Jump to content

அம்பாந்தோட்டை, நுவரெலியா, காத்தாண்குடியில் சாராவால் பயிற்றுவிக்கப்பட்டு 'பையத்' செய்துகொண்டுள்ள 16 பெண்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின  தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் கட்டுவாபிட்டி தேவாலயத்தில் குண்டை வெடிக்கச் செய்த  மொஹம்மது ஹஸ்தூனின் மனைவியான  தற்போதும்  மர்மமாக உள்ள சாரா ஜெஸ்மின் அல்லது புலஸ்தினி மகேந்ரனின் கீழேயே, பெண்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு இஸ்லாமிய தேசமொன்றுக்கான 'பையத்' செய்துகொள்ளப்பட்டுள்ளதாக சி.ரி.ஐ.டி. எனும்  பயங்கரவாத  தடுப்பு மற்றும்  புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பில் சாராவின் கீழ் பயிற்சி பெற்று, இஸ்லாமிய தேசம் ஒன்றினை உருவாக்க  பையத் எனும் உறுதி மொழியை  16 பெண்கள் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேர்,  2019 ஏப்ரல்  26 சாய்ந்தமருது தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும்  சி.ரி.ஐ.டி. கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில் தாக்கல் செய்துள்ள அறிக்கைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மீதமாக உள்ள 10 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் கொழும்பு மேலதிக நீதிவான்  சந்திம லியனகே முன்னிலையில் இரு வேறு சந்தர்ப்பங்களில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய இராஜ்ஜியத்தை உருவாக்க பையத் செய்த, நுவரெலியா,  காத்தான்குடி மற்றும் அம்பாந்தோட்டையில் பயிற்சி பெற்றதாக கூறப்படும் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,  அவர்களில் 16 பேர் பெண்கள் என  தெரியவந்துள்ளது. ஏனைய 9 பேரும் ஆண்களாவர்.

இந்நிலையில், ஏற்கனவே 6 பெண்களை நீதிமன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுத்துள்ள பயங்கரவாத  தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (19) நான்கு பெண்களையும் 4 ஆண்களையும் இது தொடர்பில் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

ஆதம் லெப்பை மொஹம்மட் இர்பான்,  ரஹ்மதுல்லாஹ் பாத்திமா ஹுஸ்னா, மொஹம்மட் காசிம்  மதனியா,  மொஹம்மட் கலீல் பாத்திமா சஹீதா,  மொஹம்மட் இப்ராஹீம் பர்ளா, மொஹம்மட் ரியால் மொஹம்மட் இஸ்மத்,  மொஹம்மட் அப்துல் காதர், மொஹம்மட் ஜவாஹிர் ஆகியோரே நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களாவர். 

இவர்கள்  அனைவரும் அம்பாந்தோட்டை  - சிப்புக்குளம்,  நுவரெலியா - பிளக்வூட், காத்தான்குடி - கர்பலா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற ஆயுத பயிற்சிகளில் பங்கேற்று, இஸ்லாமிய இராஜ்ஜியத்தினை ஏற்படுத்த உறுதி மொழி எடுத்தவர்கள்  என விசாரணையாளர்கள் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இவர்கள் தொடர்பில் எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள இதன்போது நீதிவான் விசாரணையாளர்களை அறிவுறுத்தியுள்ளார். 

அம்பாந்தோட்டை, நுவரெலியா, காத்தாண்குடியில் சாராவால் பயிற்றுவிக்கப்பட்டு 'பையத்' செய்துகொண்டுள்ள 16 பெண்கள் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை ஆப்கானிஸ்தான் அல்லது செளதி அரேபியாவில் இறக்கிவிடுங்கள். 

பிரச்சனை முடிந்தது.

🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.