Jump to content

ஒரு நாடு இரு இனம்.💡


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Bild

ஒரு நாடு இரு இனம்.

இரு பெண்களும் சிறிலங்கா நாட்டை சேர்ந்தவர்கள்.

ஒருவர் பாடல் பாடி புகழ் பெற்றதற்காக  கோடி ரூபாய்கள் மதிப்புள்ள காணியும் வீடும் வழங்கப்பட்டுள்ளது

மற்றவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று  சிறிலங்கா நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு எதுவுமே வழங்கப்படவில்லை. கோடிகளில் காணியுமில்லை வீடுமில்லை. அரைகுறை ஆடைக்கு பதிலாக தன் நாடு சார்ந்த கொடியை  போர்த்தி தான் சார்ந்த நாட்டுக்கு பெருமை சேர்க்க விழைகின்றார்....இருந்தும்????

இந்த பாரபட்சம் ஏனெனில் பாடல் பாடியவர் சிங்களவர். தங்கப்பதக்கம் பெற்றவர் தமிழர்.

 

இருவரும் பெண்கள்... இருவரும் இலங்கையர்கள்!! ஆனால் ஏன் இந்த வேறுபாடு? -  ஜே.வி.பி நியூஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

ஒரு நாடு இரு இனம்.

இரு பெண்களும் சிறிலங்கா நாட்டை சேர்ந்தவர்கள்.

ஒருவர் பாடல் பாடி புகழ் பெற்றதற்காக  கோடி ரூபாய்கள் மதிப்புள்ள காணியும் வீடும் வழங்கப்பட்டுள்ளது

மற்றவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று  சிறிலங்கா நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு எதுவுமே வழங்கப்படவில்லை. கோடிகளில் காணியுமில்லை வீடுமில்லை. அரைகுறை ஆடைக்கு பதிலாக தன் நாடு சார்ந்த கொடியை  போர்த்தி தான் சார்ந்த நாட்டுக்கு பெருமை சேர்க்க விழைகின்றார்....இருந்தும்????

இந்த பாரபட்சம் ஏனெனில் பாடல் பாடியவர் சிங்களவர். தங்கப்பதக்கம் பெற்றவர் தமிழர்.

 

தங்கள் நேரத்துக்கும் ஆதங்கத்துக்கும் நன்றி. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி குமாரசாமி.

என்ன செய்வது தமிழனாக பிறந்தால் இதுகளையும் கடந்து தான் முன்னேற வேண்டும்.

Link to comment
Share on other sites

தமிழனாக பிறந்ததால் நமக்கு கிடைத்த பரிசு இதுமட்டும்தான்.எல்லா இடங்களிலும் புறக்கணிப்பு😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

 

Bild

ஒரு நாடு இரு இனம்.

இரு பெண்களும் சிறிலங்கா நாட்டை சேர்ந்தவர்கள்.

ஒருவர் பாடல் பாடி புகழ் பெற்றதற்காக  கோடி ரூபாய்கள் மதிப்புள்ள காணியும் வீடும் வழங்கப்பட்டுள்ளது

மற்றவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று  சிறிலங்கா நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு எதுவுமே வழங்கப்படவில்லை. கோடிகளில் காணியுமில்லை வீடுமில்லை. அரைகுறை ஆடைக்கு பதிலாக தன் நாடு சார்ந்த கொடியை  போர்த்தி தான் சார்ந்த நாட்டுக்கு பெருமை சேர்க்க விழைகின்றார்....இருந்தும்????

இந்த பாரபட்சம் ஏனெனில் பாடல் பாடியவர் சிங்களவர். தங்கப்பதக்கம் பெற்றவர் தமிழர்.

 

இருவரும் பெண்கள்... இருவரும் இலங்கையர்கள்!! ஆனால் ஏன் இந்த வேறுபாடு? -  ஜே.வி.பி நியூஸ்

அண்ணா , உணர்ச்சி வசப்பட்டு எழுத முன் என்ன நடக்குது என்று அவதானித்து எழுதுங்கோ ...இவவுக்கு மட்டும் தங்க பதக்கம் கிடைக்கவில்லை . இவவோடு போன சிங்களவர்கள் சிலரும் தங்கம் வென்று இருக்கிறார்கள்....எல்லோருக்கும் விடு கட்டிக் கொடுக்க வேண்டிய தேவை அரசிற்கு இல்லை...அந்த பெண் போட்டுக்கு போக முன் ஸ்பான்சர்சிப் கேக்க ஒருத்தரும் முன் வரவில்லை ...வென்ற பின் அதை வைத்து அரசியல் செய்ய வெட்கமில்லாதமல் ஓடி வருகிறார்கள் ...அவ ஒரு வீடியோ விட்டு இருக்கா . கட்டாயம் பாத்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

ஒருவர் பாடல் பாடி புகழ் பெற்றதற்காக  கோடி ரூபாய்கள் மதிப்புள்ள காணியும் வீடும் வழங்கப்பட்டுள்ளது

பாடல் பாடினதுக்கு கொடுத்தாய்ங்களோ இல்லையோ.. இவாட அப்பா ஒரு தமிழினப் படுகொலையாளி.. போர்க்குற்றவாளி. தமிழனை கொன்றால்.. பதவி.. அதிகாரம்.. பவிசு எல்லாம் கிடைக்கும் தானே சிங்களவர்களுக்கு.

