Jump to content

மோடியிடம் செல்ல முன் சொல்லி இருக்கலாம்


Recommended Posts

மோடியிடம் செல்ல முன் சொல்லி இருக்கலாம்’

 

 

மகேஸ்வரி விஜயனந்தன்

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்றும் அது இறைமையுள்ள நாடு என்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, நேற்று (19) நினைவூட்டினார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கை முழுமையாக அமுல்படுத்தத் தவறியமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளியான தகவல்களுக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (19) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்த அவர்,
 
நாம் இறையாண்மையுள்ள நாடு, இந்தியாவின் ஒரு பகுதி அல்ல எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களது கவலைகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பதிலாக எங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

"எங்கள் தமிழ் சகோதரர்கள்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விழித்த அவர், இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் தங்கள் கவலைகளை கலந்துரையாடியிருக்க வேண்டும் என்று ஷ மீண்டும் வலியுறுத்தினார்.

சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதியும் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை நேற்று முன்தினம் (18) சந்தித்து குறித்த ஆவணத்தைக் கையளிதிருந்தது.

குழுவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரும் அடங்குகின்றனர்.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை அடைவதற்காக 13ஆவது திருத்தத்தை கட்டியெழுப்புவதற்கு கடந்த காலங்களில் இந்திய மற்றும் இலங்கைத் தலைவர்கள் செய்த பல பொது உறுதிமொழிகளை அந்த ஆவணம் நினைவு கூர்ந்துள்ளது.

தமிழ் பேசும் மக்கள், பிளவுபடாத நாட்டுக்குள் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி, அவர்களின் இயற்கை வாழ்விடங்களில் கண்ணியமாகவும், சுயமரியாதையுடனும், அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஆவணத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பிரச்சினையில் காலத்துக்குக் காலம் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன், அவற்றை அமுல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்றார்.

 

Tamilmirror Online || ’மோடியிடம் செல்ல முன் சொல்லி இருக்கலாம்’

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

தங்கள் கவலைகளை கலந்துரையாடியிருக்க வேண்டும்

தமிழினத்தை அழித்தவாறு கவலைகளைக் கூறட்டாம். எவளவு தலைக்கனமான வினா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் கவலைகளே இவர்கள்தான். கள்ளனிடம் நிஞாயம் கேட்பவருண்டோ? அதிலும் இதுகள் யாரிடம் எடுத்தார்களோ அவர்களை கள்ளர் ஆக்கும்போது கேட்க முடியுமோ? இவருக்கு குசும்பு கூடிபோய்ச்சு.

தமிழரின் கவலை என்னவென்று தெரியாதவர், சொன்னால் மட்டும் விளங்கிவிடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.