Jump to content

இந்தியாவில் நடைபெற இருக்கும் முதலாவது metaverse திருமணம்


Recommended Posts

தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ், ஜனகநந்தினி ஆகியோர் விரைவில் metaverse இல் தமது திருமணத்தை நடத்தவுள்ளனர்.

metaverse.jpg

metaverse என்பது முப்பரிமாண மாய உலகம். இங்கு ஒவ்வொருவரும் தமது அவதார் மூலம் சந்தித்துப் பேசிக்கொள்ள முடியும்.  Harry Potter பள்ளிக்கூட மண்டபத்தில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத் திருமணத்தில் சென்ற வருடம் இறந்து போன ஜனகநந்தினியின் தந்தை ஒரு அவதாராகப் பங்குகொள்கிறார்.

சுமார் 2500 பேர் தமது கணணியூடாக இந்தத் திருமணத்தில் பங்குகொள்ளவுள்ளனர். metaverse பற்றி தமது உறவினர்களுக்குப் புரிய வைக்கத்தான் மிகச் சிரமமாக இருந்ததாக ஜனகநந்தினி கூறுகிறார்.
சென்னை  Indian Institute of Technology இல் புரொஜெக்ட் மனேஜரான தினேஷ், உள்ளூர் start-up ஒன்றினூடாக blockchain மூலம் திருமண மண்டபத்தை உருவாக்கி வருகிறார்.

 

மூலச் செய்தி : https://www.courrierinternational.com/revue-de-presse/futur-un-couple-indien-va-se-marier-dans-le-metavers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு ஆரோக்கியமான நிகழ்வு எனலாம். காரணம்... செலவு குறைவு.. ஆக்கள் கூடி கூத்தடிச்சு நோய் பரப்புவதை தவிர்க்கலாம் (குறிப்பாக இன்றைய காலக் கட்டத்தில்).. வர முடியாதவர்களும் பங்கெடுக்கலாம்.. அதுபோக முக்கிய விடயம்.. இறந்து போன சொந்தங்களையும் அழைக்கலாம். அது நிறையப் பேருக்கு மனத் திருப்தியை அளிக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும்… நாலு சொந்தங்கள், நேரில் வந்து கலந்துரையாடி செய்யும்….
கலியாணத்தைப் போல் வராது. 

கலியாணம் என்றாலே… நறுமண வாசனை, தனி கிக்கை கொடுக்கும்.
 இது ஏதோ… கடமைக்கு, செய்யும் கலியாணம் போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞானம் முன்னேற முன்னேற இயற்கை அழிவுகளும் இனம் புரியா நோய்களும் பெருகிக்கொண்டே வருகின்றது.

கூரை ஏறிக் கோழி பிடிக்க இயலாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்!  :cool:

Link to comment
Share on other sites

13 hours ago, குமாரசாமி said:

விஞ்ஞானம் முன்னேற முன்னேற இயற்கை அழிவுகளும் இனம் புரியா நோய்களும் பெருகிக்கொண்டே வருகின்றது.

கூரை ஏறிக் கோழி பிடிக்க இயலாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்!  :cool:

Meta (facebook) நிறுவனம் உலகிலேயே மிக அதி வேகமுடைய சூபர் கணணி ஒன்றை உருவாக்கி வருகிறது. இக் கணணி அந் நிறுவனத்தின் மாய உலகை இயக்கப் போகிறது என்பது செய்தி.
https://www.sciencesetavenir.fr/high-tech/informatique/meta-presente-son-supercalculateur-surpuissant_160969

---

புலம்பெயர்ந்த தமிழர்களில் வயதானவர்களும் பெண்களும் ஒரு நாளில் பல மணி நேரங்கள் சண் ரிவி, விஜய் ரிவி ஆகியவற்றிற்கு முன்னால் பேய் அறைந்த மாதிரி உட்கார்ந்திருக்கிறார்கள். நாடகம் என்பது என்ன ? ஒருவித போலியாக உருவாக்கப்பட்ட குடும்பங்கள், கதாபாத்திரங்கள், சம்பவங்கள். இவை எந்த ஆக்கபூர்வமான அறிவியலான கருத்தாக்கத்தையோ அல்லது மனித மேம்பாட்டிற்கான அனுகூலங்களையோ கொண்டிருக்கவில்லை. மாறாக பல கோடி மக்களை இதனுள் மூழ்கவைத்து அவர்களின் வினைத்திறனை மழுங்கடிக்கச் செய்கிறது.  எனது குடும்பத்திலேயே இந்த நாடகங்களுக்குள் ஒரு நாள்கூட சஞ்சரிக்காமல் இருக்க முடியாதவர்கள் பலர் உள்ளனர். இந்தப் போலியான சம்பவங்களைப் பற்றி இன்னொருவருடன் நிஜமாக பக்கத்து வீட்டில் நடைபெற்ற சம்பவம்போல் உரையாடக் கேட்டுள்ளேன்.
இதுவும் ஒரு மாய உலகல்லவா ?

ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சமயங்கள் மூலமாக சொர்க்கலோகம் நரகலோகம் இந்திரலோகம் என்றெல்லாம் யாரும் பார்த்திராத மாய உலகங்களை மக்களை நம்பவைத்தனர்.

முருகன் மாங்காய்க்காக உலகத்தை மயிலின் முதுகில் ஏறி வலம் வந்தார் என்றும் சூரனனோடு சண்டை பிடித்தார் என்றும் சொல்லப்பட்ட கதைகளை நம்பி கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்து அந்த நிகழ்ச்சிகளைக் கண்முன்னே வரவைக்கிறோம் அல்லவா ? இதுவும் மாயைதான்.

Meta verse தொழில்நுட்பம்தான் புதிதே தவிர எல்லாம் பழையத்தான்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இது புதிய தகவல்......!  😁

இணைப்புக்கு நன்றி இணையவன் ........!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் இவைகள் எதுவும் புதுமையானதாக இருக்காது. கூடிய விரைவில் நாம் உடைகள் வாங்க காட்சி அறைகளுக்குப்போய் அங்கிருக்கும் அறைகளில் அளவு சரியா எனப் போட்டுப்பார்க்கத் தேவையில்லை வீட்டிலிருந்தவாறே அதே கடையிளுல்ல ஆடைகளை போட்டுப்பார்த்து காசைக்கட்டினால் வீட்டுக்குப் பொருள் வந்துவிடும் அளவுகளில் ஏதாவது திருத்தம் வேண்டுமானாலும் பிரச்சனை இல்லை அளவு எடுத்துத் திருத்தித்தரவார்கள்.

