Jump to content

குடும்பத்தோடு தலைமறைவானார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.?. என்ன காரணம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பத்தோடு தலைமறைவானார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. என்ன காரணம்?

Canada.jpg

ஒட்டவா: கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தோடு ரகசிய இடம் ஒன்றில் தலைமறைவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவில் தற்போது 229,818 ஆக்டிவ் கொரோனா கேஸ்கள் உள்ளன. அங்கு 3,027,167 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 28,957 பேர் அங்கு இதுவரை கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் கனடாவில் வேக்சின் போடும் வேகம் அதிகரித்துள்ளது. பொது இடங்களுக்கு செல்ல மக்கள் கட்டாயமாக இரண்டு டோஸ் வேக்சின் போட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டு டோஸ் வேக்சின்

அதேபோல் ஓமிக்ரான் பரவலால் சில லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் லாரிகள் ஓட்டும் ஓட்டுனர்கள் ஒரு மாகாணத்தில் இருந்து இன்னொரு மாகாணம் செல்லவும், அமெரிக்க எல்லையை கடக்கவும் இரண்டு டோஸ் வேக்சின் போட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் போடத ஓட்டுனர்கள் அங்கு லாரிகளை இயக்க முடியாது.


லாரி போராட்டம்

இதுதான் அந்நாட்டு லாரி ஓட்டுனர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக அங்கு லாரி ஓட்டுனர்கள் சுதந்திர பேரணி என்ற போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். லாரி ஓட்டுனர்கள் ஒன்று கூடி அங்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக கடுமையாக கோஷம் எழுப்பி வருகிறார்கள். 50 ஆயிரத்திற்கும் அதிகமான லாரிகள் இதனால் தலைநகர் ஒட்டவாவை நோக்கி சென்றுள்ளது.

கடும் போராட்டம்

நாங்கள் ஏன் வேக்சின் போட வேண்டும்.. வேக்சின் போடுவதும், போடாமல் இருப்பதும் எங்கள் அடிப்படை உரிமை தொடர்பானது.

அடிப்படை சுதந்திரத்தில் அரசு தலையிடுவதை ஏற்க முடியாது. ஜஸ்டின் ட்ரூடோவிற்கு இதற்காக நாங்கள் வாக்களிக்கவில்லை. அவர் உடனடியாக நாட்டில் நிலவும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பாதுகாப்பு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கலவரம் வெடிக்கும் அபாயம்

போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகம் நோக்கி வந்து கொண்டு இருப்பதால் அங்கு பெரிய கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தோடு ரகசிய இடம் ஒன்றில் தலைமறைவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகரில் இருந்து வெளியேறி வேறு ஒரு மாகாணத்தில் அவர் தங்கி இருக்கிறார். ஆனால் அவரின் இருப்பிடம் வெளியிடப்படவில்லை.
கனடா பிரதமர் தலைமறைவு

போராட்டம் காரணமாக கலவரம் ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பு கருதி ஜஸ்டின் ட்ரூடோ தலைமறைவாகி உள்ளார். அவர் எங்கே இருக்கிறார் என்று அமைச்சர்களுக்கு கூட தெரியாத நிலை உள்ளது.

ஆனால் தொடர்ந்து ட்விட்டரில் ஜஸ்டின் ட்ரூடோ போஸ்ட் செய்து வருகிறார். தலைமறைவாக இருக்கும் இடத்தில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பணிகளை செய்து வருகிறார். அங்கு லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தால் இன்று பெரிய கலவரம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://tamil.oneindia.com/news/international/canada-pm-justin-trudeau-absconds-to-a-secret-place-as-truck-drivers-oppose-the-vaccine-mandate-447050.html

Link to comment
Share on other sites

ரூடோவின் பிள்ளைகளில் ஒருவருக்கு கொரோனா வந்ததால் ரூடோ தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என செய்திகள் கூறுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைமறைவாகவில்லை.  பாதுகாப்பான இடம் ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளனர். அவ்வளவே. 

கனேடியப் பிரதமர் ஒன்றும் இந்தியப் பிரதமர் அல்லவே ஓடி ஒழிவதற்கு. 

உவங்களட தலையங்கத்த கறையான் அரிக்க.

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள்
பெரும் வாகனப் பேரணியாக வந்து ஒட்டாவாவில் திரண்டு ஆர்ப்பாட்டம்!

குடும்பத்தினருடன் பிரதமர் ட்ரூடோ
பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம்!! 

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவரது
ஒட்டாவா வதிவிடத்தை விட்டுப் பாதுகாப்
பான பகுதி ஒன்றுக்கு இடமாற்றப்பட்டி
ருக்கிறார். தடுப்பூசி கட்டாயமாக்கப்படு
வதையும் வைரஸ் சுகாதார விதிகளை
யும் தொடர்ந்து எதிர்த்து வருவோர், நாட்
டின் பல பகுதிகளில் இருந்தும் புறப்பட்டு
பெரும் வாகனப் பேரணியாகத் தலைநக
ரத்தை வந்தடைந்துள்ளனர்.

கனடா - அமெரிக்கா எல்லையைக் கடக்கின்ற கனரக வாகனங்களது சாரதிகளுக்குத் (truckers) தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் அறிவிப்பை பிரதமர் ட்ரூடோவின் அரசு கடந்த மாதம் விடுத்தி
ருந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாரதிகள் ஆரம்பித்த "சுதந்திர வாகனத் தொடரணி" என்ற போராட்டமே தற்போது
நாடளாவிய எதிர்ப்புப் போராக மாறித்
தலைநகர் வரை அணிவகுத்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற நாட்டின் தொலைதூர மாகாணங்களில் இருந்தும்
வாகனங்கள் ஆயிரக்கணக்கான கிலோ
மீற்றர்கள் தாண்டி வந்து தலைநகரப்
பேரணியில் இணைந்துள்ளன. 

