Jump to content

ஓவியாவின் கனவுகள்-Dreams of Oviya-பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓவியாவின் கனவுகள்

மண்ணுக்காய் மரணத்தை சுமந்தவன் மலரவன். அவன் உயிர் எறிந்து சென்று பத்து வருடம் ஆகிவிட்டது. பாவம் இவன் குடும்பம் இப்போ படும் பாடு போதும். ஒன்றாகவே விடுதலைக்கு போன ஓவியாவை திருமணம் செய்தவன். நாம் தமிழர் விடுதலைக்காய் நாளும் பொழுதும் உழைத்த குடும்பம். இரவு பகலாய் எதிரி எம் மண்ணில் நுழையாமல் எல்லையில் நின்று கண் முழித்து காவல் நின்றவள் ஓவியா. இறுதி யுத்தத்தில் இவன் போன பின் எல்லாமே இழந்த பின் மலரவனின் மனைவி ஓவியாவுக்கும் இவள் நான்கு குழந்தைகளுக்கும் எதுக்கும் இப்போ வழி இல்லை.

நான்கு பிள்ளைகள் நாளாந்தம் குடும்பம் ஓட்டுவதே கடினம். ஓவியா இப்போ கூலி வேலை செய்து குடும்பத்தை ஓட்டுகிறாள். அவள் படும் பாடு இப்போ பெரும் பாடு அவள் சுமக்கின்ற வலியோ தீராது. ஒரு காலம் நிமிரொடு தமிழ் தந்த திமிரோடும் இருந்தவள். இவள் கனவு எல்லாம் காலமது தின்ற பின்பு கை நீட்டும் நிலையதுவாகிப் போனாள். இளைய மகன் இனியவன் இப்பவும் விபரம் தெரியாதவன் போல் அம்மா சைக்கில் வேண்டித் தா என்று அடம் பிடித்தபடி இருக்கிறான். மூத்தவன் முகுந்தன் படிக்கிறான் எப்படியோ இவனை படிக்க வைத்து பெரியவன் ஆக்க பாவம் இவள் படும் துயரம் சொல்லில் அடங்கா. 

மலரவனின் தாய் இன்னும் ஒரு பாரம். இவள் திண்ணையில் கிடந்து காடு அதிரக்கத்தியபடி கிடக்கு இன்னும் மகன் மலரவனின் பாசம் விட்டுத் தொலையவில்லை. வருவான் என்றபடி இரவோடு இன்னும் கதைத்தபடி கிடக்கிறது கிழவி. இரவுகளும் கதை கேட்டபடி இவளோடு குந்தி இருக்கிறது. இருமியபடியும் கத்தியபடியும் கிடக்கும் இவளுக்கு வேற மருந்துச் செலவு.

இரண்டு பெண் பிள்ளைகள் பாரதி பைரவி என்று இவர்கள் பற்றிதான் ஓவியாவுக்கு அதிகம் கவலை எதிர்காலம் என் பிள்ளைகள் வாழ்வு எப்படி என்றே. கூலி வேலை தான் குடும்பத்தை கொண்டு போக. அருகில் இருக்கும் அந்தோனியார் கோவில் அருட்தந்தை அவள் துயர் அறிந்து ஐந்தோ பத்தோ கொடுத்து உதவுவார். அவ்வளவு தான் காலை மாலை வேலை முடிய கர்த்தரிடம் போய் கருணை வேண்டி நிற்பது தவிர வேறு உதவி எவரும் இல்லை. அண்ணண் தம்பி அக்காள் தங்கை என்று உதவ அவளுக்கு வெளி நாட்டில் யாரும் இல்லை.