இதைவிட இன்னுமொறு விடையம் திரைப்படம் பார்க்க சினிமாவுக்கோ ஓ டி டி பிளட்போமுக்கோ போகத்தேவையில்லை தமிழ் மெகாத்தொடர் உட்பட அனைத்திலும் நடிகர்கள் உங்கள் முன்னாலேயே வந்து நடிப்பார்கள் பக்கத்திலிருந்தே என்ன நடக்குது எனப்பார்க்குமாப்போல் இருக்கும் இப்போது ஆடை விடையத்தில் HM நிறுவனம் முதல் முயற்சி எடுத்திருக்கிறது. நிறைய நிறுவனங்கள் இதற்காகக் காணி வாங்கிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

19 minutes ago, Elugnajiru said:

இனிமேல் இவைகள் எதுவும் புதுமையானதாக இருக்காது. கூடிய விரைவில் நாம் உடைகள் வாங்க காட்சி அறைகளுக்குப்போய் அங்கிருக்கும் அறைகளில் அளவு சரியா எனப் போட்டுப்பார்க்கத் தேவையில்லை வீட்டிலிருந்தவாறே அதே கடையிளுல்ல ஆடைகளை போட்டுப்பார்த்து காசைக்கட்டினால் வீட்டுக்குப் பொருள் வந்துவிடும் அளவுகளில் ஏதாவது திருத்தம் வேண்டுமானாலும் பிரச்சனை இல்லை அளவு எடுத்துத் திருத்தித்தரவார்கள்.

இதைவிட இன்னுமொறு விடையம் திரைப்படம் பார்க்க சினிமாவுக்கோ ஓ டி டி பிளட்போமுக்கோ போகத்தேவையில்லை தமிழ் மெகாத்தொடர் உட்பட அனைத்திலும் நடிகர்கள் உங்கள் முன்னாலேயே வந்து நடிப்பார்கள் பக்கத்திலிருந்தே என்ன நடக்குது எனப்பார்க்குமாப்போல் இருக்கும் இப்போது ஆடை விடையத்தில் HM நிறுவனம் முதல் முயற்சி எடுத்திருக்கிறது. நிறைய நிறுவனங்கள் இதற்காகக் காணி வாங்கிவிட்டார்கள்.

காணியின் விலை உண்மையான காணியை விட விலை அதிகம்.

அப்படியே தமிழீழத்தையும் உருவாக்கி விடுவமா ? 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியலின் வளர்ச்சியை விரும்பியோ விரும்பாமலோ ஏற்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறோம்.
ஓடி விளையாட ஆசைப்படும் எனக்கு இந்த அறிவியல் வளர்ச்சி ஏதாவது வகையில் பயன்படுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, இணையவன் said:

காணியின் விலை உண்மையான காணியை விட விலை அதிகம்.

அப்படியே தமிழீழத்தையும் உருவாக்கி விடுவமா ? 😄

உருவாக்கலாம் 
அதற்கு முன்முயற்சியாக google mapபை பவிக்காமல் நாமே ஒரு  GPS map உருவாக்கி மாவீரர் துயிலுமில்லாம் போல் வடிவமைத்து உலகில் உள்ள அனைத்துச் சொந்தங்களையும் இணைத்து மிகப்பெரிய  மாவீரர் நினைவெழிர்ச்சி நாளைக்கொண்டாடினால் ஆரம்பப்புள்ளியாக இருக்கும்.

தவிர நாமே ஒரு மெற்றாவேஸஸ் கிரிப்டோ நாணயத்தை இறக்கினால் பலமடங்கு பலம் பெறலாம்.
பல நிறுவனங்கள் தனிப்பட்டவர்களது நாணயங்களை உருவாக்க ஆயத்தமாகி இருக்கின்றன ஆனால் சிக்கல் நம்பிக்கைத்தன்மையே. 

ஸ்பெயினில் சில கிராமங்கள் கைவிடப்பட்ட நிலையில் பாடசாலை நீவீழ்ச்சி பண்ணைகள் தெருக்கள் தேவாலயங்கள் உள்ளடங்கலாக விற்பனைக்குள்ளதாக ஓரிரு வருடங்களுக்குமுன்பு செய்தியில் அறிந்தேன் அவைகளை வாங்கினால் எமக்கான தற்காலிகமான ஐரோப்பிய சட்டதுட்டங்களுக்கு அமைவாகச் செயற்படும்விதமான தமிழ் கிராமங்களை உருவாக்கலாம்.

இதற்கான முதற்படியாக கிரிப்டோ நாணயங்களை உருவாக்கி அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் எதுவும் செய்யலாம். ஆனால் என்ன புலிகளது சொத்துக்களை ஆட்டையைப்போட்டு தலைவர் சொல்லட்டும் அதை நான் உங்களிட்டைத் தாறன் எனும் போக்கிலிகள் வாழும் எமது தமிழ் சமூகத்தில் நடக்கக்கூடிய விடையங்கள் இவை அல்ல.

Link to comment
Share on other sites

6 minutes ago, Elugnajiru said:

 

ஸ்பெயினில் சில கிராமங்கள் கைவிடப்பட்ட நிலையில் பாடசாலை நீவீழ்ச்சி பண்ணைகள் தெருக்கள் தேவாலயங்கள் உள்ளடங்கலாக விற்பனைக்குள்ளதாக ஓரிரு வருடங்களுக்குமுன்பு செய்தியில் அறிந்தேன் அவைகளை வாங்கினால் எமக்கான தற்காலிகமான ஐரோப்பிய சட்டதுட்டங்களுக்கு அமைவாகச் செயற்படும்விதமான தமிழ் கிராமங்களை உருவாக்கலாம்.

 

நிச்சயமாக.

நானும் முன்பு நினைப்பதுண்டு. ஒரு சதுர அடி நிலம் உலகில் எங்காவது தனி அரசு அமைப்பதற்கு அல்லது அப் பிரதேச சட்டத்துகு உட்பட்ட விதத்தில் ஒரு நுண் கிராமகாக உருவாக்கக் கூடியதாக இருந்தால் மீதியை உலகெங்கிலும் வாழும் தமிழர்களை இணைத்து மாபெரும் சக்தியாக உருவாக்க முடியும். ஏறத்தாள இப்போதுள்ள நாடு கடந்த அரசு போல். ஆனால் யாராவது செய்யப் போனால் 'புலிகளே' எதிரியாக வருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

உருவாக்கலாம் 
அதற்கு முன்முயற்சியாக google mapபை பவிக்காமல் நாமே ஒரு  GPS map உருவாக்கி மாவீரர் துயிலுமில்லாம் போல் வடிவமைத்து உலகில் உள்ள அனைத்துச் சொந்தங்களையும் இணைத்து மிகப்பெரிய  மாவீரர் நினைவெழிர்ச்சி நாளைக்கொண்டாடினால் ஆரம்பப்புள்ளியாக இருக்கும்.

தவிர நாமே ஒரு மெற்றாவேஸஸ் கிரிப்டோ நாணயத்தை இறக்கினால் பலமடங்கு பலம் பெறலாம்.
பல நிறுவனங்கள் தனிப்பட்டவர்களது நாணயங்களை உருவாக்க ஆயத்தமாகி இருக்கின்றன ஆனால் சிக்கல் நம்பிக்கைத்தன்மையே. 

