Jump to content

மனித மூளையுடன் இணையும் தொழில்நுட்பம் ஆபத்தா? வளர்ச்சியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நமது மூளைகளோடு தொழில்நுட்பத்தை இணைக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. மூளைகளில் கம்யூட்டர் சிப்பை வைத்துக்கொண்ட சூப்பர் மனிதர்களை உருவாக்க ஈலோன் மஸ்க் திட்டமிட்டிருக்கிறார்.

அவரது நிறுவனமான நியூரோலிங்க், தனது மூளையால் மட்டுமே இயக்கி கம்ப்யூட்டர் கேமை விளையாடும் ஒரு குரங்கின் வீடியோவை வெளியிட்டுள்ளது. ஒரு பன்றியின் மூளைக்குள் இருக்கும் சிப்பிலிருந்து வரும் நரம்பியல் செயல்பாடு குறித்த ஒரு வீடியோவையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆனால், இப்போது இயந்திரங்களுடன் பேச நமக்கு சிப் தேவையில்லை. ஒரு ஹெட்செட்டைப் போட்டுக்கொண்டால் நாம் மனதில் நினைப்பதை இயந்திரங்களுக்குக் கொண்டு சேர்த்து அவற்றை இயக்க முடியும். இதை செய்ய மூளையின் ஆற்றலை பயன்படுத்தவேண்டும், கவனத்தைக் குவிக்க வேண்டும்.

இதன் அடிப்படை மிகவும் எளிதானது. ஹெட்செட்டில் உள்ள ஈ.ஈ.ஜி சென்சார்கள், மூளையில் உள்ள மின்சார சிக்னல்களை அளவிடுகின்றன. நீங்கள் கவனிக்கிறீர்களா அமைதியாக இருக்கிறீர்களா என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த குறிப்பிட்ட அளவை எட்டியபிறகு அவை செயலில் இறங்குகின்றன.

 

Brain and Technology 2

பட மூலாதாரம்,GETTY IMAGES

`` முந்தைய எந்த தலைமுறையையும் விட நாம் அதிகமான ஒரு தொழில்நுட்பத்தைக் கையில் வைத்திருக்கிறோம். மனதின் குவியத்தை இது அதிகப்படுத்துகிறது என்பதுதான் இதன் பெரிய பயன் - இது சமூகத்திற்கும் இளைய சமுதாயத்தினருக்கும் உதவியாக இருக்கும்`` என்கிறார் மைண்ட்ப்ளேவின் இயக்குநர் ட்ரே அஸாம்.

கம்ப்யூட்டர் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட பெரும்பாலான ஆராய்ச்சிகள், அதிகமாக நகர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதாக இருக்கின்றன. அவர்களுக்கு இதுபோன்ற இடைமுகங்கள் பெரிய ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தலாம்.

தலையில் மாட்டிக்கொள்ளும் கருவிகளை அடிப்படையாகக் கொண்ட பல நியூரோ டெக் நிறுவனங்கள் சந்தையில் வந்திருக்கின்றன.

 
Elon Musk

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவற்றில் ஒன்றுதான் பிரெஞ்சு ஸ்டார்ட் அப்பான நெக்ஸ்ட்மைட். நமது எண்ணங்களாலேயே கம்ப்யூட்டரைக் கட்டுப்படுத்தும் ஒரு ஹெட்செட்டை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

இது மனிதர்களின் தலையின் பின்பகுதியில் வைக்கப்படும் ஒரு ஈ.ஈ.ஜி.சென்சார். நமது கண்பார்வைக்கான மூளைப்பகுதியில் உள்ள மின் அதிர்வுகளை இது கணக்கிடும். பின்னர் நாம் எதைப் பார்க்கிறோம் என்று கண்டுபிடிக்கும்

எடுத்துக்காட்டாக, கம்யூட்டர் திரையில் சில இடங்களை நாம் பார்த்தால், பார்வை எங்கு குவிகிறது என்பதை சென்சார் கவனிக்கும். எந்த பட்டனை அழுத்தவிரும்புகிறோம் என்பதை கம்ப்யூட்டருக்கு அது சொல்லிவிடும்.

