Jump to content

5ஜி தொழில்நுட்பத்தால் ஆபத்து?- அமெரிக்கா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

5ஜி தொழில்நுட்பத்தால் ஆபத்து?- அமெரிக்கா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

202201200728091588_Tamil_News_Air-India-5ஜி தொழில்நுட்பத்தால் விமானம் புறப்படுவதிலும், தரை இறங்குவதிலும் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகின்றன.

5ஜி தொழில்நுட்பம் பயம் காரணமாக அமெரிக்காவுக்கு செல்ல இருந்த ஏர் இந்தியா விமானங்கள் 2-வது நாளாக இன்று ரத்து செய்யப்ப்பட்டுள்ளன.
 
உலகம் முழுவதும் பல நாடுகளில் 5ஜி செல்போன் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கெல்லாம் 5ஜி சேவையால் கொரோனா பரவுகிறது என்றும், பறவைகளுக்கு ஆபத்து என்றும் செய்தி பரப்பப்படுகிறது.
 
இந்நிலையில் அமெரிக்காவில் அதிவேக திறன் கொண்ட 5ஜி செல்போன் தொழில்நுட்பத்தை தொலை தொடர்பு நிறுவனங்கள் நேற்று அறிமுகப்படுத்தின.
 
இதையடுத்து அதிவேக 5ஜி தொழில்நுட்பத்துக்காக நிறுவப்பட்ட செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சால், விமான போக்குவரத்து பாதிக்கப்படும் என்று விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்தன.
 
விமானம் பறக்கும் உயரத்தை அறிய முடியாமல் விமானிகள் திணறுவார்கள் என்றும், ஓடுபாதைக்கு அருகே செல்போன் கதிர்வீச்சு இருக்கும்போது, விமானம் புறப்படுவதிலும், தரை இறங்குவதிலும் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டன. மேலும் 5ஜி தொழில்நுட்பத்தால் முக்கிய கருவிகள் செயலிழந்து விடும் என்றும் கூறப்பட்டது.
 
5ஜி கோபுரங்கள்
 
இந்த காரணங்களால், இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான விமான போக்குவரத்தை நேற்று முதல் ரத்து செய்துள்ளன.
 
விமான நிறுவனங்கள் முன்கூட்டியே அறிவிக்காமல், திடீரென விமானங்களை ரத்து செய்ததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அரசு விமான நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.5ஜி தொழில்நுட்பத்தால் ஆபத்து?- அமெரிக்கா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானங்கள் ரத்து! – குறியீடு (kuriyeedu.com)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறை ஏதோ  கொள்ளுபாடு போல் உள்ளது .

இங்கு லண்டனிலும் 5G க்கு  மாறி விட்டார்கள் கீத்துரோவுக்குக்கு இன்று மட்டும் நேரடி யாக  வந்த ஏர் இந்தியா  நான்கு விமானம் வருகின்றது https://www.heathrow.com/arrivals

Arriving Flight no. Airline or City
  • AI
    AI161
    Air India
    Delhi
    06:35
     
  • BA
    BA138
    British Airways
    Mumbai
    06:55
    AA6658, IB7364
  • VS
    VS303H
    Virgin Atlantic Airways
    Delhi
    08:30
     
  • VS
    VS355
    Virgin Atlantic Airways
    Mumbai
    09:10
    DL5944
  • AI
    AI177
    Air India
    Bengaluru
    11:05
     
  • AI
    AI131
    Air India
    Mumbai
    11:30
     
  • BA
    BA276
    British Airways
    Hyderabad
    12:40
    AA6668
  • BA
    BA118
    British Airways
    Bengaluru
    12:45
    AA6656
  • BA
    BA036
    British Airways
    Chennai
    13:15
    AA6670
  • BA
    BA256
    British Airways
    Delhi
    15:20
    AA6664, IB7424
  •  
    AI111
    Air India
    Delhi
    18:55
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும்  முதலில்  இருந்தா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் 5ஜி தொழில்நுட்பம் ஏன் விமானங்களுக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது?

  • தியோ லெகெட்
  • வணிகத் துறை செய்தியாளர், பிபிசி நியூஸ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

Phone

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏடி&டி மற்றும் வெரிசோன் ஆகியவை விமான நிலையங்களில் 5ஜி சேவை விரிவாக்கத்தை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

இதற்கு முன்பாக இரண்டு முறை இது ஒத்திவைக்கப்பட்டது. தற்போதும் இது நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பத்து முன்னணி விமான நிறுவனங்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தால் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாகலாம் என்று கூறுகின்றன.

5ஜி என்றால் என்ன, அது எப்படி அமெரிக்க விமானப் பயணத்தை சீர்குலைக்கும்?

5ஜி என்பது தொலைத்தொடர்பு இணைய இணைப்பின் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம். இது, மிக விரைவாக தரவிறக்க, பதிவேற்ற வழி செய்கிறது.

