Jump to content

கட்சியை அபகரிக்கச் சதி; ஆனந்தசங்கரி


Recommended Posts

கட்சியை அபகரிக்கச் சதி; ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணியினை அபகரிக்க ஒரு குழுவினர் தந்திரமாக செயற்பட்டுவருவதாகவும் அவர்களை கட்சியின் ஆதரவாளர்களும் மக்களும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழர் விடுதலைக் கூட்டணி பொதுக்குழு மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கு அன்பான வேண்டுகோள்.
Anandasangaree.jpg
தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பாரம்பரியமிக்க கட்சி. இதனை பொய்களை வாரி வழங்கும் ஒரு குழுவினர் தந்திரமாக அபகரிக்கத் திட்டமிட்டு என்மேல் அவதூறு சொல்லி என்னை அவமானப்படுத்தி கட்சி ஆவணங்களையும், அலுவலகத்தையும் அபகரிக்கத்திட்டமிட்டதோடல்லாமல், 24.01.2022 அன்று நடவடிக்கைக் குழுவைக் கூட்ட இருப்பதாகவும் 29.01.2022 அன்று நடைபெறவிருக்கும் கூட்டத்தில் நியமனங்களை வழங்க இருப்பதாகவும் அறிகிறேன். இதில் கலந்துகொள்வது சட்டவிரோதமான செயலாகும். ஆதலால் தயவு செய்து சட்டவிரோதமான இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாதீர்கள்.
இந்த மோசடிக்கார்களுக்கெதிராக எனது சட்டத்தரணி மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றும் இந்த மோசடிக்காரர்களை மக்கள் நம்ம வேண்டாம் என்றும், அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைக்க வேண்டாம் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அனைத்து ஆதரவாளர்களையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/162213

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தக் கட்சியை பாதுகாக்கக் கூட வக்கில.. இதுக்கு யாருக்கு காட்டிக்கொடுப்புக் கடிதம் எழுதலாமுன்னு யோசியப்பு யோசி. அதுதானே உங்க அரசியல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியை காப்பாற்ற ஒரே வழி.. நல்ல அடிமாட்டு விலைக்கு எண்டாலும் யாருக்காவது பேய்க்காட்டி விற்றுவிடலாம்…

Link to comment
Share on other sites

தாத்தா உடும்புக்கறி உண்டு கட்சியை உடும்புப் பிடியாகத்தான் பிடித்து வைத்திருந்தார். ஆனாலும் பாவம் எங்கோ சறுக்கிவிட்டது. 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியை வாசிக்க, ஒரே சிரிப்பாய் இருக்கு.
ஆனந்த சங்கரியை… அவரது கட்சியில் உள்ள ஆட்களே அவமானப் படுத்தி விட்டார்களாம்.
மானம் என்று… ஒன்று, இருந்தால்தானே… அவமானப் படுத்த முடியும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பாரம்பரியமிக்க கட்சி.

காக்கைவன்னியன் கட்சி எண்டு சொல்லுறதை விட்டுட்டு பாரம்பரிய கட்சியாமெல்லே..😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

காக்கைவன்னியன் கட்சி எண்டு சொல்லுறதை விட்டுட்டு பாரம்பரிய கட்சியாமெல்லே..😂

எல்லோருமே மறந்து போனார்கள் என்று 
ஞாபகப்படுத்த என்று ஒரு சின்ன குண்டு அவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

அன்று நடவடிக்கைக் குழுவைக் கூட்ட இருப்பதாகவும்

4 பேர் இருப்பினமா.?  இந்த குழு இம்சை தாங்க ஏலவில்லையே நாராயணா .மருந்தடித்து கொல்லுங்கப்பா..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

