியங்கள் வெளியில் செல்லாதிருக்க யாழ் பல்கலையில் பட்டம் பெற்றவர்கள் கொழும்பில் மருத்துவம் கல்விகலாசாலையில் முக்கிய நபர்கள் போன்றவர்களை வைத்து ஒரு கூடம் அமைத்து வைத்திருந்தது. கொழும்பில் தமிழர்களாக உயர்பதவிகளில் தமிழ் பெயர்களில் வாழ்வதுக்கு அவர்களுக்கும் அது பெரும் உதவியாக இருந்தது   

ரஜனி தினராகம வை ஈப்பியை கொண்டு சுட்டுவிட்டு அதை புலிகள்தான் செய்தார்கள் என்று 
இந்த கூடடம்தான் அப்போ தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகொண்டு இருந்தது அதன் பின்புலத்தில் இந்திய றோ  இருந்து.  இந்திய பத்திரிகையாளர் என் டி ராம் இந்திய புலிகள் சண்டை நடக்கும்போதுகூட புலிகளின் நியாயமான  போர் பற்றியே எழுதிவந்தார். பின்பு றோ தான் அவரை தன கையில் போட்டுகொண்டு இவரை கொண்டு  இந்தியாவில் மிகப்பெரிய ஜர்னலிஸ்ட் யுனிவர்சிட்டி உருவாக்கி அதன் கிளைகளை சிங்கப்பூர் பிலிப்பைன்ஸ்  மலேசியாவில் திறந்து அந்த நாடுகளின் எதிர்கால பத்திரிகை நிருபர்களை மூளை சலவைமூலம்  உருவாக்கி கொண்டு இருந்தார்கள். செல்வியால் புலிகளுக்கு எந்த அச்சறுத்தலும் இல்லை  
அவர்கள் மீண்டும் மீண்டும் எச்சரிக்க இவர்களின் பின்புலம் இருப்பதால் அவரும் தலைகால் புரியாமல் ஆடிக்கொண்டு  இருந்தார். 90 இல் ஈரோஸ் பாலகுமார் புலிகளுடன் ஒன்று சேர்வது என்று முடிவெடுத்ததும் (அதுக்கு முன்பே  அது தொடங்கிற்று முதலமைச்சர் தேர்தலில் புலிகள் மக்களை ஈரோஸ வெளிச்சவீட்டுக்கு வாக்களிக்கவே சொன்னார்கள். ஈரோஸ் அதில் சுயேட்சையாக நின்றது. திருகோணமலையில் ஈப்பி எண்டில்ப் போன்றவர்கள் ஈரோஸ் போராளிகள் மீது தாக்குதல் செய்துகொண்டே இருந்தார்கள் அதனால்தான்  பலர் யாழுக்கு கொண்டுவரப்பட்டார்கள்) அதில் இருந்து பிரிந்து ஈரோஸ் புலிகள் இருவருக்கும் எதிராக  ஒரு குழு உருவாகி தாங்களே எழுதி தாங்களே வாசிக்கும் சில பிரசுரங்களையும்  அச்சடித்து வந்தார்கள். இதன் தலைமை செயற்பாடடாளர் யாழில் இருந்து வன்னிக்கு ஓடி சிவில் உடையில்  இருந்த  புலிகளிடம்தான் செல்வி வீட்டுக்கு வழி கேட்டிருந்தார் .... அவர்களும் பாதுக்காப்பாக கொண்டுசென்று செல்வி வீட்டில் விட்டுவிட்டு  அன்று மாலை செல்வி வீடடை சுற்றி செல்வி மற்றும் இப்படி ஓடிவந்த  மொத்தம் 5 பேரை கைதுசெய்து போனார்கள். நான் விசாரித்த மட்டில் செல்வியை சுடும் எண்ணம்  புலிகளுக்கு  இருக்கவில்லை  எல்லாம் ஒரு கட்டுக்குள் வந்தும் அவரை விடுவிக்கவே இருந்தார்கள்.
இந்த கொழும்பில் இருந்த கூடடம்  றோவின் நிகழச்சி நிரலுக்கு அமைய மற்றைய நாட்டு தூரகங்கள்  
வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் போன்றவர்களை சந்தித்து தூண்டி கொண்டே இருந்தார்கள் 
அப்போது புலிகளின் அரசியல் பணிமனை ஒன்று கொழும்பிலும் இருந்தது ... அங்கு செல்பவர்கள் நாட்டு பிரச்சனை  அரசியலை விட செல்விதான் தெற்காசியாவின் அதிபர் என்ற ரேஞ்சுக்கு கேள்வி கேட்கவே 
கொழும்பில் அப்போது இருந்தவர்கள்தான் அவர் மீண்டும் மீண்டும் துரோகம் இழைத்ததால் சுட்டுவிடடோம் என்று  ஒரு பத்திரிகை (தி ஐலண்ட் என்று நினைக்கிறன்) காரருக்கு சொல்லிவிடார்கள். ஆனால் அப்போது உண்மையில்  அவர்கள் சுடவில்லை அவர் வன்னியில் இருக்கிறார். பின்பு இந்த கூடடம் இரங்கல் கூட்டம் ... கண்டன  அறிக்கை அது இது என்று பெரும் எடுப்பில் தொடங்கீட்டுது. பின்பு உண்மையில் என்ன நடந்தது என்று எனக்கு  தெரியாது .... நான் இப்போதும் எனக்குள் நினைப்பது ..... இதை பார்த்த பின்புதான் செல்வி சாதாரண ஆள்  இல்லை இந்த கூட்டத்துக்கே இவள்தான் தலைவி என்று எண்ணித்தான் சுட்டிருப்பார்கள். 
இந்தியன் ஆமி மற்றும் ஈபி போனதும் யாழ் பல்கலையிலேயே செல்வி ஓரம்கட்ட பட்டுவிட்டார்  
ரஜனி தினராகம ரேஞ்சுக்கு இவரை கொண்டுவரவேண்டும் என்றுதான் இந்த கொழும்பு கூட்டம் எண்ணியது 
உண்மையில் ரஜனி இயல்பாகவே ஒற்றுமையை விரும்பியவர் ... இவர்கள் பாசாங்கு காட்டுபவர்கள்.
இன்னொரு தமிழனுக்கோ சொந்த சகோதர சகோதரிகளுக்கே ஒரு ரூபா கொடுக்காத கூட்டம் 

(இங்கு யாழ் களத்தில் எழுதும் ஒருவருக்கு இவர்களுடன் தொடர்பு உண்டு. கோஷனுக்கும் இருந்து இருக்க நிறைய வாய்ப்பு உள்ளது என்றே எண்ணுகிறேன் .... இந்த சந்தேகம் எனக்கு வருவத்துக்கு முக்கிய காரணம் அவர் எள்ளுக்கும் இவர்கள் பற்றி வாய் திறப்பதே இல்லை என்பது மட்டுமே) 

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் 
இந்த கூட்டம் எமது விடுதலை போராட்டத்துக்கு எண்ணிப்பார்க்க முடியாத சேதம் செய்திருக்கிறது 
பிற நாடுகளில் புலிகள் பயங்கரவாதிகள் என்று நம்ப வைக்க இவர்கள் இந்திய சிங்கள அரசுகளுக்கு பெரிதும்  உதவினார்கள். இந்த கூட்டத்தில் இருந்த சிலர்  இப்போ இங்கு அமேரிக்காவில் இருக்கிறார்கள் 
இந்த சிரங்கு பிடித்தவர்கள்.... படித்தவர்கள் உயரிய பதவிகளில் இருந்ததால் .... வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற நினைப்பில் பல இளைஞர்கள் யுவதிகள் உள்வாங்க பட்டிருக்கிறார்கள்.

