Jump to content

டோங்கா எரிமலைச் சாம்பல் பூமியைக் குளிர்விக்குமா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டோங்கா எரிமலைச் சாம்பல் பூமியைக் குளிர்விக்குமா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

வரைபடம்

கடந்த சனிக்கிழமை டோங்காவில் எரிமலை வெடித்தது எந்த அளவுக்கு ஆற்றல் மிக்கதாகவும் அபாயகரமானதாகவும் இருந்தது என்பதற்கு அடையாளமாக அதன் ப்ளூம் எனப்படும் சாம்பல் மேகம் அடைந்த உயரம் கருதப்படுகிறது.

இது பூமியைக் குளிர்விக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

வானிலை செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்யும் பிரிட்டன் விஞ்ஞானிகள் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 55 கிமீ உயரம் வரை இந்தச் சாம்பல் மேகம் சென்றிருக்கலாம் எனக் கணக்கிடுகின்றனர்.

இது வளிமண்டலத்தில் ஸ்ட்ரேட்டோஸ்பியர் மற்றும் மீசோஸ்பியர் அடுக்குகளின் எல்லைப் பகுதியாகும்.

"இது எரிமலை சாம்பல் மேகம் எட்ட முடியாத உயரம்" என்று கூறுகிறார் ஆர்ஏஎல் ஸ்பேஸ் அமைப்பைச் சைமன் ப்ரவுட்.

20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் மிகவும் சக்திவாய்ந்த எரிமலை வெடிப்பு 1991 இல் பிலிப்பின்ஸின் பினாட்டுபோவில் நடந்தது. அதன் சாம்பல் மேகம் ஏறக்குறைய 40 கிமீ வரை எழும்பியதாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், இன்றைக்கும் இருப்பதைப் போன்ற மிகவும் துல்லியமான செயற்கைக்கோள்கள் அந்தக் காலத்தில் இருந்திருந்தால், அது அதிக உயரம் வரைச் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் ப்ரவுட்.

டோங்காவின் ஹுங்கா டோங்கா ஹுங்கா ஹாாப்பாய் எரிமலையில் இருந்து எழுந்த சாம்பல் மேகத்தின் உயரத்தைக் கண்டறிய ஹிமாவாரி-8 (ஜப்பான்) GOES-17 (USA), GK2A (கொரியா) ஆகிய மூன்று வானிலை செயற்கைக்கோள்களின் தரவு பயன்படுத்தப்பட்டது.

"அவை அனைத்தும் வெவ்வேறு தீர்க்கரேகைகளில் இருப்பதால் அவற்றின் தரவுகள் மூலம் சாம்பல் மேக உயரத்தைக் கண்டறியலாம். புயல் மேகங்களைக் கண்டறிவதில் இது நம்பகமான தொழில்நுட்பமாகும்" என்று பிபிசியிடம் தெரிவித்தார் பிரவுட்.

மேகத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே 55 கி.மீ. வரை சென்றதாகத் தெரிகிறது. அதுவும் சாம்பலைவிட நீராவியாக இருக்க வாய்ப்புண்டு. எரிமலை வெடிப்பின்போது உருவான சாம்பல் மேகத்தின் முக்கிய குடைப் பகுதி 35 கிலோ மீட்டர் வரை மட்டுமே உயர்ந்தது.

விண்வெளியின் வளிமண்டல எல்லையாகக் கருதப்படும் கார்மான் கோடு 100 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது.

 

விண்

பட மூலாதாரம்,NASA

 

படக்குறிப்பு,

டோங்கா எரிமலைச் சாம்பல் விண்ணில் இருந்து தெரிந்தது

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது வீசப்பட்ட அணுகுண்டைப் போல டோங்கா எரிமலை வெடிப்பு 500 மடங்கு சக்தி வாய்ந்ததாக மதிப்பிடப்படுகிறது. இதில் வெளிப்பட்ட ஆற்றல் 10 மெகா டன் டிஎன்டியின் வெடிப்புக்குச் சமம் என அமெரிக்க விண்வெளி விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

நீருக்கடியில் இருக்கும் ஓர் எரிமலையில் பெரிய வெடிப்பு ஏற்பட்டதற்கான சில காரணங்களை நியூசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஷேன் க்ரோனின் குறிப்பிடுகிறார்.