ஸ்பெயினில் சில கிராமங்கள் கைவிடப்பட்ட நிலையில் பாடசாலை நீவீழ்ச்சி பண்ணைகள் தெருக்கள் தேவாலயங்கள் உள்ளடங்கலாக விற்பனைக்குள்ளதாக ஓரிரு வருடங்களுக்குமுன்பு செய்தியில் அறிந்தேன் அவைகளை வாங்கினால் எமக்கான தற்காலிகமான ஐரோப்பிய சட்டதுட்டங்களுக்கு அமைவாகச் செயற்படும்விதமான தமிழ் கிராமங்களை உருவாக்கலாம்.

இதற்கான முதற்படியாக கிரிப்டோ நாணயங்களை உருவாக்கி அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் எதுவும் செய்யலாம். ஆனால் என்ன புலிகளது சொத்துக்களை ஆட்டையைப்போட்டு தலைவர் சொல்லட்டும் அதை நான் உங்களிட்டைத் தாறன் எனும் போக்கிலிகள் வாழும் எமது தமிழ் சமூகத்தில் நடக்கக்கூடிய விடையங்கள் இவை அல்ல.

ஸ்பெயின் இன் தற்போதைய  வரலாறு தெரிந்து  பேசுகிறீர்களா என்பது தேரியவில்லை?

(ஐரோப்பிய சட்டத்திற்கு  ஏற்ப நடந்த பார்சலோன் போராட்டத்தை  எப்படி  அடக்கி  வைத்திருக்கிறார்கள்?)

மற்றது  போக்கிலிகள் பற்றியது

எதையாவது  செய்ய வேண்டுமே  தவிர அதற்கு  நாமே காரணங்களை  சோடிக்கக்கூடாது

அவ்வாறு  சோடித்தால் எமக்கே அச்செயலில் நாட்டமில்லை  அல்லது சந்தேகம்  இருக்கிறது  என்று  தான்  அர்த்தமே தவிர செய்யமுடியாது  என்று   பொருள்  அல்ல.😭

Link to comment
Share on other sites

53 minutes ago, இணையவன் said:

நானும் முன்பு நினைப்பதுண்டு. ஒரு சதுர அடி நிலம் உலகில் எங்காவது தனி அரசு அமைப்பதற்கு அல்லது அப் பிரதேச சட்டத்துகு உட்பட்ட விதத்தில் ஒரு நுண் கிராமகாக உருவாக்கக் கூடியதாக இருந்தால் மீதியை உலகெங்கிலும் வாழும் தமிழர்களை இணைத்து மாபெரும் சக்தியாக உருவாக்க முடியும்.

வெண்ணை கையிலிருக்க நெய்க்கு உலகமெல்லாம் அலையும் அன்புக் கள உறவுகளே! எங்கள் நித்தியானந்த சுவாமிகளை மறந்ததென்ன.... எங்களுக்கு எந்தச் செலவுமின்றித் தனி நாடமைக்க இந்தச் சுவாமியை நாடினால் போதுமே.

நித்தியானந்தா சுவாமிகள் ஒரு தமிழரல்லவா அவர் தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஈக்குவடார் நாட்டின் அருகே உள்ள ஒரு தீவில் தனது பக்த பரிவாரங்களுடன் தங்கியுள்ளார், அதனருகில் உள்ள தீவை விலைக்கு வாங்கி தனி நாடு நிறுவவுள்ளதாக கருதப்படுகிறது.

Paramhamsa Nithyananda.jpg

Link to comment
Share on other sites

ஒரே ஒரு டவுட்டு இதில்.

இந்த சாந்தி முகூர்த்தம் / முதலிரவு எல்லாம் இப்படி மாயவுலகிலா நடக்கும்? ( நிழலி, நெல்லை காலமடா  நீ 18 வருடங்களுக்கு முன்னே கலியாணம் கட்டியது)🏃‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஒரே ஒரு டவுட்டு இதில்.

இந்த சாந்தி முகூர்த்தம் / முதலிரவு எல்லாம் இப்படி மாயவுலகிலா நடக்கும்? ( நிழலி, நெல்லை காலமடா  நீ 18 வருடங்களுக்கு முன்னே கலியாணம் கட்டியது)🏃‍♂️

நன்றி! உண்மைதான், என்றாலும் சிரி சிரியென்று சிரித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

ஒரே ஒரு டவுட்டு இதில்.

இந்த சாந்தி முகூர்த்தம் / முதலிரவு எல்லாம் இப்படி மாயவுலகிலா நடக்கும்? ( நிழலி, நெல்லை காலமடா  நீ 18 வருடங்களுக்கு முன்னே கலியாணம் கட்டியது)🏃‍♂️

என்ன கேள்வி இது குழந்தை பிள்ளைகள் மாதிரி.😂 இதுவரை நடந்தபடி தொடரும் 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தனிமனிதன் வாழ்விலும் அவனுக்கு இரண்டு ஊர்வலங்கள் என்று சொல்வார்கள்,

ஒன்று கல்யாண ஊர்வலம், இரண்டு இறுதி ஊர்வலம்.

அந்த இரண்டிலும் ஒன்றே ஒன்றை மட்டும்தான் அவன் நேரடியாக பார்க்கமுடியும். கல்யாணம் என்பதை பெரும்பாலானவர்கள் ஊரறிய சுற்றம் சூழ கொண்டாடுவதற்கு காரணமே அவனது இறுதிக்காலம்வரை மனசில் ஞாபகம் வைத்திருக்கபோகும் வாழ்வின் இனிமையான தருணம் அது.

அதனை விஞ்ஞானவழி மூலம் விருந்து வைத்து கொண்டாடினால் அறிவியல் ரீதியாக அவர்கள் திறமையை நிரூபிக்கலாம் ஆனால் ஆத்மார்த்தமான ரீதியாக வாழ்நாள் முழுவதும் அந்த வசந்தத்தை கொண்டாட முடியாது.

இவ்வகை திருமணங்கள் அறுசுவை உணவை திரையில் பார்ப்பது போலத்தான் தொட்டுரணவும் முடியாது சுவைக்கவும் முடியாது. 

12 hours ago, இணையவன் said:

முருகன் மாங்காய்க்காக உலகத்தை மயிலின் முதுகில் ஏறி வலம் வந்தார்

என்னது மாங்காயா?😮 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

ஒரே ஒரு டவுட்டு இதில்.

இந்த சாந்தி முகூர்த்தம் / முதலிரவு எல்லாம் இப்படி மாயவுலகிலா நடக்கும்? ( நிழலி, நெல்லை காலமடா  நீ 18 வருடங்களுக்கு முன்னே கலியாணம் கட்டியது)🏃‍♂️

ஆமாம்
இதில் மணமக்கள் மாத்திரமல்ல திருமணத்தில் கலந்து கொண்டவர்களும் கட்டாயம் சாந்தி முகூர்த்தத்தில் ஈடுபட வேண்டும்.

