Jump to content

மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிலிருந்து மீண்டும் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிலிருந்து மீண்டும் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறதா?

  • நவீன்சிங் கட்கா
  • சுற்றுச்சூழல் செய்தியாளர்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

பூங்காக்களில் இருக்கும் கொரில்லாக்களில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

பூங்காக்களில் இருக்கும் கொரில்லாக்களிடம் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஹாங்காங்கில் ஒரு செல்லப் பிராணிக்கடை தொழிலாளி வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வெள்ளை எலிகளை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வெள்ளை எலியிடமிருந்து கடையில் வேலை பார்த்த நபருக்கு வைரஸ் பரவி இருக்கலாம் என ஹாங்காங் அதிகாரிகள் கூறுகின்றனர். இது உறுதிப்படுத்தப்படாத நிலையில், விலங்குகளுக்கிடையில் வைரஸ் பிறழ்வடைந்து மனிதர்கள் மத்தியில் புதிய தொற்று பரவல்களை ஏற்படுத்தும் சாத்தியம் குறித்தும் விலங்கு நல அறிவியலாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

ஹாங்காங்கில் வெள்ளை எலிகளைக் கொல்வது பல நாடுகளில் தலைப்புச் செய்தியாகியுள்ளது. மக்கள் வெள்ளை எலிகளை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதில் இருந்து காப்பாற்ற முன்வருகிறார்கள், மற்ற பலர் மரணத்தை எதிர்கொள்ளும் விலங்குகளை மீட்பதற்காக செல்லப்பிராணி கடைகளுக்குச் செல்கின்றனர்.

விலங்குகளுக்கிடையில் ஏற்பட்ட கோவிட் நோய்த் தொற்றுகளில் இது சமீபத்தியது. 32 நாடுகளில் சிங்கம், புலி, பூனை, நாய், லிங்ஸ், மிங்க் வரை பல உயிரினங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக, கடந்த மாதம் உலக விலங்கு நல அமைப்பு கூறியது.

ஆனால் இந்த விலங்குகளில், கிட்டத்தட்ட அனைத்தும் உயிரியல் பூங்காக்கள் மற்றும் கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்தன. அங்கு சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் ஒப்பீட்டளவில் எளிதானது என்பது குறிப்பிடத்தக்கது.

காட்டு விலங்குகள் தான் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் விலங்கு நல வல்லுநர்கள்.

இதுவரை ஒரே ஒரு காட்டு விலங்கினம் மட்டுமே (வெள்ளை வால் மான்) மனிதர்களால் பாதிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. அமெரிக்காவிலும் கனடாவிலும் விலங்குகளை பரிசோதித்த பிறகு இது நிரூபிக்கப்பட்டது, ஆனால் இன்னும் எந்த பரிசோதனையும் நடைபெறாத நாடுகளில் மனிதர்களிடமிருந்து மற்ற காட்டு விலங்குகளுக்கு வைரஸ் பரவுகிறது என்பதுதான் அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

வன விலங்குகளுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள உலக அளவில் வல்லுநர்களுடன் இணைந்து செயல்படுவதாக உலக விலங்கு நல அமைப்பு கூறுகிறது.

அது ஏன் முக்கியம்?

காடுகளில் உள்ள விலங்குகள் வைரசின் தோற்றுவாயாக மாறக்கூடும், மேலும் அதன் விளைவாக அபாயகரமான திரிபு உருவாகி அது மனிதர்கள் மற்றும் விலங்கினங்கள் இரண்டுக்கும் அச்சுறுத்தலாக அமையலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

"இந்த விஷயத்தில் காட்டு விலங்கு கண்காணிப்பு மிக முக்கியம், ஆனால் அது நடக்கவில்லை" என்கிறார் சிங்கப்பூரில் உள்ள டியூக் - என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் வளர்ந்து வரும் தொற்று நோய்த் திட்டப் பேராசிரியர் லின்ஃபா வாங் .

"நான் அதைச் செய்ய விரும்பினால் கூட, நான் எங்கிருந்து நிதியைப் பெறுவது, சோதனைகளின் மாதிரி அளவு என்ன, யாருடன் நான் ஒருங்கிணைந்து பணியாற்றுவேன் என்று எனக்குத் தெரியவில்லை.

"இது நாம் சமாளிக்க வேண்டிய பெரும் சவாலாக உள்ளது." என்கிறார் அவர்.

 

வெள்ளை வால் மான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

வெள்ளை வால் மான்

இந்த தொற்றுநோய் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதால் ஏற்பட்டதாக பரவலாக கருதப்படுகிறது. மேலும் உலக கால்நடை மருத்துவ சங்கத்தின் தொற்றுநோய் அபாய மேலாண்மை வல்லுநர் பேராசிரியர் நோயல் மிராண்டா, நாம் இப்போது மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு வைரஸ் பரவுவது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்.

"வனவிலங்குகளை கொரோனாவுக்காக கண்காணிப்பது உலகளாவிய ஒன்றாக இருக்க வேண்டும், இப்போது அப்படி இல்லை," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையிலான இடைமுகம் (தொடர்பு) ஆராயப்பட வேண்டும், அதற்கு பல துறைகள் ஒன்றோடொன்று தொடர்புடைய பிரச்சனைகளில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்."