பீடா PETA போன்றவைகள் பின்புலத்தில் எவ்வாறு ஊர் கோழி ஆடு மாடுகளை அழித்து இறைச்சி கான கோழி ஆடு மாடுகள்  உள்ளூருக்கு வருவத்துக்கும் ஜி எம் ஓ பயிர்செய்கைக்கு உதவுகிறது என்பது தெரியாமல் மிருகங்களுக்கு கொடுமை செய்வது தவறுதானே அதை தண்டிக்கத்தானே வேண்டும் என்று அடி முடி தெரியாமல்  திரிஷா சேரேயா போன்ற நடிகைகள் கூட போய்  சேர்ந்தார்கள் .. அவர்கள் சேர்த்தார்கள்.

அப்படிதான் மேலே இருப்பவரும் ... இவனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை 
இவன் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கிறான் என்று நம்புவர்களுக்குத்தான் இறுதியில் 
ஆப்பு அடித்து விடுவான். கருணா அழித்த அளவுக்கு மட்டகிளப்பு போராளிகளை சிங்களவன் கூட அழித்து இருக்க முடியாது ......இவங்கள் தங்கள் சொந்த நலனுக்குத்தான் கூவுறாங்கள் என்பது வெளியில் இருக்கும் 
எமக்கு இலகுவாக விளங்கும். ஆனால் உண்மையில் இன்று யாழில் ஒரு சாதி அடக்கு முறைக்கு உள்ளே ஒருவன் சிக்கி  இருந்தால் அவனுக்கு இவர்கள் மீட்பர் போலவே தெரிவார்கள்.

இது ஒரு சைகோலொஜிக்கல் ப்ரோசஸ் 
அல்லேலூயா போன்ற மதமாற்றம் எல்லாம் இதே ப்ரோஸஸ் மூலம் நடைபெறுவதே 
முஸ்லீம்கள் தீவிரவாதிகள் ஆக்க படுவதும் இதே ப்ரோஸஸ் மூலம்தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Hirunika is fast becoming the most impactful female politician since Chandrika. Was the first to protest in Mirihana, first to protest near Gnanakka, and fought Arun Siddharth in Jaffna. She has balls of steel, and hopefully attracts more women into politics.

Image

இவனின் வலையில்  
இந்த ஆன்ட்டியே கவுந்துடா என்றால்  
சாதாரணமாணவர்களின் நிலை என்னவாக இருக்கும் 

from twiter

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2022 at 10:23, ரஞ்சித் said:

இவன் பற்றிய இன்னும் சில சிங்களக் காணொளிகளை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இன்று, கோட்டாபய மற்றும் மகிந்தவுக்கு எதிரான, ஆனால் 2019 வரை அவர்களைத் தீவிரமாக ஆதரித்து வந்த சிங்கள ஊடகவியலாளர்கள், கலைத்துறையினர் ஆகியோர் இவன் போன்றவர்களைத் தேடித்தேடி தமது களங்களில் பேசவைத்து வருகிறார்கள். 

உதாரணத்திற்கு சேபால் எனப்படும் பிரபல சிங்கள யூடியூப் ஊடக அரசியல் விமர்சகர் தனது பதிவொன்றில் இவனையும் முன்னாள் சிங்கள நீதியரசர் ஒருவரையும் ஒருங்கே அழைத்து, கேள்வி பதில் நிகழ்ச்சியாக ஒன்றினை நடத்தியிருக்கிறார். சேபாலின் காணொளிகளில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த பதிவாக இது அமைந்திருந்தது.

அக்காணொளியின் சாராம்சம் இதுதான். 

செல்வநாயகம் முதல், காங்கிரஸ், கூட்டணி, தமிழரசுக் கட்சி, புலிகள், ஏனைய ஆயுதக் குழுக்கள், கூட்டமைப்பு, விக்னேஸ்வரன், கஜன் அணி ஆகிய எல்லோருமே தமிழ்த் தேசியவாதம் எனும் அதிதீவிர மாயைக்குள் வாழ்கிறார்கள். தமிழர்களை சிங்கள மக்களுடன் ஒன்றுபட்டு ஒரு நாட்டிற்குள் வாழ்வதைத் தடுப்பது இவர்கள்தான். தமது அரசியல் ஆதாயத்திற்காக சிங்கள மக்களுக்கெதிரான அரசியலையும், பயங்கரவாதத்தினையும் தூண்டிவிட்டிருக்கிறார்கள். இனங்களுக்கிடையிலான வேற்றுமைகளைக் களைய கலப்பு இடம்பெறவேண்டும். தமிழர்களிடையே பெளத்தமதம் பரவ வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் தமது செல்வாக்கினையும், பலத்தினையும் பாவித்து சிங்கள மக்களுக்கும், ராணுவத்திற்கும் எதிரான பிரச்சாரத்தினை முடுக்கி விட்டிருக்கிறார்கள். ஆனால், தனது அரசியல் செயற்பாட்டினால் இக்கட்சிகள் ஆட்டம் கண்டுவருவதுடன், தமிழர்கள் தமது வன்முறைப் பாதையினை, தீவிர தேசியப் பாதையினை கைவிட்டு, அந்நிய சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்கள். சிங்கள மக்களால் எக்காலத்திலும் தமிழர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படவில்லை. 

தமது மேலாதிக்கத்தை, பெரும்பான்மையின அதிகாரத்தினை, பெளத்த மதத்தினை ஏற்றுக்கொண்டு, தமிழர்களின் அவலங்களை இல்லையென்று நிராகரித்துக்கொண்டு, அவர்களின் அரசியல் அபிலாஷைகளை தீவிரவாதம் என்று வர்ணித்துக்கொண்டு, பெளத்த சிங்களக் கலாசாரத்தை தமிழர்களின் இதயப்பகுதியில் நிலைநாட்டச் செயற்பட்டுக்கொண்டு, தம்மால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை இல்லை என்று சத்தியம் செய்துகொண்டு செயற்பட்டு வரும் இவன் போன்றவர்கள் இச்சிங்களத் தேசியவாதிகளைப் பொறுத்தவரை வராதுவந்த மாமணியாகத் தெரிகிறார்கள். அதனாலேயே இவனைப் போட்டி போட்டுக்கொண்டு தமது களங்களில் வரவழைத்து, மகுடம் சூட்டி அழகுபார்க்கிறார்கள். இனங்களுக்கிடையே சமத்துவத்தை, சமாதானத்தை ஏற்படுத்தவந்த நவீன காந்தியாக ஏற்றுக்கொள்ள விரும்புகிரார்கள். 