எல்லோருக்குமே சாந்தி முகூர்த்தம் என்றால் அது சாதாரண நிகழ்வாக மாறிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

ஆமாம்
இதில் மணமக்கள் மாத்திரமல்ல திருமணத்தில் கலந்து கொண்டவர்களும் கட்டாயம் சாந்தி முகூர்த்தத்தில் ஈடுபட வேண்டும்.

எல்லோருக்குமே சாந்தி முகூர்த்தம் என்றால் அது சாதாரண நிகழ்வாக மாறிவிடும்.

எப்ப பார்......எங்களுக்கு அதிலைதான் கண் 😎

புதுமண தம்பதிகள் தாம்பத்தியத்தில் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?..! -  Seithipunal

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

ஆமாம்
இதில் மணமக்கள் மாத்திரமல்ல திருமணத்தில் கலந்து கொண்டவர்களும் கட்டாயம் சாந்தி முகூர்த்தத்தில் ஈடுபட வேண்டும்.

எல்லோருக்குமே சாந்தி முகூர்த்தம் என்றால் அது சாதாரண நிகழ்வாக மாறிவிடும்.

ம்.....இதிலையாவது அதை தப்பு தவறு இல்லாமல் சரியாக கொண்டாட வேணும்......கொஞ்சம் சறுக்கினாலும் ஒன்ஸ்மோர் கேட்கலாம் ........!   😂

Link to comment
Share on other sites

12 hours ago, ஈழப்பிரியன் said:

மணமக்கள் மாத்திரமல்ல திருமணத்தில் கலந்து கொண்டவர்களும் கட்டாயம் சாந்தி முகூர்த்தத்தில் ஈடுபட வேண்டும்.

ஈழப்பியரே உங்களுக்கு இந்த எண்ணங்கள் ஏற்படக் காரணம் என்னவென்று புரிந்துகொண்டேன். நீங்கள் ஒரு ஞானி. மந்திரங்கள் என்ற பெயரில் பார்ப்பணர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்கள் திருமண நிகழ்வுகளை அசிங்கப்படுத்தி வருவதை வெளிப்படுத்தும் ஒரு முயற்சி போல் தோன்றுகிறது.

இங்கு நான் படித்தறிந்ததை உங்களுக்கும் தெரிவிக்கிறேன் அவ்வளவே.

ண்மையில் ஒரு சமூகப் போர் நிகழ்ந் தது; அறிவீர்கள்! தி.மு.கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின், என்றோ பேசிய பேச்சை மீள்கொண்டுவந்து, “ஹிந்துக்களின் புனிதமான திருமணமுறையை அசிங்கப்படுத்தி, உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார்என்று குமுறினார்கள் சமூகத்தில் ஒரு சிலர். சுமந்தராமன் என்ற நடுநிலைஊடகரும், கஸ்தூரி என்ற மாதரசிநடிகையும் அவர்களுள் முதன்மை யானவர்கள்.

அவர்களை ஆதரித்தும்/மறுத்தும், பலர் களம் குதித்து வினையாற்றினர். குறிப்பாக, ஹிந்து மதம் சார்ந்த கட்சிகளும், சில சாதிக் கட்சித் தலைவர்களும், காங்கிரஸ் கட்சியின் அமெரிக்காய்நாராயணன் என்பாரும், அதிமுக-வின் நமது புரட்சித்தலைவி அம்மாஎன்ற நாளேடும், தன் பன்னாள் ஆராய்ச்சியுழைப்பால், உலகிலேயே ஜாதிக்கு DNA Strand Model கண்டுபிடித்த முதல் விஞ்ஞானியுமான, தமிழ்நாட்டு அரசின் சம்ஸ்கிருத வளர்ச்சித் துறை அமைச்சர், மாண்புமிகு மாபா பாண்டியராஜன் அவர்களும், மு.க.ஸ்டாலினுக்குக் கண்டனக் குரல் எழுப்பினர்.

ஸ்டாலின் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணியோடு உறவு அறுத்துக் கொள்ள வேண்டும்என்று முழங்கினார் அமெரிக்காய்.

ஹிந்து மதத்தை என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை இனி கிடையாது; ஸ்டாலின் பொது இடத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும்என்று முழங்கினார், ஸ்ரீலஸ்ரீ மாபா பாண்டியராஜன். இப்படி, எண்ணெய்த் துணியில் நெருப்பு பிடித்துக் கொண்டாற் போல், கருத்துக்களம் தீப்பற்றிக் கொண்டது.

இன்னும் சில நடுநிலையாளர்கள், “மு.க.ஸ்டாலினுக்குச் சம்ஸ்கிருத மொழி தெரியாததால், மந்திரங்களைத் தவறாகப் புரிந்து கொண்டார். இதோ பரம பவித்திரமான உள்ளர்த்தம் / வெளியர்த்தம்என்று கல்யாண மந்திரங்களுக்குப் பொருள் கூறவும் முனைந்தார்கள். ஆனால், ஆனால்.. போதாக் காலம், அவர்களே போற்றி வணங்கும் ஹிந்து மஹாகுரு ஒருவர் மூலமாகவே வந்து இடித்தது!

மு.க.ஸ்டாலின் சொன்ன பொருள் சரியேஎன்று 12ஆம் நூற்றாண்டு ஸ்ரீவைஷ்ணவ மஹாகுரு, ஸ்ரீ ராமானுஜருக்கே குரு, ஆளவந்தார் வாதிட்டார்! தன் சேக்காளிகளே தன்னைவிட்டு ஓடிவிட, தனியாக மாட்டிக் கொண்டு நிற்கும் வடிவேலு போல், ‘வேணாம்; அழுதுருவேன்என்று விழிபிதுங்கியது பக்தர்களின் கூட்டம்!

அப்படி என்ன தான் இருக்கு, அந்தக் கல்யாண மந்திரத்தில்? அப்படி என்ன தான் சொன்னார் அந்த மஹாகுரு? திராவிடத்தின் போலிப் பரப்புரைகளை நம்பாது, நாமே களமிறங்கி, ‘வரிக்கு வரிபார்த்து விடுவோமா? வாருங்கள்! தமிழ் சம்ஸ்கிருதம் இரு மொழிகளுமே அறிந்த Academician என்பதால், சாந்தோக்ய உபநிஷத் / சாம வேதம் அறிந்த என்னோடு, அஞ்சாது படகிலேறுங்கள்!:)

இன்று பெரும்பாலான ஹிந்து வீடுகளில், பிராமணப் (பார்ப்பனப்) புரோகிதர் சொல்லும் விவாஹ (கல்யாண) மந்திரங்கள், ருக் (ரிக்) வேதத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை. ஸூர்யா என்கிற ஒரு தேவப் பெண்ணுக்கு, ஒன்றன் பின் ஒன்றாக, பல தேவர்களுடன் கல்யாணம் நடத்தி வைத்த போது, சொல்லப்பட்டவை அவை! அதையே, இன்று எல்லா மணமக்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.