ஒரு காலம் எங்கள் போராளிகள் என்று போற்றிய சமூகம் கூட இன்று ஒரு பக்கம் ஒதுக்கி வைத்த கதை வேற. இவளின் வீட்டை கடந்து செல்பவர்களும் முகத்தை ஒரு பக்கம் திருப்பி தான் கடக்கிறார்கள். அவளின் ஏதோ நல்ல காலம் அருகில் ஒரு அம்பிகா ஆண்டி என்று அந்த கிராமத்தின் பெண்ணுரிமை வாதி சமூக நீதிக்காய் போராடிய பெண் பல முறை சிறை சென்றும் வந்தவள். ஓவியாவை சிறு வயதில் இருந்து தெரியும். அடிக்கடி அவளுக்கு ஆறுதல் வார்த்தையும் ஏதும் ஒரு சிறு உதவியும் செய்யும் ஒரு அன்பு உள்ளம் யாரும் உதவா இவளுக்கு இது பெரும் ஆறுதல்.

மலரவன் ஓவியா என்ற இந்த மலர்களின் அரைப்பங்கு வாழ்வு அந்த மண் மீட்பு போருக்காய் அந்த மக்களை விடிவுக்காய் அர்பணிக்கப்பட்ட தியாக வாழ்வோடு தொடக்கி மலரவனின் வீர மரணத்தோடு இன்று இவன் மனைவி ஓவியாவின் துயர வாழ்வு கடந்து போகும் நிலை மாறுமா. இன்று இளைய மகனுக்காய் ஒரு சைக்கிள் வேண்டும் கனவோடு இன்னும் இவள் வியர்வைத் துளி சிந்திய வண்ணம் உள்ளது. சுதந்திரம் வேண்டி எனக்கும் உனக்குமாய் போராடிய ஓவியா என்ற போராளியின் வாழ்வு ஒரு சைக்கிள் வேண்டும் கனவோடு முடிந்தது.

இப்பொழுது எல்லாம் அந்த ஏசு பிரான் சொன்னது போலவே மன்னித்து விட்டாள்  ஓவியா ஆனால் அவளால் எதையுமே மறப்பதற்கு இல்லை. வர்ணங்களிலான வாழ்வை நேசித்தவள் ஓவியா மனித குலத்தின் விடுதலையை விரும்பியவள் ஓவியா அந்த பறவைகள் போலவே பறக்க விரும்பியவள். அவள் சிறகுகள் உடைந்து விழுந்தாலும் அவள் மனச் சிறகுகள் பறக்கின்றன அவள் வாழ்வின் கதையை எழுதியபடி இந்த பிரபஞ்சத்தை சுத்தியே. 

மாற்றம் ஒன்றே மாறாதது ஒரு நாள் மழை வரும் என் கனவுகளை நனைக்கும். இப்பொழுது இல்லையென்றாகிலும் எப்பொழுதாவது ஒருநாள் எமக்கான விளக்கு எரியும் என்ற நம்பிக்கையுடன் இன்று மலரவனின் நினைவு  நாளில் கையில் பூக்களோடும் கண்ணில் ஊறிய கடல் கசிவோடும் அவன் நினைவோடும் நாளை ஒரு காலம் வரும் நமக்காய் ஒரு வாழ்வு வரும் காலை வரும் பூக்கள் எல்லாம் எங்கள் கண்ணீரை துடைக்க வரும் காற்றில் ஒரு கீதம் வரும் எங்கள் கவலைகளை போக்கிவிடும் நேற்று வரை இருந்த துன்பம் எல்லாம் தீர்த்து வைக்க தெய்வம் வரும் என்று கோடை காலாப் பொழுதொன்றில் நதியோரம் அந்த நிலவின் அருகோரம் மலரவனின் மடியோரம் தான் இருந்து எழுதிய கவிதை ஒன்றை பாடிய படியே காலம் ஒரு நாள் மாறும் என்ற கடைசி துளி நம்பிக்கையோடு உயிர்த்தலே இனி விதி என்று மீண்டும் உயரப் பறக்கவே எண்ணுகிறது ஓவியாவின் கனவுகள் சுமந்த சிறகுகள்.

