Jump to content

யாழ்.பொலிசாரினால் சிரமதான பணி முன்னெடுப்பு


Recommended Posts

யாழ்.பொலிசாரினால் சிரமதான பணி முன்னெடுப்பு

யாழ்.பண்ணை பகுதியில் இன்று (சனிக்கிழமை) பொலிஸாரினால் சிரமதான பணி முன்னெடுப்பட்டிருந்தது.

யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வழிகாட்டுதலின் கீழ் யாழ் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நெறிப்படுத்தலில் பொலிஸாரினால் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

https://athavannews.com/2022/1263141

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல செயல் .....தொடரட்டும்.......!  👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, suvy said:

மிகவும் நல்ல செயல் .....தொடரட்டும்.......!  👏

யாழ் பொது நூலகம் எரித்தமை
யாழ் பொது சந்தை எரித்தமை
யாழ் பொலிசாரின் சிரமதானப் பணிகளின் ஒன்று
யாழ்ப்பாணிகளே கேளீர் 😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

யாழ் பொது நூலகம் எரித்தமை
யாழ் பொது சந்தை எரித்தமை
யாழ் பொலிசாரின் சிரமதானப் பணிகளின் ஒன்று
யாழ்ப்பாணிகளே கேளீர் 😅

சாகும் வரைக்கும் இதையே சொல்லிக் கொண்டு இருங்கோ🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

சாகும் வரைக்கும் இதையே சொல்லிக் கொண்டு இருங்கோ🙂

உண்மையை தானே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

உண்மையை தானே..

உண்மை தான் ...ஆனால் அதையே சொல்லிக் கொண்டு இருப்பதில் என்ன பிரயோசனம்?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உண்மை தான் ...ஆனால் அதையே சொல்லிக் கொண்டு இருப்பதில் என்ன பிரயோசனம்?
 

நீங்கள் பிரதேசவாதம் என்று அதையே சொல்லிக் கொண்டு இருப்பதில் என்ன பிரயோசனம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சாகும் வரைக்கும் இதையே சொல்லிக் கொண்டு இருங்கோ🙂

மன்னிக்கவும்! சாகும்வரை அல்ல எங்கள் பிரச்சனை தீர்க்கும்வரை, எங்கள் காயங்களுக்கு மருந்திடும்வரை, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கும் வரை. அது ஏது அவர்களை சொன்னால் உங்களுக்கு வலிக்குது? பாதிக்கப்படும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிறீர்கள், அதில் எங்களுக்கும் மாற்றுக்கருத்து இல்லை.  எங்களுக்கென்றால் என்றால் மட்டும் கேள்விமேல் கேள்வி கேட்க்கிறீர்கள்? அது ஏன் உங்களுக்கு எங்கள் மட்டில் அப்பிடி ஒரு வெறுப்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

யாழ்.பண்ணை பகுதியில் இன்று (சனிக்கிழமை) பொலிஸாரினால் சிரமதான பணி முன்னெடுப்பட்டிருந்தது.

அடுத்து, எங்கள் பெண்களுக்கு எப்படி சமைப்பது என்று பயிற்சி எடுக்க போகினமாம். வடக்கில் பயிர் செய்தும்,  மீன் பிடித்தும்  தெற்கிற்கு அனுப்பிய ஒரு காலம் இருந்தது. இப்போ இங்கு வந்து எங்களுக்கு பாடம் எடுக்கும் காலமிது ......  சத்தமாய் சொல்லவும் முடியல, சிலருக்கு வலிக்கும் அவர்கள்  காதில விழுந்தா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு துறைக்கு ஆக்கள் கூடிப்போச்சுத்து.இனி ரோட்டு கூட்ட விடுவினம் போலை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இளைஞர் சுயமாக சிந்திக்க கூடாது, சமூக உணர்வு வரக்கூடாது, அவர்கள் கையில் வாள், போதைப்பொருள். இவர்கள் நீதியை நிலைநாட்டும் பணியில் கை லஞ்சம், வீதி பெருக்குதல், விவசாய பாடம், தலைமைத்துவ பயிற்சி சிரிப்பாய் இருக்கு. அது சரி என்று வாதாட ஒரு ஏமாந்த கூட்டம் விலை போகாதவர்களை பார்த்து கேள்வி கேட்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