தாலி என்பது தமிழ்ச் சொல்; தாலம் = பனை ஓலையைக் (இழை) குறிக்கும். பனை, தமிழ் நிலத்தின் மங்கலம் ஆதலால், திருமண நிகழ்வின் ஒருநாள் மட்டும், அதை மணமக்கள் இருவருக்குமே அணிவிப்பது மங்கல வழக்காக இருந்தது. (காண்க: அகநானூறு 136, விற்றூற்று மூது எயினனார் எழுதிய மைப்பு அறப் புழுக்கின்என்று தொடங்கும் திருமணப் பாடல்; மழை பட்டன்ன, மணல் மலி பந்தர், “இழை அணி சிறப்பின்” – பெயர் வியர்ப்பு ஆற்றி, தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்”);

தாலிப் பனையோலை, நாட்பட நாட்படக் கிழிந்து விடும். அதற்கென்று எந்த sentiment-உம் இல்லை! வெறுமனே ஒருநாள் மங்கலம் அது! ஆண்களுக்கும், ஐம்படைத் தாலி உண்டு! வைதீக பிராமணீயம், தென்னகக் குடிகளில் கலந்தபோது, இந்த ஒருநாள் தாலி வழக்கத்தைத் திருடி, அதற்குச் சுமங்கலி sentiment பூசி, புதிதாய் மாங்கல்யம் தந்துஅநேனாமந்திரம் உருவாக்கி, பனைத் தாலியைத் தங்கத்தில் ஆக்கி, அதையும் பெண்ணுக்கு மட்டுமே ஆக்கி, பெண்ணை வாழ்நாள் சுமைதாங்கி ஆக்கியது!

மாங்கல்யம் தந்து = தாலிக் கயிற்றினை

அநேனா மம ஜீவன ஹேதுனா = நான் பல நாள் வாழ வேண்டி

கண்டே பத்நாமி = (உன்கழுத்தில் கட்டுகிறேன்

சுபகேத்வம் ஜீவசரதஸ் சதம் = சுமங்கலியேஉன்னால்என் ஆயுள்100 பலம் ஆகவேண்டும்!

நன்கு உற்றுப் பாருங்கள்! ஆணாகிய நான் வாழஎன்று தான் இருக்கும்; ‘நாம் வாழஎன்பதே இருக்காது! பெண்ணாகிய உன்னால், ஆணாகிய நான் சுகப்படவே, இந்தக் கல்யாணம்! அதுவே வைதீகம்!

மேற்படி கல்யாண ஸ்லோகம் எந்த வேதத்திலும் இருக்காது; ஏனென்றால் அது வேதச் சடங்கே இல்லை; தென்னகத்தில் திருடப்பட்ட சடங்கியல்! உங்களை, வைதீக மதத்துக்குக் கவரவேண்டி, பின்னாள் ஒட்டுவேலை! தென்னக மக்களுக்கு, தாலி கட்டுதலே முக்கியமான சடங்காய்ப் பட்டாலும், வைதீகத் திருமணத்தில் அதற்கு மதிப்பே இல்லை! அக்னி வலமும், சப்த பதியும் தான் வேதப் பிரதானம்! இன்றும், The Hindu Marriage Act – 1955 சட்டப்படி, Section 7 சொல்வது:  “A Hindu marriage can be duly performed in accordance with ceremonies that include the Saptapadi, i.e. taking of seven steps jointly before the sacred fire. If Saptapadi is included in the rites and ceremonies, then the marriage becomes complete and binding when the seventh step is taken”.

கல்யாண மந்திரங்களில், தாலி முக்கியமல்ல, வேதமே முக்கியம் என்று பார்த்தோம் அல்லவா? அந்த வேத மந்திரத்துக்குப் பொருள் அசிங்கமானதா? என்றும் பார்த்து விடுவோம். இதோ, மந்திரங்கள்! சம்ஸ்கிருத பாஷையில் அப்படியே கொடுத்துள்ளேன்; அம்மொழி அறியாதோர், நம்முடைய தமிழில் வாசித்துக் கொள்ளவும்.

ருக் வேதம், 10ஆம் மண்டலம், 7ஆம் அனுவாகம், 85ஆம் சூக்தம்.

சோம பிரதமோ விவிதேகந்தர்வோ விவித உத்தரஹ;

திரிதீயோ அக்னிஇஷ்டேபதிஸ்தூரி யஸ்தே மனுஷ்யஜாஹ்!

சோமோ ததாத்கந்தர்வாயகந்தர்வோ ததாத் அக்னயே;

ரயிம்  புத்ராம் ஸ்சாதாத் அக்னிர்மஹ்யமதோ இமாம்!

மேற்படி மந்திரத்தைத் தான், “நீங்கோ தப்பா புரிஞ்சுண்டேள்! மந்திரத்தில் வருவது, பெண்ணைக் காப்பவன்என்ற பொருளில் தான்; கணவன் காப்பதற்கு முன்பே, தேவதைகள் 3 பேர் பெண்ணைக் காக்கிறார்கள்என்றெல்லாம் தங்களுக்கே சம்ஸ்கிருதம் தெரியாவிட்டாலும், சமாளி-fication செய்கிறார்கள். ஆனால், அந்த மந்திரத்தில் வருகிறதே, ‘விவித / இஷ்டஎன்னும் சொல்? அதன் அர்த்தம்என்ன? என்று வினவுங்கள், ஓடி விடுவர்.

சோமபிரதமோ விவிதே இஷ்டே = சோமன்முதலில்பலவிதமாக அவளை அனுபவிக்கிறான்

கந்தர்வோஉத்தரஹ விவித இஷ்டே = கந்தர்வன்அடுத்துபலவிதமாக அவளை அனுபவிக்கிறான்

அக்னிதிரிதீயோ இஷ்டே = அக்னிமூன்றாவதாகஅவளை அனுபவிக்கிறான்

மனுஷ்யஜாஹ்பதி ஸ்தூரி யஸ்தே = மனிதன்இவளின் ஆண்டையாகஇறுதியாக இழுக்கப்படுகிறான்!

அருஞ்சொற்பொருள்:

சோம = சோம தேவன் (சந்திரன் அல்லது சோமபான வஸ்து தேவன்)

பிரதமோ = முதலில்

விவித = பல விதமாக

இஷ்டே = இஷ்டப் படுதல்

கந்தர்வ = கந்தர்வ தேவன்

உத்தரஹ = அடுத்ததாக

விவித = பல விதமாக

இஷ்டே = இஷ்டப் படுதல்

அக்னி = அக்னி தேவன்

திரிதீயோ = மூன்றாவதாக

இஷ்டே = இஷ்டப் படுதல்

மனுஷ்ய அஜா = மனிதனாகப் பிறந்தவன்

பதி = ஆண்டை / Master / Lord

ஸ்தூரி = இழுக்கப்பட்டு

யஸ்தே = இப்படியாக!

