Jump to content

கிளிநொச்சி , இளம் பெண் வைத்தியரை மிரட்டியமைக்கு பின்னால் என்ன நடக்குது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

கிளிநொச்சி வைத்தியர் பிரியாந்தினியின் அதிரடி நடவடிக்கையால் கதி கலங்கிய மாபியாக்கள் கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கண் வைத்தியநிபுணரின் மருத்துவ அறிக்கை , கிளிநொச்சி தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தவுடன், அதில் சந்தேமடைந்து அந்த மாணவர்களின் கணிசமான பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டு பேசினேன்.

அவர்களின் கருத்து எனது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இதனை தொடர்ந்து கண்டாவளை வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டேன் அவர் அப்போது தனது பணியின் பயிற்சி ஒன்றுக்காக விடுமுறையில் இருந்தார்.

இருப்பினும் அவருக்கு இது தொடர்பில் தெரியவில்லை என்பதோடு அவரது அலுவலகத்தில் இது தொடர்பில் அனுமதி பெறவோ அல்லது அறிவிக்கவோ இல்லை என்பதும் அறிந்து கொண்டு மேலும் சிலஅதிகாரிகளை தொடர்பு கொண்டு விடயத்தை ஆராய்ந்த போது இதற்கு பின்னால் வியாபார நோக்கம் இருந்ததை அறிந்து கொண்டு அதனை அம்பலப்படுத்தினேன்.

 

இதற்கு பின்னர் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினார்கள் அதன் விளைவுமருத்துவ மாபியாக்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது கிளிநொச்சியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனைமேற்கொண்ட தனியார் கண் மருத்துவ நிறுவனம் ஒன்று 71 மாணவர்களுக்கு கண்பாதிப்பு உண்டு எனத் தெரிவித்து அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள தங்களதுமருத்துவ நிலையத்திற்கு மேலதிக பரிசோதனைக்காக வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன் போது மேலதிக பரிசோதனை மேற்கொண்டதில் 10 மாணவர்களை தவிர ஏனைய 61 மாணவர்களுக்கும் கண்ணில் பாதிப்பு உண்டு எனவும் இவர்கள் மூக்கு கண்ணாடி பயன்படுத்த வேண்டும் என்றும் குறித்த நிறுவனத்தினரால் தெரிவிக்கப்பட்டு கண்ணாடிகளின் விலைகளும் பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டு அனுப்பபட்டிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களில் சந்தேகம் எழுப்பட்ட நிலையில் நடவடிக்கையில் இறங்கிய சுகாதார பிரிவினர் அம்மாணவர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள கண் வைத்திய நிபுணரிடம் பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். அதன்படி படிப்படியாக மாணவர்கள் அழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு 71 மாணவர்களில் வருகை தந்த 55 மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 38 மாணவர்களுக்கு கண்ணில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் ஏனைய 17 மாணவர்களுக்கு கண்ணில் சிறு குறைபாடுகள் இருப்பதாகவும் மாவட்ட கண் வைத்தியர் அறிக்கையிட்டிருந்தார் என கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.

எனவே இதன் மூலம் தங்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு ஏழை மாணவர்களை குறித்த நிறுவனம் பயன்படுத்தியமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இவ்விடயம் தொடர்பில் கல்வி மற்றும் சுகாதார துறையினர் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க வழிசமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

P.Gopalakrishnan-1.jpgமருத்துவத்துறையின் சுயாதீனத்தினுள் ஊடுருவும் அரசியல் அல்லக்கைகள்சமீபத்தில் தருமபுரத்தில் இடம்பெற்ற மாபெரும் கண்மருத்துவ கொள்ளையினை ஊடகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியமைக்காக புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகாத வார்த்தைகளால் பேசும் இன்னொரு வைத்தியரின் தம்பியும் சம்பந்தப்பட்ட நபர் மைத்திரிபால சிரிசேனவின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளராக வட்டுக் கோட்டை தொகுதி பிரதேச சபை தேர்லில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்.

அரசியல்வாதிகள் பெண் அதிகாரிகளை மோசமாக நடத்த முனையும் செயல்கள் நாட்டில் நடந்தே வருகிறது. அதேபோல வடக்கில் நடந்த செயலும் மிக முக்கியமான ஒன்று. அந்த குரல் பதிவு வீடியோ இது:

 

மேலே உள்ள  காணொளியை செவிமடுக்கும் போது வடக்கின் மருத்துவ கட்டமைப்புக்குள் எவ்வளவு தூரம் அரசியல் உள்நுழைந்து விளையாடுகிறதென்பதை அறிய முடியும். வைத்திய அதிகாரியை மிரட்டும் குறித்த நபர் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தேர்தலில் சுதந்திர கட்சி சார்பாக போட்டியிட்ட ஒரு சாதாரண நபர்.

