Jump to content

1950 முதல் மற்ற அனைத்து அரசாங்கங்களையும் விட தற்போதைய அரசு 20 மடங்கு அதிக பணத்தை அச்சிட்டுள்ளது : ரஜித் கீர்த்தி தென்னக்கோன்


Recommended Posts

1950 முதல் மற்ற அனைத்து அரசாங்கங்களையும் விட தற்போதைய அரசு 20 மடங்கு அதிக பணத்தை அச்சிட்டுள்ளது : ரஜித் கீர்த்தி தென்னக்கோன்

 

 

 
(சி.எல்.சிசில்)
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரூ. 149,905 கோடி அச்சிடப்பட்டதால் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் அனைத்து பொருட்களும் நம்ப முடியாத அளவுக்கு விலைகள் அதிகரித்து வருவதாக ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கான முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் முதல் 25 நாட்களில் அரசு ரூ. 15,704 கோடியை அச்சிட்டுள்ளது.
print.png
ஜனவரி முதல் டிசம்பர் 2021 வரை மட்டும், அரசாங்கம் ரூ. 67,833 கோடி (678.33 பில்லியன்) அச்சிட்டுள்ளது. அதில் டிசம்பர் 31 அன்று அச்சிடப்பட்ட 66,500 மில்லியன் ரூபாவும் அடங்கும்.
அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியாக நியமிக்கப்பட்ட பின்னரே ரூ. 28,942 கோடி அச்சிடப்பட்டுள்ளது. கப்ரால் ஆளுநராக பதவியேற்ற போது, மத்திய வங்கியின் அரசாங்கப் பத்திரங்களின் முகப் பெறுமதி ரூ. 1284.37 பில்லியனாகும். அது இன்று ரூ. 1574.79 பில்லியன் ஆகும்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் (ஜனவரி 2020) இன்று வரை ரூ. 149,905 கோடி (ரூ. 1,499.05 பில்லியன்) அச்சிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் பத்திரங்களின் முகப்பெறுமதி (ஜனவரி 25, 2022 இல்) ரூ. 1,573.79 பில்லியன் ஆகும்.
திறைசேரியின் செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய வங்கியின் ஆளுநர் பணத்தை அச்சிடுகிறார்.
இலங்கை மத்திய வங்கி ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை ரூ. 7474 கோடி மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது.எளிமையாகச் சொன்னால், மத்திய வங்கி அதன் தொடக்கத்திலிருந்து 2020 வரை அச்சிடப்பட்ட பணத்தைப் போல் கடந்த 25 மாதங்களில் 20 மடங்கு அதிகமாக அச்சிட்டுள்ளது.
“பணம் அச்சிடுவது கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவாகிறது. 1950 முதல் இன்று வரை மத்திய வங்கியின் 14 ஆளுநர்களின் கீழ் அச்சிடப்பட்ட தொகையை விட தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 20 மடங்கு அதிகமாக அச்சிட்டுள்ளனர்.
“பணத்தை அச்சடிப்பதால், உலகிலேயே அதிக விலைவாசி உயர்ந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியுள்ளது. திறைசேரியின் செயலாளரும் மத்திய வங்கியின் ஆளுநரும் மத்திய வங்கியின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக பணத்தை அச்சிடுகின்றனர்” என தென்னக்கோன் மேலும் தெரிவித்துள்ளார்.

Thinakkural.lk

 

Link to comment
Share on other sites

சிறீலங்காவில் இன்று நிதியைக் கையாழுபவர்களுக்குக் கணக்கியல் தெரியாது. கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் எதுவுமே தெரியாது. இதில் ஏதாவது ஒன்று.... அதாவது கூட்டலை மட்டுமாவது முறையாகத் கற்றிருந்தால் நாடு வங்குரோத்து நிலைக்கு வந்திராது. 

இதோ அந்த அதிநவீன கூட்டல்முறை.👇😆

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.