இப்போது வரிக்கு வரிவிளங்குகிறது அல்லவா? இஷ்டம், விவிதம், ஸ்தூரி என்பதையெல்லாம் நைசாகமறைத்து, குத்துமதிப்பாக ஒரு பொருள் சொல்லிக் கொள்வார்கள், தங்கள் வசதிக்கு; ஆனால் குத்துக்கு என்ன மதிப்பு? இவர்களுக்கு விழும் குத்து தான் மதிப்பு. பதி என்றால் கணவன் மட்டுமே அல்ல, காப்பாளன் என்றும் பொருளாச்சே என்றெல்லாம் பிதற்றுவார்கள். பதிக்கு ஒரே பொருள் தான் = ஆண்டை! (Lord, Master); பெண்ணுக்கு ஆண்டை யார்? அவளை ஆள்பவன்; கணவனோ அல்லது தேவனோ யாரானாலும்; அவ்வளவே!

நமக்குப் புரிகிறது இவர்களின் கஷ்டம்’! பாவம், எவ்வளவு தான் முட்டுக் கொடுக்க முடியும்? அந்நாளில் அசிங்கமாக எழுதி வைத்து விட்டார்கள்; ஆனால் இன்று அதைத் தூக்கி எறியவும் முடியாது! வேதமே, வைதீக தர்மத்துக்குப் பிரதானம். அதை எப்படித் தூக்கி எறிவது? ஸோமன், மித்ரன், அஸ்வின், சவித்ரு..  தங்களின் பழைய கடவுள்களையே தூக்கி எறிந்த கூட்டம், வேதத்தை மட்டும் தூக்கி எறியவே எறியாது! ஏனெனில், வேதமே = ஜாதிக்குப் பிரதானம்!

பகவான் முக்கியமா, ஜாதி முக்கியமா? என்றால், ஜாதியே முக்கியம்! ஹிந்து ஞான மரபில் மட்டும் தானே,பகவானை நம்பாதவன் கூட ஆஸ்திகன்; வேதத்தை மறுப்பனே நாஸ்திகன் என்று சொல்லி வைத்துள்ளார்கள்? அதான், தங்கள் ஜாதி வாழ வேண்டி, தங்களின் பழைய பகவான்களைப் பலி கொடுத்து, ஆதிகுடிகளின் நடுகல் தொன்மங்களான முருகன் திருமால் கொற்றவையை, புது பகவான்களாக ஆக்கிக் கொண்டார்கள்! பகவான் யாராயினும் பரவாயில்லை; ஆனால் பகவானுக்கு வழிசொல்லும் அதிகாரம் = நம் ஜாதிக்கே! இஃதே வைதீகம்!

சேச்சே! இதெல்லாம் திராவிடவாதம்; பொய்ப் பித்தலாட்டம் என்று நம்மை மறுக்கலாம்; ஆனால், அந்தோ பரிதாபம், அவர்களின் மஹா ஆசார்ய புருஷர்களே, இந்த ஸ்லோகங்களுக்கு அர்த்தம்எழுதி வைத்துவிட்டுப் போயுள்ளார்கள். குருவை எப்படி மறுப்பது? அபச்சாரம் அல்லவா! சாயனர், கல்யாண மந்திரங்களுக்கு எழுதிய உரையைப் படத்தில் பாருங்கள்! ஸ்ரீ சாயனர் = திராவிட இயக்கமா என்ன?:)

உண்மை என்னவென்றால், பெண்ணை = ருதுப் பொருளாக / போகப் பொருளாக மட்டுமே பார்த்த அசிங்கம்!:(

அதை நான் என் வாயால் சொல்லக் கூச்சமாக உள்ளதால், இதோ இச் சுட்டியில் அறிந்து கொள்க! திராவிடச் சுட்டி அல்ல; பகவத் கீதா சுட்டி தான்!

Woman & Her 4 Serial Husbands = https://www.bhagavadgitausa.com/woman_and_four_serial_husbands.htm

ஒரு கதை சொல்கிறேன், கேட்கிறீர்களா? சுவையான கதை தான்!:)

தென்கலை வைணவத்தில் ஓர் கலகக் குரல் எழுப்பிய இராமானுசர்! அவரின் குரு, யமுனைத்துறைவன் என்கிற ஆளவந்தார்! அவர் கல்வி பயின்று வந்த காலத்தே, அரசவையிலிருந்து ஒர் ஓலை வந்தது. அதில், அரசவைக்கு வந்து, ஆக்கியாழ்வான் என்ற பண்டிதனை வாதில் வெல்ல வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. சென்றார்!

அவைக்கு வந்திருந்த அரசி, அங்கு சிறுபிள்ளையாக அமர்ந்திருந்த யமுனைத்துறைவன் என்கிற ஆளவந்தார் அழகிலே/ முகவொளியிலே (தேஜஸ்) மயங்கி, “இப்பையன் நிச்சயம் வெல்வான்என்று அரசனிடம் கூறினாள். ஆனால் அரசனோ, “இவன் சிறுபிள்ளை; மிகுந்த பண்டிதரான ஆக்கியாழ்வானிடம் தோற்றுவிடுவான்; இல்லையேல், நாட்டில் பாதியை ஆளவந்தாருக்குத் தருகிறேன்எனக் கூறினான். பதிலுக்கு அரசியும், “இவன் தோற்றால், அந்தப்புரத்திலே சேடியாய்ச் சேவைசெய்வேன்என்று விளையாட்டாகச் சூள் வைத்தாள்!

சொற்போர் தொடங்கியது! ஆக்கியாழ்வான் கேட்ட அத்தனை வினாக்களுக்கும் விடை பகன்ற ஆளவந்தார், பதிலுக்குத் தாமும் 3 கூற்றுகளைக் கூறுவதாகவும், அவற்றை ஆக்கியாழ்வான் மறுக்க வேண்டும் என்றும் கூறினார். “1. உமது தாய் மலடி அல்லள், 2. இந்த அரசன் தர்மவான், 3. இந்த அரசி பத்தினிப் பதிவிரதைஎன்று 3 கூற்றுகளைக் கூறி, அவற்றை மறுக்கச் சொன்னார்.

கதி கலங்கி விட்டான் ஆக்கியாழ்வான்! அரசியைப் பத்தினி அல்ல என்று எப்படி மறுப்பது? “சரி, உங்களால் மறுக்க முடியுமோ?” என்று ஆளவந்தாரையே கேட்க, அவர் பின்வருமாறு மறுத்தார்.

ஆக்கியாழ்வான் தன் தாய்க்கு ஒரே மகன். ஒரே பிள்ளை பெற்றவள், சாஸ்திரப் படி மலடியே. அக்குழந்தைக்குத் துர்மரணம் நேர்ந்தால், அவளைத் தாயென்று கொண்டாட வேறு பிள்ளைகள் இல்லாததால் சாஸ்திரம், அவளை மலடி என்று சொல்லிற்று. எனவே, உனது தாய் மலடியே!