சிலர் ஒருபடி மேலே போல், இன்றிருக்கும் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளை தடைசெய்து இவனையும், கருணா, பிள்ளையான், அங்கஜன், டக்கிளஸ் போன்றவர்களையும் முன்னிறுத்தி தமிழர்கள் அரசியல் செய்யவேண்டும் என்றும், இவனை யாழ்ப்பாணத்து முதலமைச்சராகவோ அல்லது ஆளுநராகவோ அரசாங்கம் அமர்த்தவேண்டும் என்றும் கோரிக்கையினை சமூகவலைத்தளங்களில் முன்வைத்து வருகிறார்கள். 

அங்கஜனின் அரசியல் ஆதாயத்திற்காக யாழ்ப்பாணத்தில் இறக்கப்பட்ட இந்த நச்சுப் பாம்பிற்கு தமிழர்கள் தலையில் அடிக்கவேண்டும். இவனை முன்னிறுத்தி சிங்களப் பயங்கரவாதம் செய்யவிரும்பும் அரசியலினை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். 

ஆனால், சலுகைகளுக்காகவும், பணத்திற்காகவும் விலைபோகும் சமூகம் ஒன்று தமிழர் தாயகத்தில் வளர்ந்துவரும் இவ்வேளையில் இந்தப் பாம்புகளின் விஷத்தை அழிப்பது கடிணமாகவே இருக்கப் போகிறது.

இவனை ஒரு போதைக்கு அடிமையான ராணுவக் கைக்கூலிதானே என்று புறந்தள்ளிவிட்டுச் செல்லாமல் இவன் முன்னெடுக்கும் அழிவு அரசியலை அழிப்பதே நாம் இன்று செய்யவேண்டியது. 

ரஞ்சித் இவனது பெயர் இரண்டுநாள்களுக்கு முன்னர்தான் கேள்விப்பட்டேன். அதன் பிறகு அவன் யார், அபனது பிற்புலமென்ன என்று நினைக்கும்போதுதான் உங்களது பதிவைப்பார்த்தேன். நன்றிகள்…

சிவசேனா சச்சிதானந்தம் சைவம் என்று சொல்லிக்கொன்று திரிகிறார், இந்த பௌத்த மதமயமாக்கலை கவனிக்க மாட்டாரகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

இவற்றை சாதாரணமாக கடந்துவிட முடியாது நாம் எல்லோரும் புத்திசாலிகள் என்று எண்ணி கொண்டிருப்போம் வாழ்க்கை தேயும்போது திரும்பி பார்க்கையில் எல்லாவற்றாலும் ஏமாற்றப்படடோம் என்பது கேள்வியாக மிஞ்சும். 

இவனை போன்றவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை மிகுந்த அறிவாளிகள் 
இவனிடம் பௌத்தமும் இல்லை இலங்கை விசுவாசமும் இல்லை அவர்களை எவ்வாறு ஏய்த்து 
பிழைப்பது என்பது பக்காவாக தெரிந்தவன். ஆனால் சிங்கள பேரின வாதிகளுக்கு இவன் டக்ளஸ் கருணா பிள்ளையான் போன்றவர்கள் அவல் மாதிரி மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருப்பார்கள்.

90களில் இந்தியா இலங்கை அரசுக்கு புலிகளுக்கு எதிரானவர்கள் என்ற பாசாங்கு காட்டிக்கொண்டு 
உள்ளுக்குள் தான் இலங்கையில் செய்த அடடூழியங்கள் வெளியில் செல்லாதிருக்க யாழ் பல்கலையில் பட்டம் பெற்றவர்கள் கொழும்பில் மருத்துவம் கல்விகலாசாலையில் முக்கிய நபர்கள் போன்றவர்களை வைத்து ஒரு கூடம் அமைத்து வைத்திருந்தது. கொழும்பில் தமிழர்களாக உயர்பதவிகளில் தமிழ் பெயர்களில் வாழ்வதுக்கு அவர்களுக்கும் அது பெரும் உதவியாக இருந்தது   

ரஜனி தினராகம வை ஈப்பியை கொண்டு சுட்டுவிட்டு அதை புலிகள்தான் செய்தார்கள் என்று 
இந்த கூடடம்தான் அப்போ தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகொண்டு இருந்தது அதன் பின்புலத்தில் இந்திய றோ  இருந்து.  இந்திய பத்திரிகையாளர் என் டி ராம் இந்திய புலிகள் சண்டை நடக்கும்போதுகூட புலிகளின் நியாயமான  போர் பற்றியே எழுதிவந்தார். பின்பு றோ தான் அவரை தன கையில் போட்டுகொண்டு இவரை கொண்டு  இந்தியாவில் மிகப்பெரிய ஜர்னலிஸ்ட் யுனிவர்சிட்டி உருவாக்கி அதன் கிளைகளை சிங்கப்பூர் பிலிப்பைன்ஸ்  மலேசியாவில் திறந்து அந்த நாடுகளின் எதிர்கால பத்திரிகை நிருபர்களை மூளை சலவைமூலம்  உருவாக்கி கொண்டு இருந்தார்கள். செல்வியால் புலிகளுக்கு எந்த அச்சறுத்தலும் இல்லை  
அவர்கள் மீண்டும் மீண்டும் எச்சரிக்க இவர்களின் பின்புலம் இருப்பதால் அவரும் தலைகால் புரியாமல் ஆடிக்கொண்டு  இருந்தார். 90 இல் ஈரோஸ் பாலகுமார் புலிகளுடன் ஒன்று சேர்வது என்று முடிவெடுத்ததும் (அதுக்கு முன்பே  அது தொடங்கிற்று முதலமைச்சர் தேர்தலில் புலிகள் மக்களை ஈரோஸ வெளிச்சவீட்டுக்கு வாக்களிக்கவே சொன்னார்கள். ஈரோஸ் அதில் சுயேட்சையாக நின்றது. திருகோணமலையில் ஈப்பி எண்டில்ப் போன்றவர்கள் ஈரோஸ் போராளிகள் மீது தாக்குதல் செய்துகொண்டே இருந்தார்கள் அதனால்தான்  பலர் யாழுக்கு கொண்டுவரப்பட்டார்கள்) அதில் இருந்து பிரிந்து ஈரோஸ் புலிகள் இருவருக்கும் எதிராக  ஒரு குழு உருவாகி தாங்களே எழுதி தாங்களே வாசிக்கும் சில பிரசுரங்களையும்  அச்சடித்து வந்தார்கள். இதன் தலைமை செயற்பாடடாளர் யாழில் இருந்து வன்னிக்கு ஓடி சிவில் உடையில்  இருந்த  புலிகளிடம்தான் செல்வி வீட்டுக்கு வழி கேட்டிருந்தார் .... அவர்களும் பாதுக்காப்பாக கொண்டுசென்று செல்வி வீட்டில் விட்டுவிட்டு  அன்று மாலை செல்வி வீடடை சுற்றி செல்வி மற்றும் இப்படி ஓடிவந்த  மொத்தம் 5 பேரை கைதுசெய்து போனார்கள். நான் விசாரித்த மட்டில் செல்வியை சுடும் எண்ணம்  புலிகளுக்கு  இருக்கவில்லை  எல்லாம் ஒரு கட்டுக்குள் வந்தும் அவரை விடுவிக்கவே இருந்தார்கள்.
இந்த கொழும்பில் இருந்த கூடடம்  றோவின் நிகழச்சி நிரலுக்கு அமைய மற்றைய நாட்டு தூரகங்கள்  
வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் போன்றவர்களை சந்தித்து தூண்டி கொண்டே இருந்தார்கள் 
அப்போது புலிகளின் அரசியல் பணிமனை ஒன்று கொழும்பிலும் இருந்தது ... அங்கு செல்பவர்கள் நாட்டு பிரச்சனை  அரசியலை விட செல்விதான் தெற்காசியாவின் அதிபர் என்ற ரேஞ்சுக்கு கேள்வி கேட்கவே 
கொழும்பில் அப்போது இருந்தவர்கள்தான் அவர் மீண்டும் மீண்டும் துரோகம் இழைத்ததால் சுட்டுவிடடோம் என்று  ஒரு பத்திரிகை (தி ஐலண்ட் என்று நினைக்கிறன்) காரருக்கு சொல்லிவிடார்கள். ஆனால் அப்போது உண்மையில்  அவர்கள் சுடவில்லை அவர் வன்னியில் இருக்கிறார். பின்பு இந்த கூடடம் இரங்கல் கூட்டம் ... கண்டன  அறிக்கை அது இது என்று பெரும் எடுப்பில் தொடங்கீட்டுது. பின்பு உண்மையில் என்ன நடந்தது என்று எனக்கு  தெரியாது .... நான் இப்போதும் எனக்குள் நினைப்பது ..... இதை பார்த்த பின்புதான் செல்வி சாதாரண ஆள்  இல்லை இந்த கூட்டத்துக்கே இவள்தான் தலைவி என்று எண்ணித்தான் சுட்டிருப்பார்கள். 
இந்தியன் ஆமி மற்றும் ஈபி போனதும் யாழ் பல்கலையிலேயே செல்வி ஓரம்கட்ட பட்டுவிட்டார்  
ரஜனி தினராகம ரேஞ்சுக்கு இவரை கொண்டுவரவேண்டும் என்றுதான் இந்த கொழும்பு கூட்டம் எண்ணியது 
உண்மையில் ரஜனி இயல்பாகவே ஒற்றுமையை விரும்பியவர் ... இவர்கள் பாசாங்கு காட்டுபவர்கள்.
இன்னொரு தமிழனுக்கோ சொந்த சகோதர சகோதரிகளுக்கே ஒரு ரூபா கொடுக்காத கூட்டம் 

