Jump to content

சேதனப் பசளையில் சீன அரிசி உற்பத்தி செய்யப்பட்டதா ? என்ற கேள்விக்கு தடுமாறிய 3 அமைச்சரவை பேச்சாளர்கள் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.மனோசித்ரா)

இறக்குமதி செய்யப்படவுள்ள சீன அரிசி , சேதன பசளையில் உற்பத்தி செய்யப்பட்டதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு , 'உண்மையாகவே அது குறித்து தெரியாது' என்று அமைச்சரவை பேச்சாளர்கள் மூவரும் குறிப்பிட்டனர். 

மேலும் இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வினவுவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு 19 ஆம் திகதி புதன்கிழமை அன்று இடம்பெற்ற போது , 'சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள அரிசி சேதன பசளையால் உற்பத்தி செய்யப்பட்டதா?' என்று ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப் பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இது தொடர்பில் கேட்டறிந்து அது குறித்து தெரியப்படுத்துவோம். 

இறக்குமதி செய்யப்படும் அரிசி சேதன பசளையால் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்று நாமும் எதிர்பார்க்கின்றோம் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார்.

சேதனப் பசளையில் சீன அரிசி உற்பத்தி செய்யப்பட்டதா ? என்ற கேள்விக்கு தடுமாறிய 3 அமைச்சரவை பேச்சாளர்கள் ! | Virakesari.lk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.