அவருக்கு அப்பகுதி மக்களே வாக்களிக்கவில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நபர் மக்களுக்கு சேவையாற்றும் ஒரு மருத்துவ அதிகாரியைப்பார்த்து அடிப்பன், உடைப்பன், மூஞ்சையை கிழிப்பன் என்றெல்லாம் பேசுவதும் தன்னுடைய அரசியல் அதிகாரத்தை வைத்து வேலையை விட்டு கலைப்பன் என்றெல்லாம் சவால் விடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?

அதற்கு  குறித்த பெண் மருத்துவர் துணிச்சலாக நீ யார் என்னை கேள்வி கேட்க என்று அந்நபரிடம் கேட்கிறார் . ஆனால் அவருக்கு மேல் அதிகாரியான கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி( RDHS)குறித்த அந்த அரசியல் இடைத்தரகரான நபரிடம் தனக்கு கீழ் பணியாற்றும் MOH பற்றி முறைப்பாடு செய்ததாக அந்த நபரே கூறுகிறார்.

படித்து பட்டம் பெற்ற ஒரு RDHS அவரின் பதவியின் மதிப்புக்கூட தெரியாமல் ஒரு பிரதேச சபை மெம்பராக கூட இல்லாத ஒரு நபரிடம் MOH ஐ மாற்ற அரசியல் பலத்தை காட்டச்சொல்லி சொல்லியிருக்கிறார் என்கிறபோது அவரின் பதவிக்கு என்ன மதிப்பிருக்கிறது?

SurenRagavan.jpg

இப்படி தற்துணிவற்ற அவர் கீழ்த்தர அரசியலூடாக சாதிக்க நினைக்கும் அவர் வைத்திய அதிகாரியாக இருந்து மக்களுக்கு சேவை செய்வார் என்று எப்படி நம்ப முடியும்?
குறித்த கண்டாவளை M.O.H அதிகாரிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஆளுநருமான சுரேன் ராகவனின் செக்கரட்டி செவ்வேள் கோல் எடுத்ததாகவும்,  M.O.H ஆன்சர் பண்ணவில்லையென்றும் , நீ என்ன அவ்வளோ பெரிய ஆளா என்று குறித்த அரசியல் அல்லக்கை கேட்கிறார்.

சுரேன் ராகவன் மக்கள் வாக்குகளால் தெரிவுசெய்யப்படாது ஒரு எடுபிடி எம்.பி அவருக்கே இங்கு மரியாதை கொடுக்கத் தேவை இல்லை. இவர் முன்னாள் வடக்கு ஆளுனராக பதவி வகித்தவர் என்பது குறிப்பித்தக்கது.

இந்த மாவட்டத்திற்கு தொடர்பே இல்லாத யாரோ ஒருவர் நியமித்த பாராளுமன்ற உறுப்பினரின் செக்கரட்டியின் கதைக்கெல்லாம் எங்கள் மாவட்டத்தின் வைத்திய அதிகாரி பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா?

கண்டாவளை M.O.H பிரிவு இப்போதுதான் புத்துணர்வு பெற்று எழுந்துகொண்டிருக்கிறது அதற்கு காரணம் இப்போது அங்கு MOH ஆக பணிக்கு வந்துள்ளDr. Priyaanthini Kamalasingam அவர் துணிச்சலாக மருத்துவத்துறைக்குள் நடக்கும் ஊழல்களை ஒத்துழைப்பின்மையை பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்.

ஒரே நாளில் ஒரு கிராமத்தை சேர்ந்த 300 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கண்ணில் குறைபாடு உள்ளது அவர்கள் கண்ணாடி பாவிக்க வேண்டும் என ஒரு பாடசாலை அதிபர் ஊடாக மாபெரும் மருத்துவ கொள்ளையில் ஈடுபட இருந்த நபர்களை இனம்காட்டி அந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தியும் இருந்தார். இதுதான் இப்போது இங்கிருக்கும் அரசியல் வால்பிடி அதிகாரிகளுக்கு பிரச்சனையாக உள்ளது.

நேர்மையான அதிகாரிகளை கலைத்து விட்டு ஊழல் வாதிகளை வைத்து எங்கள் பிரதேசத்தை நாசப்படுத்தும் செயற்பாடுகளுக்கு எங்கள் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

கிளிநொச்சி வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபர்கள்!