(இங்கு யாழ் களத்தில் எழுதும் ஒருவருக்கு இவர்களுடன் தொடர்பு உண்டு. கோஷனுக்கும் இருந்து இருக்க நிறைய வாய்ப்பு உள்ளது என்றே எண்ணுகிறேன் .... இந்த சந்தேகம் எனக்கு வருவத்துக்கு முக்கிய காரணம் அவர் எள்ளுக்கும் இவர்கள் பற்றி வாய் திறப்பதே இல்லை என்பது மட்டுமே) 

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் 
இந்த கூட்டம் எமது விடுதலை போராட்டத்துக்கு எண்ணிப்பார்க்க முடியாத சேதம் செய்திருக்கிறது 
பிற நாடுகளில் புலிகள் பயங்கரவாதிகள் என்று நம்ப வைக்க இவர்கள் இந்திய சிங்கள அரசுகளுக்கு பெரிதும்  உதவினார்கள். இந்த கூட்டத்தில் இருந்த சிலர்  இப்போ இங்கு அமேரிக்காவில் இருக்கிறார்கள் 
இந்த சிரங்கு பிடித்தவர்கள்.... படித்தவர்கள் உயரிய பதவிகளில் இருந்ததால் .... வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற நினைப்பில் பல இளைஞர்கள் யுவதிகள் உள்வாங்க பட்டிருக்கிறார்கள்.

பீடா PETA போன்றவைகள் பின்புலத்தில் எவ்வாறு ஊர் கோழி ஆடு மாடுகளை அழித்து இறைச்சி கான கோழி ஆடு மாடுகள்  உள்ளூருக்கு வருவத்துக்கும் ஜி எம் ஓ பயிர்செய்கைக்கு உதவுகிறது என்பது தெரியாமல் மிருகங்களுக்கு கொடுமை செய்வது தவறுதானே அதை தண்டிக்கத்தானே வேண்டும் என்று அடி முடி தெரியாமல்  திரிஷா சேரேயா போன்ற நடிகைகள் கூட போய்  சேர்ந்தார்கள் .. அவர்கள் சேர்த்தார்கள்.

அப்படிதான் மேலே இருப்பவரும் ... இவனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை 
இவன் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கிறான் என்று நம்புவர்களுக்குத்தான் இறுதியில் 
ஆப்பு அடித்து விடுவான். கருணா அழித்த அளவுக்கு மட்டகிளப்பு போராளிகளை சிங்களவன் கூட அழித்து இருக்க முடியாது ......இவங்கள் தங்கள் சொந்த நலனுக்குத்தான் கூவுறாங்கள் என்பது வெளியில் இருக்கும் 
எமக்கு இலகுவாக விளங்கும். ஆனால் உண்மையில் இன்று யாழில் ஒரு சாதி அடக்கு முறைக்கு உள்ளே ஒருவன் சிக்கி  இருந்தால் அவனுக்கு இவர்கள் மீட்பர் போலவே தெரிவார்கள்.

இது ஒரு சைகோலொஜிக்கல் ப்ரோசஸ் 
அல்லேலூயா போன்ற மதமாற்றம் எல்லாம் இதே ப்ரோஸஸ் மூலம் நடைபெறுவதே 
முஸ்லீம்கள் தீவிரவாதிகள் ஆக்க படுவதும் இதே ப்ரோஸஸ் மூலம்தான் 

தகவல்களுக்கு நன்றி மருதங்கேணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

இவற்றை சாதாரணமாக கடந்துவிட முடியாது நாம் எல்லோரும் புத்திசாலிகள் என்று எண்ணி கொண்டிருப்போம் வாழ்க்கை தேயும்போது திரும்பி பார்க்கையில் எல்லாவற்றாலும் ஏமாற்றப்படடோம் என்பது கேள்வியாக மிஞ்சும். 

இவனை போன்றவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை மிகுந்த அறிவாளிகள் 
இவனிடம் பௌத்தமும் இல்லை இலங்கை விசுவாசமும் இல்லை அவர்களை எவ்வாறு ஏய்த்து 
பிழைப்பது என்பது பக்காவாக தெரிந்தவன். ஆனால் சிங்கள பேரின வாதிகளுக்கு இவன் டக்ளஸ் கருணா பிள்ளையான் போன்றவர்கள் அவல் மாதிரி மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருப்பார்கள்.