உதாரணமாக, நகர்ப்புற திட்டமிடுவோர், கழிவு மேலாண்மை வல்லுநர்கள் ஆகியோருடன் விஞ்ஞானிகள் இணைந்து செயல்படவேண்டும் என்கிறார் அவர். வைரஸ் மனிதர்களிடமிருந்து கழிவுநீர் அல்லது உணவு கழிவுகள் மூலம் பரவும் அபாயத்தை சரி செய்யும் நோக்கில் பணியாற்ற வேண்டும் என்கிறார் அவர்.

வனவிலங்குகளில் வைரஸ் தோற்றுவாய்கள்

 

வெள்ளை எலிகளில் கொரோனா வைரஸ் பிறழ்வு ஏற்பட்டதாக ஹாங்காங் அதிகாரிகள் கூறுகிறார்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

வெள்ளை எலிகளிடம் கொரோனா வைரஸ் பிறழ்வு ஏற்பட்டதாக ஹாங்காங் அதிகாரிகள் கூறுகிறார்கள்

மனிதர்களைப் பாதிக்கும் வைரஸ்களுக்கான தோற்றுவாய்களாக விலங்குகள் பல சந்தர்ப்பங்களில் இருந்துள்ளன.

உதாரணமாக, வெளவால்கள் எபோலா, ஹெண்ட்ரா, நிபா வைரஸ்களுக்கான தோற்றுவாய்களாக இருந்துள்ளன. ரக்கூன்கள், நரிகள் ரேபிஸ் நோய்க்கான தோற்றுவாயாகவும், பேட்ஜர்கள் காசநோய்க்கான தோற்றுவாய்களாகவும் இருந்துள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

2009 ஆம் ஆண்டு பன்றிக்காய்ச்சல் தொற்றுநோய், விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு என அவர்கள் கூறுகிறார்கள். முதலில் பன்றிகள் மூலம் மனிதர்களுக்கும், பிறகு மனிதர்கள் மூலம் பன்றிகளுக்கும் வைரஸ் பரவியது.

வெள்ளை வால் மான்களில் (உடல்நலக்குறைவுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை) விஞ்ஞானிகள் SARS-COV-2 வைரசின் பிறழ்வுகள் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என சோதித்து வருகின்றனர்.

"வரிசைமுறைப் படுத்தப்பட்ட (சீக்வன்சிங் செய்யப்பட்ட) மாதிரிகளிலிருந்து குறிப்பிடத்தக்க பிறழ்வுகள் எதையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை," என்று பென் மாகாண பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரும் இணை இயக்குநருமான டாக்டர் சுரேஷ் குச்சிப்புடி கூறினார்.

"நாங்கள் பரிசோதித்த மாதிரிகள் தொற்று நோயின் ஆரம்ப கட்டத்தில் சேகரிக்கப்பட்டவை. வைரஸ் தொடர்ந்து மான்களிடையே பரவினால், வைரஸ் பிறழ்கிறதா இல்லையா என்பது சமீபத்திய எடுத்துக்காட்டுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தீர்மானிக்கப்படும், இது தற்போது நடந்து வருகிறது."

இருப்பினும், வைரஸ் எவ்வளவு அதிகமாக பரவுகிறதோ, அந்த அளவுக்கு பிறழ்வுக்கான வாய்ப்பு அதிகம், அது மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது.

மிகப் பெரிய சவால்

 

சிங்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சிங்கம்

முழு வனவிலங்குகளையும் எப்படி கண்காணிப்பில் வைப்பது? பாலூட்டி இனங்கள் மட்டும் 5,000க்கும் அதிகம் உள்ளன. புரொசீடிங்ஸ் ஆஃப் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சில் வெளியிடப்பட்டுள்ள ஓர் ஆய்வில், தன் செல்களின் மீது ACE2 புரதம் இருக்கும் 410 தனித்துவமான முதுகெலும்பு கொண்ட இனங்களை அடையாளம் கண்டுள்ளது. இந்த ACE2 புரதத்தின் மீது தான் கொரோனா வைரசால் ஒட்டிக் கொள்ள முடியும்.

ACE2 புரதமுள்ள எளிதில் பாதிக்கப்படக்கூடிய உயிரினங்களில், 252 பாலூட்டிகள், 72 பறவைகள், 65 மீன்கள், 17 ஊர்வன மற்றும் நான்கு நீர்நில வாழிகள் அடக்கம்.

"எல்லா பழைய உலக குரங்கின விலங்குகளும் ACE2 வழியாக SARS-COV-2 தொற்றுக்கு இலக்காகின்றன என்று எங்கள் பகுப்பாய்வில் தெரியவருகிறது. இதனால் சீனாவைச் சேர்ந்த 21 குரங்கின வகைகளில் பல SARS-COV-2 நோயின் தோற்றுவாயாக இருந்திருக்க சாத்தியமுண்டு," என 2020ஆம் ஆண்டில் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

"இது வைக்கோல் அடுக்குகளுக்கிடையில் ஊசியைத் தேடுவது போலிருக்கும். என ஹாங்காங்கின் சிட்டி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டிர்க் ஃபைஃபர் கூறினார்.

"கொரோனா நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்களைப் பெற இன்னமும் போராடும் நாடுகள் உள்ளன, அவர்களுக்கு இது முன்னுரிமைப் பணியாக இருக்காது.

"எனவே நாம் இதை எப்படி மேற்கொள்ளப் போகிறோம், அதை எவ்வாறு திறம்படச் செய்வது என்பது இப்போது முக்கிய கேள்வி." என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/science-60118503

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே… ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.
    • @தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை  மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣
    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.