Jump to content

வடக்கு தலைவர்களின் சதியில் இருந்து காப்பாற்றவே மக்கள் எனக்கு வாக்களித்தார்கள் – பிள்ளையான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு தலைவர்களின் சதியில் இருந்து காப்பாற்றவே மக்கள் எனக்கு வாக்களித்தார்கள் – பிள்ளையான்

spacer.png

கிழக்கு மாகாணத்தின் தனித்துவம்பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள் காப்பாற்றவேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர் என   மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேணி கிராமத்திற்கான பிரதான வீதியை புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “வடகிழக்கில் நாடாளுமன்ற தேர்தலில்போட்டியிட்டவர்களில் அதிகூடிய விரும்புவாக்கு எனக்கு கிடைத்தது. அதற்கு காரணம் இந்த மண்ணை நம்பி பணியாற்றியவன்,கிழக்கு மாகாணத்தின் தனித்துவம்பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள் காப்பாற்றவேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர்.

நான் சிறையிலிருந்து வெளிவரும்போது கொவிட் தொற்று உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தினை விரைவாக அமுலாக்குவதில் மிகப்பெரிய சங்கடங்களும் உள்ள சூழ்நிலையில்தான் உள்ளோம்.

இருந்தபோதிலும் நாங்கள் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டுவருகின்றோம். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒரு தனித்துவமான கட்சி. எமது கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டு வைத்துவைத்துள்ளது.

அந்த கட்சியின் உறுப்பினர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவுள்ளார். ஒரு இணக்கப்பாட்டுடன் நாங்கள் செயற்படுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றின் காரணமான கடுமையான நெருக்கடிகளுக்கும் மத்தியில் பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்,பலவற்றை செய்துவருகின்றோம்.

நான் கல்வைத்தேன் என்பதற்காக கட்டப்படாமலிருந்த பொதுநூலகத்திற்காக கட்டப்பணிக்கு நான் 200மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடுசெய்து பணி நடைபெற்றுவருகின்றது. இந்த கொரனா தொற்று அதிகரிக்காத நிலையிருந்தால் மேமாதம் அல்லது அதற்கு பின்னர் நூலகம் திறந்துவைக்கப்படும்.

அதேபோன்று 62கிலோமீற்றர் பாதைகளை புனரமைப்புக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 100கிலோமீற்றர் முதல் கட்ட அனுமதி எனக்கு கிடைத்திருந்தது. இரு வாரத்தில் மேலும் 40கிலாமீற்றர் வீதிவரவுள்ளது. பல அபிவிருத்திசார்ந்த நிதிகளை நாங்கள் கொண்டுவந்திருக்கின்றோம்.

இந்த நன்மைகள் ஊடாக கிராமங்களில் மாற்றங்கள் ஏற்படவேண்டும். கல்வியும் பொருளாதாரமும் இல்லையென்றால் மிகவும் பின்தங்கிய நிலைக்குசென்றுவிடும். அதனை கட்டியெழுப்புவதற்கான தளம் இன்னும் எங்களுக்கு போதாதாகவேயுள்ளது.

நாங்கள் எமது பிரதேசத்தின் உற்பத்தி துறையினை சர்வதேசத்தின் தரத்திற்கு கொண்டுசெல்வதற்கான கல்விதுறையை நாங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். அதேபோன்று தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு இளைஞர் யுவதிகளுக்கு தேவையான மொழியறிவுகளை வழங்குவதற்கு கிராம மட்ட கற்பித்தல்செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.”  என தெரிவித்தார்.
 

 

https://athavannews.com/2022/1263874

 

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

கிழக்கு மாகாணத்தின் தனித்துவம்பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள் காப்பாற்றவேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர் என   மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மதரீதியாக இயங்கும் இனம் ஒன்று அவர்களுக்குக் கிடைத்த அரச அதிகாரத்துடனும், மதரீதியாகக் கிடைக்கும் பெரும் பொருள்ச் செல்வாக்கையும் வைத்துத் தமிழர்களுடைய வாழ்விடங்களையும், காணிகளோடு தொழில் நிலையங்களையும் கைப்பற்றி அங்குள்ள தமிழினத்தை ஓட்டாண்டியாக்க முயன்றபோது அதனை ஓரளவிற்கேனும் தடுத்தாட்கொண்ட பிள்ளையானைப் பாராட்டுவதில் தப்பில்லை, அந்தச் செயற்பாட்டின் நன்றிக்காகவே அங்குவாழும் இளைஞர் யுவதிகள் அவருக்கு அதிகூடிய வாக்கினையளித்து சிறையிலிருந்து மீட்டெடுத்தனர் என்பதுதான் யதார்த்தம்.