கடும் பனிக் குளிர் காலநிலை எச்சரிக்
கைக்கு மத்தியில் கால்நடையாக வந்த ஆயிரக்கணக்கானோர் ஒட்டாவாவில் பிரதமர் அலுவலகம் நாடாளுமன்றம்  என்பன அமைந்துள்ள இடங்களுக்கு அருகே (Parliament Hill) திரண்டுள்ளனர். வாகனங்களின் நீண்ட அணிகள் பெரு வீதிகளை நிறைத்துள்ளன.சனிக்கிழமை
மாலை வரை அசம்பாவிதங்கள் ஏதும்
நிகழவில்லை. அமைதியான முறையில் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி
வருகின்றனர்.பின்னராக இன்று ஞாயிற்
றுக்கிழமை அவர்கள் ஓர் ஊடகச் சந்திப்
பையும் மகஜர் கையளிப்பையும் நடத்தவு
ள்ளனர். 

இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குள்
நுழைந்து குழப்பம் விளைவிக்க முயலும்
சக்திகள் தொடர்பில் பொலீஸார் தீவிர
கவனம் செலுத்தி வருகின்றனர்.பாது
காப்புக் காரணங்களுக்காக பிரதமர்
ட்ரூடோவும் அவரது குடும்பத்தினரும்
எங்கே என்று குறிப்பிடப்படாத  ரகசிய இடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பதைப் பொலீஸார் உறுதிசெய்துள்
ளனர்.வாகனப் பேரணியினரை பிரதமர் ட்ரூடோ"மிகச் சிறிய சிறுபான்மையினர் (small fringe minority) என்று முன்னர் குறிப்பிட்டிருந்தார். ஆனால்" சுதந்திர வாகனப் பேரணி"(Freedom Convoy) சுமார் 45 மைல்கள் தூரத்துக்கு நீண்டிருப்பதாக
செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒட்டாவா தேசிய போர் நினைவிடத்துக்கு
(Ottawa's National War Memorial) அருகே நிறுத்தப்பட்டிருந்த டசின் கணக்கான டிராக்டர் வாகனங்களைப் பொலீஸார்
அங்கிருந்து அகற்றியுள்ளனர்.சுகாதார
கட்டுப்பாடுகளையும் பிரதமர் ரூடோவை
யும் கண்டிக்கும் வாசகங்களுடனான
சுலோக அட்டைகள் வாகனங்களில்
காணப்படுகின்றன.இடைவிடாது வாகன சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்டும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது."கோவிட் -19" தொடர்புடைய கட்டுப்பாடுகள் இப்படியே தொடர்ந்தால்"கனடாவைக் கம்யூனிசம்
கைப்பற்றும்" என்று சில சாரதிகள் கோஷமிட்டனர் என்று "சிபிசி நியூஸ்" 
செய்தி வெளியிட்டுள்ளது. 

தடுப்பூசிக்கு எதிராக அணிதிரட்டுகின்ற
சாரதிகளது நிலைப்பாடு அறிவியலுக்
கும் - அரசாங்கத்துக்கும் - சமூகத்துக்கும்
எதிரானது என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிவருகிறார். 
-------------------------------------------------------------------
குமாரதாஸன்.                          பாரிஸ்.
30-01-2022

 

https://www.facebook.com/1328781225/posts/10228501219178685/?d=n 

Link to comment
Share on other sites

6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

குடும்பத்தோடு தலைமறைவானார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..

இலங்கைத் தமிழருக்குச் சிறிது ஆதரவாக இருக்கும் கனடா பிரதமர் பற்றிய இந்தச் செய்தி சொறிலங்க அரசுக்கு மிகுந்த உவப்பாக இருக்கும்.

குருவி சொல்கிறது.

Link to comment
Share on other sites

வழக்கம் போன்ற தட்ஸ் தமிழ் தலையங்கம்.

ருடோ ஒன்றும் ஒழித்து ஓடி தலைமறைவாகவில்லை.  ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பார ஊர்திகளில் பாராளுமன்ற வளாகத்தை நோக்கி வரும் வக்சின் எதிர்ப்பாளர்களால் அதற்கருகில் ஒட்டாவாவில் இருக்கும் உத்தியோகபூர்வ இல்லத்தில் வசிக்கும் பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று அவரது பாதுகாப்புக்கு பொறுப்பான பிரிவால் அவரை இன்னொரு இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது இந்தியா அல்ல. விவசாயிகளின் போராட்டத்துக்கு நடுவே பிரதமரை கொண்டு சென்று முழு பிதுங்கி நிற்க வைத்து மரண அச்சுறுத்தல் ஏற்படுத்த.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

குடும்பத்தோடு தலைமறைவானார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..

ஆக்கள் ஜேர்மனியிலை நிக்கினம் எண்டு என்ரை முதலாளி சொன்னவன் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

ஆக்கள் ஜேர்மனியிலை நிக்கினம் எண்டு என்ரை முதலாளி சொன்னவன் 😎

அவர் என்ன மோடியோ பிரச்சனை வந்தவுடன் ஓடி ஒழியுறத்துக்கு. 

😉

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.