Jump to content

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ நிராகரிப்போம்


Recommended Posts

 ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ நிராகரிப்போம்

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ நிராகரிப்போம்

 

13ம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணி திரண்டு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி துண்டுப்பிரசுரம் விநியோகித்துள்ளது.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ம் திருத்தத்திற்குள் முடக்கம் சதி முயற்சியை முடியடிக்க அனைத்து தமிழ் மக்களதும் பூரணமான ஆதரவை கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாண நகர் பகுதியில் இன்றையதினம் இவ்வாறு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-

http://tamil.adaderana.lk/news.php?nid=156526

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

13ம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணி திரண்டு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி துண்டுப்பிரசுரம் விநியோகித்துள்ளது.

34 வருடமாக கிடப்பில் கிடந்ததை இந்தியா தனது முகவர்கள் ஊடாக தூசிதட்டி எடுக்க முயற்சி செய்யுது.

நன்றி சீனா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13ஐ வேண்டாம் என்பதில் இரு தரப்பு இருக்குது. ஒரு தரப்பில் நியாயம் இருக்குது மறுதரப்பில் அநியாயம்.

தமிழர் தரப்பில் நியாயம் ஏனெனில்.. தமிழ் மக்களின் உரிமையை 13 எந்த அளவில் மீட்டுத்தரும் என்பதற்கு 13 உருவாகி 35 ஆண்டுகள் பதில் சொல்லிட்டுது.

ஆனால் தமிழர்களுக்கு எதுவுமே கொடுத்த முடியாது என்ற நிலையில்.. உப்புச் சப்பற்ற 13 ஐயும் சிங்களம் எதிர்க்குதென்றால்.. அதனிடம்.. எதை தீர்வாகப் பெறப் போயினம்.. எப்படி..??!

அதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட.. தமிழர் தரப்பில் 13 ஐ ஆதரப்பவர்களும்.. எதிர்ப்பவர்களும் விளக்க வேண்டும்..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ நிராகரிப்போம்

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ நிராகரிப்போம்

 

 
13ம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணி திரண்டு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி துண்டுப்பிரசுரம் விநியோகித்துள்ளது.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ம் திருத்தத்திற்குள் முடக்கம் சதி முயற்சியை முடியடிக்க அனைத்து தமிழ் மக்களதும் பூரணமான ஆதரவை கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாண நகர் பகுதியில் இன்றையதினம் இவ்வாறு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-

http://tamil.adaderana.lk/news.php?nid=156526

மிஸ்டர் கஜன்,
13 அடுத்த அரசியலமைப்போடை இல்லாமல் போகப்போகுது ,நீங்கள் தமிழருக்குள்ளையே சண்டை பிடிச்சுக்கொண்டிருக்காமல் சிங்களவனுக்கு எதிரா ஏதாவது செய்யலாமே