90களில் இந்தியா இலங்கை அரசுக்கு புலிகளுக்கு எதிரானவர்கள் என்ற பாசாங்கு காட்டிக்கொண்டு 
உள்ளுக்குள் தான் இலங்கையில் செய்த அடடூழியங்கள் வெளியில் செல்லாதிருக்க யாழ் பல்கலையில் பட்டம் பெற்றவர்கள் கொழும்பில் மருத்துவம் கல்விகலாசாலையில் முக்கிய நபர்கள் போன்றவர்களை வைத்து ஒரு கூடம் அமைத்து வைத்திருந்தது. கொழும்பில் தமிழர்களாக உயர்பதவிகளில் தமிழ் பெயர்களில் வாழ்வதுக்கு அவர்களுக்கும் அது பெரும் உதவியாக இருந்தது   

ரஜனி தினராகம வை ஈப்பியை கொண்டு சுட்டுவிட்டு அதை புலிகள்தான் செய்தார்கள் என்று 
இந்த கூடடம்தான் அப்போ தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகொண்டு இருந்தது அதன் பின்புலத்தில் இந்திய றோ  இருந்து.  இந்திய பத்திரிகையாளர் என் டி ராம் இந்திய புலிகள் சண்டை நடக்கும்போதுகூட புலிகளின் நியாயமான  போர் பற்றியே எழுதிவந்தார். பின்பு றோ தான் அவரை தன கையில் போட்டுகொண்டு இவரை கொண்டு  இந்தியாவில் மிகப்பெரிய ஜர்னலிஸ்ட் யுனிவர்சிட்டி உருவாக்கி அதன் கிளைகளை சிங்கப்பூர் பிலிப்பைன்ஸ்  மலேசியாவில் திறந்து அந்த நாடுகளின் எதிர்கால பத்திரிகை நிருபர்களை மூளை சலவைமூலம்  உருவாக்கி கொண்டு இருந்தார்கள். செல்வியால் புலிகளுக்கு எந்த அச்சறுத்தலும் இல்லை  
அவர்கள் மீண்டும் மீண்டும் எச்சரிக்க இவர்களின் பின்புலம் இருப்பதால் அவரும் தலைகால் புரியாமல் ஆடிக்கொண்டு  இருந்தார். 90 இல் ஈரோஸ் பாலகுமார் புலிகளுடன் ஒன்று சேர்வது என்று முடிவெடுத்ததும் (அதுக்கு முன்பே  அது தொடங்கிற்று முதலமைச்சர் தேர்தலில் புலிகள் மக்களை ஈரோஸ வெளிச்சவீட்டுக்கு வாக்களிக்கவே சொன்னார்கள். ஈரோஸ் அதில் சுயேட்சையாக நின்றது. திருகோணமலையில் ஈப்பி எண்டில்ப் போன்றவர்கள் ஈரோஸ் போராளிகள் மீது தாக்குதல் செய்துகொண்டே இருந்தார்கள் அதனால்தான்  பலர் யாழுக்கு கொண்டுவரப்பட்டார்கள்) அதில் இருந்து பிரிந்து ஈரோஸ் புலிகள் இருவருக்கும் எதிராக  ஒரு குழு உருவாகி தாங்களே எழுதி தாங்களே வாசிக்கும் சில பிரசுரங்களையும்  அச்சடித்து வந்தார்கள். இதன் தலைமை செயற்பாடடாளர் யாழில் இருந்து வன்னிக்கு ஓடி சிவில் உடையில்  இருந்த  புலிகளிடம்தான் செல்வி வீட்டுக்கு வழி கேட்டிருந்தார் .... அவர்களும் பாதுக்காப்பாக கொண்டுசென்று செல்வி வீட்டில் விட்டுவிட்டு  அன்று மாலை செல்வி வீடடை சுற்றி செல்வி மற்றும் இப்படி ஓடிவந்த  மொத்தம் 5 பேரை கைதுசெய்து போனார்கள். நான் விசாரித்த மட்டில் செல்வியை சுடும் எண்ணம்  புலிகளுக்கு  இருக்கவில்லை  எல்லாம் ஒரு கட்டுக்குள் வந்தும் அவரை விடுவிக்கவே இருந்தார்கள்.
இந்த கொழும்பில் இருந்த கூடடம்  றோவின் நிகழச்சி நிரலுக்கு அமைய மற்றைய நாட்டு தூரகங்கள்  
வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் போன்றவர்களை சந்தித்து தூண்டி கொண்டே இருந்தார்கள் 
அப்போது புலிகளின் அரசியல் பணிமனை ஒன்று கொழும்பிலும் இருந்தது ... அங்கு செல்பவர்கள் நாட்டு பிரச்சனை  அரசியலை விட செல்விதான் தெற்காசியாவின் அதிபர் என்ற ரேஞ்சுக்கு கேள்வி கேட்கவே 
கொழும்பில் அப்போது இருந்தவர்கள்தான் அவர் மீண்டும் மீண்டும் துரோகம் இழைத்ததால் சுட்டுவிடடோம் என்று  ஒரு பத்திரிகை (தி ஐலண்ட் என்று நினைக்கிறன்) காரருக்கு சொல்லிவிடார்கள். ஆனால் அப்போது உண்மையில்  அவர்கள் சுடவில்லை அவர் வன்னியில் இருக்கிறார். பின்பு இந்த கூடடம் இரங்கல் கூட்டம் ... கண்டன  அறிக்கை அது இது என்று பெரும் எடுப்பில் தொடங்கீட்டுது. பின்பு உண்மையில் என்ன நடந்தது என்று எனக்கு  தெரியாது .... நான் இப்போதும் எனக்குள் நினைப்பது ..... இதை பார்த்த பின்புதான் செல்வி சாதாரண ஆள்  இல்லை இந்த கூட்டத்துக்கே இவள்தான் தலைவி என்று எண்ணித்தான் சுட்டிருப்பார்கள். 
இந்தியன் ஆமி மற்றும் ஈபி போனதும் யாழ் பல்கலையிலேயே செல்வி ஓரம்கட்ட பட்டுவிட்டார்  
ரஜனி தினராகம ரேஞ்சுக்கு இவரை கொண்டுவரவேண்டும் என்றுதான் இந்த கொழும்பு கூட்டம் எண்ணியது 
உண்மையில் ரஜனி இயல்பாகவே ஒற்றுமையை விரும்பியவர் ... இவர்கள் பாசாங்கு காட்டுபவர்கள்.
இன்னொரு தமிழனுக்கோ சொந்த சகோதர சகோதரிகளுக்கே ஒரு ரூபா கொடுக்காத கூட்டம் 

(இங்கு யாழ் களத்தில் எழுதும் ஒருவருக்கு இவர்களுடன் தொடர்பு உண்டு. கோஷனுக்கும் இருந்து இருக்க நிறைய வாய்ப்பு உள்ளது என்றே எண்ணுகிறேன் .... இந்த சந்தேகம் எனக்கு வருவத்துக்கு முக்கிய காரணம் அவர் எள்ளுக்கும் இவர்கள் பற்றி வாய் திறப்பதே இல்லை என்பது மட்டுமே) 

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் 
இந்த கூட்டம் எமது விடுதலை போராட்டத்துக்கு எண்ணிப்பார்க்க முடியாத சேதம் செய்திருக்கிறது 
பிற நாடுகளில் புலிகள் பயங்கரவாதிகள் என்று நம்ப வைக்க இவர்கள் இந்திய சிங்கள அரசுகளுக்கு பெரிதும்  உதவினார்கள். இந்த கூட்டத்தில் இருந்த சிலர்  இப்போ இங்கு அமேரிக்காவில் இருக்கிறார்கள் 
இந்த சிரங்கு பிடித்தவர்கள்.... படித்தவர்கள் உயரிய பதவிகளில் இருந்ததால் .... வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற நினைப்பில் பல இளைஞர்கள் யுவதிகள் உள்வாங்க பட்டிருக்கிறார்கள்.

