Jump to content

இந்திய றோலர் படகுளை ஏலம் விடும் நடவடிக்கை - இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு - அன்னராசா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

( எம்.நியூட்டன்)

 

IMG-20220124-WA0009.jpg

 

இந்திய றோலர் படகுளை ஏலம் விடும் நடவடிக்கையானது இந்திய இலங்கை மீனவர்களின் நிண்டகால பிரச்சினைக்கு தீர்வை நோக்கி பயணிக்கும் ஓர் முயற்சியாகும் இத்தகைய நடவடிக்கை தொடரவேண்டும் எனவும், உள்ளூர் வெளியூர் சட்டவிரோத தொழில்முறைகள் முற்று முழுதாக தடை செய்யும் வரை எமது போராட்டங்கள் தொடரும் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா தெரிவித்தார். 

 

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்திய மீனவர்களின் அத்துமிறிய தொழில் முறையால் வடபகுதியின் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன் எங்களுடைய அன்றாட தொழில்களும், கடற்தொழில் உபகரணங்களும்  சேதமாக்கப்பட்டு எமது வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக தொடர்சியான போராட்டங்களை முன்னேடுத்து வந்த நிலையில், எல்லைதாண்டிய மீனவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டு,  சட்டநவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், கைது நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட றோலர் படகுகள் மற்றும் நாட்டுபடகுகள் ஏலம் விடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இத்தகைய நடவடிக்கைகள்  கடற்தொழில் அமைச்சின்  காலம் கடந்தவையாக இருந்தாலும் நாங்கள் இதனை வரவேற்கின்றோம் .தொடர்ந்தும் எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். 

அது மட்டுமன்றி உள்ளூரிலும் சட்டவிரோதமாக றோலர் தொழில்கள் இடம்பெற்று வருகிறது. இதனாலும் கடல்வளங்கள் அழிக்கப்படுகிறது. இதற்கு எதிராகவும் சட்டநடவடிக்கை மேற்கெள்ளப்படவேண்டும்.  உள்ளூர் வெளியூர் என்றில்லாமல் கடல்வளங்களை அழிக்கின்ற மற்றும் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை அனைத்தும் நிறுத்தப்படவேண்டும்.

இலங்கையில் கடற்தொழில் முறைமை தொடர்பில் உள்ள சட்டங்கள் நடைமுறைப்படுத்தபட வேண்டும்.வடக்கு  மீனவர்கள் நிம்மதியாக தொழில் செய்வதற்கு ஏற்ற சூழல் வரும்வரை எமது போராட்டம் தொடரும் என்றார்.

இந்திய றோலர் படகுளை ஏலம் விடும் நடவடிக்கை - இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு - அன்னராசா | Virakesari.lk

Link to comment
Share on other sites

14 hours ago, பிழம்பு said:

இலங்கையில் கடற்தொழில் முறைமை தொடர்பில் உள்ள சட்டங்கள் நடைமுறைப்படுத்தபட வேண்டும்.வடக்கு  மீனவர்கள் நிம்மதியாக தொழில் செய்வதற்கு ஏற்ற சூழல் வரும்வரை எமது போராட்டம் தொடரும் என்றார்.

தமிழ்நாட்டு மீனவர் சங்கத் தலைவரும், யாழ் மாவட்ட மீனவர் சங்கத் தலைவரும் இணைந்து தங்கள் மீனவர்களையும் இணைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தும் ஏற்பாட்டை மேற்கொண்டால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவுக்குக் கொண்டுவர வழி ஏற்படலாம். சட்டங்களை இயற்றி அவற்றை இருட்டறையில் வைத்துப் பாதுகாக்கும் இந்திய, இலங்கை அரசுகளிடம் அந்தச் சட்டங்களை நடைமுறைப் படுத்துங்கள் என்றால்... சட்டங்கள் இருக்கும் இருட்டறையிலுள்ள விசப் பூச்சிகளுக்கு இரத்ததானம் செய்து உயிரையம் கொடுக்கவேண்டி வரலாம். அதுதான் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.😲   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Paanch said:

தமிழ்நாட்டு மீனவர் சங்கத் தலைவரும், யாழ் மாவட்ட மீனவர் சங்கத் தலைவரும் இணைந்து தங்கள் மீனவர்களையும் இணைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தும் ஏற்பாட்டை மேற்கொண்டால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவுக்குக் கொண்டுவர வழி ஏற்படலாம். சட்டங்களை இயற்றி அவற்றை இருட்டறையில் வைத்துப் பாதுகாக்கும் இந்திய, இலங்கை அரசுகளிடம் அந்தச் சட்டங்களை நடைமுறைப் படுத்துங்கள் என்றால்... சட்டங்கள் இருக்கும் இருட்டறையிலுள்ள விசப் பூச்சிகளுக்கு இரத்ததானம் செய்து உயிரையம் கொடுக்கவேண்டி வரலாம். அதுதான் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.😲   

