Jump to content

பொங்கலுக்கு முதல் நாள் நடந்த ஒரு பொங்கல்! - நிலாந்தன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

பொங்கலுக்கு முதல் நாள் நடந்த ஒரு பொங்கல்! நிலாந்தன்.

 

spacer.png

கடந்த தை பொங்கல் தினத்திற்கு முதல் நாள் யாழ்ப்பாணம் முத்தவெளியில் ஒரு வித்தியாசமான பொங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. முத்த வெளியில் அமைந்திருக்கும் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்கான நினைவுத் தூபிகளுக்கு அருகில் ஒரு சிறைக் கூண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டு அதற்குள் வைத்து ஒரு பொங்கல் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வுக்கு தலைப்பு “விடுதலைப் பொங்கல்” என்பதாகும்.

அந்நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு தொகுதியினர் சிறைக்கைதிகளின் உடைகளோடு காணப்பட்டார்கள். அதை ஒழுங்கு படுத்தியது அரசியல் கைதிகளின் விடுதலைக்கான “குரலற்றவர்களின் குரல்” என்ற அமைப்பாகும். இந்த அமைப்பு அதற்கு முதல்நாள் யாழ் ஊடக அமையத்தில் ஒரு ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தது. தாம் இவ்வாறு ஒரு பொங்கலை வித்தியாசமாக நடத்த இருப்பதனை அறிவித்தது. அவ்வமைப்பு தமது கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள், பொதுமக்களின் ஆதரவை கேட்டிருந்தது. எனினும் முத்த வெளியில் அந்த நிகழ்வில் மிகச்சில அரசியல்வாதிகளே பங்குபற்றியிருந்தார்கள். யாழ் நகரபிதா மணிவண்ணன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன், சிவாஜிலிங்கம், பார்த்திபன் உள்ளிட்ட மிகச்சில அரசியல்வாதிகளே அங்கே வந்திருந்தார்கள். தவிர சமயப் பெரியார்களும் வந்திருந்தார்கள். மிகக் கைக்கடக்கமான நபர்களோடு அந்த வித்தியாசமான பொங்கல் செய்யப்பட்டது. அது ஒரு கவன ஈர்ப்பு முயற்சி.

அரசியலில் கவனயீர்ப்பு போராட்டம் என்பது பெருமளவுக்கு ஒரு சடங்காக மாறிவிட்டது. நகர மையத்தில் வீதியின் இரு மருங்கிலும் சுலோக அட்டைகளை தாங்கியபடி நிற்பதே நமது அரசியல்வாதிகளுக்கு கவன ஈர்ப்பாக தெரிகிறது. அது அடுத்த நாள் பத்திரிகைகளில் செய்தியாக வருவதற்கும் அப்பால் பெருமளவுக்கு பொது சனங்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. எனவே அரசியல் கைதிகளுக்கான போராட்டத்தை வித்தியாசமான விதத்தில், இதற்கு முன் யாரும் செய்திராத விதத்தில் ஒழுங்குபடுத்தினால் அது பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமையும் என்று சிந்திக்கப்பட்டதன் விளைவே மேற்படி விடுதலைப் பொங்கல் ஆகும். எனினும் வழமையான கவனயீர்ப்பு போராட்டங்களைப் போலவே அந்நிகழ்வு அடுத்தநாள் ஊடகங்களில் செய்திகளாக வந்ததோடு சரி.

அதேசமயம் அதே நாளில் அதாவது பொங்கலுக்கு முதல்நாள் யாழ்ப்பாணத்தின் சிறிய மற்றும் பெரிய நகரங்கள் தோறும் சனங்கள் நிரம்பி வழிந்தார்கள். மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலவும் ஒரு நாடா இது என்று கேட்குமளவுக்கு ஜனங்கள் நகரங்களில் பிதுங்கி வழிந்தார்கள். சனங்களுக்கு கொண்டாட்டங்கள் தேவையாக இருக்கின்றன. அவர்கள் கொண்டாடும் மனநிலையோடு இருக்கிறார்கள். அது தவறல்ல. மக்கள் கொண்டாடட்டும். சந்தோஷமாக இருக்கட்டும். அதேநேரம் தங்களுக்காக போராட புறப்பட்டு சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளுக்காகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் போராடும் தரப்புக்களோடு மக்கள் இணைக்கப்பட வேண்டும். அவ்வாறு அரசியல் கைதிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குமான போராட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்கு வித்தியாசமான கவனயீர்ப்பு போராட்டங்கள் தேவை. வழமையான, பாரம்பரியமான கவனயீர்ப்பு போராட்டங்கள் இப்போதுள்ள அவசர உலகில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக இல்லை. இவ்வாறானதொரு பின்னணியில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டியிருக்கிறது. அதனால்தான் அரசியல் கைதிகளுக்காக போராடும் அமைப்பு அப்படி ஒரு பொங்கலை செய்தது.

