Jump to content

ஒன்றாக்கிய நீங்களே முடித்து வையுங்கள் - பிரித்தானிய அமைச்சரிடத்தில் சம்பந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.ராம்)

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் தென் ஆசிய மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தரிக் அஹமட் பிரபுவிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/131723/dsd.jpg

அதுதொடர்பில் தெரியவருவதாவது, “தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய கொண்டிருக்கின்ற கரிசனைகளுக்கும், அதற்காக வழங்கி வரும் ஒத்துழைப்புக்களும் முழுமையான நன்றிகள்.

தமிழ் மக்கள் தமது கருமங்களை சுதந்திரமாக ஆற்றக்கூடியவாறாக இரண்டாக இருந்த நாட்டை 1933 ஆம் ஆண்டு பிரித்தானியாவே ஒன்றாக மாற்றியமைத்தது.

அதன் பின்னரே தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகள் ஆக்கப்பட்டார்கள். தற்போது வரையில் சமத்துவமற்றவர்களாக உள்ளார்கள். உரிமைகளை அனுபவிக்க முடியாதவர்களாக உள்ளார்கள். 

சுயநிர்ணயத்தை அடைய முடியாதவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே இரண்டாக இருந்த நாட்டை ஒன்றாக மாற்றிய பிரித்தானியாவே தமிழர்கள் தமது பூர்வீக மண்ணில் நீடித்து நிலைத்திருக்க கூடிய நிரந்தமான தீர்வொன்றை அடைந்து கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

ஒன்றாக்கிய நீங்களே முடித்து வையுங்கள் - பிரித்தானிய அமைச்சரிடத்தில் சம்பந்தன் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றாக்கிய நீங்களே முடித்து வையுங்கள் - பிரித்தானிய அமைச்சரிடத்தில் சம்பந்தன்

முதல்தடவையாக நல்லதொரு வரலாற்றை  உணர்ந்த வேண்டுதல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தரமான வேண்டுகோள்......எது எப்படியோ சங்கு ஊதிவிட்டிருக்குது......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவின் இயல்புக்கு மாறான கருத்து!
சொல்ல வாய்ப்பு இல்லையே!

Link to comment
Share on other sites

8 minutes ago, ஏராளன் said:

ஐயாவின் இயல்புக்கு மாறான கருத்து!
சொல்ல வாய்ப்பு இல்லையே!

சுடலை ஞானம் என்று சொல்லலாம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஒன்றாக்கிய நீங்களே முடித்து வையுங்கள் - பிரித்தானிய அமைச்சரிடத்தில் சம்பந்தன்

இதை 30 வருசத்துக்கு முதலே சத்தமாய் சொல்லியிருக்க வேணும் எல்லோ-----

Link to comment
Share on other sites

40 minutes ago, ஏராளன் said:

ஐயாவின் இயல்புக்கு மாறான கருத்து!
சொல்ல வாய்ப்பு இல்லையே!

திடீரென கூட்டமைப்பினருக்கு வீராவேசம் வந்தது சந்தேகமானது. ஏதோ ஒரு பெரிய புள்ளி மருந்து குடுத்திருக்கு.

Link to comment
Share on other sites

சம்பந்தன் ஐயா, வணக்கம். நீங்கள் ஓய்வெடுக்கும் வயசில் பிரித்தானியாவிடம் முன் வைத்த கோட்பாட்டு ரீதியான கோரிக்கையில் உறுதியாக இருங்கள். மாவை மற்றும் சாணாக்கியன் போன்ற சகல வடகிழக்கு தோழர்களை முன்னிலைப் படுத்தி மக்கள் போராட்டமாக வளர்த்தெடுங்கள்.. விமர்சனங்களை பின்ன்நகர்த்தி உங்களோடு மக்கள் நிற்பார்கள்.

கோட்பாட்டு ரீதியான கோரிக்கையுடன் எஞ்சியுள்ள அரசியல் கைதிகள் விடுதலை மறுப்பு போன்ற மறைமுகமாக தொடரும் போரை நிறுத்துவதும் முக்கியம்.   

சகல இயக்க போராளிகளுக்கும் போரால் பாதிக்கபட்ட வறுமைக் கோட்டுக்கு கீழ்வாழும் ஈழம்வாழ் வாழ் மலையக தமிழர். வடபகுதி முஸ்லிம்கள், கிழக்கு முஸ்லிம்கள், . சாதிவாரியாக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள்  அனைவருக்கும் இதுவரை மறுக்கபட்ட புனர் வாழ்வும் புனர் நிர்மாணமும் போன்ற இலகுவான அவசரக் கோரிக்கைகளையும் உலகின்முன் வையுங்கள். இவற்றை உங்கள் எதிர்கால  கோரிக்கைகளோடு  இணைக்க  மறக்க வேண்டாம்.