பீடா PETA போன்றவைகள் பின்புலத்தில் எவ்வாறு ஊர் கோழி ஆடு மாடுகளை அழித்து இறைச்சி கான கோழி ஆடு மாடுகள்  உள்ளூருக்கு வருவத்துக்கும் ஜி எம் ஓ பயிர்செய்கைக்கு உதவுகிறது என்பது தெரியாமல் மிருகங்களுக்கு கொடுமை செய்வது தவறுதானே அதை தண்டிக்கத்தானே வேண்டும் என்று அடி முடி தெரியாமல்  திரிஷா சேரேயா போன்ற நடிகைகள் கூட போய்  சேர்ந்தார்கள் .. அவர்கள் சேர்த்தார்கள்.

அப்படிதான் மேலே இருப்பவரும் ... இவனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை 
இவன் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கிறான் என்று நம்புவர்களுக்குத்தான் இறுதியில் 
ஆப்பு அடித்து விடுவான். கருணா அழித்த அளவுக்கு மட்டகிளப்பு போராளிகளை சிங்களவன் கூட அழித்து இருக்க முடியாது ......இவங்கள் தங்கள் சொந்த நலனுக்குத்தான் கூவுறாங்கள் என்பது வெளியில் இருக்கும் 
எமக்கு இலகுவாக விளங்கும். ஆனால் உண்மையில் இன்று யாழில் ஒரு சாதி அடக்கு முறைக்கு உள்ளே ஒருவன் சிக்கி  இருந்தால் அவனுக்கு இவர்கள் மீட்பர் போலவே தெரிவார்கள்.

இது ஒரு சைகோலொஜிக்கல் ப்ரோசஸ் 
அல்லேலூயா போன்ற மதமாற்றம் எல்லாம் இதே ப்ரோஸஸ் மூலம் நடைபெறுவதே 
முஸ்லீம்கள் தீவிரவாதிகள் ஆக்க படுவதும் இதே ப்ரோஸஸ் மூலம்தான் 

மருதங்கேணி,  
பல தகவல்களை…. தொட்டுச் சென்ற, உங்கள் அருமையான பதிவிற்கு நன்றி. 👍🏽🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

இவனின் வலையில்  
இந்த ஆன்ட்டியே கவுந்துடா என்றால்  
சாதாரணமாணவர்களின் நிலை என்னவாக இருக்கும் 

 

அம்மா அடுத்த ஜனாதிபதியாக வாறதுக்கு சான்ஸ் இருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

(இங்கு யாழ் களத்தில் எழுதும் ஒருவருக்கு இவர்களுடன் தொடர்பு உண்டு. கோஷனுக்கும் இருந்து இருக்க நிறைய வாய்ப்பு உள்ளது என்றே எண்ணுகிறேன் .... இந்த சந்தேகம் எனக்கு வருவத்துக்கு முக்கிய காரணம் அவர் எள்ளுக்கும் இவர்கள் பற்றி வாய் திறப்பதே இல்லை என்பது மட்டுமே) 

 

ஐயா மருதங்கேணி,

உங்களுக்கு மறை கிறை ஏதும் கழண்டு விட்டதா? நானே யாழ்களத்தில் அர்ஜூன் அண்ணா ஏனையோர் எழுதியதை வைத்துத்தான் செல்வி விடயத்தை அறிந்தேன். அதை அந்த திரிகளிலேயே சொல்லி உள்ளேன். விஜிததரன் விடயம் சிறுவனாக பேப்பரில், நோட்டீசில் படித்தது.

அதே போல் ரஜனியை யார் கொண்டார்கள் என்பதில் எனக்கு தெளிவில்லை என்பதை நான் இங்கே பலதடவை எழுதியுள்ளேன்.

நீங்கள் UTHR (J) ஐ சொல்கிறீகள் என நினைக்கிறேன். தெய்வமே ரஜனி, செல்வி சாகும் போது நான் அரைக்காற்சட்டை பொடியன் தெய்வமே. ராஜன் கூலின் ஆங்கில கட்டுரைகள், முறிந்த பனை, இன்னும் ஒருவரின் தமிழ் தொடர் கட்டுரை (பெயர் நினைவில்லை) இவற்றை படித்தததை தவிர எனக்கும் இவர்களுக்கும் ஒரு தொடர்புமில்லை.

இவர்களை பற்றி அதிகம் அலட்டாமல் இருக்க இரெண்டு காரணங்கள் - ஒன்று இவர்கள் பற்றிய போதிய தகவல் என்னிடம் இல்லை. அடுத்ததது இவர்கள் எதையும் பெரிசாக செய்து கிழிக்கவில்லையே - சும்மா கட்டுரை எழுதினார்கள் அதை வைத்து என்னத்தை எழுதுவது? 

கோஷான் நயந்தாராவை பற்றி அதிகம் எழுதுவதில்லை ஆகவே அவருக்கு நயன்தாராவுடன் தொடர்பு இருக்கு என சந்தேகிப்பீர்களா? நல்ல ஆளைய்யா மருது நீங்கள். 

பிகு

இனி ஆதாரமில்லாமல் என் மீது சேறடிக்கும் போது, குறைந்தபட்சம் எனக்கு ஒரு @ ஆவது போட்டு விடுங்கள். எதேச்சையாக உங்கள் பதிவை வாசித்தால் இப்படி எழுதி இருந்ததை கண்டு அப்படியே ஷாக் ஆகிட்டேன்🤣.

 

பிகு2: இந்த அருண் பற்றி ஒரு சிங்கள தொலைகாட்சியில் ஆவா குழு தலைவர் என 2018இல் ஒரு பேட்டி வந்தது. அதை பற்றி அப்போதே திரி அல்லது திண்ணையில் விவாதிக்கப்பட்டது. என் கருத்தை அப்போதே சொல்லி விட்டேன். 

இப்போதும் அதே நிலைப்பாடுதான். ஆனால் யாழில் இப்போ கருத்தாடல் செய்யாமையால் அதை மீள எழுத விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கோயிலை இடிப்பது என்பது, உமது முப்பாட்டநரின் அல்லது அதற்கு முற்றப்பட்டவர்களின் வாழ்ந்த இடத்தாய் தூர்ந்து, மலசலகூடம் கட்டுவதற்கு மேலால் ஆனா இழி காரியம்.

நல்லூரை உனது, எனது, எந்த தமிழரின் வரலாற்றில் இருந்தும் பிரித்துவிடமுடியாது.

ஏன், முஸ்லிம்களின் வரலாற்றில் இருந்தும் பிரிக்க முடியாது.

நல்லோரின் ஆதி மூலத்தில் இருக்கும் இடத்தில , ஓர் இஸ்லாமிய சமயக் குறியீடு இருந்தது என்பது அந்த இடத்தில சந்திதியாக வேர் விட்டு இருந்தவர்களுக்கு தெரியும்..

இப்போதைய நல்லூர் கோயிலில் இருக்கும் இடத்துக்கு  குருக்கள் வளவு என்பததே அதன் வரலாற்று பெயர்.