கிளிநொச்சி கண்டாவளை பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
001-entry-1.jpgமேலும், கிளிநொச்சி கண்டாவளை பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியதுடன் அவரது விடுதிக்குச் சென்ற சிலரும் அவரை அச்சுறுத்தியமை தொடர்பில் தரும்புரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் இதற்கான விசாரணைகள் தருமபுரம் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்யும் பொருட்டு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும் தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தின் போது கடமையிலிருந்த ஏனையவர்களிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டியதுடன் சி.சி.ரி.வி கமரா ஒளிப்பதிகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கட்டுரை எழுதிய பின் , தொலைபேசியில் மிரட்டிய குறிப்பிட்ட நபர் கைதாகியுள்ளார்.

கண்டாவளை MOH Dr.Priyaanthini க்கு தொலைபேசியில் அச்சுறுத்தியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை 03.02.2022 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதான தர்மபுரம் பொலீஸ் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
https://www.ceylonmirror.net/70102.html

 

May be an image of 1 person, sitting and indoor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

அரசியல்வாதிகள் பெண் அதிகாரிகளை மோசமாக நடத்த முனையும் செயல்கள் நாட்டில் நடந்தே வருகிறது. அதேபோல வடக்கில் நடந்த செயலும் மிக முக்கியமான ஒன்று. அந்த குரல் பதிவு வீடியோ இது:

 

நீதி ஞாயம் பற்றி அழுபவர்கள் இதை கேட்டு விட்டு அழலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுரேன் ராகவன் இப்ப சும்மாதான் இருக்கிறார்...அடிபொடிகள் அவருக்கு வேலை குடுக்கத்தானே வேணும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுரேன் ராகவன்  காரணமில்லாமல் வன்னி மக்களுக்காக அழேக்கையே நினைச்சேன் வன்னியை விழுங்கப்போகுது என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

சுரேன் ராகவன்  காரணமில்லாமல் வன்னி மக்களுக்காக அழேக்கையே நினைச்சேன் வன்னியை விழுங்கப்போகுது என்று.

தெலுங்கு பட வில்லனுகளை விட மோசமாய் இருக்கினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன எல்லா வில்லன்களும் எங்கட இனத்துக்குள்ள விழுந்து விளையாடுதுகள்?

Link to comment
Share on other sites

1 hour ago, satan said:

அது என்ன எல்லா வில்லன்களும் எங்கட இனத்துக்குள்ள விழுந்து விளையாடுதுகள்?

நாங்கள் தமிழர். தமிழ் என்றால் தேன் என்று பெரும்பெரும் புலவர்களும் போற்றிப் பாடியுள்ளார்கள். தேனைக் கண்டாலே பூச்சி புழுக்களும் அதனிடம் ஓடிவரவும் அதற்குள் விழவும்தான் செய்யும். நாங்கள்தான் அவற்றிடமிருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

தருமபுரத்தில் இடம்பெற்ற மாபெரும் கண்மருத்துவ கொள்ளையினை ஊடகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியமைக்காக புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகாத வார்த்தைகளால் பேசும் இன்னொரு வைத்தியரின் தம்பியும் சம்பந்தப்பட்ட நபர் மைத்திரிபால சிரிசேனவின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளராக வட்டுக் கோட்டை தொகுதி பிரதேச சபை தேர்லில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்.

விட்டால் சிறுவர்களின் கண்ணையும் நோண்டு வார்கள் போல் உள்ளது தங்களது பண ஆசைக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி , இளம் பெண் வைத்தியரை மிரட்டியமைக்கு பின்னால் என்ன நடக்குது?

அந்த வைத்திய அதிகாரிக்கு இடமாற்றல் என்கிற செய்தி பின்னாளில் வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

தெலுங்கு பட வில்லனுகளை விட மோசமாய் இருக்கினம் .

இந்த வில்லன்கள் தான் விடுதலைப்போராட்டத்தை முள்ளிவாய்க்கால் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியவர்கள்.

இப்பொழுதாவது தெரிகின்றதா ஏன் இவர்கள் விடுதலைப்புலிகளை  எதிர்த்தார்கள் என்று.......??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டொக்டர் பிரியா கமலசிங்கம் முன்னர் வெலிசறை கடற்படை வைத்தியசாலையில் வதிவிட வைத்தியராக கடமையாற்றியவர் என்பதும் அதன் அடிப்படையில் அவருடன் பல கடற்படை அதிகாரிகள் நட்பாக இருப்பதும் தேசியத்தை தம் முதுகில் சுமக்கும் எதிர்கால நாட்டுப்பற்றாளர்களுக்குத் தெரியாது போலும். தெரிந்திருந்தால் அவர் அச்சுறுத்தப்பட்டது சரிதான் என்று நிறுவப்பட்டிருக்கும். அவரின் பின்புலம் கிளறப்பட்டிருக்கும். 