நன்றியுடன் பா.உதயன் ✍️


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகள் நனவாகும் என எண்ணிக் கொண்டே வாழ்க்கை நகர்ந்து செல்கிறது .அருமை நன்றாக சொல்லப்பட்டுள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிலாமதி said:

கனவுகள் நனவாகும் என எண்ணிக் கொண்டே வாழ்க்கை நகர்ந்து செல்கிறது .அருமை நன்றாக சொல்லப்பட்டுள்ளது 

கருத்துக்கு நன்றிகள் நிலாமதி அக்கா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/1/2022 at 15:15, uthayakumar said:

ஓவியாவின் கனவுகள்

மண்ணுக்காய் மரணத்தை சுமந்தவன் மலரவன். அவன் உயிர் எறிந்து சென்று பத்து வருடம் ஆகிவிட்டது. பாவம் இவன் குடும்பம் இப்போ படும் பாடு போதும். ஒன்றாகவே விடுதலைக்கு போன ஓவியாவை திருமணம் செய்தவன். நாம் தமிழர் விடுதலைக்காய் நாளும் பொழுதும் உழைத்த குடும்பம். இரவு பகலாய் எதிரி எம் மண்ணில் நுழையாமல் எல்லையில் நின்று கண் முழித்து காவல் நின்றவள் ஓவியா. இறுதி யுத்தத்தில் இவன் போன பின் எல்லாமே இழந்த பின் மலரவனின் மனைவி ஓவியாவுக்கும் இவள் நான்கு குழந்தைகளுக்கும் எதுக்கும் இப்போ வழி இல்லை.

நான்கு பிள்ளைகள் நாளாந்தம் குடும்பம் ஓட்டுவதே கடினம். ஓவியா இப்போ கூலி வேலை செய்து குடும்பத்தை ஓட்டுகிறாள். அவள் படும் பாடு இப்போ பெரும் பாடு அவள் சுமக்கின்ற வலியோ தீராது. ஒரு காலம் நிமிரொடு தமிழ் தந்த திமிரோடும் இருந்தவள். இவள் கனவு எல்லாம் காலமது தின்ற பின்பு கை நீட்டும் நிலையதுவாகிப் போனாள். இளைய மகன் இனியவன் இப்பவும் விபரம் தெரியாதவன் போல் அம்மா சைக்கில் வேண்டித் தா என்று அடம் பிடித்தபடி இருக்கிறான். மூத்தவன் முகுந்தன் படிக்கிறான் எப்படியோ இவனை படிக்க வைத்து பெரியவன் ஆக்க பாவம் இவள் படும் துயரம் சொல்லில் அடங்கா. 

மலரவனின் தாய் இன்னும் ஒரு பாரம். இவள் திண்ணையில் கிடந்து காடு அதிரக்கத்தியபடி கிடக்கு இன்னும் மகன் மலரவனின் பாசம் விட்டுத் தொலையவில்லை. வருவான் என்றபடி இரவோடு இன்னும் கதைத்தபடி கிடக்கிறது கிழவி. இரவுகளும் கதை கேட்டபடி இவளோடு குந்தி இருக்கிறது. இருமியபடியும் கத்தியபடியும் கிடக்கும் இவளுக்கு வேற மருந்துச் செலவு.

இரண்டு பெண் பிள்ளைகள் பாரதி பைரவி என்று இவர்கள் பற்றிதான் ஓவியாவுக்கு அதிகம் கவலை எதிர்காலம் என் பிள்ளைகள் வாழ்வு எப்படி என்றே. கூலி வேலை தான் குடும்பத்தை கொண்டு போக. அருகில் இருக்கும் அந்தோனியார் கோவில் அருட்தந்தை அவள் துயர் அறிந்து ஐந்தோ பத்தோ கொடுத்து உதவுவார். அவ்வளவு தான் காலை மாலை வேலை முடிய கர்த்தரிடம் போய் கருணை வேண்டி நிற்பது தவிர வேறு உதவி எவரும் இல்லை. அண்ணண் தம்பி அக்காள் தங்கை என்று உதவ அவளுக்கு வெளி நாட்டில் யாரும் இல்லை.

