Jump to content

இலங்கை இந்தியாவிற்கு ஒரு மூலோபாய அச்சுறுத்தல் இல்லை –நாங்கள் சீனா பக்கம் சாய்கின்றோம் என்பது உண்மையில்லை


Recommended Posts

இலங்கை இந்தியாவிற்கு ஒரு மூலோபாய அச்சுறுத்தல் இல்லை –நாங்கள் சீனா பக்கம் சாய்கின்றோம் என்பது உண்மையில்லை – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

 

 

 
இந்தியாவிற்கு மூலோபாய பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்குவதற்கு நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயனத் கொலம்பகே அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிப்பதற்காக இலங்கை சீனாவின் பக்கம் சாய்கின்றது என்ற விமர்சங்களை நிராகரித்துள்ளார்.
Adm.Dr_.Jayanath-Colombage-August-2020-3
பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாறு முழுவதும் சமமான உறவுகளை பேணிவந்துள்ளதுடன் நாங்கள் அதன் மூலம் நன்மையடைந்துள்ளோம்.
நாங்கள் முக்கியமான தருணங்களில் சில துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளோம்- உதாரணத்திற்கு சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை மீள ஏற்படுத்துதல்- இரப்பர் அரிசி உடன்படிக்கையில் கைசாத்திட்டமை-கச்சதீவை மீளப்பெற்றமை போன்ற நடவடிக்கைகள் இதற்கான உதாரணங்களாகும்.
எங்கள் வெளிவிவகார அமைச்சர் தனது நிபுணத்துவத்தை மேற்கு கிழக்கு மற்றும் ஏனைய பகுதிகளுடனான உறவுகளை பேணுவதில் மிகச்சிறந்த சிறந்த விதத்தில் செயற்பட்டுள்ளார்.
நடுநிலைமையை பேணுவதும் அதிகார போட்டியில் சிக்காமலிருப்பதுமே எங்கள் வெளிவிவகார கொள்கையின் முக்கிய உத்தரவு.
நாங்கள் எந்த பக்கமும் சாய்வதில்லை-நாங்கள் அனைவரினதும் நண்பர்கள் அனைத்து சிறந்த விடயங்களிற்கும் நாங்கள் ஆதரவு வழங்குகின்றோம்.
ஏனைய நாடுகளிற்கு இலங்கை தொடர்பான புவிசார் அரசியல் நோக்கங்கள் உள்ளன.
இந்தியப்பெருங்கடலின் இயக்கவியலை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும்,யாரையும்; பகைத்துக்கொள்ள கூடாது.
எங்கள் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான எங்கள் முக்கிய கவனத்திற்குரிய விடயம் அனைவருடனும் ஈடுபாடுகளை கொண்டிருத்தலாகும்.
ஏற்கனவே ஐரோப்;பிய ஒன்றிய சீன ஹங்கேரி பிரிட்டன் அமைச்சர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவின் அளவையும் முக்கியத்துவத்தையும் கருத்தில்கொள்ளும் போது அந்த நாட்டிற்கு மூலோபாய பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்குவதற்கு நாங்கள் விரும்பவில்லை.
இலங்கையை இந்தியாவிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கான தளமாக பயன்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பது குறித்து ஜனாரிபதி மிகவும் உறுதியாக உள்ளார்.
இது எங்கள் அயல் – எங்கள் ஸ்திரமானதாக இல்லையென்றால் நாங்களும் பிரச்சினைகளை எதிர்கொள்ளநேரிடும்.
கேள்வி- அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிப்பதற்காக இலங்கை சீனா பக்கம் சாய்கின்றது என தெரிவிக்கின்ற ஆய்வாளர்கள் சீனாவை நம்பியிருப்பதை விமர்சிக்கின்றார்களே?
பதில்-நாங்கள் சீனாவுடன் மாத்திரம் ஈடுபாட்டை கொண்டிருக்கவில்லை,எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியா எங்களிற்கு இன்னுமொரு500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.பங்களாதேஸ் கூட நாணயபரிமாற்றத்திற்கு இணங்கியுள்ளது.நாங்கள் எங்கள் நண்பர்களை ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.
பெருந்தொற்று காரணமாக உருவாகியுள்ள முன்னொருபோதும இல்லாத நிலைமை இது .
வருடத்திற்கு 4.5பில்லியன் டொலர்களை பெற்றுத்தந்த -மூன்று பி;ல்லியன் மக்களிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்கிய சுற்றுலாத்துறை முடங்கிய நிலையில் காணப்படுகின்றது.
இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு இது பெரும் பாதிப்பாகும். ஆனால் சுற்றுலாத்துறை தற்போது மீண்டும் உயிர்பெறதொடங்கியுள்ளது.
ஆனால் நாங்கள் எங்கள் நண்பர்களிடம் தங்கியிருக்கும் நிலையை தவிர்த்துக்கொள்ளவேண்டும் -எங்கள் ஏற்றுமதி வருமானங்கள் மீள கிடைக்க தொடங்கியுள்ளமை நல்ல அறிகுறியாகும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கின்ற வெளிநாட்டு வருமானம் மெல்ல மெல்ல அதிகரிக்கின்றது.நாங்கள் எங்கள் கையிருப்பை கட்டியெழுப்பவேண்டும்.
கடந்த 73 வருடங்களாக எங்கள் பொருளாதார கொள்கையில் ஏதோ தவறு இடம்பெற்றிருக்கின்றது.பல பிரச்சினைகள் ஒன்றுசேர்ந்து தற்போதைய நெருக்கடியை உருவாக்கியுள்ளன.
நாங்கள் உற்பத்திகளை அதிகரிக்கவேண்டும்,வர்த்தகங்களை கவரவேண்டும் – அதிகாரிகள் மட்ட தலையீடுகளை நீக்கவேண்டும்.
கொழும்பு துறைமுகநகரம் சிறந்த உதாரணம்,வர்த்தக நடவடிக்கைகளை இலகுவாக முன்னெடுப்பதற்கு அதிகாரிகள் மட்ட தலையீடுகளை தவிர்ப்பதற்கு அங்கு விசேட சட்டங்கள் உள்ளன.
ஆகவே நாங்கள் சீனா பக்கம் சாய்கின்றோம் என்பதில் உண்மையில்லை – எங்களிற்கு அதிகளவு தெரிவுகள் இல்லை.
சர்வதேச சமூகம் எங்களிற்கு திட்டங்கள் முதலீடுகள் தொடர்பில் அதிகளவு தெரிவுகளை வழங்கவேண்டும் .

