Jump to content

விரும்பியோ விரும்பாமலோ 13 ஐ ஏற்கவேண்டியது கட்டாயம் : சம்பிக்க ரணவக்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விரும்பியோ விரும்பாமலோ 13 ஐ ஏற்கவேண்டியது கட்டாயம் : சம்பிக்க ரணவக்க

(இராதுரை ஹஷான்)

காலம் காலமாக வாதபிரதிவாதங்களுக்குள்ளாகியுள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டும் ஏனெனில் அத்திருத்தம் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தம் குறித்து அனைத்து இன சமூகத்தினரையும் ஒன்றுப்படுத்தி பொதுக்கொள்கைக்கமைய ஒரு நிலைப்பாட்டிற்கு வந்து இவ்விடயத்திற்கு இறுதி தீர்மானத்தை காண்பது எமது பிரதான நிலைப்பாடாக உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலையோ,பாராளுமன்ற தேர்தலையோ நடத்தும் நிலையில் நாடு தற்போது இல்லை.நாடு சுயாதீனமான முறையில் வங்குரோத்து நிலைமையினை அடைந்து வருகிறது.எதிர்வரும் மாதங்களில் நாடு வங்குரோத்து நிலைமையினை அடைந்தால் மியன்மார்,தென்கொரியா ஆகிய நாடுகளின் இராணுவ நிர்வாகமே நாட்டில் தோற்றம் பெறும்.இந்தியா மாத்திரம் உரிய நேரத்தில் 500 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்காமலிருந்திருந்தால் நாடு இம்மாதமே வங்குரோத்து நிலைமையினை அடைந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற 43ஆவது படையணியின் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளதை 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் 'ஆல பால ஆர்டிகய' புத்தகத்தின் ஊடாக தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

பெற்றுக் கொள்ளப்பட்ட அரமுறைமை கடன்களினால் எதிர்காலத்தில் ஏற்பட போகும் நெருக்கடி தொடர்பில் 2016ஆம் ஆண்டு 'எதிர்கால நிதி நெருக்கடி'என்ற புத்தகத்தை வெளியிட்டேன்.

திறந்த பொருளாதார கொள்கையினால் நாடு பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது என அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாடு பாரிய வங்குரோத்து நிலைமையினை அடைந்து வருகிறது. சுனாமி,சிவில் யுத்தம் ஆகியவற்றினால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பை குறுகிய காலத்திற்குள் சீர்செய்ய முடிந்தது.

நாடு வங்குரோத்து நிலைமையினை அடைந்தால் அதில் இருந்து மீள்வது சாதாரண விடயமல்ல. 2010ஆம் ஆண்டு கிறீஸ் வங்குரோத்து நிலைமையினை அடைந்தது. 

இன்று வரை கிறீஸ் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையவில்லை. லெபனான் வங்குரோத்து நிலைமையில் இருந்து மீள்வதற்கு குறைந்தது 10 வருடங்களாவது அவசியமம் என அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளமையினை இலங்கை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரசமுறை கடன்களை செலுத்துவது நாட்டுக்கு பாரிய சவாலாக காணப்படுகிறது. 2014ஆம் ஆண்டு மொத்த அரசமுறை கடன் 24 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாத்திரம் திருப்பி செலுத்தப்பட்ட 80 சதவீதமான அரசமுறை கடன்கள் 2014ஆம் ஆண்டுக்கு முற்பட்ட அரசாங்கம் பெற்றுக் கொண்டதாகும்.

நாடு தேசிய நிதி மோசடியை எதிர்க்கொண்டுள்ளது என்பதை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பயனற்ற பாரிய அபிவிருத்தி திட்டங்கள் தேசிய நிதி மோசடிக்கு பிரதான காரணியாக அமைந்தது. 

திட்டமிடலில்லாத அபிவிருத்திகள்,எல்லை கடந்த வணிக கடன்,பாரிய மோசடி ஆகியவை தற்போதைய நிதி நெருக்கடிக்கு பிரதான காரணியாக உள்ளன.