ஒரு லட்சம் சங்கங்கள்  இருக்கு

பரவாயில்லையா அண்ணா???😭

Link to comment
Share on other sites

1 hour ago, Paanch said:

தமிழ்நாட்டு மீனவர் சங்கத் தலைவரும், யாழ் மாவட்ட மீனவர் சங்கத் தலைவரும் இணைந்து தங்கள் மீனவர்களையும் இணைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தும் ஏற்பாட்டை மேற்கொண்டால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவுக்குக் கொண்டுவர வழி ஏற்படலாம். சட்டங்களை இயற்றி அவற்றை இருட்டறையில் வைத்துப் பாதுகாக்கும் இந்திய, இலங்கை அரசுகளிடம் அந்தச் சட்டங்களை நடைமுறைப் படுத்துங்கள் என்றால்... சட்டங்கள் இருக்கும் இருட்டறையிலுள்ள விசப் பூச்சிகளுக்கு இரத்ததானம் செய்து உயிரையம் கொடுக்கவேண்டி வரலாம். அதுதான் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.😲   

இந்திய மீனவர்களின் பிரதிநிதிகளும் வடபகுதி மீனவர் சங்க பிரதிநிதிகளும் 2016 இல் சந்தித்தனர். அதில் இந்திய மீன்வர்கள் இழுவை படகு மீன்பிடி நடவடிக்கையை கைவிடுவதற்கு மூன்று வருட காலவகாசம் கோரி அதனை வடபகுதி மீன்வர்கள் வழங்கியிருந்தனர்.

இன்று 2022... 

6 வருடங்கள் கடந்த பின்னரும் இந்திய கடற்கொள்ளையர்கள் சர்வதேச சட்டங்களால் தடை செய்யப்பட்ட அதே இழுவை படகுகளை கொண்டு எம் வடபகுதி மீன்வளத்தை கொள்ளையடிக்கின்றனர். கேரளாப் பக்கம் போனால் அடி வாங்கிக் கொண்டு வரவேண்டும் என்று அந்தப்பக்கம் எட்டியும் பார்க்காமல், போரால் சிதைவுற்ற எம் மீன்வர்களின் வளத்தை வந்து சூறையாடுகின்றனர்,
 

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

இந்திய மீனவர்களின் பிரதிநிதிகளும் வடபகுதி மீனவர் சங்க பிரதிநிதிகளும் 2016 இல் சந்தித்தனர். அதில் இந்திய மீன்வர்கள் இழுவை படகு மீன்பிடி நடவடிக்கையை கைவிடுவதற்கு மூன்று வருட காலவகாசம் கோரி அதனை வடபகுதி மீன்வர்கள் வழங்கியிருந்தனர்.

இன்று 2022... 

6 வருடங்கள் கடந்த பின்னரும் இந்திய கடற்கொள்ளையர்கள் சர்வதேச சட்டங்களால் தடை செய்யப்பட்ட அதே இழுவை படகுகளை கொண்டு எம் வடபகுதி மீன்வளத்தை கொள்ளையடிக்கின்றனர். கேரளாப் பக்கம் போனால் அடி வாங்கிக் கொண்டு வரவேண்டும் என்று அந்தப்பக்கம் எட்டியும் பார்க்காமல், போரால் சிதைவுற்ற எம் மீன்வர்களின் வளத்தை வந்து சூறையாடுகின்றனர்,
 

விபரம் அறியத்தந்தமைக்கு நன்றி நிழலி அவர்களே.!🙏

Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

ஒரு லட்சம் சங்கங்கள்  இருக்கு

பரவாயில்லையா அண்ணா???😭

எண்ணுக்கணக்கற்ற கடவுள்களை உருவாக்கி எங்களை ஏமாற்றி, எமது உழைப்பையும் உறுஞ்சுவோரை ஏற்றுக்கொண்ட எங்களுக்கு, இது பரவாயில்லைப் போல் தெரிகிறதே தம்பி.!!😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை ஏலம் விடுவதைத் தடுக்க வேண்டும்: மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

spacer.png

இலங்கை அரசாங்கம் கைப்பற்றிய படகுகளை ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்தவும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தவும் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ள ஸ்டாலின், தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 105 மீன்பிடி படகுகளை ஏலம் விடுவது குறித்தும், ஜனவரி 23ம் திகதி இலங்கை நாட்டினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்தும் கேள்வி எழுப்பியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கடிதத்தில், “இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 105 மீன்பிடிப் படகுகளை மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை வருகிற 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை ஏலத்தில் விடுவதற்கு முயற்சி செய்வதாக வந்துள்ள செய்தி கவலையையும் வேதனையையும் அளிக்கிறது.

