Jump to content

சைக்கிளில் வேலைக்கு வர கோரிக்கை!


Recommended Posts

சைக்கிளில் வேலைக்கு வர கோரிக்கை!

சைக்கிளில் வேலைக்கு வர கோரிக்கை!

 

காற்று மாசுபாடு மற்றும் மேலும் பல காரணிகள் காரணமாக சைக்கிள் பாவனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, சைக்கிள் ஓட்டுவதற்காக ஒவ்வொரு வீதியிலும் ஒரு மருங்கை ஒதுக்குவதுடன், சுற்றாடல் அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சில ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குவதற்கான ஒழுங்குமுறை திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் உள்ள போது பயணிக்கும் ஒரு வாகனத்தில் கிலோமீட்டருக்கு 103.56 ரூபாவை அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சைக்கிள் பாவனையினால் காற்று மாசுபாட்டை குறைத்தல், நேர விரயத்தை தடுத்தல் போன்று தொற்றாத பல நோய்களை கட்டுப்படுத்த காணப்படும் வாய்ப்புகள் காரணமாக சைக்கிள் பாவனையை ஊக்குவிப்பதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். .

இதன்படி சைக்கிளை பயன்படுத்துவதன் மூலம் ஒரு கிலோ மீற்றருக்கு 236.48 ரூபாவை மிச்சப்படுத்த முடியும் எனவும் அரசாங்கத்திற்கு 339.98 ரூபா இலாபம் கிடைக்கப்பெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, இத்திட்டத்தை ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்தின் உதவியை நாடவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த வருடத்திற்குள் வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டுமாயின் மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

சைக்கிளில் வேலைக்கு வர கோரிக்கை!

எரிபொருள் தட்டுப்பாடும் விலையேற்றமும் நல்ல ஞானோதயத்தை குடுக்குது.....😁

Link to comment
Share on other sites

அமைச்சர் அவர்கள் ஊருக்கு உபதேசம் செய்ய முன்னர், தான் சைக்கிளில் பயணம் செய்து காட்ட வேண்டும்.அது  நாட்டுக்கும், சுற்றாடலுக்கும் , அமைச்சரின் வண்டிக்கும்( தொப்பை)  நன்மை பயக்கும். ஸ்கன்டிநேவியன் நாடுகளில் பிரதமர் கூட சைக்கிளில் தான் பயணம் செய்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

அமைச்சர் அவர்கள் ஊருக்கு உபதேசம் செய்ய முன்னர், தான் சைக்கிளில் பயணம் செய்து காட்ட வேண்டும்.அது  நாட்டுக்கும், சுற்றாடலுக்கும் , அமைச்சரின் வண்டிக்கும்( தொப்பை)  நன்மை பயக்கும். ஸ்கன்டிநேவியன் நாடுகளில் பிரதமர் கூட சைக்கிளில் தான் பயணம் செய்கின்றார்கள்.

ஸ்கன்டிநேவியன் நாடு அப்பிடி......கனடா நாட்டு அமைச்சர்கள் என்ன மாதிரி?😁

ஜேர்மன் உணவு வேளாண்மை அமைச்சர் பதவி ஏற்ற நாளிலையே சயிக்கிள் பயணம் தான் கண்டியளோ😂

எதுக்கும் சிறிலங்கா அரசு சயிக்கிள்ளை எல்லாம் போய் சேக்கஸ் காட்ட வேண்டாம்.சமமான சட்டங்களை ஒழுங்காய் அமுல்படுத்தினாலே   இப்போதைக்கு காணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

18 minutes ago, குமாரசாமி said:

ஸ்கன்டிநேவியன் நாடு அப்பிடி......கனடா நாட்டு அமைச்சர்கள் என்ன மாதிரி?😁

ஜேர்மன் உணவு வேளாண்மை அமைச்சர் பதவி ஏற்ற நாளிலையே சயிக்கிள் பயணம் தான் கண்டியளோ😂

எதுக்கும் சிறிலங்கா அரசு சயிக்கிள்ளை எல்லாம் போய் சேக்கஸ் காட்ட வேண்டாம்.சமமான சட்டங்களை ஒழுங்காய் அமுல்படுத்தினாலே   இப்போதைக்கு காணும்

அவர்கள் இன்னும் சரியான முறையில் அன்பளிப்புகள் பெற கற்றுக் கொள்ளவில்லை அதனால சயிக்கிளை பாவிக்கினம்......மேலும் இங்கே சயிக்கிள் ஓட்டுபவர்களைப் பாருங்கள் நிஜமாகவே சயிக்கிள் ஓடுகிறவர்களாக இருக்கிறார்கள்......நம்மட அமைச்சரவையில் உள்ளவர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள் ....உங்களுக்கு ஈவு இரக்கமே இல்லையா......!  🤔

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

 

.....நம்மட அமைச்சரவையில் உள்ளவர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள் ....உங்களுக்கு ஈவு இரக்கமே இல்லையா......!  🤔