பிற்குறிப்பு: டொக்டர் பிரியாவை தனிப்பட தெரிந்து இருப்பதால் சொல்கின்றேன். ஒரு வைத்தியருக்கு இனம் மதம் மொழி எல்லாம் முகியமல்ல. அர்ப்பணிப்புடன் கூடிய சேவை மனப்பான்மைதான் முக்கியம். அதனூடாக சில நட்புகள் ஏற்படுவது வழமைதான். இதன் அடிப்படையில் பிரியா மிகச் சிறந்த நல்லுள்ளம் கொண்ட வைத்தியர். இந்தச் சில்லறைகளின் சில்லறைத்தனமான செயல்களெல்லாம் பிரியா முன் எடுபடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வாலி said:

டொக்டர் பிரியா கமலசிங்கம் முன்னர் வெலிசறை கடற்படை வைத்தியசாலையில் வதிவிட வைத்தியராக கடமையாற்றியவர் என்பதும் அதன் அடிப்படையில் அவருடன் பல கடற்படை அதிகாரிகள் நட்பாக இருப்பதும் தேசியத்தை தம் முதுகில் சுமக்கும் எதிர்கால நாட்டுப்பற்றாளர்களுக்குத் தெரியாது போலும். தெரிந்திருந்தால் அவர் அச்சுறுத்தப்பட்டது சரிதான் என்று நிறுவப்பட்டிருக்கும். அவரின் பின்புலம் கிளறப்பட்டிருக்கும். 

பிற்குறிப்பு: டொக்டர் பிரியாவை தனிப்பட தெரிந்து இருப்பதால் சொல்கின்றேன். ஒரு வைத்தியருக்கு இனம் மதம் மொழி எல்லாம் முகியமல்ல. அர்ப்பணிப்புடன் கூடிய சேவை மனப்பான்மைதான் முக்கியம். அதனூடாக சில நட்புகள் ஏற்படுவது வழமைதான். இதன் அடிப்படையில் பிரியா மிகச் சிறந்த நல்லுள்ளம் கொண்ட வைத்தியர். இந்தச் சில்லறைகளின் சில்லறைத்தனமான செயல்களெல்லாம் பிரியா முன் எடுபடாது. 

வாலி நீங்கள் இங்கே கூற விளைவது என்ன?

அந்த வைத்தியரின் பின்புலம் இங்கு அலசப்பட வேண்டியதில்லை. அவர் என்ன செய்தார் என்பதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

வாலி நீங்கள் இங்கே கூற விளைவது என்ன?

அந்த வைத்தியரின் பின்புலம் இங்கு அலசப்பட வேண்டியதில்லை. அவர் என்ன செய்தார் என்பதே.

நான் இங்கு கூற விழைவது யாதெனில், இங்கு அதாவது யாழ் இனணையதில் காத்திருக்கும் தமிழ்த்  தேசியவாதிகளுக்குத் பிரியாவின் பின்புலம் தெரியாமல் போய்விட்டது. ஏதொ கிளிநெச்சி வைத்தியர் என எண்ணி விட்டார்கள். தெரிந்திருந்தால் இங்கு வைத்தே நாறடித்து இருப்பார்கள். அதனால் பிரியாவுக்கு ஆதரவான வேடம் போடவேண்டியதாயிற்று. ஒருவரின் பின் புலத்தை வைத்து சேறடிப்பது யாழ் இணையத்தில் உள்ள தேசியவாதிகளுக்குத் தெரியாது என்பது போல் உங்கள் கேள்வி உள்ளது. நிர்வாகத்தில் இருப்பவர்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெறும் நிகழ்வு அது.  இது வேறு யாருக்குமல்ல எனக்கே நிகழ்ந்திருக்கின்றது,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாலி said:

நான் இங்கு கூற விழைவது யாதெனில், இங்கு அதாவது யாழ் இனணையதில் காத்திருக்கும் தமிழ்த்  தேசியவாதிகளுக்குத் பிரியாவின் பின்புலம் தெரியாமல் போய்விட்டது. ஏதொ கிளிநெச்சி வைத்தியர் என எண்ணி விட்டார்கள். தெரிந்திருந்தால் இங்கு வைத்தே நாறடித்து இருப்பார்கள். அதனால் பிரியாவுக்கு ஆதரவான வேடம் போடவேண்டியதாயிற்று. ஒருவரின் பின் புலத்தை வைத்து சேறடிப்பது யாழ் இணையத்தில் உள்ள தேசியவாதிகளுக்குத் தெரியாது என்பது போல் உங்கள் கேள்வி உள்ளது. நிர்வாகத்தில் இருப்பவர்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெறும் நிகழ்வு அது.  இது வேறு யாருக்குமல்ல எனக்கே நிகழ்ந்திருக்கின்றது,

உங்களுக்கு நடந்தது இவருக்கும் நடக்க வேண்டும் என்பதா?