இந்திய-இலங்கை கூட்டு பணிக்குழுவானது மீன்பிடித்தல் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கும் சூழ்நிலையில், இந்த ஏலம் விடுவதற்கான அறிவிப்பு துரதிருஷ்டவசமானது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண முன்வந்துள்ள தமிழக மீனவர்கள் மத்தியில் இலங்கை அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள மீட்க இயலாத 125 தமிழக மீன்பிடி படகுகளை அப்புறப்படுத்துவதற்கான செயல்முறை மற்றும் வழிமுறைகளை இறுதி செய்வதற்கு ஒரு தொழில்நுட்பக்குழுவை இலங்கைக்கு அனுப்புமாறு மத்திய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தமிழக அரசை கேட்டுக்கொண்டது.

அதன் அடிப்படையில் மீன்பிடி படகுகளை ஆய்வு செய்து அப்புறப்படுத்துவதை மேற்பார்வையிடவும் விற்பனை வருவாயை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும் தமிழகத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் கொள்முதல் செய்வோரை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அவர்களின் இலங்கை பயண விபரங்களையும் மத்திய வெளியுறவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சாதகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை, இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக மீன்பிடிப்படகுகளை ஏலம் விடுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதற்கு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்துள்ளதாக இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

இலங்கை அரசு முறையாக கலந்தாலோசனை மேற்கொள்ளாமல் ஏலத்தை நடத்த அவசரம் காட்டுவது, வாழ்வாதாரத்தை இழந்த தமிழக ஏழை மீனவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் இந்திய தூதரகமும் தமிழக அரசும் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாதிக்கும்.

மேலும் இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் மீன்பிடிப்படகுகள் அனைத்தும் இலங்கையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களால் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றியே விடுவிக்கப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்களின் படகுகளை எவ்வித சட்டப்பூர்வமான உரிமையும் இல்லாத இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை ஏலம்விட உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தை திரும்பப்பெறவும் இந்திய அரசின் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை கொண்டு இலங்கை அரசுக்கு இந்திய அரசின் மறுப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

இந்த சூழ்நிலையில், 2018-ம் ஆண்டுக்கு முன் கைப்பற்றப்பட்ட மற்றும் பழுது பார்க்க இயலாதென கருதப்படும் 125 தமிழக படகுகளை ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் 2018-ம் ஆண்டுக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை முன்கூட்டியே விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு இந்த விடயத்தில் உடனடியாக தலையிட வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
 

 

https://athavannews.com/2022/1263817

 

Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:

 

அதன் அடிப்படையில் மீன்பிடி படகுகளை ஆய்வு செய்து அப்புறப்படுத்துவதை மேற்பார்வையிடவும் விற்பனை வருவாயை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும் தமிழகத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் கொள்முதல் செய்வோரை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அவர்களின் இலங்கை பயண விபரங்களையும் மத்திய வெளியுறவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

கொள்ளை அடித்த பணத்தை மீண்டும் கொள்ளையர்களிடமே திருப்பி தரவேண்டும் என்ரு ஸ்டாலின் கோரிக்கை விடுக்கின்றாரம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறிமுதல் செய்த இந்திய படகுகளை  ஏலத்தில் விடுவதை நிறுத்தவேண்டும் - சுரேஸ் பிறேமசந்திரன்

( எம்.நியூட்டன்)

பறிமுதல் செய்த இந்திய படகுகளை  ஏலத்தில் விடுவதை நிறுத்தவேண்டும் தமிழக மக்கள், இலங்கை தமிழருக்கு பாதுகாப்பாக உள்ளனர் எனவே  தமிழக மக்களையும், இலங்கை தமிழ்மக்களையும் மோதவிடும் செயலை செய்ய வேண்டாம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமசந்திரன் தெரிவித்தார்.

IMG_20220126_135804.jpg

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பறிமுதல் செய்த இந்திய படகுகளை  ஏலத்தில் விடப்போவதாக  ஏற்கனவே கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.  இந்த வள்ளங்கள்  எல்லை மீறி வந்த படகுகளாக இருக்கலாம். சட்டவிரோதமாக வந்தவையாக இருக்கலாம், ஆனால் தமிழகம் என்பது ஈழத் தமிழ் மக்களுடைய பாதுகாவலனாக இருக்கக் கூடிய ஒரு பிரதேசம், இரு நாடாக உள்ளது. 