யாழ் பொது நூலகம் எரித்தமை
யாழ் பொது சந்தை எரித்தமை
யாழ் பொலிசாரின் சிரமதானப் பணிகளின் ஒன்று
யாழ்ப்பாணிகளே கேளீர் 😅

உங்களின் அதிதீவிர, தமிழ்ப் பயங்கரவாதச் சிந்தனையினை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.  உங்கள் போன்றவர்களாலேயே தமிழர்கள் சிங்களப் பெரும்பான்மையினத்தவருடன் சமரசம் செய்யவோ அல்லது பழையனவற்றை மறந்து சமாதானமாக வாழவோ முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

எதற்கெடுத்தாலும் பழையனவற்றை நினைவுபடுத்த ஒரு பட்டியலினைத் தூக்கிக்கொண்டு வருவதே உங்கள் போன்ற தமிழ் இனவாதிகளின் வாடிக்கையாகிவிட்டது.

1956 தனிச்சிங்களச் சட்டம்
1956 இனவன்முறை
1956 இலிருந்து இன்றுவரை தொடரும் தமிழர் தாயகம் மீதான சிங்கள ஆக்கிரமிப்புக் குடியேற்றங்கள்
1974 தமிழ்மொழி மாநாட்டுப் படுகொலை
1977 இனவன்முறை
1981 யாழ் நூலக எரிப்பு
1983 கறுப்பு யூலை இனப்படுகொலை
1983 இலிருந்து 2009 வரையான கூட்டுப்படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள்
2009 இன் திட்டமிட்ட இனக்கொலை
2009 இன் பின்னரான தமிழர் தாயகம் மீதான சிங்களப் பயங்கரவாதத்தின் (மன்னிக்க வேண்டும், எனது எசமானர்களின் என்று எழுதினாலும் எனது தட்டச்சு சிங்களப் பயங்கரவாதியென்றுதான் எழுதுகிறது) திட்டமிட்ட ஆக்கிரமிப்பும், மத - கலாசாரத் திணிப்பு


என்று நீங்கள் இன்றுவரை தொடர்ச்சியாக எழுதிவருவது எனது எசமானர்களைக் கோபப்படுத்திவருகிறது. இது எனதும், எனது தலைவர்களினதும் சமரச அரசியலினை வெகுவாகப் பாதிக்கிறது.

ஆகவே, இந்த பழையன மீட்டல் எனும் அதிதீவிர தமிழ்த் தேசியவாதக் கனவிலிருந்து நீங்கள் விடுபட்டு என்போன்று சமரச, சிங்கள மேலாதிக்கவாதத்தினையும், அவர்களின் மத கலாசார திணிப்பினை ஏற்றுக்கொண்டும் வாழப்பழக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
🦴

1 hour ago, satan said:

எங்கள் இளைஞர் சுயமாக சிந்திக்க கூடாது, சமூக உணர்வு வரக்கூடாது, அவர்கள் கையில் வாள், போதைப்பொருள். இவர்கள் நீதியை நிலைநாட்டும் பணியில் கை லஞ்சம், வீதி பெருக்குதல், விவசாய பாடம், தலைமைத்துவ பயிற்சி சிரிப்பாய் இருக்கு. அது சரி என்று வாதாட ஒரு ஏமாந்த கூட்டம் விலை போகாதவர்களை பார்த்து கேள்வி கேட்குது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கமச்செய்கையில் சிங்கள ராணுவக் காட்டேறிகளை இனிமேல் ஈடுபடுத்தப்போகிறாராம் அரசாங்க அதிபர். உள்ளூர் விவசாயிகளுடன் சேர்ந்து இனி ராணுவமும் கமச்செய்கையில் ஈடுபடும் என்று நேற்று அவர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். அவர் என்ன செய்யமுடியும், அவரின் அருகில் இருக்கும் மட்டக்களப்பு மாவட்ட ஆக்கிரமிப்புப் பேய்களின் (இப்படிச் சொல்வதால் சமரச நாயகர்களுக்குக் கோபம் வரப்போகிறது) தளபதி அவருக்குச் சொன்னதை அவர் தனது பெயருடன் அறிக்கையாக அறிவிக்கவேண்டிய நிலை. 