அவை யார் என்பதுதான் பிரச்சனை. சைக்கிளைப் பார்த்து சிலர் குசியாகலாம். 🤣

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

ஸ்கன்டிநேவியன் நாடு அப்பிடி......கனடா நாட்டு அமைச்சர்கள் என்ன மாதிரி?😁

 

 
நான் அறிந்தவரை யாரும் வேலைக்கு சைக்கிளில் போவதில்லை , பொழுது போக்குக்கு ஓடுவார்கள்.
ஆனால் எங்கட ஐயாத்துரை யோகாசனத்தில் வின்னர், அவருடைய மயில் நிலை ( Peacock Pose) உலக பிரசித்தி பெற்றது, நீண்ட தூர ஓட்டத்திலும் ஈடுபாடு உடையவர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:
நான் அறிந்தவரை யாரும் வேலைக்கு சைக்கிளில் போவதில்லை , பொழுது போக்குக்கு ஓடுவார்கள்.
ஆனால் எங்கட ஐயாத்துரை யோகாசனத்தில் வின்னர், அவருடைய மயில் நிலை ( Peacock Pose) உலக பிரசித்தி பெற்றது, நீண்ட தூர ஓட்டத்திலும் ஈடுபாடு உடையவர்.
 

உங்கடை கொய்யாத்துரை குத்துச்சண்டையிலையும் வல்லவர் எண்டு உலகத்துக்கே தெரியும். தேப்பன்ரை அரசியல் செல்வாக்கு இவருக்கு இருந்தாலும் விளையாட்டு வீரர் எண்ட பெருமை உலகத்திலை வேறை எந்த அரசியல்வாதிக்கும் இல்லை. அதை விட எனக்கு  பிடித்த அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும்போது  வராத கரிசனை, தடை செய்யப்பட்ட எரிகுண்டுகளை அதே மக்கள் மீது ஏவி அழித்த போது வராத கரிசனை, அது ஏது காசில்லை என்றவுடன் மக்களின் ஆரோக்கியத்தில் அப்படி ஒரு கரிசனை ஏற்படுகிறது?  கவுரவமாய் மூடி மறைத்துவிட்டேன் ஓட்டையை என்று நினைப்பார். உரப்பற்றாக்குறைக்கு ஒரு விளக்கம், பொருளாதாரம் விழும்போது ஒரு விளக்கம். பாருங்கள் எப்படியெல்லாம் சந்தர்ப்பத்தை சாதகமாக்கி தம்மை நிஞாயப்படுத்துவதையும், அதையும் சிலர் பாராட்டுவதையும். இப்படித்தான் ஐ. நாவிலும் பாராட்டு பெறுகிறார்களோ? இதற்கு எதற்கு சொகுசு ரயில் இறக்குமதி அதுவும் கடனில்? கண்காட்சிக்காயிருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். முதலில் இதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஒராளுக்கு பின்னும் முன்னுமா ஐந்து பத்து என்ற வாகனப்பவனி. அதைமுதல் நிறுத்துங்கோ.

நான் வேலை செய்யுமிடத்திற்கு  ஈருரளியிற் சென்றால் அதற்குக் கொடுப்பனவு உள்ளது. 0 - 5 இலிருந்து தொடங்கித் தூரம் கூடக் கொடுப்பணவும் கூடும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MY3 தலைமையிலான ஆட்சியில் நடந்த தேர்தலில் கெத்தாகா Range Rover இல் வந்து வாக்களித்து ஆட்சியை பிடித்து சனாதிபதியாகி இப்போது மக்களை சைக்கிளிலை மிதிக்கட்டாம்.. ஆனால் தாங்கள் தற்போதும் ஆடம்பர வாகனங்களில் பவனி.

நல்லாட்சிக் காலத்தில் 12/13 ஆயிரங்கள் விற்ற சைக்கிள் இன்று 28/29 ஆயிரங்கள். சூப்பர்👌👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

காற்று மாசுபாடு மற்றும் மேலும் பல காரணிகள் காரணமாக சைக்கிள் பாவனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இவர் சீனாவிலிருந்து சைக்கிள் இறக்குமதி செய்ய போகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

நல்ல விடயம். முதலில் இதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஒராளுக்கு பின்னும் முன்னுமா ஐந்து பத்து என்ற வாகனப்பவனி. அதைமுதல் நிறுத்துங்கோ.

சொறிலங்கா போன்ற நாடுகளில் முன்னாள் குற்றவாளிகளே தற்போதைய அமைச்சர்கள் அவர்களால் சைக்கிளில் பராளுமன்றமோ  ஓய்வு நேர சைக்கிள் ஓட்டமோ முடியாது ஏனென்றால் அவர்களை போட்டு தள்ள வீதிகளில் எதிரிகள் எப்பவுமே காத்து கொண்டு இருப்பார்கள் அதுதான் முன்னுக்கு ஐந்து பின்னுக்கு ஐந்து என்று மக்களின் வரிப்பணத்தை சில்வழிப்பார்கள் .........................ஆனால் அதைப்பார்த்து நம்ம அரசியல்வாதியும் 10 க்கு மேற்பட்ட முன்னாள் புனர்வாழ்வு அங்கவீனர் போராளிகளை தனக்கு குண்டு வைக்க வந்தவர்கள் என்று பொய்யான கதையை சொல்லி அவர்களை சிறையில் தள்ளி தனக்கு இராணுவ பாதுகாப்பு தேடிக்கொண்ட வடிவேல் கதைகளும் உண்டு .😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

இதற்கு எதற்கு சொகுசு ரயில் இறக்குமதி அதுவும் கடனில்? கண்காட்சிக்காயிருக்கும்!