கட்சியை அபகரிக்கச் சதி; ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணியினை அபகரிக்க ஒரு குழுவினர் தந்திரமாக செயற்பட்டுவருவதாகவும் அவர்களை கட்சியின் ஆதரவாளர்களும் மக்களும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழர் விடுதலைக் கூட்டணி பொதுக்குழு மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கு அன்பான வேண்டுகோள்.
Anandasangaree.jpg
தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பாரம்பரியமிக்க கட்சி. இதனை பொய்களை வாரி வழங்கும் ஒரு குழுவினர் தந்திரமாக அபகரிக்கத் திட்டமிட்டு என்மேல் அவதூறு சொல்லி என்னை அவமானப்படுத்தி கட்சி ஆவணங்களையும், அலுவலகத்தையும் அபகரிக்கத்திட்டமிட்டதோடல்லாமல், 24.01.2022 அன்று நடவடிக்கைக் குழுவைக் கூட்ட இருப்பதாகவும் 29.01.2022 அன்று நடைபெறவிருக்கும் கூட்டத்தில் நியமனங்களை வழங்க இருப்பதாகவும் அறிகிறேன். இதில் கலந்துகொள்வது சட்டவிரோதமான செயலாகும். ஆதலால் தயவு செய்து சட்டவிரோதமான இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாதீர்கள்.
இந்த மோசடிக்கார்களுக்கெதிராக எனது சட்டத்தரணி மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றும் இந்த மோசடிக்காரர்களை மக்கள் நம்ம வேண்டாம் என்றும், அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைக்க வேண்டாம் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அனைத்து ஆதரவாளர்களையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/162213

அடிப்படையே உதைக்குதே..

"அபகரிக்க"  திட்டம்..☹️

உம்மட சொந்த சொத்தென்றால் தான் தானே "அபகரிப்பு" என்பது பொருந்தும்.

இது மக்களின் ஒரு அரசியல் கட்சி ஐயா. இப்பத்தைக்கு நீர் நிர்வாகத்தில் இருக்கிறீர், அவ்வளவே.

எத்தனை வயசாகியும் இது கூட விளங்கவில்லை எண்டால்...

கச்சியேகம்பனே.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம், உவற்றை கட்சி மன்னர்காலத்துப் பொக்கிஷம், அதை அபகரிக்க முழு உலகமே சதிசெய்யுது!!!

இனக்கொலையாளிகளுக்கு வக்காலத்து வாங்கவும் இனக்கொலையை நியாயப்படுத்தவும் கட்சியென்ற பெயரில இந்த *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் நடத்துற கசாப்புக்கடையை அபகரிக்கப்போறாங்கள் எண்டு அலறுது.  கட்டையில போற காலத்தில கனவு கினவு ஏதாச்சும் கண்டுதோ?? உந்தப்பக்கம் கொரோணா எண்டு சொன்னாங்கள், ஒண்டும் நடக்கேல்லைப் போல? உடும்புக்கறி தின்னுறதால எதிர்ப்புச் சக்தி வந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதின சொல்லை நீக்கினது பிரச்சினையில்லை. ஆனால் இவருக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு? 

இனக்கொலை செய்தவர்களுக்கு நற்சான்றிதழ்

புலிகளுக்கெதிராக ஐ நா வுக்கு மடல்

மகிந்தவாலும், சந்திரிக்காவாலும் சிறந்த தமிழ் அரசியல்வாதி (எல்லாம் தமிழருக்கெதிராக தொடர்ச்சியாகக் கத்திக்கொண்டிருப்பதற்கும், சிங்களத்திற்கு ஆதரவாக சான்றிதழ் கொடுத்து வருவதற்கும்)

கருணாவின் அரசியல் ஆலோசகர் (2004 - 2005)

இந்தவகையான இனத்துரோகத்திற்கு இவருக்கு மரியாதை குடுக்கத்தான் வேணும்!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரஞ்சித் said:

நான் எழுதின சொல்லை நீக்கினது பிரச்சினையில்லை. ஆனால் இவருக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு? 

இனக்கொலை செய்தவர்களுக்கு நற்சான்றிதழ்

புலிகளுக்கெதிராக ஐ நா வுக்கு மடல்

மகிந்தவாலும், சந்திரிக்காவாலும் சிறந்த தமிழ் அரசியல்வாதி (எல்லாம் தமிழருக்கெதிராக தொடர்ச்சியாகக் கத்திக்கொண்டிருப்பதற்கும், சிங்களத்திற்கு ஆதரவாக சான்றிதழ் கொடுத்து வருவதற்கும்)

கருணாவின் அரசியல் ஆலோசகர் (2004 - 2005)

இந்தவகையான இனத்துரோகத்திற்கு இவருக்கு மரியாதை குடுக்கத்தான் வேணும்!!!

 

இவருடைய செயலைப் பாராட்டி… சிங்கள அரசு இவருக்கு,
ஒரு கோடி ரூபாய்…. பரிசு கொடுத்தது, நல்ல நினைவில் உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.