என்ன எங்கட இனத்தில இருக்குது கொஞ்சம்.. சொந்த இனம் செத்து வீழ்ந்தாலும்.. சாகடிச்சவனை வாழ்த்தவும் போற்றவும்.. அவனுக்கு வக்காளத்து வாங்கவும். எப்படி முடியுதோ.. அதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும். 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

அண்ணா , உணர்ச்சி வசப்பட்டு எழுத முன் என்ன நடக்குது என்று அவதானித்து எழுதுங்கோ ...இவவுக்கு மட்டும் தங்க பதக்கம் கிடைக்கவில்லை . இவவோடு போன சிங்களவர்கள் சிலரும் தங்கம் வென்று இருக்கிறார்கள்....எல்லோருக்கும் விடு கட்டிக் கொடுக்க வேண்டிய தேவை அரசிற்கு இல்லை...அந்த பெண் போட்டுக்கு போக முன் ஸ்பான்சர்சிப் கேக்க ஒருத்தரும் முன் வரவில்லை ...வென்ற பின் அதை வைத்து அரசியல் செய்ய வெட்கமில்லாதமல் ஓடி வருகிறார்கள் ...அவ ஒரு வீடியோ விட்டு இருக்கா . கட்டாயம் பாத்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் 
 

இவருக்கு அதிகமாக உதவியது புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றால், புலம்பெயர் தமிழ் தேசிய போராளிகள் பலரால் திட்டித் தீர்க்கப்படும் முத்தையா முரளிதரனின் அமைப்பான foundation of goodness"  அறக்கட்டளை.

இவரது பேட்டியை இணைக்க முடியவில்லை இங்கு. 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

அண்ணா , உணர்ச்சி வசப்பட்டு எழுத முன் என்ன நடக்குது என்று அவதானித்து எழுதுங்கோ ...இவவுக்கு மட்டும் தங்க பதக்கம் கிடைக்கவில்லை . இவவோடு போன சிங்களவர்கள் சிலரும் தங்கம் வென்று இருக்கிறார்கள்....எல்லோருக்கும் விடு கட்டிக் கொடுக்க வேண்டிய தேவை அரசிற்கு இல்லை...அந்த பெண் போட்டுக்கு போக முன் ஸ்பான்சர்சிப் கேக்க ஒருத்தரும் முன் வரவில்லை ...வென்ற பின் அதை வைத்து அரசியல் செய்ய வெட்கமில்லாதமல் ஓடி வருகிறார்கள் ...அவ ஒரு வீடியோ விட்டு இருக்கா . கட்டாயம் பாத்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் 
 

நானும் இவரது பேட்டியைப் பார்த்தபோது யோசித்தேன். இவர் போட்டிக்குச் செல்வதற்காக உதவி கேட்டபோது நாம் செய்யவில்லை. யாருக்கும் இவர் தெரியவில்லை. இதெல்லாம் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டாலும் இவர் பதக்கம் வென்றவுடன் தீவிர தமிழ் தேசிய வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு உரிமை கோருவதையும் மீம்ஸ் போடுவதையும் சக்கிக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nochchi said:

தங்கள் நேரத்துக்கும் ஆதங்கத்துக்கும் நன்றி. 

 

சிங்கள இனவாத அரசுகள்  இதே போல் பல செயல்களை ஈழத்தமிழரின் முகத்தில் அடித்த மாதிரி செய்து கொண்டிருக்கின்றது.....ஊடக வெளிச்சங்கள் தற்காலத்தில் சுலபமாக இருப்பதால் இன்னும் பல விடயங்கள் வெளிவரக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அண்ணா , உணர்ச்சி வசப்பட்டு எழுத முன் என்ன நடக்குது என்று அவதானித்து எழுதுங்கோ ...இவவுக்கு மட்டும் தங்க பதக்கம் கிடைக்கவில்லை . இவவோடு போன சிங்களவர்கள் சிலரும் தங்கம் வென்று இருக்கிறார்கள்....எல்லோருக்கும் விடு கட்டிக் கொடுக்க வேண்டிய தேவை அரசிற்கு இல்லை...அந்த பெண் போட்டுக்கு போக முன் ஸ்பான்சர்சிப் கேக்க ஒருத்தரும் முன் வரவில்லை ...வென்ற பின் அதை வைத்து அரசியல் செய்ய வெட்கமில்லாதமல் ஓடி வருகிறார்கள் ...அவ ஒரு வீடியோ விட்டு இருக்கா . கட்டாயம் பாத்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் 
 

தம்மை அழிக்கும் இனத்திற்கு வக்காளத்து வாங்கியே அழியும் இனமென்றால் அது தமிழினமாகத்தான் இருக்க முடியும்.

அது இலங்கையாக இருந்தாலும் சரி தமிழ்நாடாக இருந்தாலும் சரி.....

நேர்மை நீதி நியாயங்கள் எல்லாம் எங்கடை சனத்திட்ட மிச்சம் மிச்சம் கொட்டிக்கிடக்குது.....அதாலைதான் சொந்தமாய் குந்தியிருக்க ஒரு சொந்த நாடில்லை.....

சேர் பொன் ராமநாதன் வம்சம் இன்னும் அழியேல்லை....:cool:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎-‎01‎-‎2022 at 22:24, குமாரசாமி said:

தம்மை அழிக்கும் இனத்திற்கு வக்காளத்து வாங்கியே அழியும் இனமென்றால் அது தமிழினமாகத்தான் இருக்க முடியும்.

அது இலங்கையாக இருந்தாலும் சரி தமிழ்நாடாக இருந்தாலும் சரி.....

நேர்மை நீதி நியாயங்கள் எல்லாம் எங்கடை சனத்திட்ட மிச்சம் மிச்சம் கொட்டிக்கிடக்குது.....அதாலைதான் சொந்தமாய் குந்தியிருக்க ஒரு சொந்த நாடில்லை.....

சேர் பொன் ராமநாதன் வம்சம் இன்னும் அழியேல்லை....:cool:

சும்மா என்னோடு விதண்டாவாதம் செய்வதை விட்டுட்டு இந்த தம்பிக்கு எல்லோரையும் உதவ சொல்லுங்கோ

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.