மேலும் ஒரே நேரத்தில் அதிக சாதனங்கள் தொலைத் தொடர்பு இணையத்தை அணுக அனுமதிக்கிறது.

இதைச் செய்ய, இது ரேடியோ சிக்னல்களை நம்பியுள்ளது. அமெரிக்காவில், 5ஜி க்கு பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகள் C-Band எனப்படும் அலைவரிசை பகுதியைச் சேர்ந்தவை.

இந்த 5ஜி அலைவரிசையும், விமானங்களில் பயன்படுத்தப்படும் ரேடியோ அல்டிமீட்டர்களின் அலைவரிசையும் கிட்டத்தட்ட ஒரே எண்களைக் கொண்டுள்ளன. இதனால் விமானம் தரையிறங்கும் போது பல சிக்கல்கள் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

ரேடியோ அல்டிமீட்டர் என்பது தரையில் இருந்து விமானம் உள்ள உயரத்தை அளவிட்டு பாதுகாப்பான முறையில் விமானத்தை தரை இறக்க உதவும் கருவியாகும்.

இதனால் விமானங்களுக்கு ஏற்படும் ஆபத்து எவ்வளவு தீவிரமானது?

2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், "இந்த பிரச்னை தீர்க்கப்படவில்லை என்றால் பல விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் சாத்தியம் உள்ளது" என்று எச்சரித்தது ரேடியோ டெக்னிகல் கமிஷன் ஃபார் ஏரோனாடிக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம். விமானப் போக்குவரத்து சிக்கல்களில் தீர்வுகளை உருவாக்கும் பணியை மேற்கொண்டுள்ள நிறுவனம் இது.

மிக சமீபத்தில், அமெரிக்க விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பான FAA, கூறும்போது 5ஜி தொழில்நுட்ப இடர்பாடு, போயிங் 787 ட்ரீம்லைனர் போன்ற விமானங்களில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று எச்சரித்தது.

குறிப்பாக தரையிறங்கும்போது விமானத்தின் வேகத்தைக் குறைப்பதில் இது சிக்கல்களை ஏற்படுத்தலாம். இதனால் விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி இறங்க நேரிடலாம் என்று கூறியது.

 

Grapic

இடர்ப்பாடுகள் ஏற்படும்போது எப்படி பாதுகாப்பாக விமானத்தை தரை இறங்கச் செய்வது ?

5ஜி அலைவரிசை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது அதனால் இடர்ப்பாடு ஏற்படும் அபாயம் உள்ள சூழ்நிலைகளில் ரேடியோ அல்டிமீட்டர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

ஆனால், எல்லா நேரத்திலும் அல்டிமீட்டர் பயன்பாட்டை கைவிட முடியாது. குறிப்பாக விமான ஓடு தளத்தில் அதிக பனிமூட்டம் இருக்கக் கூடிய சூழலில் விமான ஓடுதளம் கண்களுக்கு தெரியாது. இதனால் பாதுகாப்பாக விமானத்தை தரை இறக்குவதில் சிக்கல் ஏற்படும். அதுபோன்ற தருணங்களில் ரேடியோ அல்டிமீட்டர்களின் தேவை இன்றியமையாததாக இருக்கும் என்கிறார்கள்.

10 முன்னணி விமான நிறுவனங்களை உள்ளடக்கிய Airlines for America, என்ற அமைப்பு கூறுகையில் மோசமான வானிலையின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தரை இறங்க பல பிரச்னைகளை சந்திக்கக்கூடும் என்கிறது.

இது போன்ற கட்டுப்பாடுகளால் அமெரிக்க விமானப்படை விமானங்கள்கூட "பயன்படுத்த முடியாததாக" போகும் என்கிறது அந்த அமைப்பு.

 

Flight

பட மூலாதாரம்,GETTY IMAGES

5ஜி பயன்படுத்தும் பிற நாடுகள் நிலைமை என்ன?

5ஜி அலைவரிசை தொழில்நுட்பம் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவைப் போல் பிரச்னை பிற நாடுகளில் ஏற்படவில்லை.

எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஒன்றியத்தில், அமெரிக்காவில் பயன்படுத்தப்பட உள்ள 5ஜி அலைவரிசையின் அளவைவிட குறைத்தே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தொழில்நுட்ப பிரச்னை ஏற்படுவது குறைகிறது. 5ஜி அலைவரிசையைக் கடத்த பயன்படுத்தப்படும் கோபுரங்களுக்கு தேவைப்படும் மின் அழுத்தமும் குறைவாகவே வழங்கப்பட்டு வருகிறது.

பிற நாடுகளில் எந்தவித பிரச்னையும் இல்லை என்றாலும் பிரச்னையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

குறிப்பாக பிரான்சில், விமான நிலையங்கள் அருகே உள்ள பஃபர் சோன் எனப்படும் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 5ஜி அலைவரிசை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 5ஜி அலைவரிசைக்கு பயன்படுத்தப்படும் ஆன்டெனாக்களும் சாய்வாக பொருத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கை என்ன?

இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

FAA அமைப்பு 50 விமான நிலையங்களைச் சுற்றி தற்காலிக "பஃபர் சோன்" எனப்படும் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நிறுவியுள்ளது. ஆனால் இவை பிரான்சில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் மண்டலங்களை விட மிகவும் சிறியவை, மேலும் அமெரிக்க அலைவரிசை கோபுரங்கள் அதிக மின் திறன்களைக் கொண்டு செயல்படும்.

அதேபோல் 5ஜி அலைவரிசை தொழில் நுட்பத்துடன் இடர்பாட்டை ஏற்படுத்தாத ரேடியோ அல்டிமீட்டர்களைப் பயன்படுத்தவும் ஏற்பாடு நடந்து வருகிறது. மேலும் ரேடியோ அல்டிமீட்டர்களுக்கு பதிலாக GPS தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம் என்ற ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.

ஆனால் இது போன்ற நடவடிக்கைகள் தீர்வாகாது என்று விமான நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. ஒரே வழி, விமான நிலையங்களில் இருந்து இரண்டு மைல்களுக்குள் 5ஜி அலைவரிசை தொழில்நுட்பம் செயல்படுத்தப்படக்கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர்.

5ஜி அலைவரிசை தொழில்நுட்ப நிறுவனங்கள் என்ன கூறியுள்ளன?

வெரிசோன் மற்றும் ஏடி&டி ஆகியவை 5ஜி அலைவரிசை தொழில்நுட்ப நிறுவனங்கள், "தற்காலிகமாக" இதை நாங்கள் தாமதபடுத்துகிறோம் என்கிறார்கள்.

குறிப்பாக ஏடி&டி நிறுவனம் விமான ஓடு தளங்கள் அருகே கோபுரங்களின் எண்ணிக்கையை குறைவாக வைத்துவிட்டால் எந்த பிரச்னையும் வர வாய்ப்பில்லை என்றும் அதிகமாக தொழில்நுட்ப இடர்பாட்டை ஏற்படுத்தக்கூடிய 5ஜி தொழில்நுட்ப கோபுரங்களை ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இயக்க வேண்டாம் என்றும் முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளது.இதனால் தற்போது எந்தவிதமான பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை.

இது சம்பந்தமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் இந்த பிரச்னையால் 10 சதவீத 5ஜி தொழில்நுட்ப கோபுரங்கள் மட்டுமே செயல்படாது என்றார்.

 

AT&T Verizon

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெரிசோன் மற்றும் ஏடி&டி நிறுவனங்கள் ஏற்கனவே இரண்டு முறை 5ஜி வெளியீட்டை ஒத்திவைத்திருந்தன, மேலும் மேலே குறிப்பிட்டுள்ள "பஃபர் சோன்" பகுதிகளில் இதை செயல்படுத்த போவதில்லை என்றும் ஒப்புக்கொண்டன.

இரண்டு நிறுவனங்களும் சமீபத்திய இடைநிறுத்தம் குறித்து தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளன. 5ஜி தொழில்நுட்ப சேவையைத் தொடங்குவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஏடி&டி தெரிவித்துள்ளது.

சுமார் 40 நாடுகளில் ஏற்கனவே 5ஜி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கடந்த மாதம் அமெரிக்க வயர்லெஸ் தொழில் அமைப்பான CTIA விமானத் துறையினர் அதிகமான பயத்தை ஏற்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டியது. மேலும் இப்படியே இது தொடர்ந்தால் 5ஜி அறிமுகத்தை தாமதப்படுத்துவது உண்மையான பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்தது.

இங்கிலாந்தில் உள்ள நிலைமை என்ன?

இங்கிலாந்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் விமான நிறுவனங்கள் இதைப் பற்றி கவலைப்படவில்லை.

டிசம்பரில் வெளியிடப்பட்ட பாதுகாப்பு அறிவிப்பில், சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம்-(CAA) "5ஜி இடர்பாட்டால் விமான அமைப்பின் செயலிழப்பு அல்லது எதிர்பாராத நிகழ்வுகள் எதுவும் இல்லை" என்று கூறியது.

"வெவ்வேறு நாடுகளில் நிலைமை வேறுபடும். அந்தந்த நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை எப்படி நடைமுறைப் படுத்துகிறார்களோ அதை பொருத்து அது அமையும்" என்கிறார்கள்.

இந்த பிரச்னையில் மேலும் தரவுகளை சேகரிக்க சர்வதேச அளவில் வேலை செய்ய திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/business-60064372

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறவை இனம் எல்லாம் ஒன்றுதான் .. இயற்கையாக இருந்தால் என்ன; செயற்கையாக இருந்தால் என்ன.👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.