சேனாநாயக்க,பண்டாரநாயக்க,பிரேமதாஸ மற்றும் சந்திரிக்கா ஆகிய தலைவர்களின் காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட அரசமுறை கடன்கள் தற்போதைய நிதி நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது என அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்க முடியாது.

1948ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரையிலான அரசாங்கங்கள் 14 சதவீத அரச முறை கடன்களையும், 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கம் 08 சதவீதமான அரசமுறை கடன்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.

2010 தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த அரசாங்கம் மாத்திரம் 78 சதவீத அரசமுறை கடன்களை பெற்றுக் கொண்டுள்ளது. 

கடன் பெற்று பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்தோம் என்று குறிப்பிடப்படும் அபிவிருத்திகளினால் பாரிய நிதி தேசிய வருமானத்திற்கு கிடைக்கப் பெறவில்லை.

பெற்றுக் கொள்ளப்பட்ட அரசமுறை கடனை மீள் செலுத்தாவிடின் நாடு சுயாதீனமான முறையில் வங்குரோத்து நிலைமையினை அடையும். நிதி நெருக்கடியினை வெற்றிக் கொள்ள 43ஆவது படையணி ஊடாக கொள்கை திட்டங்களை வகுத்துள்ளோம்.

அரச நிதி நிலைப்படுத்தல்

நாட்டின் நிதி நிலைமை தொடர்பிலான உண்மை தன்மையினை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.நடைமுறையில் உள்ள வரிக் கொள்கை திருத்தப்படுதல் அவசியமாகும்.வரி கொள்கை சமூக கட்டமைப்பிற்கமைய வகுக்கப்பட வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வெற்றிக்காக தூரநோக்கமற்ற வகையில் வரிக்குறைப்பு செய்ததால் 40 சதவீத தேசிய வருமானம் இல்லாதொழிக்கப்பட்டது.இத்தவறை கட்டாயம் திருத்திக் கொள்ள வேண்டும்.

அரச செலவு குறைத்தல்

வீண் அரச செலவுகள் பொருளாதார பாதிப்பை  தீவிரப்படுத்தும். நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தொடர்ந்து அரசாங்கம் நிர்வகிக்கும் போது அதன் தாக்கத்தை நடுத்தர மக்களே எதிர்க்கொள்ள வேண்டும். ஆகவே நட்டத்தில் உள்ள அரச நிறுவனங்கள் தொடர்பில் திறமான தீர்மானம் எடுத்தல் வேண்டும். நட்டத்தில் இயங்கும் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை அரசாங்கம் தொடர்ந்து நிர்வகிப்பது பயற்றதொரு செயற்படாகும்.

சர்வதேச சந்தை நம்பிக்கை

அரச நிதி மோசடி காரணமாக இலங்கை சர்வதேச சந்தையின் நம்பிக்கையை இழந்து விட்டது. திறந்த கொள்முதல் இல்லாத காரணத்தினால் சர்வதேச வர்த்தகர்கள் இலங்கையை புறக்கணித்து வருகிறார்கள். மக்கள் வங்கி, இலங்கை வங்கி வெளியிடும்  கடன்பற்று பத்திரத்தை சர்வதேச நிறுவனங்கள் ஏற்க மறுக்கும் நிலைமை தற்போது காணப்படுகிறது. இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும்.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தல்

நாட்டின் பொருளாதார நடவடிக்கையில் பாரம்பரிய விவசாயத்திற்கு முதனிலை வழங்குவது அவசியமாகும். தொழிற்துறை நிபுணத்துவம்,தொழினுட்ப நகர விருத்தி,படித்த இளம் தலைமுறையினருடனான பொருளாதார செயற்திட்டம் ஆகியவற்றின் ஊடாக தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தல் வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு

பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள அரசமுறை கடன்களை திருப்பி செலுத்துவதா அல்லது கடன் மறுசீரமைப்பு செய்வதா என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டும். அரசமுறை கடன்களை திருப்பி செலுத்துவதற்கு சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பினை பெறுவது அவசியமாகும். அரசமுறை கடன் நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு எக்காரணிகளுக்காகவும் பாதிப்பை ஏற்படுத்த கூடாது.தேசிய வளத்தை பகடைகாயாக வைத்து அரசமுறை கடன்களில் இருந்து மீளும் கொள்கையினை இல்லாதொழிக்க வேண்டும்.