இவ்வாறு வித்தியாசமாக கவனத்தை ஈர்க்கும் விதத்தில் ஒரு பொங்கலை ஒழுங்குபடுத்துமாறு அவர்களுக்கு கடந்த ஆண்டிலேயே ஆலோசனை கூறப்பட்டதாகத் தெரிகிறது. அரசியல் கைதிகளுக்காக கைதிகளும் விடுவிக்கப்பட்ட கைதிகளும் அவர்களின் உறவினர்களும் மட்டும் போராடும் ஒரு துர்ப்பாக்கியச் சூழலில் கைதிகளுக்கான போராட்டத்தை எப்படி மக்கள் மயப்படுத்துவது என்று சிந்தித்த செயற்பாட்டாளர்கள் சிலர் மேற்கண்ட ஆலோசனைகளை வழங்கியதாக தெரியவருகிறது. அவ்வாறு ஆலோசனை வழங்கிய செயற்பாட்டாளர்கள் வேறு சில ஆலோசனைகளையும் கூறியதாக தெரிய வருகிறது.

அவற்றின்படி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருநாள் கைதிகளின் உடைகளோடும் சிறையில் கைதிகள் பயன்படுத்தும் சாப்பாட்டு கோப்பைகளோடும் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை செய்தால் என்ன என்று கேட்கப்பட்டது. அதோடு நீதிமன்றங்களில் அரசியல் செயற்பாட்டாளர்களாக காணப்படும் சட்டவாளர்களும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவான சட்டவாளர்களும் ஒருநாள் கைதிகளின் உடையோடு நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை செய்யலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இவ்வாறான வித்தியாசமான போராட்டங்களின் மூலம் தமிழ் மக்களின் கவனத்தையும் ஈர்க்கலாம், வெளி உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கலாம் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளங்களின் காலத்தில் பொது மக்களின் கவனத்தையும் வெளி நாடுகளின் கவனத்தையும் ஈர்ப்பதற்கு புதிதாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதிகம் கற்பனைத்திறன் தேவையாக இருக்கிறது. அதிர்ச்சியூட்டும் விதத்தில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு உலகம் முழுவதும் உதாரணங்கள் உண்டு. இந்தியாவின் வடபகுதி தலைநகரங்களில் ஒன்று என்று நினைக்கிறேன், சரியாக ஞாபகம் இல்லை. நகரத்தின் பிரதான சாலைகளில் காணப்பட்ட பள்ளங்களை அடைக்குமாறு நகரசபை நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக வற்புறுத்தி சலிப்படைந்த ஒரு செயற்பாட்டாளர், நகர சபையின் கவனத்தை ஈர்ப்பதற்கு வித்தியாசமாக சிந்தித்தார். ஒரு மழைநாளில் சாலையின் பள்ளங்களில் தேங்கி நின்ற நீரில் மினுங்கும் வர்ண கலவைகளை கலந்து விட்டார். அதன்பின் அங்கே கடல்வாழ் உயிர்களின் பொம்மைகளை வைத்தார். இது ஊடகங்களின் கவனத்தையும் சம்பந்தப்பட்ட எல்லா தரப்புகளின் கவனத்தையும் உடனடியாக கவர்ந்தது. அடுத்த சில நாட்களுக்குள் வீதிகள் செப்பனிடப்பட்டன.

இதைப்போலவே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பெண்ணிய செயற்பாட்டாளர்கள், பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான பெண்களின் ஆடைகளை பகிரங்கமாக கொடிகளில் தொங்கவிட்டு ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை செய்தார்கள்.