அரசன் தர்மவானாக இருந்தாலும், குடிமக்கள் செய்யும் பாவங்கள், சாஸ்திரப் படி அரசனையே சேரும். எனவே, இந்த அரசன் முழுக்க முழுக்கத் தர்மவான் அல்லன்!

ஒவ்வொரு கல்யாண வைபவத்திலும், சாஸ்திரப்படிச் சொல்லும் வேத மந்திரங்களில், சோம பிரதமோ என்ற ஸ்லோகம் முதன்மையானது! மணமகளாகிய இவளை, சோமன், கந்தர்வன் மற்றும் அக்னி ஆகிய மூன்று தேவர்கள் இஷ்டமாக அனுபவித்த பின்னரே, நான்காவதாக அவர்களிடமிருந்து மணமகன் பெற்று அனுபவிக்கிறான் என்று சாஸ்திர நிர்ணயம் இருக்கிறது! எனவே, இந்த அரசி எப்படிப் பத்தினி ஆவாள்?”

இப்படி, சாஸ்திரப்படி வாதம் செய்தால், மறுக்க முடியுமே?” என்று சொன்னதும், அவரின் சாஸ்திர ஞானத்தை மெச்சித் தோல்வியை ஒப்புக் கொண்டான் ஆக்கியாழ்வான்! சாஸ்திரம் என்பதால், அரசனும் அரசியும் கோபம் கொள்ளவில்லை; மாறாக, அவரின் ஞானத்தை மெச்சி, நீர் எம்மை ஆள வந்தீரோ? என்று கண்ணீர் வடித்தாள். அன்றிலிருந்து, ஆளவந்தார் எனும் பெயரும் அவருக்கு வழங்கலாயிற்று!

எப்படி இருக்கு கதை?:) திராவிடம் எழுதிய கதை அல்ல! சாட்சாத், ‘குரு பரம்பரா பிரபாவம்என்று வைணவ உலகம் கொண்டாடும் புனித நூலில் உள்ளது, இக் கதை!

இதில், ஜகத்குருவான ஆளவந்தாரே, கல்யாண மந்திரங்களுக்கு என்ன பொருள் சொல்கிறார் பாருங்கள்! ஆனால், இன்று குருவையே மீறலாமோ.. பொய்யாகப் பொருள் ஜோடிக்கும் சுமந்தராமன், கஸ்தூரி, அமெரிக்காய் நாராயணன் & மாபியா பாண்டியராஜன்? குருவை மீறின ஆசார்ய பாபம்வந்து சேராதோ? குருவை விடவா, இந்த Half Baked மண்டையர்கள் பெரியவர்கள்.. சாஸ்திர நுட்பத்தில்?:)

அறிக: இவர்களுக்குச் சாஸ்திரம் ஒன்றும் தெரியாது! ஆனால், அறியாமலேயே உள்ளூற மதப் பாசம்/ மத வெறி! இந்தக் காலத்துக்கு, அந்தக் கால மந்திரம் அசிங்கமாய் உள்ளது; அதனால் கூச்சத்தால் நெளிந்து, மாற்றிப் பொருள் சொல்லத் துடிக்கிறார்கள் அவ்வளவே! அசிங்கம் தான்! ஆனால் அசிங்கத்தை, அசிங்கம் என்று சொல்லாதே, அழகு என்று சொல்!என்பது இவர்களின் எதிர்பார்ப்பு. The Emperor & The New Clothes கதையில் வருவது போல், மன்னர் ஆடையில்லாமல் வந்தாலும், ஆகா என்ன அழகான உடுப்பு, என்று சொல்ல வேண்டுமாம்!

சரி, இன்னும் ஒரேயொரு ஸ்லோகத்தைப் பார்த்துவிட்டு, கல்யாணக் கச்சேரியை முடித்துக் கொள்ளலாமா?:)

என்ன சொல்கிறார்கள், இந்தப் போலிப்பொருள் மதவெறியர்கள்? சோமன், கந்தர்வன், அக்னி 3 பேரும் பெண்ணை வெவ்வேறு பருவகாலங்களில் பாதுகாக்கிறார்கள் என்பது தானே இவர்களின் திரிபு வாதம்? ஏன், ஆணைப் பாதுகாக்கமாட்டார்களாமா, இந்தத் தேவர்கள்?:) Hormone-களால் உடல் சூடு ஏற்படும் மூன்றாம் பருவகாலத்தில், பெண்ணைப் பாதுகாக்கவே இந்த மந்திரம் என்கிறார்களே? எனில், சூட்டைக் குறைக்க அக்னியிடமா முறையிடுவது? குளிர்ச்சியான சோமனிடம் (சந்திரன்) தானே முறையிட வேண்டும் மூன்றாம் பருவத்தில்?:) இவர்களின் பொய்ம்மை, இவர்களின் குட்டையே உடைத்துவிடும்! பொய்யைப் பொருந்தச் சொல்வதென்பதே தெரியாதே, புராணக்காராளுக்கு!

ஒரு வளரும் பெண்ணுக்கு, அவள் தந்தையே கதாநாயகன்! அப்பா தராத பாதுகாப்பா, சோமன் தந்து விடுவான்? அம்மா-அப்பா பெற்று வளர்க்கப் படும் பாடுகளை, சற்றேனும் மதித்து, அவர்களையும் மந்திரத்தில் வாழ்த்தலாமே? 1. சோமன், 2. கந்தர்வன், 3. அக்னி, 4. அப்பா, 5. கணவன் என்று வரிசை இருந்தாலும், சரி ஏதோ பாதுகாப்பு மந்திரம் என்று நம்பித் தொலைக்கலாம்! பெண்ணின் அப்பாவை விலக்கிவிட்டு, வேறு 3 ஆண்களும், பிறகு கணவனும் என்றால், இவர்களின் அசிங்கம் இடிக்கிறது அல்லவா? Logic உடைகிறது அல்லவா?

பெண்ணை, தேவர்கள் வெறுமனே பாதுகாக்கிறார்கள் எனில், அடுத்தடுத்த ஸ்லோகங்கள், “இவளை விட்டுவிட்டு, வேறு யாராவது பெண்ணை இச்சைப்படுத்திக் கொள்!என்று சொல்வானேன்? அசிங்கம் தானே?

உதீர்ஷ்வாதோ விஸ்வவாசோநம ஸேடா மஹேத்வா!

அந்யாம் இச்ச ப்ரபர்வ்யம்சம் ஜாயாம் பத்ராஸ் ச்ருஜ! (ருக் வேதம் 10-85)

ஹே விஸ்வவாசு எனும் கந்தர்வனே, எழுந்திரு! வணங்குகிறேன், இவளை விட்டுவிடு! வேறு யாராவது பெண்ணை இச்சைப் படுத்திப் பிடித்துக் கொள்! நான் கல்யாணம் செய்யப் போவதால், இவளை என்னிடமே விட்டுவிடு!