அதில் கோயில் கட்ட முதல் அதில் முஸ்லிம்கள் இருந்தனர், முஸ்லீம் குருவானவரின் சமாதியும் அல்லது இஸ்லாமிய குறியீடு  இருந்தது என்பது, நான் முதல் சொன்னது போல,  அந்த இடத்தில சந்திதியாக வேர் விட்டு இருந்தவர்களுக்கு தெரியும். (இப்போதைய, உள்ளோர் நிர்வாகம் அதை மறைக்க முற்படுகிறது, நல்லோர் நிர்வாகமும் இதை ஏற்றகிறதா என்பது தெரியவில்லை.)

கிந்தியா எம்மை அழித்தாலும், இதை அங்கேயுள்ள துணை தூதரகம் இணையத்தில் பதிந்து வைத்துப் உள்ளது வரவேற்கப்படவே வேண்டும்,


இஸ்லாமிய குறியீடு அகற்றப்பட்டதாக சொல்கிறது தூதரகம், நான் அறிந்த வரையில் அப்படி நடக்கவில்லை.

ஆதி மூலத்துக்கு பின் சுவரில், எந்த ஒரு விக்கிரகமும்   இல்லாத போதும் அதை வணக்கும் வழக்கம் இருக்கிறது அங்கு உள்ளவர்கக்லால், இப்போதைய தலைமுறைக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

இததற்கான இப்போதைய சான்று (முஸ்லிம்கள் இருந்தது என்பதற்கு), நல்லூர் கோயில் திருவிழாவின் போது, தற்காலிக வியாபர கடைகள், யிரவர் வாசலுக்கு முன்னால், தேர் முட்டிக்கு எதிர்ப்புறமாக,     நல்லூர் கோயிலின் முன்னால் போடுவதத்திற்கு, குறிப்பிட்ட முஸ்லிம்ம் குடும்பக்களிற்கு மட்டுமே கொடுக்கப்படும்.

இப்பொது கடை போடுபவது, வழக்கொழிந்து போய் விட்டது, நல்லூர் நிர்வாகமும், உளூர் நிர்வாகமும் சேர்ந்து தடுத்து விட்டனர்.    

முஸ்லிம்களுக்கு கூட, அப்போதைய இராச்சியத்தின் அரசர்களே, முஸ்லிம்கள் அகதியாக வந்த போது அடைக்கலம் கொடுத்தனர். சிங்கள மன்னர்கள் மறுத்து விட்டனர். இதுவே காரணம், முஸ்லிம்கள் மூன்று இடங்களில் செறிந்து இருப்பதற்கு.

சாதி என்ற காரணத்தால், எந்த சாதியையும் எவரும் அழிக்க முற்படவில்லை.  சாதி என்ற போர்வையில், தமிழரின் வரலாற்றை அழிக்க வேண்டும் என்கிறீர்கள்.  

உங்களின் நோக்கம் சிங்களத்துக்கு இனிப்பாக இருந்து, சாதியை கொண்டு, தனிப்பட்ட முறையில் பணம் பார்ப்பது.  அதே சாதி,பணம் பார்ப்பதத்திற்கு எதிராக இருமும் என்றால், அதே சாதியை கொண்டு, இதுவாபாடியில் சாதியை பற்றிய முன்னேற்றங்களையும் அழிக்க தயங்க  மாடீர்கள்.

சாதியில் பற்றிய மனவோட்டத்தில், இன்னமும் முன்னேற்றம் அவசியம் என்பது ஒரு புறம் இருக்க, உனது கதையால், சாதி பிளைவை வளர்க்கிறீகள்.

கோயுலிக்குள் அனுமதிக்காததற்கு, கோயில் இதுடைப்பட வேண்டும் என்றால், சிங்களவரை nuke பண்ணும் அளவுக்கு தமிழர் பொய் இருக்க வேண்டும்.

நாக்குக்கு நரம்பில்லாத கதை, உனது செயலை எண்ணி கவலைப்படுவதட்டர்ட்க்கு இடம் இல்லாத நிலைக்கு கொண்டு வந்து விட்டு விடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

ஐயா மருதங்கேணி,

உங்களுக்கு மறை கிறை ஏதும் கழண்டு விட்டதா? நானே யாழ்களத்தில் அர்ஜூன் அண்ணா ஏனையோர் எழுதியதை வைத்துத்தான் செல்வி விடயத்தை அறிந்தேன். அதை அந்த திரிகளிலேயே சொல்லி உள்ளேன். விஜிததரன் விடயம் சிறுவனாக பேப்பரில், நோட்டீசில் படித்தது.

அதே போல் ரஜனியை யார் கொண்டார்கள் என்பதில் எனக்கு தெளிவில்லை என்பதை நான் இங்கே பலதடவை எழுதியுள்ளேன்.

நீங்கள் UTHR (J) ஐ சொல்கிறீகள் என நினைக்கிறேன். தெய்வமே ரஜனி, செல்வி சாகும் போது நான் அரைக்காற்சட்டை பொடியன் தெய்வமே. ராஜன் கூலின் ஆங்கில கட்டுரைகள், முறிந்த பனை, இன்னும் ஒருவரின் தமிழ் தொடர் கட்டுரை (பெயர் நினைவில்லை) இவற்றை படித்தததை தவிர எனக்கும் இவர்களுக்கும் ஒரு தொடர்புமில்லை.

இவர்களை பற்றி அதிகம் அலட்டாமல் இருக்க இரெண்டு காரணங்கள் - ஒன்று இவர்கள் பற்றிய போதிய தகவல் என்னிடம் இல்லை. அடுத்ததது இவர்கள் எதையும் பெரிசாக செய்து கிழிக்கவில்லையே - சும்மா கட்டுரை எழுதினார்கள் அதை வைத்து என்னத்தை எழுதுவது? 

கோஷான் நயந்தாராவை பற்றி அதிகம் எழுதுவதில்லை ஆகவே அவருக்கு நயன்தாராவுடன் தொடர்பு இருக்கு என சந்தேகிப்பீர்களா? நல்ல ஆளைய்யா மருது நீங்கள். 

பிகு

இனி ஆதாரமில்லாமல் என் மீது சேறடிக்கும் போது, குறைந்தபட்சம் எனக்கு ஒரு @ ஆவது போட்டு விடுங்கள். எதேச்சையாக உங்கள் பதிவை வாசித்தால் இப்படி எழுதி இருந்ததை கண்டு அப்படியே ஷாக் ஆகிட்டேன்🤣.

 

பிகு2: இந்த அருண் பற்றி ஒரு சிங்கள தொலைகாட்சியில் ஆவா குழு தலைவர் என 2018இல் ஒரு பேட்டி வந்தது. அதை பற்றி அப்போதே திரி அல்லது திண்ணையில் விவாதிக்கப்பட்டது. என் கருத்தை அப்போதே சொல்லி விட்டேன். 

இப்போதும் அதே நிலைப்பாடுதான். ஆனால் யாழில் இப்போ கருத்தாடல் செய்யாமையால் அதை மீள எழுத விரும்பவில்லை.

நீங்கள் கொழும்பில் வாழ்ந்த காலமும் ..... நீங்கள் எழுதும் தகவல்களும் 
இவர்கள் கொழும்பில் கொடி கட்டி பறந்த காலமும் ஒன்றாகவே இருக்கிறது 
உங்கள் எழுத்துக்களை பார்க்கும்போது ஒரு சந்தேகம் எனக்கு இருந்துகொண்டே இருந்தது 
அது என்னுடைய தனிப்பட்ட சந்தேகம் மட்டுமே. என் மனதில் இருந்ததை எழுதினேன் 

மன்னிக்கவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

அம்மா அடுத்த ஜனாதிபதியாக வாறதுக்கு சான்ஸ் இருக்கா?