ஆனால் ஒன்று, நாம் பழையனவற்றைக் கிளறாதவை எமது எசமானர்கள் கோபப்படப்போவதில்லை. அவர்கள் எடுப்பதை எடுத்துக்கொள்ளட்டும், நாங்கள் அவர்களது அடிமைகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ரஞ்சித் said:

உள்ளூர் விவசாயிகளுடன் சேர்ந்து இனி ராணுவமும் கமச்செய்கையில் ஈடுபடும் என்று நேற்று அவர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

முடிவில் பட்டியில் ஆடுகள் இருக்காது, ஓநாய்கள் கொழுத்து ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும்.             

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, satan said:

முடிவில் பட்டியில் ஆடுகள் இருக்காது, ஓநாய்கள் கொழுத்து ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும்.             

அந்த ஓநாய்களுக்காக அந்த ஆடுகளில் சில இப்போது அழ ஆரம்பித்திருப்பதுதான் வேடிக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரஞ்சித் said:

அந்த ஓநாய்களுக்காக அந்த ஆடுகளில் சில இப்போது அழ ஆரம்பித்திருப்பதுதான் வேடிக்கை.

அவை ஆட்டுத்தோல் போர்த்த ஓநாய்களாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

சாகும் வரைக்கும் இதையே சொல்லிக் கொண்டு இருங்கோ🙂

மன்னிக்கலாம் மறக்கமுடியாது ரதி அவர்களே....எப்படி புலிகளின் செயல்களை  நீங்கள் சாகும் வரை  மறக்க மாட்டியளோ அது போல நானும் மறக்க மாட்டேன் சிங்கள அரசபயங்கரவாதிகளின் வீர தீர செயல்களை 

5 hours ago, MEERA said:

நீங்கள் பிரதேசவாதம் என்று அதையே சொல்லிக் கொண்டு இருப்பதில் என்ன பிரயோசனம்?

குருக்கள் எதையும் சொல்லலாம் பக்தர்கள் "சட்டாப்"😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

உங்களின் அதிதீவிர, தமிழ்ப் பயங்கரவாதச் சிந்தனையினை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.  உங்கள் போன்றவர்களாலேயே தமிழர்கள் சிங்களப் பெரும்பான்மையினத்தவருடன் சமரசம் செய்யவோ அல்லது பழையனவற்றை மறந்து சமாதானமாக வாழவோ முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

எதற்கெடுத்தாலும் பழையனவற்றை நினைவுபடுத்த ஒரு பட்டியலினைத் தூக்கிக்கொண்டு வருவதே உங்கள் போன்ற தமிழ் இனவாதிகளின் வாடிக்கையாகிவிட்டது.