13ஆவது திருத்தம்,17,19ஆவது திருத்தம்

நாடு தொடர்பிலான தவறான நிலைப்பாட்டை சர்வதேசத்தின் மத்தியில் அரசாங்கம் தோற்றுவித்துள்ளது.இலங்கைக்கு நிபந்தனையில்லா கடன்களை வழங்கதற்கு கூட சர்வதேச நாடுகள் தயாரில்லை.அரசியலமைப்பில் 20ஆவது திருத்தம் ஜனநாயகத்தையும்,பாராளுமன்ற ஜனநாயகத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

20ஆவது திருத்தம் நீக்கப்பட்டு அரசியலமைப்பில் 17 மற்றும் 19ஆவது திருத்தங்களின் சிறந்த விடயங்களை மீண்டும் செயற்படுத்த வேண்டும்.

காலம் காலமாக வாதபிரதிவாதங்களுக்குள்ளாகியுள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக் கொள்ள வேண்டும் ஏனெனில் அது அரசியமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தம் தொடர்பில் அனைத்து இன சமூகத்தையும் ஒன்றுப்படுத்தி பொதுக்கொள்கைக்கமைய பரந்துப்பட்ட விவாதத்தை நடத்தி இறுதி தீர்மானத்தை காண வேண்டும்.

சர்வதேச உறவு

சீனாவிற்கும்,அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போருக்கு இலங்கை நடுத்தரப்பு நாடாக ஆக கூடாது.இந்தியா,பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய வலய நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

மேற்குறிப்பிடப்பட்ட கொள்கை திட்டத்தை செயற்படுத்த பாராளுமன்றில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 43ஆவது படையணியின் நோக்கம் மற்றும் கொள்கை குறித்து மக்கள் மத்தியில் இனிவரும் காலங்களில் பரந்துப்பட்ட விவாதத்தை முன்னெடுப்போம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் 2023.12ஆம் மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்.அவர் போட்டியிடவில்லையாயின் ஜனாதிபதி தேர்தல் 2014ஆம் ஆண்டு இடம்பெறும்.

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அல்லது 2024ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் பொதுத்தேர்தலை அரசாங்கம் நடத்தலாம்.

ஜனாதிபதி தேர்தல்,பொதுத்தேர்தல் ஆகிய தேர்தல்களை நடத்தும் அளவிற்கு நாட்டின் நிதி நிலைமை காணப்படவில்லை.எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாத காலத்திற்குள் நாடு வங்குரோத்து நிலைமையினை அடைந்து மியன்மார்,தென்கொரியா ஆகிய நாடுகளின் நிலைமையினை அடைவதை தடுக்க வேண்டும்.

இந்தியா மாத்திரம் 500மில்லியன் அமெரிக்க டொலர்களை  வழங்காமலிருந்திருந்தால் நாடு இம்மாதமே வங்குரோத்து நிலைமையினை அடைந்திருக்கும் என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/121193

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடகொரியாவைத் தென்கொரியா என்று அவர் அழைத்தாரா அல்லது செய்தியாளருக்கு இரண்டு கொரியாக்கள் இருப்பது தெரியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரஞ்சித் said:

வடகொரியாவைத் தென்கொரியா என்று அவர் அழைத்தாரா அல்லது செய்தியாளருக்கு இரண்டு கொரியாக்கள் இருப்பது தெரியாதா?

வீரகேசரி மாற்றி எழுதியுள்ளனர். வடகொரியா என்று வந்திருக்கவேண்டும்.