அதுவும்ஓட இப்ப எண்ணெய் இல்லையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, zuma said:

அமைச்சர் அவர்கள் ஊருக்கு உபதேசம் செய்ய முன்னர், தான் சைக்கிளில் பயணம் செய்து காட்ட வேண்டும்.

அங்கேதான் பிரச்சினையே. அமைச்சர் தனது வாகனங்களும் இல்லாமல், மெய்ப்பாதுகாவலர் பரிவாரங்களும் இல்லாமல் தனியே சைக்கிளில் போனார் என்றால், இப்போது இருக்கிற அரச எதிர்ப்புணர்வினால் உந்தப்பட்ட ஊர்ச்சனம் அவருக்கு சாத்துமெண்டதும் அவருக்குத் தெரியும்.

பரிவாரங்கள் சகிதம், வாகனத்தில் போகும்போது ஜனாதிபதிக்கே கூக்காட்டிக் கேலிசெய்யும் சனம், அமைச்சர் தனியே மாட்டுப்பட்டால் சும்மா விடுமா? 

உபதேசம் எல்லாம் ஊருக்குத்தான்.

அண்மையில சிங்கள நண்பர் ஒருவர் எழுதியதைப் பார்த்தேன். நாட்டுச் சனம் இருவேளை மட்டும் உண்ணவேண்டும் என்றும், ஒரு மரக்கறி போதும் என்றும் சொல்லிவிட்டு, ராஜபக்ஷேக்கள் ஒவ்வொரு நேரச் சாப்பாட்டிற்கும் குறைந்தது 15 வகை கறிகளைச் சப்பிடுகிறார்களாம். இது எப்படியிருக்கு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

அண்மையில சிங்கள நண்பர் ஒருவர் எழுதியதைப் பார்த்தேன். நாட்டுச் சனம் இருவேளை மட்டும் உண்ணவேண்டும் என்றும், ஒரு மரக்கறி போதும் என்றும் சொல்லிவிட்டு, ராஜபக்ஷேக்கள் ஒவ்வொரு நேரச் சாப்பாட்டிற்கும் குறைந்தது 15 வகை கறிகளைச் சப்பிடுகிறார்களாம். இது எப்படியிருக்கு? 

அடுத்தடுத்த தேர்தல்களில் ஜேவிபி கூடுதலான ஆசனங்களை எடுக்கும் என்கிறார்கள்.

இருபெரும் கட்களிலும் மிகுந்த வெறுப்பில் இருப்பதாக சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

15 minutes ago, ஈழப்பிரியன் said:

அடுத்தடுத்த தேர்தல்களில் ஜேவிபி கூடுதலான ஆசனங்களை எடுக்கும் என்கிறார்கள்.

இருபெரும் கட்களிலும் மிகுந்த வெறுப்பில் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆச்சரியம் ஏதும் இல்லை. ஜே.வி.பி கிழக்கில் கூட தீவிரமாக வேலை செய்வதாக கேள்விப்பட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

ஆச்சரியம் ஏதும் இல்லை. ஜே.வி.பி கிழக்கில் கூட தீவிரமாக வேலை செய்வதாக கேள்விப்பட்டேன்.

எப்படி என்ன தான் வேலை செய்தாலும்

தமிழ் பிரச்சனைக்கு ஆணித்தரமான தீர்வு என்று ஒன்றுமில்லை.

Link to comment
Share on other sites

3 minutes ago, ஈழப்பிரியன் said:

எப்படி என்ன தான் வேலை செய்தாலும்

தமிழ் பிரச்சனைக்கு ஆணித்தரமான தீர்வு என்று ஒன்றுமில்லை.

தமிழருக்கு தீர்வு கொடுக்கக்கூடாது என்பதில் எல்லா சிங்கள கட்சிகளும் ஒரே முடிவில் தான் உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

தமிழருக்கு தீர்வு கொடுக்கக்கூடாது என்பதில் எல்லா சிங்கள கட்சிகளும் ஒரே முடிவில் தான் உள்ளார்கள்.

👍👍👍🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

ஆச்சரியம் ஏதும் இல்லை. ஜே.வி.பி கிழக்கில் கூட தீவிரமாக வேலை செய்வதாக கேள்விப்பட்டேன்.

எல்லாம் அரச கட்டில் ஏறும்வரை, அதற்கப்புறம் எல்லா பேயும் ஒன்றுதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.