இலங்கைத் தீவிலும் பெருந்தொற்று நோய் பரவத் தொடங்கியதும் இலங்கை அரசாங்கம் முஸ்லீம்களின் ஜனாசா அடக்க உரிமையை மறுத்தது. முஸ்லிம்களுக்கு ஆதரவாக கபன் துணிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அது ஒரு வித்தியாசமான படைப்பு திறன்மிக்க போராட்டம். அது அதன் அடுத்த கட்டத்துக்கு வளரவில்லை. அந்த வெற்றிடம் காரணமாகத்தான் முஸ்லிம்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டத்தில் தமது பங்களிப்பைச் செலுத்தினார்கள்.

மேற்கண்ட அனைத்து உதாரணங்களையும் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. தகவல் யுகத்தில் பொது சனங்களின் கவனத்தையும் வெளிநாடுகளின் கவனத்தையும் ஈர்ப்பதற்கு கவனயீர்ப்பு போராட்டங்கள் வித்தியாசமாகவும் படைப்புத் திறனோடும் வடிவமைக்கப்பட வேண்டியிருக்கிறது. அவ்வாறு சிந்தித்து வடிவமைக்கப்பட்டதே விடுதலைப் பொங்கல் நிகழ்வு ஆகும். ஆனால் அது எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு தமிழ் மக்களின் கவனத்தையும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்க்கவில்லை. வழமையாக கவனயீர்ப்புப் போராட்டங்களிலும் ஏனைய போராட்டங்களிலும் பங்கு பற்றும் ஒரு தொகுதி அரசியல்வாதிகள் கூட அதில் காணப்படவில்லை.

அதை ஒழுங்கு படுத்திய குரலற்றவர்களின் குரல் அமைப்பிடம் போதிய வளங்களும் இல்லை, ஆட்களும் இல்லை. விடுதலைப் பொங்கலுக்கு முதல் நாள் அவர்கள் ஊடகச் சந்திப்புக்காக யாழ் ஊடக அமையத்திற்கு வந்திருந்த வேலை அங்கே ஒரு தமிழ் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினரை கண்டிருக்கிறார்கள். அவரோடு தமது கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக உரையாட முற்பட்ட வேளை அவர் தங்களை பொருட்படுத்தவில்லை என்றும் மனம் நொந்து சொன்னார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட சில அரசியல் கைதிகள் சம்பந்தரை சந்திக்கச் சென்றபோது அவரும் அப்படித்தான் நடந்துகொண்டார் என்பதை நினைவூட்டினார்கள். அச்சந்திப்பின்போது சம்பந்தர் தன்னை சந்திக்க வந்த முன்னாள் கைதிகளை முகம் கொடுத்து பார்க்காமல் ஒரு பேப்பரை வாசித்தபடி அவர்களோடு உரையாடினார். “திறப்பு என்னிடம் இல்லை” என்றும் கூறினார்.

ஆனால் இதுபோன்ற போராட்டங்களை புதிதாக சிந்திக்க வேண்டியதும் வழிநடத்த வேண்டியதும் தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ் கட்சிகளின் பொறுப்பு. கைதிகளுக்காக கைதிகளும் விடுவிக்கப்பட்ட கைதிகளும்தான் போராடுவது என்பது தமிழ் அரசியலின் கையறு நிலையைக் காட்டுகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்தான் போராட வேண்டியிருப்பது என்பது தமிழ் அரசியலின் கையறு நிலையை காட்டுகிறது.

இந்த லட்சணத்தில் போராடுவோம் போராடுவோம் என்று தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருப்பது யார் என்று பார்த்தால், பாதிக்கப்பட்ட மக்கள்தான். அவர்களுடன் நிற்பது யார் என்று பார்த்தால் மிகச் சில அரசியல்வாதிகள்தான்.

 

https://athavannews.com/2022/1263234

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்த லட்சணத்தில் போராடுவோம் போராடுவோம் என்று தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருப்பது யார் என்று பார்த்தால், பாதிக்கப்பட்ட மக்கள்தான். அவர்களுடன் நிற்பது யார் என்று பார்த்தால் மிகச் சில அரசியல்வாதிகள்தான்.

பொதுமக்கள் போராடத் தாமே விடுவித்தோமென்று ஒரு சில அரசியல் வியாபாரிகள் கூவிவிற்று வாக்குப்பெற்றுத் தம்மை வளரத்துக் கொள்கின்றார்கள். தமிழரின் தலைவிதி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.