ராஜபக்சேக்கள் ஓரம் கட்டபடடால் 
நாம் அயராது உழைத்து இன்னொரு ஊழல் வாதியையே மீண்டும் அதிகாரத்தில் நிறுத்தவேண்டும் 
இந்த ஆன்டி அதற்கு தோது என்றே எண்ணுகிறேன் 

உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ தெரியவில்லை ...
இலங்கை தேர்தல் காலங்களில் எல்லாம் நான் மீண்டும் மீண்டும் மகிந்த அண்ட் கோ தான் 
வெல்லவேண்டும் அதுதான் தமிழருக்கு ஒரு விடிவை கொடுக்கும் .... போலி மைத்திரி போன்றவர்கள் 
வேஷம் போடுவார்கள் தவிர எமக்கு காலம்தான் வீண் என்று எழுதி இருப்பேன் 

மற்றவர்கள் வெள்ளைவான் வரும் நீல வான் வரும் அது இது என்று எழுதுவார்கள் 
(எனக்கு என்னவோ நாட்டில் இருக்கும் மக்களில் அக்கறை இல்லை என்பதுபோல்) 
மைத்திரி வந்தால் தீர்வு வரும் சுமந்திரன் வெட்டி ஆடுவார் போன்று எழுதுவார்கள். 

இன்று புலிகள் கூட செய்திருக்க முடியாத அடி பாதாளத்தில் இலங்கையை தள்ளி விட்டிருக்கிறார்கள் 
மகிந்த அண்ட் கோ. காற்றடிக்கும் திசையில் நாம் பறந்துகொண்டே இருந்தால் எமது இலக்கை மற்றவர்கள் 
துல்லியமாக கணித்து அதற்கு ஏற்ப திட்டம் வகித்துக்கொண்டே இருப்பார்கள் 
நாம் யாரும் எதிர்பார்க்காத திசையில் காற்றோடு போராடி சென்றாலே எமது இலக்குகளை அடைய முடியும்  

புலம்பெயர் தமிழரிடம் ஒரு பெருத்த பொருளாதாரம் இன்று தேங்கி இருக்கிறது 
நாம் ஒற்றுமையாக செயல்படுவோமாக இருந்தால் இலங்கையின் குறைந்த பட்ஷம் 35% 
பொருளாதாரத்தை எம்மால் இலகுவாக கைப்பற்ற முடியும். பெருளாதார பலம் இருப்பின் 
சிங்களவர்களையே தமிழராக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Maruthankerny said:

நீங்கள் கொழும்பில் வாழ்ந்த காலமும் ..... நீங்கள் எழுதும் தகவல்களும் 
இவர்கள் கொழும்பில் கொடி கட்டி பறந்த காலமும் ஒன்றாகவே இருக்கிறது 
உங்கள் எழுத்துக்களை பார்க்கும்போது ஒரு சந்தேகம் எனக்கு இருந்துகொண்டே இருந்தது 
அது என்னுடைய தனிப்பட்ட சந்தேகம் மட்டுமே. என் மனதில் இருந்ததை எழுதினேன் 

மன்னிக்கவும் 

சந்தேகபடுவதில் தப்பில்லை. ஆனால் அதற்கு வலுவான காரணங்கள் இருந்தால் நல்லம்.

நீங்கள் எழுதியபிந்தான் நியாபகம் வந்தது -ஜீவன் கூலை பற்றிய திரிகளில் நான் பலத்த விமர்சனத்தை முன்வைத்தேன் என்பது.

பன்முகதன்மை, மாற்று கருத்திற்கு வெளிகொடுத்தல், சகிப்புத்தன்மை என்பன பிரபஞ்ச விழுமியங்கள் (universal values). இதை பற்றி UTHR(J),ஆம்னெஸ்டி, எஹ் ஆர் டபிள்யூ, கோசான் எல்லாரும் கதைப்பதால் மட்டும், எல்லாரும் ஒன்றாக வேலை செய்வதாக ஆகாது.

நீண்ட நாளைக்கு பின் கண்டது சந்தோசம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

சந்தேகபடுவதில் தப்பில்லை. ஆனால் அதற்கு வலுவான காரணங்கள் இருந்தால் நல்லம்.

நீங்கள் எழுதியபிந்தான் நியாபகம் வந்தது -ஜீவன் கூலை பற்றிய திரிகளில் நான் பலத்த விமர்சனத்தை முன்வைத்தேன் என்பது.

பன்முகதன்மை, மாற்று கருத்திற்கு வெளிகொடுத்தல், சகிப்புத்தன்மை என்பன பிரபஞ்ச விழுமியங்கள் (universal values). இதை பற்றி UTHR(J),ஆம்னெஸ்டி, எஹ் ஆர் டபிள்யூ, கோசான் எல்லாரும் கதைப்பதால் மட்டும், எல்லாரும் ஒன்றாக வேலை செய்வதாக ஆகாது.

நீண்ட நாளைக்கு பின் கண்டது சந்தோசம். 

நான் எழுதியத்துக்கு முக்கிய காரணமே 
எல்லாம் வெளியில் இருந்து பார்த்தால் வெள்ளையாகவே இருக்கும் 
இவற்றால் கதற கதற அடிவாங்கிய நாமாவது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்பதாலேயே 

சிறார்களை புலிகள் படையில் சேர்க்கிறார்கள் என்று கலங்கிய யுனிசெப் 
சிங்கள இனவாத அரசு குண்டுகள் போட்டு கொல்லும்போது வாயை மூடிக்கொள்ளும் 

மத நிறுவனங்கள் எல்லாம் எதோ அன்பையும் பன்பையும் போதிப்பதுபோலவே 
இருக்கும் மனிதர்களை சுரண்டும் முதலாவது ஆக்கிரமிப்பு இந்த மதம்தான் என்பதில் 
எவ்வளவு பேர் தெளிவாக இருக்கிறார்கள்? 
கடவுள் என்னை படைத்திருந்தால் .... நான் கடவுளின் பிள்ளை 
எனது அப்பாவிற்கு நான் விசுவாசமாக இருக்கிறேன் என்பதை ஏன் நான் விசுவமடுவில் இருக்கும் 
வில்லியம் பரமேஸ்வரனுக்கு ஊழியம் செய்து நிரூபிக்க வேண்டும்? என்ற அடிப்படை கேள்வி கூட 
வராத அளவுக்கு மதங்கள் மனிதர்களை மூளை சலவை செய்து வைத்திருக்கிறது. 

கபித்தான் அவர்கள் அவருடைய கோபம் நியாயமானது என்று எழுதி இருந்தார் 
அதற்குத்தான் நான் பதில் எழுதினேன் ..... இவனால் நல்லூருக்கும்  ஏதும் ஆகப்போவதில்லை 
பௌத்தமும் வளர போவதில்லை ( அது அவனுக்கே நன்றாக தெரியும்) ஆனால் இவர் சாதி ஒடுக்குமுறைக்கு 
குரல் கொடுக்கிறான் என்று நம்புவனுக்கு மட்டும் அழிவு நிச்சயம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.