1956 தனிச்சிங்களச் சட்டம்
1956 இனவன்முறை
1956 இலிருந்து இன்றுவரை தொடரும் தமிழர் தாயகம் மீதான சிங்கள ஆக்கிரமிப்புக் குடியேற்றங்கள்
1974 தமிழ்மொழி மாநாட்டுப் படுகொலை
1977 இனவன்முறை
1981 யாழ் நூலக எரிப்பு
1983 கறுப்பு யூலை இனப்படுகொலை
1983 இலிருந்து 2009 வரையான கூட்டுப்படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள்
2009 இன் திட்டமிட்ட இனக்கொலை
2009 இன் பின்னரான தமிழர் தாயகம் மீதான சிங்களப் பயங்கரவாதத்தின் (மன்னிக்க வேண்டும், எனது எசமானர்களின் என்று எழுதினாலும் எனது தட்டச்சு சிங்களப் பயங்கரவாதியென்றுதான் எழுதுகிறது) திட்டமிட்ட ஆக்கிரமிப்பும், மத - கலாசாரத் திணிப்பு


என்று நீங்கள் இன்றுவரை தொடர்ச்சியாக எழுதிவருவது எனது எசமானர்களைக் கோபப்படுத்திவருகிறது. இது எனதும், எனது தலைவர்களினதும் சமரச அரசியலினை வெகுவாகப் பாதிக்கிறது.

ஆகவே, இந்த பழையன மீட்டல் எனும் அதிதீவிர தமிழ்த் தேசியவாதக் கனவிலிருந்து நீங்கள் விடுபட்டு என்போன்று சமரச, சிங்கள மேலாதிக்கவாதத்தினையும், அவர்களின் மத கலாசார திணிப்பினை ஏற்றுக்கொண்டும் வாழப்பழக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
🦴

மட்டக்களப்பு மாவட்டத்தில் கமச்செய்கையில் சிங்கள ராணுவக் காட்டேறிகளை இனிமேல் ஈடுபடுத்தப்போகிறாராம் அரசாங்க அதிபர். உள்ளூர் விவசாயிகளுடன் சேர்ந்து இனி ராணுவமும் கமச்செய்கையில் ஈடுபடும் என்று நேற்று அவர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். அவர் என்ன செய்யமுடியும், அவரின் அருகில் இருக்கும் மட்டக்களப்பு மாவட்ட ஆக்கிரமிப்புப் பேய்களின் (இப்படிச் சொல்வதால் சமரச நாயகர்களுக்குக் கோபம் வரப்போகிறது) தளபதி அவருக்குச் சொன்னதை அவர் தனது பெயருடன் அறிக்கையாக அறிவிக்கவேண்டிய நிலை. 

ஆனால் ஒன்று, நாம் பழையனவற்றைக் கிளறாதவை எமது எசமானர்கள் கோபப்படப்போவதில்லை. அவர்கள் எடுப்பதை எடுத்துக்கொள்ளட்டும், நாங்கள் அவர்களது அடிமைகள்.

மன்னிக்கவும் ரஞ்சித் ..இனிவரும் காலங்களில் நானும் எஜாமானர்களுக்காக குரல் கொடுக்கிறேன் ஆனால் அவர்கள் எனக்கு சம்திங் சம்திங் .....தந்தால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியாவது லஞ்சம் வாங்கி திண்ட இந்த தொப்பையை குறைக்கிறது..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

நீங்கள் பிரதேசவாதம் என்று அதையே சொல்லிக் கொண்டு இருப்பதில் என்ன பிரயோசனம்?

உங்களை போல் உள்ளோர் உண்மையை உணர்ந்தால் நாம் ஏன் திரும்ப ,திரும்ப கதைக்க போறோம் 
 

22 hours ago, satan said:

மன்னிக்கவும்! சாகும்வரை அல்ல எங்கள் பிரச்சனை தீர்க்கும்வரை, எங்கள் காயங்களுக்கு மருந்திடும்வரை, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கும் வரை. அது ஏது அவர்களை சொன்னால் உங்களுக்கு வலிக்குது? பாதிக்கப்படும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிறீர்கள், அதில் எங்களுக்கும் மாற்றுக்கருத்து இல்லை.  எங்களுக்கென்றால் என்றால் மட்டும் கேள்விமேல் கேள்வி கேட்க்கிறீர்கள்? அது ஏன் உங்களுக்கு எங்கள் மட்டில் அப்பிடி ஒரு வெறுப்பு?