மறுபக்கம் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு என அங்கு ஊறிப்போயுள்ள துவேசம் பிள்ளையான் போன்றவர்களிலும் உறைந்துள்ளதால் அது அவர்கள் பேச்சிலும் நாற்றத்தைக் கொண்டுவருகிறது. உண்மையில் மட்டக்களப்பை முன்னேற்றியதில் யாழ்ப்பாண மக்களுக்குப் பெரும் பங்குண்டு. அதேநேரம் அங்கு சாதி, சமயம், கற்றவர், பெரும்குலத்தோர் என்ற செருக்குடன் சென்று குடியேறிய யாழப்பாண மக்களால் மட்டக்களப்பைப் பூர்வீகமாகக் கொண்ட குடியினர் பட்டதுன்பங்களும் அனேகம் என்பதையும் மறுதலிக்க முடியாது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பிள்ளையான் சிங்களவர்களை விட துவேசம் பிடித்தவர்......

சந்தர்ப்பம் வந்த போதே தனியக பிரிந்து போயிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசனை  நம்பி புருசனை????

போய்  வாருங்கள்😭

கதவு  திறந்து  இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

கிழக்கு மாகாணத்தின் தனித்துவம்பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள்

சிங்கள எஜமானர்களின் விருப்புக்கேற்றவாறு ஒவ்வொன்றும் குரைக்குது. வடக்கென்றும், கிழக்கென்றும் பிரிக்குது. இதனால் ஒருநாள் வருந்த வேண்டிவரும் இதுவல்ல, வரும் சந்ததி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குத் தலைவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்? 

சம்பந்தனையும் சாணக்கியனையுமா..

வடக்கில் தலைவர்கள் என்று தற்போது ஒருவரும் இல்லையே.. 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வடக்குத் தலைவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்? 

சம்பந்தனையும் சாணக்கியனையுமா..

வடக்கில் தலைவர்கள் என்று தற்போது ஒருவரும் இல்லையே.. 

🤣

சுமந்திரனையாக்கும் 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வடக்குத் தலைவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்? 

சம்பந்தனையும் சாணக்கியனையுமா..

வடக்கில் தலைவர்கள் என்று தற்போது ஒருவரும் இல்லையே.. 

🤣

அவருக்கென்ன காரணமா தேவை??

காரியம்  நடக்கணும்

அதுக்கு எதையும்  தேடலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

சுமந்திரனையாக்கும் 🤪

அட, சுமந்திரனை தலைவர் என்று பிள்ளையான் ஏற்றுக்கொண்டுவிட்டார..?

சொல்லவேயில..🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

வடக்குத் தலைவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்? 

சம்பந்தனையும் சாணக்கியனையுமா..

வடக்கில் தலைவர்கள் என்று தற்போது ஒருவரும் இல்லையே.. 

🤣

தலைவர் பிரபாகரனை.

அவரை எதிர்த்துத்தான் இவரும் கருணாவும் வெளியேறிச் சென்று எதிரியுடன் சேர்ந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரஞ்சித் said:

தலைவர் பிரபாகரனை.

அவரை எதிர்த்துத்தான் இவரும் கருணாவும் வெளியேறிச் சென்று எதிரியுடன் சேர்ந்தார்கள்.

அந்த மனிதனின் நேர்மைக்கு இங்கே ஒருவரும் கால்காசு பெறுமதி பெறார். 

""எறும்பு ஊர்ந்து மரம் சாய்வதில்லை""

🙏

Link to comment
Share on other sites

12 hours ago, கிருபன் said:

வடக்கு தலைவர்களின் சதியில் இருந்து காப்பாற்றவே மக்கள் எனக்கு வாக்களித்தார்கள் – பிள்ளையான்

spacer.png

கிழக்கு மாகாணத்தின் தனித்துவம்பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள் காப்பாற்றவேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர் என   மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேணி கிராமத்திற்கான பிரதான வீதியை புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “வடகிழக்கில் நாடாளுமன்ற தேர்தலில்போட்டியிட்டவர்களில் அதிகூடிய விரும்புவாக்கு எனக்கு கிடைத்தது. அதற்கு காரணம் இந்த மண்ணை நம்பி பணியாற்றியவன்,கிழக்கு மாகாணத்தின் தனித்துவம்பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள் காப்பாற்றவேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர்.

நான் சிறையிலிருந்து வெளிவரும்போது கொவிட் தொற்று உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தினை விரைவாக அமுலாக்குவதில் மிகப்பெரிய சங்கடங்களும் உள்ள சூழ்நிலையில்தான் உள்ளோம்.