ஆனால் இதில் மிக எளிமையான செயல்பாடு மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு பின் நம்பரை அழுத்த வேண்டியிருந்தால், பட்டன்களைப் பார்ப்பதன் மூலமே நாம் அந்த எண்ணை உள்ளிடலாம்.

 
Brain and Technology 1

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இதை மெய்நிகர் தொழில்நுட்பத்துடன் பயன்படுத்தினால் எண்ணற்ற பயன்கள் வரும். இன்னும் சில ஆண்டுகளில் ஏ.ஆர் கண்ணாடிகள் வரும். அதனோடு இந்தத் தொழில்நுட்பத்தை இணைத்தால், மெய்நிகர் உலகில் நீங்கள் முழுவதுமாக மூழ்கி அதை அனுபவிக்க முடியும். மூளையை மெய்நிகர் உலகோடு இணைக்க முடியும். மெய்நிகர் உலகில் இருக்கும் எதையும் நீங்கள் உங்கள் எண்ணங்கள் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும்." ட்ரே அஸாம்.

சில அற்புதமான பயன்கள் இருந்தாலும், இந்தத் தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கம் ஒன்றும் இருக்கிறது. மூளையின் செயல்பாடுகளை அளப்பதற்குப் பதிலாக மூளையை கட்டுப்படுத்த முயற்சி செய்தால் அது பிரச்சனையாகும். ஒருவரின் எண்ணங்களைப் படித்து, நிஜம் எது என்ற அவரது புரிதலை மாற்றி அவரை நாம் கட்டுப்படுத்தலாம் என்பது ஆபத்தானது.

``மூளை சார்ந்த தனியுரிமை என்பது என் மிகப்பெரிய கவலை. இதை விசாரணையின்போது பயன்படுத்தலாம். ஒரு கேள்வி கேட்கும்போது மூளைக்குள் விரியும் காட்சியை வைத்தே அவர் சிந்திப்பதை நாம் கண்டுபிடிக்கலாம். தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்துக்குள் ஆர்வமாக வருகின்றன. ஆனால் நமது மனம் சார்ந்த தரவுகளும் அவர்களுக்குள் போய்விடும். அதை நாம் பாதுகாக்க வேண்டும்." என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் , நியூரோடெக்னாலஜி மைய இயக்குநர் ரஃபேல் யூஸ்டே.

மேலும் அவர்,`` இதுபோன்ற தொழில்நுட்பங்கள் அதீத சக்தி வாய்ந்தவை. நம்மை மனிதர்களாக எது வைத்திருக்கிறதோ அதை, அந்த மூளையை இவை குறிவைக்கின்றன. மனித இனத்தில் முதல்முறையாக மூளைக்குள் செல்லக்கூடிய ஒரு தொழில்நுட்பம் வந்திருக்கிறது`` என்கிறார்.

இது கொஞ்சம் அதீதமாகத் தெரியலாம். ஆனால் நமது மூளைத்திறனை, அறிவை அதிகரிக்கும் ஒரு தொழில்நுட்பத்தின் உருவாக்கத்தில் ஏற்கனவே ஈலோன் மஸ்க் ஈடுபட்டிருக்கிறார்.

எதிர்காலத்தில் நம் மூளைகள் கட்டுப்படுத்தப்படலாம் என்ற ஆபத்து இருந்தாலும் இப்போதைக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஈலோன் மஸ்க்: மனித மூளையுடன் இணையும் தொழில்நுட்பம் ஆபத்தா? வளர்ச்சியா? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்மை தீமை இரண்டும் இருக்கு, தீமை வெல்லும் போது மனிதம் அழியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.