Jump to content

தங்க மங்கையின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள்!


Recommended Posts

தங்க மங்கையின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள்!

தங்க மங்கையின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள்!

 

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த யுவதி பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்ற செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில் நேற்று (26) மாலை கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் உள்ள யுவதியின் வீட்டிற்கு விளையாட்டுத்துறை அமைச்சின் வடமாகாண திட்டமிடல் முகாமையாளர் காமினி கொஸ்தா, கிழக்கு மாகாண திட்டமிடல் முகாமையாளர் கேமந்த பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜங்கயன் இராமநாதன் அவர்களின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் நேரடியாக சென்று யுவதியின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டுள்ளார்கள்.

கடந்த 18.01.2022 அன்று பாகிஸ்தானில் லாகூரில் இடம்பெற்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான 2 வது சவேட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 25 வயதுக்குட்ப்பட்ட 50-55 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கத்தினை பெற்றிருந்தார்.

இந்நிலையில் குறித்த யுவதியின் வீட்டுக்கு சென்ற இவர்கள் யுவதியின் குடும்ப நிலை தொடர்பில் விசாரித்துள்ளதுடன் அவரின் எதிர்கால இலக்கினை அடைய ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்

அத்தோடு அவருக்கான உதவிகளை வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு முன்வந்துள்ளதுடன் பாராளுமன் உறுப்பினர்கள் ஊடாகவும் யுவதியின் தேவைகளை பூர்த்தி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
 

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

தங்க மங்கையின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள்! (adaderana.lk)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

வீட்டிற்கு விளையாட்டுத்துறை அமைச்சின் வடமாகாண திட்டமிடல் முகாமையாளர் காமினி கொஸ்தா, கிழக்கு மாகாண திட்டமிடல் முகாமையாளர் கேமந்த பண்டா

ம் வடக்கு கிழக்கு எல்லாம் சிங்கள அதிகாரிகள்.

Link to comment
Share on other sites

இவரை வைத்து சிலர் பணம் சேகரிக்கிறார்களோ என சந்தேகம் எழுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல்.....ஏதோ கொஞ்சமாவது அவருக்கு சுவறட்டும்..........!   😁

Link to comment
Share on other sites

குத்துச் சண்டை வீராங்கனை தங்க மங்கையின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள், அதிகாரத் தொனியின்றிப் பயத்துடன் பவ்வியமாகத்தான் விசாரித்து ஆலோசனை வழங்கியிருப்பார்கள்.🤭 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

நல்ல செயல்.....ஏதோ கொஞ்சமாவது அவருக்கு சுவறட்டும்..........!   😁

அப்பிடி என்கிறீர்களா?

சிலவேளை என்னம்மா ஏதாவது பரிசாக தொகைகள் கிடைத்ததா?

விரும்பினால் அரசுக்கு உதவி செய்யலாம் என்றும் கேட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/1/2022 at 15:49, ஈழப்பிரியன் said:

ம் வடக்கு கிழக்கு எல்லாம் சிங்கள அதிகாரிகள்.

 

On 27/1/2022 at 14:20, nunavilan said:

இவரை வைத்து சிலர் பணம் சேகரிக்கிறார்களோ என சந்தேகம் எழுகிறது. 

 

On 27/1/2022 at 18:33, ஈழப்பிரியன் said:

அப்பிடி என்கிறீர்களா?

சிலவேளை என்னம்மா ஏதாவது பரிசாக தொகைகள் கிடைத்ததா?

விரும்பினால் அரசுக்கு உதவி செய்யலாம் என்றும் கேட்டிருக்கலாம்.

எடுத்தமாம் கவுட்டமாம் என்றில்லாமல் அந்த பிள்ளையின் எதிர்காலத்தையும் நாம் கவனத்திலெடுத்து நகர வேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.