இங்கு பாதிக்கப்பட்டது பாலகர்களும் அப்பாவிப் பெற்றோர்களும். அதை நினைவில் வையுங்கள். மேலும் அரச ஆதரவு அரசியல்வாதிகளின் மோசடி வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாலி said:

நான் இங்கு கூற விழைவது யாதெனில், இங்கு அதாவது யாழ் இனணையதில் காத்திருக்கும் தமிழ்த்  தேசியவாதிகளுக்குத் பிரியாவின் பின்புலம் தெரியாமல் போய்விட்டது. ஏதொ கிளிநெச்சி வைத்தியர் என எண்ணி விட்டார்கள். தெரிந்திருந்தால் இங்கு வைத்தே நாறடித்து இருப்பார்கள். அதனால் பிரியாவுக்கு ஆதரவான வேடம் போடவேண்டியதாயிற்று. ஒருவரின் பின் புலத்தை வைத்து சேறடிப்பது யாழ் இணையத்தில் உள்ள தேசியவாதிகளுக்குத் தெரியாது என்பது போல் உங்கள் கேள்வி உள்ளது. நிர்வாகத்தில் இருப்பவர்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெறும் நிகழ்வு அது.  இது வேறு யாருக்குமல்ல எனக்கே நிகழ்ந்திருக்கின்றது,

இந்த பெண் வைத்தியர் துணிச்சலாக அந்த ஏழை மாணவர்களின் கண்களை பாதுகாத்து உள்ளார் அது போதும் இப்போதைக்கு .

13 hours ago, வாலி said:

தெரிந்திருந்தால் அவர் அச்சுறுத்தப்பட்டது சரிதான் என்று நிறுவப்பட்டிருக்கும்.

நடக்காத விடயத்தை ஏன் கற்பனையில் கண்டு கணக்க  யோசிக்கிறியள் ரிலாக்ஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2022 at 02:19, பெருமாள் said:

அரசியல் அல்லக்கைகள்சமீபத்தில் தருமபுரத்தில்

ஐயா பாலகிருஷ்ணன் MSc- Software Engineering,

புகையை அடிச்சு பழம் பழுக்க வைக்கிறது  தெரியுமோ?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MullaiNilavan said:

ஐயா பாலகிருஷ்ணன் MSc- Software Engineering,

புகையை அடிச்சு பழம் பழுக்க வைக்கிறது  தெரியுமோ?😀

விளங்கவில்லை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

6 hours ago, பெருமாள் said:

விளங்கவில்லை ?

ஐயா பாலகிருஷ்ணன், பிஞ்சிலேயே பழுக்க வைக்கிற உத்தியைக் கையாளுகிறார். அரசியலில் தான் ஒரு சாணக்கியன் என்பதை நிரூபிக்க துடிக்கிற ஒரு கொழுகொம்பு.

சுய தம்பட்டம் அடித்து, ஆழம் தெரியாமல் கால் விட்டு  பின் பக்கத்தில்(xxx) கால் அடிபட அடிபட ஓடினது மாதிரி ஒரு உணர்வு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@வாலி

பிரியா சேம் சைட் கோல் அடித்து விட்டாவோ….?🤔🤔🤔

 

பி.கு: இப்போது உங்களுக்கு சந்தோசமாக இருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் மருத்துவத்துறையும் அரசியலும் 
================================

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும் Whatsapp இலும் பகிரப்படும் ஒரு விடயமாக இருப்பது கிளிநொச்சி, கண்டாவளையில் சுகாதார வைத்திய அதிகாரியாக (MOH) இருக்கும் பெண் வைத்தியருக்கு பல்வேறு நபர்கள் எடுத்த தொலைபேசி அழைப்புகள், அவருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள், அதன் பின்னரான பொதுவெளியில் அது தொடர்பில் பகிரப்படும்  எதிர்வினைகள்தான்.

