Jump to content

உக்ரைனில் உள்ள தமது தூதரக ஊழியர்களை குடும்பங்களுடன் வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனில் உள்ள தமது தூதரக ஊழியர்களை குடும்பங்களுடன் வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவு!

spacer.png

உக்ரைனில் உள்ள தமது தூதரக ஊழியர்களை, குடும்பங்களுடன் வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, அங்கு பணியாற்றி வரும் அத்தியாவசிய பணிகளில் அல்லாத ஊழியர்கள் வெளியேற அமெரிக்க உட்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், உக்ரைனில் உள்ள அமெரிக்க குடிமக்களும் வெளியேற பரிசீலிக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன் மீது குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொள்ள ரஷ்யா திட்டமிட்டுள்ளதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆனால், உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டம் எதுவும் தமக்கு இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றது.

இதனிடையே, உக்ரைனில் அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக சாத்தியம் மிக்க துன்புறுத்தல்கள் நடக்கலாம் என்பதால் உக்ரைன், ரஷ்யாவுக்கு அவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

உக்ரைன் கிழக்கு எல்லைப் பகுதியில், ரஷ்யா சுமார் 1,00,000 படையினரை நிறுத்தியுள்ளது. மேலும், நவீன ரக பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் நிலை நிறுத்தியுள்ளது.

படையினரை நிலைநிறுத்தியது தொடர்பாக இதுவரை ரஷ்யா போதிய விளக்கமளிக்கவில்லை என்றும் கூறியுள்ளது அமெரிக்கா. மேலும், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.

 

 

https://athavannews.com/2022/1263358

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

பெ. பியும் தமது தூதரக ஊழியர்களை மீள அழைத்துள்ளதாம்.

அமெரிக்கா….என்ன செய்தாலும், பெ.பி. அதை பார்த்து…
ஈயடிச்சான் கொப்பி அடிக்கிறது, வழமைதானே… 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா ஈராக்கிலையும் ஆப்கானிஸ்தானிலையும் விட்ட ரீலை உக்ரேனிலையும் விடலாம் எண்டு நினைக்குது போல கிடக்கு.....

இதுக்குள்ளை ஜேர்மனிக்கு தேவையில்லாத வேலை...எல்லாம் இந்த பொம்புளையாலை.... வி

Außenministerin Baerbock: "Auf Deutschland ist Verlass"

சண்டை தொடங்கினால் உக்ரேன் சாம்பல். இது நிச்சயம். ரஷ்யா எல்லா கோபத்தையும் வைச்சு சாத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஆயுதங்களை பரீட்சிக்க களம் தயார்.

Link to comment
Share on other sites

 

10 hours ago, குமாரசாமி said:

எல்லாம் இந்த பொம்புளையாலை.

3 hours ago, ஏராளன் said:

புதிய ஆயுதங்களை பரீட்சிக்க களம் தயார்.

களத்தில் சேருவதற்கான வழிமுறைகள் என்ன..............??????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

 

களத்தில் சேருவதற்கான வழிமுறைகள் என்ன..............??????????????

ஏனய்யா ஏன்?
சனம் உசுர காக்க வழி தேட, நீங்க களத்துக்கு போக ஆசைப்படுறீங்க!

Link to comment
Share on other sites

5 minutes ago, ஏராளன் said:

ஏனய்யா ஏன்?
சனம் உசுர காக்க வழி தேட, நீங்க களத்துக்கு போக ஆசைப்படுறீங்க!

பல உசுருகளைக் காக்கக் களம் சென்று தனது உசுர விட்டவன்தான் மாவீரன் ஐயா.🙏 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.