Jump to content

"கொரோனா பேரிடர் இன்னும் முடிவை நெருங்கக்கூட இல்லை " - எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 ஜனவரி 2022, 06:38 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயேசூஸ்

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரெயேசூஸ் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவை "நெருங்கக் கூட இல்லை" என்று உலகத் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முனைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயேசூஸ், புதிதாக ஆதிக்கம் செலுத்தும் ஒமிக்ரான் திரிபு லேசனாது மற்றும் வைரஸால் ஏற்படும் அச்சுறுத்தலை நீக்கியுள்ளது என்ற அனுமானத்திற்கு எதிராக எச்சரித்தார்.

சில ஐரோப்பிய நாடுகளில் புதிய நோயாளிகள் அதிகமாகப் பதிவானதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரான்சில் செவ்வாய்க் கிழமையன்று கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகியதாக தரவுகள் காட்டுகின்றன.

ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது, டாக்டர் டெட்ரோஸ் செய்தியாளர்களிடம், ஒமிக்ரான் திரிபு கடந்த வாரத்தில் உலகம் முழுவதும் 1.8 கோடி பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட வழிவகுத்தது.

சராசரியாக, இந்தத் திரிபு குறைந்த தீவிர்த் தன்மை கொண்டதாக நிரூபிக்கப்பட்டிருந்தாலும், "இதுவொரு லேசான நோய் என்ற விவரிப்பு தவறாக வழிநடத்துகிறது," என்று அவர் கூறினார்.

"ஒமிக்ரான் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது. மேலும், கடுமை குறைவாகவுள்ள பாதிப்புகளும்கூட சுகாதார வசதிகளை மூழ்கடிக்கின்றன.

உலகளவில் ஒமிக்ரானின் தொற்றுகளின் எண்ணிக்கை நம்பமுடியாத அளவு அதிகரித்து வருகிறது. மேலும் புதிய கொரோனா திரிபுகள் உண்டாகவாய்ப்புள்ளது. அதனால்தான் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு முக்கியமானதாக உள்ளது," என்று அவர் உலக தலைவர்களை எச்சரித்தார்.

மேலும், "தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள விகிதம் குறைவாக உள்ள பல நாடுகளைப் பற்றி நான் குறிப்பாகக் கவலைப்படுகிறேன். ஏனெனில், மக்கள் தடுப்பூசி போடாததால், கடுமையான நோய் மற்றும் உயிரிழப்பு அபாயம், பல மடங்கு அதிகமாக உள்ளது," என்று அவர் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை நடவடிக்கைகளுக்கான பிரிவின் இயக்குநர் டாக்டர் மைக் ரயான், ''ஒமிக்ரானின் பரவல் அதிகரிப்பது, மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும். குறிப்பாக குறைவான மக்களுக்கே தடுப்பூசி போட்டுள்ள நாடுகளில் இது அதிகமாக இருக்கும்,'' என்று எச்சரித்தார்.

ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா

புதிய ஒமிக்ரான் திரிபு பரவுவதால் ஐரோப்பா முழுவதும் புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

 

ஒமிக்ரான் திரிபு பரவல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டென்மார்க்கில், செவ்வாய்க்கிழமை அன்று 33,493 பேர் கோவிட்-19 தொற்றுக்குப் பாதிக்கப்பட்டனர். அதேநேரத்தில் இத்தாலியில் சுகாதார அதிகாரிகள் 228,179 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளதாகப் பதிவு செய்துள்ளனர். இதற்கு முந்தைய நாளின் எண்ணிக்கை, 83,403 ஆக இருந்தது.

இதற்கிடையில், ஃபிரான்ஸ் செவ்வாய்க்கிழமை 464,769 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதைப் பதிவு செய்தது. திங்கள் கிழமையன்று, 102,144 பேருக்கு கோவிட் இருந்தது. ஒரே நாளில் நான்கு மடங்கு அதிகமாகத் தொற்றுப் பரவல் நிகழ்ந்துள்ளது. நோய்த்தொற்றுகள் இப்போது வாராந்திர சராசரியாக ஒரு நாளைக்கு 3,00,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளன.

சமீபத்திய எழுச்சி மிகுந்த பரவலுக்கு மத்தியில், பிரெஞ்சு அமைச்சர்கள் ஆசிரியர் சங்கங்களோடு ஒரு சச்சரவை எதிர்கொள்கின்றனர். அவர்கள் அரசின் கோவிட் சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நெறிமுறைகளை எதிர்த்து இந்த வாரம் இரண்டவது பெரிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நெறிமுறைகள் வகுப்புகளைக் கடுமையாக சீர்குலைப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

நாட்டின் பாதி ஆரம்பப் பள்ளிகள் மூடப்படுவதற்குக் காரணமாக இருந்த, கடந்த வாரத்தின் ஒரு நாள் வெளிநடப்பைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வகுப்பு இடையூறுகள் சமாளிக்க முடியாததாகிவிட்டதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். பல பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு சிரமப்படுகின்றனர் மற்றும் மாணவர்கள் சோதனைகளுக்ககக் காத்திருக்கும்போது, பெற்றோர் மருந்தகங்களுக்கு வெளியெ நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

 

ஃபிரான்ஸ் செவ்வாய்க்கிழமை 464,769 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதாகப் பதிவு செய்தது.