பிரச்சனை என்றால் அதை தீர்க்க பாருங்கோ ...அதை விடுத்து சிங்களவன் அடிச்சிட்டான் என்று புலம்பிறது என்றால் ஒரு மூலையில் போய் இருந்து சாகும் வரைக்கும் புலம்பிட்டு இருங்கோ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, putthan said:

மன்னிக்கலாம் மறக்கமுடியாது ரதி அவர்களே....எப்படி புலிகளின் செயல்களை  நீங்கள் சாகும் வரை  மறக்க மாட்டியளோ அது போல நானும் மறக்க மாட்டேன் சிங்கள அரசபயங்கரவாதிகளின் வீர தீர செயல்களை 

குருக்கள் எதையும் சொல்லலாம் பக்தர்கள் "சட்டாப்"😅

நான் மறக்கவும் சொல்லவில்லை . மன்னிக்கவும் சொல்லவில்லை ....அவர்கள் நூலகத்தை எரித்தார்கள் என்றால் எல்லோரும்  சேர்ந்து  இன்னொரு நூலகத்தை அதை விட பெரிதாய் கட்ட முயற்சி செய்யுங்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த தமிழக - அமெரிக்க தமிழ் இளைஞருக்குள்ள துணிவு கூட இஞ்ச பலரிடம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nedukkalapoovan said:

 

இந்த தமிழக - அமெரிக்க தமிழ் இளைஞருக்குள்ள துணிவு கூட இஞ்ச பலரிடம் இல்லை. 

ஏன் நீங்கள் போய் தலைவரின்ட காணிக்கு முன்னால் இருந்து போட்டோ போடுங்கோ பார்ப்பம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரதி said:

நான் மறக்கவும் சொல்லவில்லை . மன்னிக்கவும் சொல்லவில்லை ....அவர்கள் நூலகத்தை எரித்தார்கள் என்றால் எல்லோரும்  சேர்ந்து  இன்னொரு நூலகத்தை அதை விட பெரிதாய் கட்ட முயற்சி செய்யுங்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சிங்களவன் அடிச்சிட்டான் என்று புலம்பிறது என்றால் ஒரு மூலையில் போய் இருந்து சாகும் வரைக்கும் புலம்பிட்டு இருங்கோ

 

எங்களின் வலி, இழப்பு, துயரம் உங்களுக்கு புலம்பலாய்த் தெரியுது. ம்..... உங்களை சொல்லி குற்றமில்லை. எல்லாம் காலம் சிலரை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் இப்படியான கோடரிக்காம்புகள் போதும் என வரலாறு நிரூபித்துள்ளது. வேதனையும் வலியும் தனக்கு தனக்கு வந்தாற்தான் புரியும். கடைசியாக ஒன்று எங்கள் துயரத்தை கேலி செய்யும் நீங்கள்,  எப்போ எங்கிருந்து நாங்கள் புலம்ப வேண்டும் என்று சொல்லித்தரவோ, கட்டளையிடவோ வேண்டியதில்லை. எங்களுக்கு தெரியும் என்னசெய்ய வேண்டுமென்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

உங்களை போல் உள்ளோர் உண்மையை உணர்ந்தால் நாம் ஏன் திரும்ப ,திரும்ப கதைக்க போறோம் 
 

பிரச்சனை என்றால் அதை தீர்க்க பாருங்கோ ...அதை விடுத்து சிங்களவன் அடிச்சிட்டான் என்று புலம்பிறது என்றால் ஒரு மூலையில் போய் இருந்து சாகும் வரைக்கும் புலம்பிட்டு இருங்கோ

 

மேலே நீங்கள் எழுதியது தான், பிரச்சனை என்றால் தீர்க்க பாருங்கள் பிரதேசவாதம் என்ற முகமூடி அணியாது 🤪

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.