Right candidate will emerge at right time: Champika Ranawaka


  • Now is not the time to discuss presidential polls 

By Yohan Perera 

Opposition MP Patali Champika Ranawaka who spearheads his political movement called ‘43rd Brigade’ said at its national convention yesterday that the right presidential candidate would emerge at the  right time, but this was not the time to talk about such elections. 

He said the setting up of a national centre and paving the way for the people to arise for a real change and prevent Sri Lanka from becoming a country like another North Korea is the duty of all political parties.
Mr. Ranawaka said all opposition political parties should forget about the presidential elections as there are few more years for it.
 “The right candidate will emerge at the right time. This is not the time of the presidential elections,” Mr. Ranawaka said.
 He said the 43rd Brigade will not call for a political alliance as it is not the need of the hour. “The total foreign debt service that has to be settled is US $ 38.5 billion,” he said.
“We cannot resolve  the foreign exchange crisis by begging for assistance from India and China. We should think beyond such a move. Therefore Sri Lanka has to seek assistance of a body such as the International Monetary Fund (IMF) or should obtain the help of a private mediation body as  some countries have done. We should also think of a middle path rather than thinking of turning Sri Lanka into another North Korea or a Myanmar as it is thought by some forces,” he added.

“Sri Lanka should also go for investment projects which are viable and adopt a transparent process when selecting suitable investments. The country should also focus on debt rescheduling and putting a stop to corruption and other matters,” he said. MP Ranawaka said there is a large-scale embezzlement of public funds,” The government is to spend four times the actual cost for the elevated highway project in Colombo and had planned to construct a prison complex in Homagama where the previous government planned to construct the tech city.

SJB MPs Thalatha Athukorala, Kumara Welgama, Ranjith Madduma Bandara, TPA Leader Mano Ganesan, UNP Deputy Leader Ruwan Wijewardene and Senior Vice President Sagala Ratnayaka were present at the event.

https://www.dailymirror.lk/front_page/Right-candidate-will-emerge-at-right-time:-Champika-Ranawaka/238-229652

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரஞ்சித் said:

வடகொரியாவைத் தென்கொரியா என்று அவர் அழைத்தாரா அல்லது செய்தியாளருக்கு இரண்டு கொரியாக்கள் இருப்பது தெரியாதா?

 

எனக்கும் இதே சந்தேகம் எழுந்தது.சம்பிக்க ரணவக்க ஓரு காலத்தில் வெளிப்படையாக இனவாதம் பேசியவர். அவர் இந்த அளவுக்கு இறங்கிப் பேசுவது நாட்டின் பொருளாதாரம மிக் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது என்பதை எடுத்துக்கூறுகிறது.ஆனால்43வது படையணி இந்த நெருக்கடிக்கு எப்படி உதவப் போகிறதாம்;?

Link to comment
Share on other sites

1 hour ago, புலவர் said:

 

எனக்கும் இதே சந்தேகம் எழுந்தது.சம்பிக்க ரணவக்க ஓரு காலத்தில் வெளிப்படையாக இனவாதம் பேசியவர். அவர் இந்த அளவுக்கு இறங்கிப் பேசுவது நாட்டின் பொருளாதாரம மிக் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது என்பதை எடுத்துக்கூறுகிறது.ஆனால்43வது படையணி இந்த நெருக்கடிக்கு எப்படி உதவப் போகிறதாம்;?

வேறொன்றுமில்லை பதவி ஆசை தான், நவீன பௌத்த- சிங்கள இனவாதத்தின் பிதாமகன் சம்பிக்க ரணவக்க ஆவர். ஜனதா மிதுரோ,  சிங்கள உறுமய, ஜாதிக்க ஹெல உறுமய எனற கடும் பௌத்த- சிங்கள இனவாத அமைப்புக்கள்  உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.  தற்போதைய நிலையில், தனியே இனவாதம் பேசி நாட்டின் தலைவர் ஆக முடியாது என்று புரிந்துள்ளார், எல்லாம் பதவி வெறும் வரை என்பது சம்பிக்கவின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு தெரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.