இதன் ஆரம்பப் புள்ளியாக கடந்த டிசம்பர் மாதம் கண்டாவளைப் பிரதேசத்தில்  தர்மபுரம் இல.1 அ.த.க. பாடசாலையில் 320 மாணவர்களைப் பரிசோதித்து அவர்களுள் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு யாழில் இருந்து வந்து பரிசோதனை செய்த தனியார் கண் மருத்துவ நிறுவனத்தின் செயற்பாடே என்று சொல்லப்படுகிறது. குறித்த நிறுவனம் அதன் பின்னர் தெரிவு செய்த 71 மாணவர்களை மேலதிக பரிசோதனைக்கு யாழ்ப்பாணத்திற்கு வரவைத்து அங்கும் பரிசோதனை மேற்கொண்டு அவர்களில் 61 பேருக்கு கண்குறைபாடு இருப்பதால் அவர்கள் மூக்குக்கண்ணாடி அணியவேண்டும் என்றதுடன் அவற்றுக்கான விலைகளையும் அந்தப் பிள்ளைகளின் பெற்றோருக்கு வழங்கியிருக்கிறது.  

இதன் பின்னர், இது தொடர்பில் சந்தேகம் எழுப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்ட கண் வைத்தியர் மீள அந்தப் பாடசாலையில் குறித்த 71 மாணவர்களில் 55 மாணவர்களை பரிசோதித்ததில் அதில் 38 பேருக்கு எந்தவிதக் குறைபாடும் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் குறித்த தனியார் நிறுவனம் வியாபார நோக்கிலேயே இந்த முனைப்பை மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் வலுபெற்று இருக்கிறது.

இந்த நிலையில் அண்மையில் குறித்த கண்டாவளை வைத்திய அதிகாரிக்கு MOH) கோபால் என்ற கோபாலகிருஷ்ணன்  அழைப்பெடுத்துள்ளார். இந்த நபர் 2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் வலிமேற்கில் சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிட்ட ஒருவர் என்று சொல்லப்படுகிறது. இதன்போது அந்த கோபால் தனது பலம், செல்வாக்கைக் காட்ட, சிலரின் பெயரைக் குறிப்பிடுகிறார். தான், யாழ் மருத்துவபீடத்தில் பணிபுரியும் Dr. சுரேந்திரகுமரனின் தம்பி என்கிறார், பா.உ. சுரேன் ராகவனின் செயலாளர் செவ்வேள் தன்னுடன் பேசியதாகச் சொல்கிறார். தான் சனாதிபதி கோத்தபாயவுடன் நெருக்கமாக வேலை செய்வதாகவும் சொல்கிறார். 

அந்த உரையாடலின்போது ஆரம்பத்தில் குறித்த வைத்திய அதிகாரியை ஆழம் பார்ப்பதுபோல கதைக்க முற்படுகிறார். “உங்களைப் பற்றி எழுத்துமூல முறைப்பாட்டைத் தரும்படி RDHS என்னிடம் கேட்டார். ஆனால் நான் கொடுக்கவில்லை. உங்களுக்கிடையில என்ன பிரச்சனை” என்று கேட்கிறார். அடுத்து, “உங்களுக்கு அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தக்கூடாது என்ற கொள்கை இருக்கிறதா?” என்றும் கேட்கிறார். அதன்போது வைத்திய அதிகாரி பிடிகொடாமல் பேசிய நிலையில் தன்னிலை இழந்து தன் சுயரூபத்தை வெளிப்படுத்துகிறார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த வைத்திய அதிகாரியின் உத்தியோகபூர்வ வதிவிடத்துக்குச் சென்ற சிலர் தாக்கவும் முயற்சி செய்துள்ளார்கள். குறித்த வைத்திய அதிகாரி அளித்த புகார் அடிப்படையில் கொலைமிரட்டல் விடுத்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பின்னர் செய்தி வெளிவந்துள்ளது.

அதன் பின்னர் வெளிவந்த ஒரு உரையாடல் ஒலிப்பதிவில் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் குறித்த வைத்திய அதிகாரியிடம் தொலைபேசியில் அவரது சமூக வலைத்தள இடுகைகள் தொடர்பாக கண்டனம் தெரிவிக்கிறார். அவற்றை மீளப் பெறும்படி சொல்கிறார். அதேநேரம் அந்த பெண் வைத்திய அதிகாரியைப் பாதுகாப்பது தனது பொறுப்பில்லை அது போலீஸின் வேலை என்கிறார். சமூகவலைத்தளங்களில் வந்ததுபோல எதுவுமே நடைபெறவில்லை என்று ஒரு அறிக்கை வெளியிடும்படி வற்புறுத்துகிறார்.