எரிமலையின் வாயு நிறைந்த மாக்மா வெளிப்படும்போது, அது கடல் நீருடன் தொடர்பு கொண்டது வெறும் 150 முதல் 250 மீட்டர்தான் என்பது அவர் கூறும் முக்கியமான காரணி. அதாவது குறைந்த ஆழத்திலேயே எரிமலை இருக்கிறது என்பதுதான் காரணம்.

"மாக்மா வெளியே வந்தபோது, அதன் மீது அதிக அழுத்தம் இல்லை" என்று அவர் பிபிசியின் சயின்ஸ் இன் ஆக்சன் நிகழ்ச்சியில் கூறினார்.

 

டோங்கா

பட மூலாதாரம்,TONGA GEOLOGICAL SERVICES

Volcanic Explosivity Index (VEI) எனப்படும் எரிமலை வெடிப்புக் குறியீட்டில் டோங்கா எரிமலை வெடிப்பு ஐந்துக்கும் அதிகமாக அளவிடப்பட்டிருக்கலாம் என்று ஆரம்ப தரவுகள் கூறுகின்றன. ஆறு என்ற அளவில் வகைப்படுத்தப்பட்ட பினாட்டுபோவிற்குப் பிறகு இதுவே சக்திவாய்ந்ததாக இருக்கும்.

பிலிப்பைன்ஸ் எரிமலை வெடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு பூமியின் சராசரி வெப்பநிலையை அரை டிகிரி குறைத்தது. 15 மில்லியன் டன் கந்தக டை ஆக்சைடை வளிமண்டலத்தில் பீய்ச்சி அடித்ததன் மூலம் இதைச் செய்தது. கந்தக டை ஆக்சைடு தண்ணீருடன் இணைந்து சிறிய நீர்த்துளிகளை உருவாக்குகின்றன. இவை பூமியை நோக்கி வரும் சூரிய கதிர்வீச்சை திருப்பி அனுப்புகின்றன.

இருப்பினும் டோங்கா எரிமலை அந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தாது என பிரிட்டன் வானிலை அலுவலகத்தின் காலநிலை பாதிப்புகள் துறையின் தலைவர் ரிச்சர்ட் பெட்ஸ் கூறினார்.

"பினாட்டுபோ எரிமலை கணிசமான அளவு விளைவைக் கொண்டிருந்தது. ஆனால் டோங்கா எரிமலையின் உமிழ்வுகள் 5 லட்சம் டன்களுக்கும் குறைவான கந்தக டை ஆக்சைடையே கொண்டிருந்தன. இது பினாட்டுபோ எரிமலையைக் காட்டிலும் 30 மடங்கு குறைவு. எனவே அது குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை" என்று அவர் விவரித்தார்.

https://www.bbc.com/tamil/science-60101539

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இது பூமியைக் குளிர்விக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

 

2 hours ago, ஏராளன் said:

எனவே அது குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை" என்று அவர் விவரித்தார்.

தமிழ் பிபிசி என்ன சொல்லவருது ?

வேறு செய்திகளில் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு டெல்லிக்கு பந்தம் பிடிக்கும் செய்திகளை அள்ளிவிடுவினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

 

தமிழ் பிபிசி என்ன சொல்லவருது ?

வேறு செய்திகளில் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு டெல்லிக்கு பந்தம் பிடிக்கும் செய்திகளை அள்ளிவிடுவினம் .


 மொழிபெயர்ப்பு செயலிகளால் மொழிமாற்றுவதால் கருத்து மாற்றங்கள் வருகின்றன என்று நினைக்கின்றேன்.பல்வேறு செய்திகளில் தெரிகின்றன. அதேவேளை இந்த பீபீசீ இந்தியன்ர வால்மட்டுமல்லாமல் சிங்களவனுக்கும் வால்பிடிப்பதாகவே தோன்றுகிறது. . இல்லையென்றால்  புலிஆதரவாளர்களால் மாவீரர்தினம் அனுஸ்டிப்பு என்று செய்திபோடுமா? பீபீசியையும் எமது மக்கள் ஒதுக்கிவிடுவதே நன்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌வ‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.