இது இலங்கை தமிழ் மக்களுக்கு ஒரு பலம்,  தற்போது கூட  அங்கு தங்கியுள்ள இலங்கைத் தமிழ்  மக்களுக்கு பல்வேறு பட்ட திட்டங்களை முன்னேடுத்துள்ளார்கள். அவ்வாறான சூழ்நிலையில் அவர்களின் படகுகளை ஏலத்தில் விடுவது நல்லதல்ல தற்போது இப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

 இலங்கை அரசாங்கம் எம்மிடம் கடன் பெற்றுக்கொள்வதற்கு முன்வந்துள்ள நிலையில் எமது படகுகளை ஏலத்தி விடப்போகிறார்கள் என்று  ஊடகங்களில், சமூகவலைத்தலங்களில் செய்திகள்  வெளிவந்த வண்ணமுள்ளது. ஆகவே இலங்கைத் தமிழ்மக்கள் இன்னும் தமக்கான நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கும் சமூகம். எங்களின் போராட்டம் முடிவடையவில்லை, போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளது. மீனவ மக்களுக்கு  பிரச்சினைகள் உள்ளது, அதை மறுக்க முடியாது. 

இந்த வகையில் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் பகையை வளர்த்துக் கொள்ளக்கூடாது ஏலத்தில் உள்ள படகுகள் நல்ல நிலையிலா அல்லது பழுதடைந்த நிலையிலா இருக்கின்றது என்பது தெரியாது தற்போது தமிழக அரசுக்கு நெருக்கடிகள் தோன்றியுள்ளது 

இதனை ஏலத்தில் விடுவதை கைவிடப்படவேண்டும் இதனை மீண்டும் ஒப்படைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெறவேண்டும். தற்போதைய  கடற்றொழில் அமைச்சர் இதனை  கவனத்திற் கொண்டு  செயற்படவேண்டும்  அவரும் முன்னாள் போராளியாக இருந்தவர் அவருக்கும் தமிழக மக்கள் எவ்வாறு இலங்கை தமிழ்மக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பது தெரியும்.

தமிழ்தாடு எத்தகைய பாதுகாப்பாக இலங்கை தமிழ்மக்களுக்கு உள்ளது என்பது தெரியும்.  எனவே  இந்த படகுகளை ஏலத்தில் விடுவதை நிறுத்த வேண்டும்.   தமிழக மக்கள் மத்தியில் கசப்பான எண்ணங்கள் வருவதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். கடற்தொழில் அமைச்சர் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றார்.

பறிமுதல் செய்த இந்திய படகுகளை  ஏலத்தில் விடுவதை நிறுத்தவேண்டும் - சுரேஸ் பிறேமசந்திரன் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்கள் பிரச்சனையில் சுயநல அரசியல்வாதிகள் ஆதாயம் தேடுகின்றனர்

January 26, 2022
spacer.png

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்ராலின் புரிந்து கொண்ட யதார்த்தத்தினை விளங்கிக் கொள்ளாத சுயநல அரசியல்வாதிகள் சிலர், அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன் பிடிப் படகுகளை ஏலம் விடுவது தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளை சேர்ந்த  சில அரசியல் பிரதிநிதிகளினால் வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், 
இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கு முன்னர் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட பல மீன்பிடிப் படகுகள் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும், பாவனைக்கு உதவாத நிலையில் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்படாமல் கைவிடப்படடிருந்த படகுகளே ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும், நீண்ட காலமாக இலங்கை கரைகளில் அவை தரித்திருப்பதால்,  சூழல் மாசடைதல் உட்பட பல்வேறு  அசௌகரியங்கள் எதிர்கொள்ளப்பட்ட நிலையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்ராலின், சம்மந்தப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளமையையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விவகாரம் தொடர்பான புரிதல் இல்லாதவர்களே, இந்தியக் கடற்றொழிலாளர்களின் படகுகள் ஏலமிடப்படும் விடயத்தினை திசை திருப்பும் வகையில்  கருத்து தெரிவிப்பதாகவும், அவை சுயலாப அரசியல் நோக்கங் கொண்டவை எனவும் தெரிவித்தார்.

 

https://globaltamilnews.net/2022/172319

 

 

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

மீனவர்கள் பிரச்சனையில் சுயநல அரசியல்வாதிகள் ஆதாயம் தேடுகின்றனர்

இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து தமிழினத்தை அழித்துவரும் சிங்கள இனத்திடமிருந்து விடுபடுவதற்காக தமிழினம் போராட்டம் நடத்தியபோது, அந்தப் போராட்டத்தில் சுயநலம் தேடி இன்று சிங்கள அரசில் அமைச்சராகவுள்ள உங்களை நீங்களே மறந்ததென்ன.🤔  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.