குறித்த பெண் வைத்திய அதிகாரி அண்மையிலேயே விருப்பு மாற்றம் பெற்று கண்டாவளைக்கு வந்தவர் என்பதுடன், குறுகிய காலத்திலேயே சில நல்ல வேலைகளைச் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டாவளை MOH அலுவலகத்தை சீரமைத்ததுடன் World Vision உதவியில் மாஸ்க் பக்கெட்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இராணுவத்தின் உதவியுடன் டெங்குப் பரவலைத் தடுக்க பிரதேசத்தை சுத்தமாக்கியுள்ளார். கர்ப்பிணித் தாய்மாருக்கான கிளினிக்கிற்கு தேவைப்பட்ட தானியங்கி பிறசர் மெஷின்கள், குளுக்கோ மீட்டர் மற்றும் நிறுக்கும் தராசு என்பவற்றை வாங்க நிதியில்லாத நிலையில் சமூக வலைத்தளமூடாக பொதுமக்களின் அனுசரணையில் அவற்றைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் எமது சில அவதானிப்புகளும் கேள்விகளும்!.

1. கண்டாவளையில் நடைபெற்ற விடயத்திற்கு வலி மேற்கில் தொழிற்படும் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதி எந்தவகையிலும் வலிமேற்குக்கும் கண்டாவளைக்கும் அரசியல் ரீதியாகவோ, பூகோள ரீதியாகவோ தொடர்பற்ற நிலையில் ஏன் இவ்வளவு அக்கறை செலுத்துகிறார்? இதன் பின்னணி என்ன?

2. ஆரம்பத்தில் சில பொதுமக்கள், குறித்த அரசியல்வாதி பொய்யாக RDHSஐத் தொடர்புபடுத்தி கதைத்துள்ளார், RDHSற்கு களங்கம் ஏற்படுத்தப் பார்க்கிறார் என்று சிலர் முட்டுக் கொடுத்தாலும் அண்மையில் வெளிவந்த இன்னொரு ஒலிப்பதிவு குறித்த RDHS நடந்த முழு சம்பவத்திலும் இதற்கு முன்னர் நடந்த கண் பரிசோதனை விடயத்திலும் சம்பந்தப்பட்டிருப்பாரோ என்று சந்தேகப்பட வைக்கிறது. 

3. ஆரம்பத்தில் அரசியல்வாதியின் மிரட்டல் என்று இருந்த நிலையில் குறித்த வைத்திய அதிகாரிக்கு ஆதரவாக வைத்தியர்களுக்கான தொழிற்சங்கமான GMOA நிற்பதாக ஒரு வைத்தியரின் பதிவில் இருந்து அறிய முடிந்தது. அத்துடன் GMOA யின் கிளிநொச்சி பிராந்தியக் கிளை இது தொடர்பில் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. ஆனால் ஒரு ஒலிப்பதிவின்படி இந்த விவகாரத்தில் RDHSற்கு முக்கிய பங்கு இருப்பதான செய்தி வெளிவந்த நிலையில் அது தொடர்பில் GMOA வின் நிலைப்பாடு என்ன? GMOA, குறித்த RDHS மீது சுயாதீன விசாரணை நடாத்த அழுத்தம் கொடுக்குமா?

4. அந்த பெண் வைத்திய அதிகாரி தொலைபேசியிலும் நேரிலும் மிரட்டப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டிய RDHS எதற்காக, யாரைக் காப்பாற்ற அந்த வைத்திய அதிகாரியிடம் எதுவுமே நடக்கவில்லை என்று அறிக்கை வெளியிடும்படி வற்புறுத்துகிறார்?

5. குறித்த வைத்திய அதிகாரியின் வதிவிடத்திற்கு சென்று மிரட்டியவர்களுக்கும் கோபால் என்ற நபருக்கும் தொடர்புள்ளதா? அல்லது மிரட்டச் சென்றவர்கள் சொன்னதுபோல அந்த ரவுடிகளுக்கும் RDHSக்கும் தொடர்புள்ளதா? 

6. இந்த விடயத்தில் சமூகத்தில் உள்ளவர்கள் இந்த வைத்திய அதிகாரிக்கு ஆதரவு கொடுப்பது நல்ல விடயம்தான், ஆனால் சைக்கிள் செல்லக்கூடிய இடைவெளியில் ஆட்டோ ஒட்டுவதுபோல இந்த விடயத்தைப் பற்றி பேசும்போது சம்பந்தமே இல்லாமல் சுமந்திரன் மற்றும் சிறீதரன் புகழ் பாடும் சில்லறை அரசியலை அவர்களின் சீடர்கள் தவிர்த்திருக்கலாம்.

