Jump to content

கல்வியமைச்சு அச்சிட்ட இஸ்லாம் பாடப்புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிக்கத் தடை: பின்னணி என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • யூ.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இஸ்லாம் பாட நூல்

இலங்கையின் அரச பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதெற்கென, கல்வி அமைச்சினால் அச்சிடப்பட்ட இஸ்லாம் பாடத்துக்குரிய 06 வகையான புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிப்பதை நிறுத்துமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்கம் உத்தரவிட்டுள்ளது.

பாடசாலை அதிபர்களுக்கு, கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் அயிலப்பெரும அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரம் 06க்குரிய இஸ்லாம் (சிங்கள மொழி), தரம் 06க்குரிய இஸ்லாம் (தமிழ் மொழி), தரம் 07க்குரிய இஸ்லாம் (சிங்கள மொழி), தரம் 10க்குரிய இஸ்லாம் (சிங்கள மொழி), தரம் 10க்குரிய இஸ்லாம்(தமிழ் மொழி), தரம் 11க்குரிய இஸ்லாம் (தமிழ் மொழி) ஆகிய புத்தகளையே மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறும், சிலவேளை புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தால் அவற்றினை மீளப்பெறுமாறும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் புத்தங்களை பயன்படுத்தும் மாணவர்களிடமிருந்து அவற்றினை மீளப்பெறுமாறும், மீள்பயன்பாட்டுக்காக மாணவர்களுக்கு வழங்க வேண்டாம் எனவும், கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலே குறிப்பிட்ட நூல்களுக்குப் பதிலாக, புதிய திருத்தப்பட்ட நூல்களை வழங்குவதற்கு, கல்வி வெளியீட்டுத் திணைக்களம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 
நிஸாருத்தீன்
 
படக்குறிப்பு,

நிஸாருத்தீன்

இதேவேளை, 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் சிபாரிசுக்கு அமைவாகவே, மேற்படி புத்தகங்களின் விநியோகத்தினை நிறுத்துமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக தேசிய பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு - கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில், 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியை அண்மையில் ஜனாதிபதி நியமித்திருந்தார்.

இந்த செயலணி 'ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் எண்ணக்கருவுக்கு அமைவான கருத்துக்களைப் பொதுமக்களிடமிருந்து பெற்று வருகின்றது.

'ஒரே நாடு, ஒரே சட்டம்' செயலணி மறுப்பு

இந்த நிலையில் மேற்சொல்லப்பட்ட பாடநூல்களை விநியோகிக்க வேண்டாமென, தாம் யாருக்கும் சிபாரிசு செய்யவில்லை என்றும் அவ்வாறு வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் தவறானவை எனவும், 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியின் உறுப்பினர் அஸீஸ் நிஸாருத்தீன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

 
முஸ்லிம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்.

'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணிக்கு, அறிக்கையொன்றினைத் தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதே தவிர, யாருக்கும் ஆணையிடும் அதிகாரம் இல்லை எனவும் அவர் கூறினார்.

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அனைத்துக் கூட்டங்களிலும் தான் கலந்து கொண்டதாகக் கூறும் அஸீஸ் நிஸாருத்தீன், எந்தவொரு கூட்டத்திலும் இஸ்லாம் பாடப்புத்தக விவகாரம் தொடர்பில் பேசப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

"ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில், அரச பாடசாலைகளில் வழங்கப்படும் இஸ்லாம் பாடத்துக்கான புத்தகங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. பாடசாலைகளில் வழங்கப்படும் இஸ்லாம் பாடப் புத்தகங்களில் தீவிரவாதத்தைக் கொண்ட விடயம் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது," எனக் குறிப்பிட்ட நிஸாருத்தீன், "அதில் உண்மையும் இல்லாமலில்லை" என்றார்.

பாடநூல்களில் தீவிரவாதமா?

"ரஊப் மௌலவி என்பவர் இஸ்லாம் மதம் சார்ந்து சில கருத்துக்களைக் கூறி வருகிறார். அவரின் கருத்தை ஏற்பவர்களும் உள்ளனர், மறுப்பவர்களும் இருக்கின்றார்கள். ரஊப் மௌலவியின் கருத்தை நான் முற்றாக நிராகரிப்பவன். அதற்காக ரஊப் மௌலவியை கொல்ல வேண்டும் என்கிற கூற்றுடன் எனக்கு உடன்பாடில்லை".