Link to comment
Share on other sites

Amirthanayagam Nixon 

 
13 பற்றிச் சம்பந்தன் சொன்னது என்ன?
2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சமர்ப்பித்த தீர்வு யோசனைகளை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய சம்பந்தன் 13 ஐ தும்புத் தடியாலும் தொட்டுக்கூடப் பார்க்கமாட்டோம் என்று கூறியிருந்தார்.
மகிந்த ஜனாதிபதியாக இருந்தபோது புலிகளுடன் சமாதானப் பேச்சு நடத்தி இழுபறிப் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சுதந்திரக் கட்சி தீர்வு யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாகச் சமர்ப்பித்திருந்தது.
அந்த விவாதத்தின்போது 13 இன் குறைபாடுகள் பற்றியும் சம்பந்தன் நீண்ட விளக்கம் கொடுத்திருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் சம்பந்தன் ஆங்கிலத்தில் நிகழ்த்திய உரையை, நான் நாடாளுமன்றச் செய்தியாளராக இருந்தபோது முழுமையாக வீரகேசரியில் எழுதியிந்தேன்-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனை ”தமிழர்களின் சுயமரியாதைக்கு விழுந்த அடி என்றுதான் நான் சம்பந்தனின் உரைக்கு வீரகேசரிச் செய்தியில் தலைப்பிட்டிருந்தேன்-
ஆனால் அப்படியொரு நேரடி வார்த்தையைச் சம்பந்தன் தனது ஆங்கில உரையில் கூறவில்லை. இருந்தாலும் உரையின் முழுப்பகுதிக்கும் அந்தத் தலைப்பு பொருந்தும் என்ற அடிப்படையில் நான் அவ்வாறு தலைப்பிட்டிருந்தேன்-(அன்று நான் இரவுக் கடமை என்பதால் செய்திக்கு நானே தலைப்பிட முடிந்தது)
அடுத்த நாள் நாடாளுமன்றத்தில் என்னை நேரில் சந்தித்த சம்பந்தன் நீங்கள் இட்ட தலைப்பு தனது உரைக்குப் மிகப் பொருத்தமானது என்று கூறினார்.
13 ஐ தும்புத்தடியாலும் கூடத் தொட்டுப் பார்க்கமாட்டோம் (We will not even touch the 13th Amendment by the Broom) என்று அவர் கூறியதையும் முக்கியப்படுத்தி எழுதியிருந்தேன்.
ஆங்கிலத்தில் இருந்து நேரடியாக மொழிபெயர்த்தால் துடைப்பம் என்றுதான் வரும். ஆனால் சரியான பொருள்கோடலுடன் தமிழில் அதனை மொழிபெயர்த்தால் தும்புத்தடி என்றுதான் வரும்-
”தும்புத் தடியாலும்” என்று மொழிபெயர்த்து எழுதியிருந்ததையும் சரியான தமிழ்ச் செற்பதம் என்றுதான் சம்பந்தன் என்னிடம் சொல்லிப் பொருமைப்பட்டிருந்தார்.
தும்புத் தடியாலும்கூடத் தொட்டுப் பார்க்க முடியாது என்று சம்பந்தன் கூறிய அந்தக் கருத்தை நான் எனது அரசியல் பத்தி எழுத்துக்களிலும் பல தடவை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
அத்துடன் என்னிடம் அரசியல் விஞ்ஞானம் படிக்கும் மாணவர்களுக்கும் 13 பற்றி விரிவுரை நிகழ்த்தும்போதும் சம்பந்தன் இவ்வாறு கூறினார் என்று சொல்லியிருக்கின்றேன்-
அதனாலேயே இந்தக் கருத்துப் பிரபல்யம் அடைந்திருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
2001 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டுவரை சம்பந்தன் ஆங்கிலத்தில் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகளைத் தொகுத்து வெளியிட்டால், வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிக் கட்டமைப்பே (North East Combined Autonomous Structure) ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நிரந்த அரசியல் தீர்வு என்பது வெளிப்படும்.
மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் சந்திரிகா, மகிந்த ஆகியோர் முன்மொழிந்த பரிந்துரைகள், உறுதிமொழிகள் பற்றிய விபரங்கள் சம்பந்தனின் நாடாளுமன்ற உரைகளில் இருந்தே தொகுப்பட்டிருக்க வேண்டும்.
ஏனெனில் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் தீர்வு யோசனைகள், மங்கள முனசிங்க ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்துப் பரிந்துரைகள் மற்றும் சர்வதேச இராஜதந்திரிகள் கூறிய அறிவுரைகள், ஐக்கிய நாடுகள் சபை அவ்வப்போது இலங்கை தொடர்பான அறிக்கைகளில் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் சம்பந்தன் அக்குவேறு ஆணிவேறாக சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
ஆனால் 2009 இற்குப் பின்னர் முற்று முழுதாக மாறி ஒற்றையாட்சியை (unitary state) ஏற்கும் மன நிலையிலேயே பேசுகிறார் சம்பந்தன்.
ஆகவே 2009 வரையான அத்தனை உரைகளையும் தொகுத்தால் தமிழரசுக் கட்சியின் இரட்டை வேடம் அம்பலமாகும்.
2001 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரையான மாவீரர் நாள் உரைகள் கூட தமிழ் நெற்றில் வரும் ஆங்கிலப் பிரதியைக் கொண்டு வந்து அதில் கூறப்பட்டுள்ள பிரதான அம்சங்களைச் சம்பந்தன் நாடாளுமன்றத்தில் வாசித்துமிருக்கிறார்.
ஆங்கிலத்தில் மற்றுமொரு மாவீரர் நாள் உரை என்று நாங்கள் நாடாளுமன்றச் செய்தியாளர் களரியில் இருந்து சிரித்துப் பேசியிருந்தோம்-
என்னுடன் அப்போது சக செய்தியாளராகக் கடமையாற்றியவர் R. Priyadharshini Sivarajah. (தற்போதைய தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர் .சிவராஜாவின் மனைவி)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் பார்ப்போம்.

(15) Watch | Facebook

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.