பட மூலாதாரம்,கோவிட் 19 பரவல்

 

படக்குறிப்பு,

ஃபிரான்ஸ் செவ்வாய்க்கிழமை 464,769 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதாகப் பதிவு செய்தது.

ஏற்கெனவே உச்சத்தை எட்டியிருக்கலாம்

சில ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் அலை ஏற்கெனவே உச்சத்தை எட்டியிருக்கலாம் என்பதற்கான சில ஆரம்ப அறிகுறிகள் உள்ளன.

அயர்லாந்தில் சமீபத்திய நாட்களில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளன. சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்டீஃபன் டோனெல்லி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் மாத இறுதிக்குள் தளர்த்தப்படலாம் என்று மாநில ஒளிபரப்பாளரான ஆர்.டி.இ-யிடம் கூறினார்.

இரண்டரை மாதங்களுக்கு முன்பு ஒமிக்ரான் அலை தொடங்கியதில் இருந்து புதிய நோய்த்தொற்றுகள் முதன்முறையாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன என்று ஸ்பெயின் அரசின் தகவல்கள் காட்டுகின்றன. இருப்பினும் வல்லுநர்கள் தரவை அதிகமாகப் படிப்பது குறித்து எச்சரித்தனர்.

இரண்டரை மாதங்களுக்கு முன்பு ஓமிக்ரான் அலை தொடங்கியதில் இருந்து புதிய நோய்த்தொற்றுகள் முதன்முறையாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன என்று ஸ்பெயினின் அரசாங்க தகவல்கள் காட்டுகின்றன - இருப்பினும் தரவுகளுக்கு உள்ளேயே அதிகமாகக் கவனம் செலுத்துவது குறித்து வல்லுநர்கள் எச்சரித்தனர்.

பிரிட்டனில், தினசரி நோய்த்தொற்றுகள் குறைந்து வருவதால், அரசாங்க அமைச்சர்கள் புதன்கிழமை கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மதிப்பாய்வு செய்யவுள்ளனர்.

https://www.bbc.com/tamil/global-60049032

Link to comment
Share on other sites

இந்த வருடத்துக்குள் கொரோனா முடிவுக்கு வருகிறது என சில கிழமைக்கு முன் அறிக்கை விட்ட டெட்றோஸ்  நீங்கள் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நாடும் அலறுது இங்கு UK யில் முகக்கவசம் கட்டயாமில்லை கொரோநோக்கு முந்திய காலம் போல் சினிமா பப் எங்கும் போகலாம் கட்டுப்பாடுகளை எடுக்கிறார்கள் ஆனால் நாள் ஒன்றுக்கு தொத்து பரவல் 1 லட்சம் 😀போரிஸ் க்கு மண்டை கழண்டு போச்சுது போல் இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

எல்லா நாடும் அலறுது இங்கு UK யில் முகக்கவசம் கட்டயாமில்லை கொரோநோக்கு முந்திய காலம் போல் சினிமா பப் எங்கும் போகலாம் கட்டுப்பாடுகளை எடுக்கிறார்கள் ஆனால் நாள் ஒன்றுக்கு தொத்து பரவல் 1 லட்சம் 😀போரிஸ் க்கு மண்டை கழண்டு போச்சுது போல் இருக்கு .

பிரான்சிலும்  இதே  கதைதான்

ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு  இனி  ஆபத்தில்லை  என்றநிலைக்கு  வருகிறார்கள்  போலும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

இந்த வருடத்துக்குள் கொரோனா முடிவுக்கு வருகிறது என சில கிழமைக்கு முன் அறிக்கை விட்ட டெட்றோஸ்  நீங்கள் தானே?

 

8 hours ago, பெருமாள் said:

எல்லா நாடும் அலறுது இங்கு UK யில் முகக்கவசம் கட்டயாமில்லை கொரோநோக்கு முந்திய காலம் போல் சினிமா பப் எங்கும் போகலாம் கட்டுப்பாடுகளை எடுக்கிறார்கள் ஆனால் நாள் ஒன்றுக்கு தொத்து பரவல் 1 லட்சம் 😀போரிஸ் க்கு மண்டை கழண்டு போச்சுது போல் இருக்கு .

 

8 hours ago, விசுகு said:

பிரான்சிலும்  இதே  கதைதான்

ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு  இனி  ஆபத்தில்லை  என்றநிலைக்கு  வருகிறார்கள்  போலும்???

 

கொரோனா இமிக்கிரான் எல்லாம் ஒருவித வியாபார யுக்திகள் என்கிறார்கள்.

நான் மூன்று ஊசிகள் போட்ட பின்னரும் நான்காவது தடுப்பூசிக்கு தவணை தந்து விட்டார்கள்.


கொரோனா சட்டங்களுக்கெதிரான ஆர்ப்பாட்டகாரர்களை மதிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.