ஒரு காலம் எங்கள் போராளிகள் என்று போற்றிய சமூகம் கூட இன்று ஒரு பக்கம் ஒதுக்கி வைத்த கதை வேற. இவளின் வீட்டை கடந்து செல்பவர்களும் முகத்தை ஒரு பக்கம் திருப்பி தான் கடக்கிறார்கள். அவளின் ஏதோ நல்ல காலம் அருகில் ஒரு அம்பிகா ஆண்டி என்று அந்த கிராமத்தின் பெண்ணுரிமை வாதி சமூக நீதிக்காய் போராடிய பெண் பல முறை சிறை சென்றும் வந்தவள். ஓவியாவை சிறு வயதில் இருந்து தெரியும். அடிக்கடி அவளுக்கு ஆறுதல் வார்த்தையும் ஏதும் ஒரு சிறு உதவியும் செய்யும் ஒரு அன்பு உள்ளம் யாரும் உதவா இவளுக்கு இது பெரும் ஆறுதல்.

மலரவன் ஓவியா என்ற இந்த மலர்களின் அரைப்பங்கு வாழ்வு அந்த மண் மீட்பு போருக்காய் அந்த மக்களை விடிவுக்காய் அர்பணிக்கப்பட்ட தியாக வாழ்வோடு தொடக்கி மலரவனின் வீர மரணத்தோடு இன்று இவன் மனைவி ஓவியாவின் துயர வாழ்வு கடந்து போகும் நிலை மாறுமா. இன்று இளைய மகனுக்காய் ஒரு சைக்கிள் வேண்டும் கனவோடு இன்னும் இவள் வியர்வைத் துளி சிந்திய வண்ணம் உள்ளது. சுதந்திரம் வேண்டி எனக்கும் உனக்குமாய் போராடிய ஓவியா என்ற போராளியின் வாழ்வு ஒரு சைக்கிள் வேண்டும் கனவோடு முடிந்தது.

இப்பொழுது எல்லாம் அந்த ஏசு பிரான் சொன்னது போலவே மன்னித்து விட்டாள்  ஓவியா ஆனால் அவளால் எதையுமே மறப்பதற்கு இல்லை. வர்ணங்களிலான வாழ்வை நேசித்தவள் ஓவியா மனித குலத்தின் விடுதலையை விரும்பியவள் ஓவியா அந்த பறவைகள் போலவே பறக்க விரும்பியவள். அவள் சிறகுகள் உடைந்து விழுந்தாலும் அவள் மனச் சிறகுகள் பறக்கின்றன அவள் வாழ்வின் கதையை எழுதியபடி இந்த பிரபஞ்சத்தை சுத்தியே. 

மாற்றம் ஒன்றே மாறாதது ஒரு நாள் மழை வரும் என் கனவுகளை நனைக்கும். இப்பொழுது இல்லையென்றாகிலும் எப்பொழுதாவது ஒருநாள் எமக்கான விளக்கு எரியும் என்ற நம்பிக்கையுடன் இன்று மலரவனின் நினைவு  நாளில் கையில் பூக்களோடும் கண்ணில் ஊறிய கடல் கசிவோடும் அவன் நினைவோடும் நாளை ஒரு காலம் வரும் நமக்காய் ஒரு வாழ்வு வரும் காலை வரும் பூக்கள் எல்லாம் எங்கள் கண்ணீரை துடைக்க வரும் காற்றில் ஒரு கீதம் வரும் எங்கள் கவலைகளை போக்கிவிடும் நேற்று வரை இருந்த துன்பம் எல்லாம் தீர்த்து வைக்க தெய்வம் வரும் என்று கோடை காலாப் பொழுதொன்றில் நதியோரம் அந்த நிலவின் அருகோரம் மலரவனின் மடியோரம் தான் இருந்து எழுதிய கவிதை ஒன்றை பாடிய படியே காலம் ஒரு நாள் மாறும் என்ற கடைசி துளி நம்பிக்கையோடு உயிர்த்தலே இனி விதி என்று மீண்டும் உயரப் பறக்கவே எண்ணுகிறது ஓவியாவின் கனவுகள் சுமந்த சிறகுகள்.

நன்றியுடன் பா.உதயன் ✍️


 

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2022 at 18:19, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

கருத்துக்கு நன்றிகள் புரட்சிகர தோழரே 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.