இறுதியாக இலங்கையில் இயங்கும் தமிழ் ஊடகங்களை நோக்கி சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம். கிளிநொச்சியில் உண்மையில் குறைபாடு இல்லாத மாணவர்களை வைத்து ஒரு தனியார் நிறுவனம் காசு பார்க்க முயன்றமை, அதன் பின்னர் கிளிநொச்சியில் பணிபுரியும் சில வைத்திய அதிகாரிகள் அதில் தலையிட்டு உண்மையை வெளிக் கொணர்ந்தமை போன்ற சம்பவங்களும் அதன்பின்னர் அண்மையில் நடந்த சம்பவங்களும் நடைபெற்ற நிலையில் இது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து மக்களுக்கு உண்மைகளை எழுத வேண்டியது உங்கள் கடமையில்லையா? இவ்வாறான சம்பவங்களை எழுதி அதிகாரிகளின் பகையை ஏன் சம்பாதிக்க வேண்டும் என்று தவிர்த்து விட்டீர்களா? அல்லது இது ஒன்றும் பரபரப்புத் தரும் செய்தியில்லை என்று முடிவெடுத்து விட்டீர்களா?

https://m.facebook.com/photo.php?fbid=493806378793786&id=101881847986243&set=a.102039331303828&source=48&refid=13&ref=page_internal&__tn__=%2B%3D

https://www.facebook.com/101881847986243/posts/493806545460436/?d=n

 

 

Link to comment
Share on other sites

புளொட் லண்டன் ஆபீஸ் செவ்வேள் தற்போது அந்தப் பெண் டாக்டரை தொலைபேசியில் மிரட்டியதாக செய்தி வந்துள்ளது. செவ்வேள் தற்போது முன்னாள் யாழ் கவர்னருக்கும் தற்போதைய எம்பியுமான ஒருவருக்கு செயலாளராக இருக்கிறார். FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

புளொட் லண்டன் ஆபீஸ் செவ்வேள் தற்போது அந்தப் பெண் டாக்டரை தொலைபேசியில் மிரட்டியதாக செய்தி வந்துள்ளது. செவ்வேள் தற்போது முன்னாள் யாழ் கவர்னருக்கும் தற்போதைய எம்பியுமான ஒருவருக்கு செயலாளராக இருக்கிறார். FB

அவ பயப்பிடுற இடத்தில இருந்து வந்தவ இல்லை  பார்ப்பம் எது மட்டும் பாயினம் என்று .

இரண்டாவது தலைமுறை எப்படி போகுதெண்டு தெரியலை பொறுத்து பார்ப்பம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் வைத்தியரை மிரட்டும் அதிகாரி - அதிர்ச்சி காணொளி

வட தமிழீழம் 

கண்டாவளை M.O.H பிரிவு இப்போதுதான் புத்துணர்வு பெற்று எழுந்துகொண்டிருக்கிறது அதற்கு காரணம் இப்போது அங்கு MOH ஆக பணிக்கு வந்துள்ள மருத்துவர் பிரியந்தினி அவர்கள் துணிச்சலாக மருத்துவத்துறைக்குள் நடக்கும் ஊழல்களை பொது வெளியில் பகிர்ந்து வருகிறார்.

ஒரே நாளில் ஒரு கிராமத்தை சேர்ந்த 300 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கண்ணில் குறைபாடு உள்ளது அவர்கள் கண்ணாடி பாவிக்க வேண்டும் என ஒரு பாடசாலை அதிபர் ஊடாக மாபெரும் மருத்துவ கொள்ளையில் ஈடுபட இருந்த நபர்களை இனம்காட்டி அந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தியும் இருந்தார்.

இதுதான் இப்போது இங்கிருக்கும் அரசியல் வால்பிடி அதிகாரிகளுக்கு பிரச்சனையாக உள்ளது.

நேர்மையான அதிகாரிகளை கலைத்து விட்டு ஊழல் வாதிகளை வைத்து எங்கள் பிரதேசத்தை நாசப்படுத்தும் செயற்பாடுகளுக்கு எங்கள் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மக்கள் ஆதரவாக உள்ள நிலையில்  வைத்தியர் எனப்படும் ஒருவர் மிரட்டும் மற்றும் ஒரு ஓடியோ வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஓடியோ வெளியானதைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகிமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.thaarakam.com/news/2f525a81-de56-4fe4-a9e4-c390f6acf4c8

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த RDHS பேர் விபரங்கள் படத்தையும் போட்டாத்தான நாங்களும் நாலு கேள்வி கேட்கலாம்.. கற்புகலைஞ்சிடும் எண்டு ஒளிச்சு வச்சிருக்கோ..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.