https://thinakkural.lk/article/162189

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

கடந்த 73 வருடங்களாக எங்கள் பொருளாதார கொள்கையில் ஏதோ தவறு இடம்பெற்றிருக்கின்றது.பல பிரச்சினைகள் ஒன்றுசேர்ந்து தற்போதைய நெருக்கடியை உருவாக்கியுள்ளன.

பொருளாதார கொள்கை அல்ல; இனவாத கொள்கை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை நம்புவதற்கென்றே இந்தியாவில் ஒரு கூட்டமிருக்கிறது. 

அண்மையில் இலங்கையில் இருக்கும் RAW முகவருடனான கலந்துரையாடல் ஒன்றில் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக பிரஸ்தாபித்த போது அவர் கூறினாராம் "அம்பாந்தோட்டை எங்கள் குண்டுவீச்செல்லைக்குள்தான் இருக்கிறது" என்று. 

அம்பாந்தோட்டை இந்தியாவின் குண்டு வீச்செல்லைக்குள் இர்ருக்கிறதென்பது சீனாவுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம்தான. 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

கடந்த 73 வருடங்களாக எங்கள் பொருளாதார கொள்கையில் ஏதோ தவறு இடம்பெற்றிருக்கின்றது.பல பிரச்சினைகள் ஒன்றுசேர்ந்து தற்போதைய நெருக்கடியை உருவாக்கியுள்ளன.

எங்கன்ர தலைவர் ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ? அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுள்ளனர். வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.