Jump to content

சபைக்குள் புகுந்து விளையாடுகிறது கொரோனா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிதக்கின்றன.

 இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும்  ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இராஜாங்க அமைச்சர்களான ஜயந்த சமரவீர மற்றும் திலும் அமுனுகம மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள ஆகியோருக்கு, நேற்றும் நேற்று முன்தினமும் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

இதேவேளை, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த மற்றும் நாலக பண்டார கொட்டகொட ஆகியோர் கடந்த 22ஆம் திகதி தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கடந்த 24ஆம் திகதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தன 23ஆம் திகதியும் தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.

அவர்களைத் தவிர, பொது பாதுகாப்பு அமைச்சரும் கட்சியின் உறுப்பினருமான ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகரவுக்கும் கடந்தவாரம் தொற்று கண்டறியப்பட்டிருந்தது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சியின் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பிக்கு கடந்தவாரம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilmirror Online || சபைக்குள் புகுந்து விளையாடுகிறது கொரோனா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டுமூன்று நாளைக்கு முன்தான் கொரனோ இலங்கையில் அடங்கிட்டுது என்று கூவினார்கள்  இப்ப சபை ஏறி  துள்ளி விளையாடுது என்கிறாங்கள்  இவங்களுக்கு இதே வேலையாய் போயிட்டுது. .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

இரண்டுமூன்று நாளைக்கு முன்தான் கொரனோ இலங்கையில் அடங்கிட்டுது என்று கூவினார்கள்  இப்ப சபை ஏறி  துள்ளி விளையாடுது என்கிறாங்கள்  இவங்களுக்கு இதே வேலையாய் போயிட்டுது. .

உவங்கள் தான்…. புலியையே அடக்கியவர்களுக்கு,
கொரோனாவை அடக்கிறது, சின்ன விசயம் என்று பீத்தினவர்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

உவங்கள் தான்…. புலியையே அடக்கியவர்களுக்கு,
கொரோனாவை அடக்கிறது, சின்ன விசயம் என்று பீத்தினவர்கள். 😂

கோத்தா கொரோனாவை அடக்கினதிலை கெட்டிக்காரன் எண்ட மாதிரி  இஞ்சையும் பெரிய பினாத்தல் நடந்தது ஞாபகமிருக்கோ?😜....அதை விட சர்வதேச சுகாதார கும்பலும் வெறிகுட்  சேட்டிகற் குடுத்தது எல்லோ😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//சபைக்குள் புகுந்து விளையாடுகிறது கொரோனா//

விளையாடியும் "என்ற் ரிசல்ட்" என்ன.? கொரோனோ அதற்கும் மேலான வைரஸ்களை பார்த்து பயந்து விட்டுது என்டு தானே அர்த்தம்.😢

Link to comment
Share on other sites

விரைவில் ஏதாவது நல்ல செய்தி வருமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

உவங்கள் தான்…. புலியையே அடக்கியவர்களுக்கு,
கொரோனாவை அடக்கிறது, சின்ன விசயம் என்று பீத்தினவர்கள். 😂

கொரோனா ஒருதரையும் கொண்டு போகேலை. இவங்கள் கொரோனாவை விட கொடூரமானவங்கள் எண்டபடியால் அது பயந்திட்டுது போலை

Link to comment
Share on other sites

பழந்தமிழர்கள், உள் முற்றம் வைத்த ஒய்யார வீடுகளில் வாழ்ந்தார்கள். வெளியில் சென்று வந்ததும், அண்டாவிலிருக்கும் நீரைச் சொம்பால் எடுத்துக் கால், கைகளைக் கழுவி விட்டே உள்ளே சென்றார்கள். கந்தலானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி என்ற கொள்கைகளைப் பின்பற்றினார்கள். அவைதான் மனித வாழ்வுக்கு எப்பொழுதும் வேண்டியவை என்பதை இந்தக் கொரோனா இப்போது உலகிற்கே மெய்ப்பித்திருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

கோத்தா கொரோனாவை அடக்கினதிலை கெட்டிக்காரன் எண்ட மாதிரி  இஞ்சையும் பெரிய பினாத்தல் நடந்தது ஞாபகமிருக்கோ?😜....அதை விட சர்வதேச சுகாதார கும்பலும் வெறிகுட்  சேட்டிகற் குடுத்தது எல்லோ😊

கோத்தாவுக்கு…. கோஷ்டியாய் நின்று, வெள்ளை அடிச்ச ஆக்களை, நல்லாய் தெரியும்.
இப்ப இங்கை வந்தால்…. நாக்கைப் புடுங்கிற மாதிரி, கேள்வி கேட்பார்கள் என்று…
ஒளித்து விட்டார்கள் போலுள்ளது. 🤣

1 hour ago, வாதவூரான் said:

கொரோனா ஒருதரையும் கொண்டு போகேலை. இவங்கள் கொரோனாவை விட கொடூரமானவங்கள் எண்டபடியால் அது பயந்திட்டுது போலை

ஒருத்தனும்… மண்டையை போடாததை பார்க்க,
கொரோனாவும்  பயந்து விட்டது போலிருக்கு. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சாணக்கியன் said:

விரைவில் ஏதாவது நல்ல செய்தி வருமா?

ஆருக்கு நல்ல செய்தி வரோணும்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபாநாயகருக்கு கொவிட் தொற்று ! பாராளுமன்றத்தில் இதுவரை 11 பேருக்கு கொவிட் தொற்று

Published on 2022-01-29 12:29:16

 
 

 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், பாராளுமன்றத்தில் இதுவரை 11 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

சபாநாயகருக்கு நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின் பின்னர் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து சபாநாயகர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தப்படுவாரென தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சபாநாயகருடன் நெருங்கிப் பழகியவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கொவிட் தொற்றுக்குள்ளாகியிருந்தார்.

இவர்களைவிட அமைச்சர் சரத்வீரசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக பண்டார கொட்டேகொட, சரதி துஷயந்த மித்திரபால, சாணக்கியன் இராசமாணிக்கம், ரோஹிணி கவிரத்ன, அமரகீர்த்தி அத்துகோரள, கோகில குணவர்தன ஆகியோர் கொவிட் தொற்றுக்குள்ளாகினர்.

இதேவேளை, அமைச்சர்களான ஜயந்த சமரவீர மற்றும் திலும் அமுனுகம ஆகியோரும் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சபாநாயகருக்கு கொவிட் தொற்று ! பாராளுமன்றத்தில் இதுவரை 11 பேருக்கு கொவிட் தொற்று | Virakesari.lk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.