"ஆனால் ரஊப் மௌலவி என்பவர் 'முர்தத்' (இஸ்லாத்தை விட்டும், மதம் மாறியவர்) என்கிற 'பத்வா' வை (தீர்ப்பை) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 1978ஆம் ஆண்டு வழங்கியது. அதேவேளை, இஸ்லாமிய பாடப்புத்தகங்களில் 'முர்தத்' (இஸ்லாத்தை விட்டு மதம் மாறியவர்) கொல்லப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதனூடாக, படிக்கின்ற மாணவர்களின் மனதில் திட்டமிட்டு தீவிரவாதமொன்று விதைக்கப்பட்டுள்ளமையைக் காண முடிகிறது என, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய நாடாளுமன்ற தெரிவுக் குழுவிலும், ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் கூறப்பட்டுள்ளது" என்கிறார் அஸீஸ் நிஸாருத்தீன்.

"இவ்வாறான விடயங்களை வைத்தே, இஸ்லாம் பாடப்புத்தகங்களில் தீவிரவாதம் உள்ளதாக, ஈஸ்டர் தாக்குதலை விசாரணை செய்த, ஜனாதிபதி ஆணைக்குழுவில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியில் இவ்விடயம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை" எனவும் நிஸாருத்தீன் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலை விசாரித்த ஆணைக்குழுவின் சிபாரிசு

ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், பாடசாலைகளில் வழங்கப்படும் சமயக் கல்விக்குரிய பாடப்புத்தங்கள் தொடர்பில் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கல்வி (Education) எனும் தலைப்பின் கீழ் அந்தப் பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவற்றில் 'தேசிய, மாகாண மற்றும் சர்வதேச பாடசாலைகளின் மாணவர்களுடைய பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்ட அனைத்து சமயக் கல்விப் புத்தகங்களிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதேனும் தீவிரவாத அல்லது பயங்கரவாத இலக்கியங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்' என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இன்னோரிடத்தில், 'தீவிரவாத போதனைகள் மற்றும் தீவிரவாத எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளை கண்டறிந்து அகற்றும் நோக்கில், இலங்கையில் இஸ்லாமிய கல்விப் புத்தகங்களின் உள்ளடக்கங்களை உடனடியாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும்' எனவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

'எந்தவொரு தீவிரவாத அல்லது பயங்கரவாத உள்ளடக்கத்தையும் கண்டறிந்து அகற்ற, அனைத்து கல்வி வெளியீடுகளும் ஓர் ஒழுங்குமுறை அமைப்பால் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்' எனவும், ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வைக் குழுவின் சிபாரிசு

இது இவ்வாறிருக்க தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் 2020ஆம் ஆண்டின் அறிக்கையொன்றிலும், இஸ்லாம் பாடப்புத்தகங்களை மறுசீராய்வு செய்வதற்கான சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான நட்புறவை கட்டியெழுப்பியவாறு, புதிய பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை வேரோடு களைந்தெறிவதற்குத் தேவையான வகையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சட்ட திட்டங்களைத் தயார் செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் பற்றிய அந்தத் திட்ட அறிக்கையில்; இஸ்லாம் பாடப்புத்தகங்களில் எவ்வகையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

 
இஸ்லாம் பாட நூல்

'இஸ்லாம் கல்வியுடன் தொடர்புடைய பாடப்புத்தகங்களின் உள்ளடக்கம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால், பாடப்புத்தகங்களை உருவாக்கும் நடைமுறையை மீள்பரிசீலனை செய்து, தீவிரவாத அல்லது மதப் பிரிவுகளைச் சார்ந்த கருத்துக்கள் உள்ளடங்குவதற்கான வாய்ப்பினை இல்லாதொழித்தல் வேண்டும்' என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

'எதிர்காலத்தில் வெளியிடப்படுகின்ற இஸ்லாம் பாடப்புத்தகங்களை தொகுப்பதற்கு, ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்விமான்கள் குழுவொன்றை நியமித்தல் வேண்டும்' எனவும் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியிலேயே, தற்போது கல்வி அமைச்சினால் அச்சிடப்பட்ட இஸ்லாம் பாடத்துக்குரிய 06 வகையான புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிப்பதை நிறுத்துமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்கம் உத்தரவிட்டுள்ளது.

கல்வியமைச்சு அச்சிட்ட இஸ்லாம் பாடப்புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிக்கத் தடை: பின்னணி என்ன? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.