உதீர்ஷ்வாத பதிவதீஹ்யேஷா விஸ்வவாசும்நம சாகீர்பிரிடே!

அந்யாம் இச்ச பித்ரசதம்வ்யக்தாம்  தே பாகோஜனுஷா தஸ்ய வித்தி! (ருக் வேதம் 10-85)

இவள் உடம்பில் வசிக்கும், விஸ்வவாசு எனும் கந்தர்வனே, எங்கள் கட்டிலை விட்டு எழுந்திருடா! உன்னை வணங்குகிறேன், இவளை விட்டுவிடு! திருமணம் ஆகாமல், தகப்பன் வீட்டிலேயே இருக்கும் வேறு யாராவது பெண்ணை இச்சைப்படுத்திப் பிடித்துக்கொள்! எங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதல்லவா? இனி, இவளை விட்டுவிடு!

சோம பிரதமோ மந்திரங்களுக்கு, பெண்ணின் பருவகாலங்களில் பாதுகாக்கிறான் என்று பொய் சொன்னவர்கள், இந்த மந்திரங்களுக்கு என்ன சொல்ல முடியும்? நேரடியாக இருக்கிறதே, இவளை விட்டுவிடு, என்று? அசிங்கத்துக்கு, ஓரளவு தான் முட்டுக் கொடுக்க முடியும்! சாக்கடையில், எத்தனை மல்லிப்பூ தான் கொட்டி, தீ மணத்தைக் குறைக்க முடியும்? இனியும் வேண்டாம், இந்த அவலம்!

எப்படி, உங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்கள் வைக்கத் துவங்கி விட்டீர்களோ,

போலவே, தமிழ் / தன்மானத் திருமண முறைக்கு மாறி விடுங்கள்!

தமிழ்த் திருமணம் செய்வது எப்படி? – மொழிஞாயிறு பாவாணரின் நூலில் காணுங்கள்!

அதையும் தன்மானத் (சுயமரியாதை) திருமணமாய்ச் செய்வது எப்படி? – பெரியாரின் நூலில் காணுங்கள்!

திருமணம் என்பது, நாம் காலமெல்லாம் அன்பு செலுத்தி வாழும் மானம்! அந்த மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்! அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது!

வள்ளுவமாம் திருக்குறள் ஓதி,

இயற்கை போற்றி,

மங்கல விளக்கு சூழ, மாலை தவழ,

சான்றோர் வாழ்த்தளிக்க,

அதையும் நமக்குப் புரியும் மொழியிலே வாழ்த்தளிக்க,

இருவருமே மணவுறுதிமொழி ஏற்க,

மாலை மாற்றி,

தாலியோடோ (அ) தாலி இல்லாமலோ,

தாலியோடு எனின், பெண்ணுக்கு மட்டுமில்லாமல், ஆணுக்கும் ஏதோவோர் அடையாளம் அளித்துச் சமன்மை பேணி,

மகிழ் திகழ் இல்லறம் போற்றுவோம்!

அதான், தன்மானத் திருமணத்துக்கு (சுயமரியாதைத் திருமணத்துக்கு), சட்ட இசைவு (அங்கீகாரம்) பெற்றுத் தந்து விட்டார்களே நம் பேரறிஞர் அண்ணாவும், பெரியாரும்? இன்னும் தயக்கம் ஏன்?

இத்தனையும் தரவு காட்டிச் சொன்னது எதற்காக? பார்ப்பனீயம், தங்களின் பொய்யை ஒப்புக் கொள்வார்கள் என்பதற்காகவா? அல்ல! தரவுகளால், பார்ப்பனீயம் திருந்தியதாய் வரலாறே இல்லை! நம்மை நாமே திருத்திக் கொள்வது தான் ஒரே வழி! இது இடைவிடாத போர்!

எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்

பரவிக் கொண்டே இருக்க வேண்டும்

மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்

நாம் எழுதா விட்டால் பார்ப்பான் எழுதி விடுவான் (பொய்வரலாற்றை!

நாம் மாற்றா விட்டால் பார்ப்பான் மாற்றி விடுவான் Sentiment பீடித்த நம்மவரை!

நம்மவர்களை, நாம் மாற்றுவோம்! நீங்கள், உங்க சொந்தக்காரத் திருமணங்களுக்குச் செல்லும் போதெல்லாம்.. உங்கள் பக்கத்தில் அமர்ந்துள்ள இளம் நண்பரிடம் / தோழியிடம் பேச்சு கொடுங்கள்;

ஐயர் என்ன சொல்கிறார் தெரிகிறதா? என்று கேட்டு, இந்த ஸோம பிரதமோஊழலைச் சொல்லுங்கள், சற்று மென்மையாக!:) மணமக்களின் பெற்றோரைத் துன்புறுத்த வேண்டாம், பாவம் அவர்களுக்கே ஆயிரம் அல்லல் இருக்கும். சிரித்த முகத்துடன், அருகில் அமர்ந்திருக்கும் நட்பு/ சொந்தத்திடம் பேச்சுக் கொடுங்கள், இளவட்டப் பெண்கள்/ ஆண்களிடம்; ஓர் இளைஞர் மாறினால், ஒரு சமுதாயமே மாறிவிடும்!

யாரோயாரோடிஉன்னோட புருசன்?

ஸோமன்கந்தர்வன்அக்கினியா புருசன்?:)

வேண்டாம்வேண்டாம்டிபெற்றோரே காவலன்

காதல்காதல் தான்காதலிக்குப் புருசன்!

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே, நம் காரியம் யாவினும் கைக்கொடுத்து, “மானத் தமிழ்மாண்புடன் வாழ்வமடி!

கண்ணபிரான் ரவிசங்கர் (கரச)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்த வருணன், வாயுபகவான், அக்நி எல்லோரும் மணமகளுடன் பின்னிப்பிணைந்து அவளை அனுபவிப்பதுபோல் மணமகனுக்குள்ளும் பின்னிப் பிணைந்திருக்கின்றார்களே ஒருவேளை இவர்களெல்லாம் ஓரினசேர்கையாளராகவும் இருப்பார்களோ......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையோட கதையாக ஒரு முக்கியமான விடையம் இப்போது கிரிப்டோ நாணயத்தில் Shibnobi, (shinja) எனும் நாணையம் Shib inu க்கு ஈடாக முன்னேறும் வாய்ப்புள்ளது அதிக பட்சமாக மூன்று பூசியங்களைத் தாண்டினாலே போட்ட பணத்துக்கு பலமடங்கு காசைப்பார்க்கலாம் அதாவது இப்போ பதின்மூன்று பூச்சியங்களுக்கு அப்பால் நிற்கிறது (0.000000000000015) வாங்கிப்போட்டால் ஓரளவு இலாபம் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.