அமைப்புச் சாரா நிறுவனங்கள் குறிப்பாக  போர்களில் நாம்மோடு நின்ற திருச்சபை போன்ற மத நிறுவனங்களின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.  மத நிறுவனங்கள. மக்களை அரசியல் மயப்படுத்தி வீதிக்கு இறக்கினால் வராலாறு உள்ளளவும் வாழ்வ்வீர்கள் ஐயா 

அரசியல் போர்க்களத்தில் உங்கள் உறுதியோடு சேர்ந்து   மக்கள் ஆதரவும் என்போன்ற கலைஞர்கள் ஆதரவும்  நிச்சயம். உயரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கோரிக்கை.. நானும் கிள்ளி பார்த்துவிட்டேன் ..கனவு அல்ல; நிஜம்தான் கள உறவுகள் நீங்களும் ஒருக்கா உங்களை கிள்ளி பார்த்து கொள்ளுக.👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, poet said:

இவற்றை உங்கள் எதிர்கால  கோரிக்கைகளோடு  இணைக்க  மறக்க வேண்டாம்.

எப்போ அந்த எதிர்காலம்? 

ஐயா ஓடி  ரொம்ப களைச்சிற்றார், இனியும் விளையாட அவருக்கு உடலும் இடந்தராது, காலமும் இல்லை, அவருக்கு  கொடுக்கப்பட்ட நேரமும் அண்மித்துவிட்டது, அதற்கு முன் பிரகாசிக்க முயற்சிக்கிறார். ஒருவேளை இப்போதான் மனசாட்சி வேலை செய்யுதோ? விளையாடி அலுத்து விட்டதோ? இனி இந்தியா அறிக்கை விட்டாலும் விடும், தமிழர் தம் கவலைகளை எங்களோடுதான் கலந்து பேசியிருக்க வேண்டுமென. ஆனால் எவனும் நம் பிரச்சனையை தீர்க்க மட்டும் விடாது, பூதம் மாதிரி அது காவலிருக்க வேறொருவரா? முடியுமா யாராலும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோல்பரி காலத்திலேயே இந்தா 50:50 என்று கொடுக்க முன்வந்த போதும்.. இராணியின் சேர் பட்டத்துக்கும் சிங்களவனின் பல்லக்கிற்கும் மயங்கினதும் இதே சட்டாம்பிக் கூட்டம் தான்.

அப்புறம் இயன் பொக்ஸ் வந்த போதும்..  புலிகளை சாட்டி அவரையும் விரட்டினது இதே சம் சந்திரிக்கா கும்பல் தான்.

இப்ப மீண்டும்.. பழைய பல்லவி...??!

இங்கிலாந்திற்கு சொறீலங்கா எப்பவும் செல்லப்பிள்ளை.... இந்த நிலை இருக்கும் வரை சிங்கள பெளத்த பேரினவாத அடக்குமுறைக்கு இங்கிலாந்து முடிவுகட்ட முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்ல கோரிக்கை.. நானும் கிள்ளி பார்த்துவிட்டேன் ..கனவு அல்ல; நிஜம்தான் கள உறவுகள் நீங்களும் ஒருக்கா உங்களை கிள்ளி பார்த்து கொள்ளுக.👌

நானும் கிள்ளிப்பாத்தன்......ஒண்டு மட்டும் தெரிஞ்சுது. பிரிட்டிஷ் அமைச்சரவையிலையும் எக்கச்சக்க கிந்தியர்கள்.......எனவே  சிங்களத்துடன் கதைத்து ஒற்றுமையாகவும் இருக்க விடமாட்டார்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா வெளிக்கிட்டிட்டார், எதுக்கும் சிங்களவன் அடுத்து எந்த நாட்டிடம் கடன் உதவி கேட்டு போகிறான் என்ற பட்டியலையும் எடுத்து, அவர்கள் காதில் நீங்கள் கொடுக்கும் கடன் திரும்பி வராது நாட்டில உள்ள குறைபாடுகள் என்னென்ன, தமிழருக்கு நிலையான தீர்வு கிடைத்தால் மட்டுமே நாடு முன்னோக்கி செல்லும், உங்கள் கடனும் திரும்பி வரும், இல்லையெனில் கடன் திரும்பி வருமென்று கனவிலும் நினைக்க வேண்டாம் என்று போட்டு வைக்கலாம். அவர்கள் எப்படி சர்வதேசத்தை எங்களுக்கு எதிராக திருப்பினார்களோ அதே வழியில் அவர்களைப்போல் பொய்யைஅல்ல, உண்மையை சொல்லி நம் நாட்டையும், மக்களையும் கடனில் இருந்து விடுவிக்கலாம். பக்கத்து சனி, சீனன் இப்பிடி சிலது கடன் வாங்கவல்ல, கடனை வைத்து  உள்ளதையும் உருவ  சூதாடுதுகள், கேக்கிறவர்களிடம் சொல்லலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.