இருந்தபோதிலும் நாங்கள் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டுவருகின்றோம். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒரு தனித்துவமான கட்சி. எமது கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டு வைத்துவைத்துள்ளது.

அந்த கட்சியின் உறுப்பினர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவுள்ளார். ஒரு இணக்கப்பாட்டுடன் நாங்கள் செயற்படுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றின் காரணமான கடுமையான நெருக்கடிகளுக்கும் மத்தியில் பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்,பலவற்றை செய்துவருகின்றோம்.

நான் கல்வைத்தேன் என்பதற்காக கட்டப்படாமலிருந்த பொதுநூலகத்திற்காக கட்டப்பணிக்கு நான் 200மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடுசெய்து பணி நடைபெற்றுவருகின்றது. இந்த கொரனா தொற்று அதிகரிக்காத நிலையிருந்தால் மேமாதம் அல்லது அதற்கு பின்னர் நூலகம் திறந்துவைக்கப்படும்.

அதேபோன்று 62கிலோமீற்றர் பாதைகளை புனரமைப்புக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 100கிலோமீற்றர் முதல் கட்ட அனுமதி எனக்கு கிடைத்திருந்தது. இரு வாரத்தில் மேலும் 40கிலாமீற்றர் வீதிவரவுள்ளது. பல அபிவிருத்திசார்ந்த நிதிகளை நாங்கள் கொண்டுவந்திருக்கின்றோம்.

இந்த நன்மைகள் ஊடாக கிராமங்களில் மாற்றங்கள் ஏற்படவேண்டும். கல்வியும் பொருளாதாரமும் இல்லையென்றால் மிகவும் பின்தங்கிய நிலைக்குசென்றுவிடும். அதனை கட்டியெழுப்புவதற்கான தளம் இன்னும் எங்களுக்கு போதாதாகவேயுள்ளது.

நாங்கள் எமது பிரதேசத்தின் உற்பத்தி துறையினை சர்வதேசத்தின் தரத்திற்கு கொண்டுசெல்வதற்கான கல்விதுறையை நாங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். அதேபோன்று தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு இளைஞர் யுவதிகளுக்கு தேவையான மொழியறிவுகளை வழங்குவதற்கு கிராம மட்ட கற்பித்தல்செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.”  என தெரிவித்தார்.
 

 

https://athavannews.com/2022/1263874

 

வேப்பவெட்டுவான் வீதி மண்கொள்ளையர்களின் தலைவர்கள் பிள்ளையான், வியாழேந்திரன் பங்கு என்ன? 

இதற்குத்தானா பிள்ளையானை தெரிவு செய்தோம்? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் ராணுவத்தின் ஏவலாளியாக இருக்கும்போதே மண் கொள்ளையில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். இது அரச. ராணுவ ஆதரவுடனேயே இன்றுவரை நடைபெற்று வருகிறது. சந்தனமடு ஆற்றிலிருந்து பிள்ளையாபின் ஆயுததாரிகள் மண் அகழ்வில் ஈடுபடும்போது பொதுமக்களுடன் பிரச்சினையில் ஈடுபட்டு துப்பாக்கிப் பிரியோகமும் பலமுறை செய்திருக்கிறார்கள். பிள்ளையான் மண் கொள்ளைக்காரன் என்பது கிழக்கு மக்கள் அறியாதது அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், கிழக்கு மாகாண புத்திஜீவிகளான பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் ஆகியோர் முன்வைக்கும் கிழக்கு மாகாணத்தை அடிமைப்படுத்தி, தமது காழின் கீழ் கொண்டுவந்து அடக்கியாளவே வடக்குத் தமிழர்கள் முயல்கிறார்கள், இதனாலேயே வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணையவேண்டும் என்று இன்றும் கேட்டுவருகிறார்கள், கிழக்கு மண் கிழக்குத் தமிழர்களுக்கானது, அதனை அவர்கள் எவ்வாறு பாவிக்கவேண்டும் என்பதுபற்றி வடக்கர்கள் கவலைப்படத் தேவையில்லை என்னும் புதிய தியரிகளோடு ஒருசிலர் இக்களத்தில் இனி வருவார்கள். 

ஆகவே, அது அவர்களின் மண், அவர்களின் தலைவர்கள், அவர்களால் 50,000 விருப்பு வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட "மக்கள் மனம் கவர்ந்தவர்கள்" என்று கூறிவிட்டு நாம் கடந்து செல்வதே நாம் செய்யவேண்டியது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.