Jump to content

திரைமறைவு அரசியல் நிகழ்ச்சி நிரலில்!! தமிழ்தேசியமக்கள் முன்னணி!! வினோ எம்பி குற்றச்சாட்டு!


Recommended Posts

திரைமறைவு அரசியல் நிகழ்ச்சி நிரலில்!! தமிழ்தேசியமக்கள் முன்னணி!! வினோ எம்பி குற்றச்சாட்டு!

 

 

 
திரைமறைவு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் இருந்து கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.
vino-300x225.jpg
ஊடகவியலாளர் சுகிர்தராஜன் உண்மையை ஆதாரத்துடன் உலகத்துக்கும் நாட்டுக்கும் தெரியப்படுத்தியமையால் படுகொலை செய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே. தமிழ்தேசத்தின்பால் பற்றுக்கொண்டு, ஊடகவியலாளர்கள் உழைத்துக்கொண்டிருந்த சமயம் அது தங்களது அரசியல் நடவடிக்கைக்கு சர்வதேச ரீதியாக குந்தகத்தை ஏற்படுத்தும் என்பதற்காக ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட தொடர்ச்சியான வரலாற்றை நாங்கள் பார்க்கின்றோம்.
அரசாங்கம் தமிழ் மக்களையும் தமிழ் கட்சிகளையும் மீண்டும் மீண்டும் ஏமாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் நாங்கள் சர்வதேச ரீதியான ஆதரவை பெற்றால் மாத்திரமே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கான நியாயமான, நீடித்து நிற்க கூடிய தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும். நாங்கள் பிளவு பட்டிருந்தால் எமக்கான தீர்வு எட்டாக்கனியாகவே அமைவதுடன் வாழ்நாள் முழுவதும் போராடும் நிலையே ஏற்படும்.
நாங்கள் பிளவுபட்டுக்கொண்டிருப்பது தமிழ் மக்களின் சாபக்கேடாகவே இருக்கிறது.
தற்போதைய சூழலில் சாத்தியமான யதார்த்தபூர்வமான தமிழ் மக்களின் தற்போதைய தேவையை நிலை நிறுத்தி தற்காலிகமாகவேனும் ஒரு தீர்வினை எட்டவேண்டும் என்பதற்காக 13 ஆம் திருத்த சட்டத்தை அமுல்படுத்தக் கோரி அனைத்துக்கட்சிகளும் கையெழுத்திட்டு ஒரு விடயத்தை அனுப்புயிருக்கின்றோம்.
அதனை குழப்புவதற்காக ஏதோ ஒரு திரைமறைவு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் இருந்து கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதை நாம் பார்க்கின்றோம். அதற்கு கூட்டமைப்பில் இருக்கின்ற, ஒற்றுமைப்பட்ட இந்தகட்சிகளில் இருக்கின்ற ஒரு பிரிவினரும் மறைமுகமாக ஆதரவு வழங்கும் நிலை இருக்கிறது.
குறிப்பாக தமிழரசுக்கட்சியில் இருக்கின்ற ஒருபகுதியினர் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தினை முன்னெடுக்கின்றனர். எதற்காக, அங்கே ஒருமுகம்! இங்கே ஒருமுகம்! சம்பந்தன் ஐயா மாவைசேனாதிராஜா ஆகியோர் குறித்த வரைபில் கையொப்பம் இட்டே உள்ளனர். அதற்கு எதிராக அதேகட்சியை சேர்ந்த ஒரு பிரிவினர் முண்னணியின் நிலைப்பாட்டினை ஒத்து இப்படியான விந்தையான நடவடிக்கையில் இறங்கியுள்ளதை அவதானிக்க முடியும். இது தான் தமிழ்மக்களின் சாபக்கேடு.
நாம் எப்போதுதான் ஒன்றுபடப்போகின்றோம். ஆயினும் மிகப்பெரிய பலமான ஒரு கூட்டை உருவாக்குவதற்கான முயற்சியினை நாங்கள் எடுத்திருக்கின்றோம். அந்த ஒற்றுமை முயற்சிக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் தடைகள் வருகின்றன. அவற்றை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அந்த ஒற்றுமையை குழப்பி இதனை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்ற முயற்சிகளை ஆரம்பத்திலேயே எடுத்தார்கள். ஆனால் அனைத்தையும் தகர்த்தெறிந்து முதலாவது முயற்சியில் நாங்கள் வெற்றிகண்டிருக்கின்றோம். எத்தனை தடைகள் வந்தாலும் அனைத்தையும் உடைத்தெறிந்து எமது மக்களின் உண்மையான விடுதலைக்காக உழைப்போம்.என்றார்

Thinakkural.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் நிகழ்ச்சியின் பின்னணியிலேயே எப்போதும் ஒரு கூட்டணி பிரிந்து நின்று குழப்பிக்கொண்டும், தடைகளை ஏற்படுத்திக்கொண்டும் இருக்கும். அதை முறியடித்து முன்னேறினீர்கள் என்றால், அவர்களும் வேறு வழியில்லாமல் இணைவார்கள் உங்களுடன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

திரைமறைவு அரசியல் நிகழ்ச்சி நிரலில்!! தமிழ்தேசியமக்கள் முன்னணி!! வினோ எம்பி குற்றச்சாட்டு!

ஆளையாள் சாட்டாமல்

முதலில் நீங்கள் யாருடைய நிகழ்ச்சி நிரலில் முகவர்களாக செயல்படுகிறீர்கள் என்று சொல்லுங்கோ பார்ப்பம்.

48 minutes ago, satan said:

அரசியல் நிகழ்ச்சியின் பின்னணியிலேயே எப்போதும் ஒரு கூட்டணி பிரிந்து நின்று குழப்பிக்கொண்டும், தடைகளை ஏற்படுத்திக்கொண்டும் இருக்கும். அதை முறியடித்து முன்னேறினீர்கள் என்றால், அவர்களும் வேறு வழியில்லாமல் இணைவார்கள் உங்களுடன். 

ஒற்றுமைப்பட்டாலும் என்ற பயத்திலேயே யாழில் முகாமிட்டு நுhற்றுக் கணக்கானவர்களை இறக்கிவிட்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

ஆளையாள் சாட்டாமல்

முதலில் நீங்கள் யாருடைய நிகழ்ச்சி நிரலில் முகவர்களாக செயல்படுகிறீர்கள் என்று சொல்லுங்கோ பார்ப்பம்.

ஒற்றுமைப்பட்டாலும் என்ற பயத்திலேயே யாழில் முகாமிட்டு நுhற்றுக் கணக்கானவர்களை இறக்கிவிட்டிருக்கிறார்கள்.

ஏத்திவிட்டு கூத்துப்பாக்க.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.