Jump to content

புளிய மரமும் பொற்க்காலமும்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.c344a8fa-f5e1-41dc-874f-18aaa052722a.jpg.394bdd74e5841e53f8602b3e9cefdeda.jpg

புளிய மரமும் பொற்க்காலமும்.!

*************************

முற்பது வருடம் கழித்து

என் மண்ணுக்கு 

போனபோது-என்னை

யாருக்கும் தெரியவில்லை.

 

சொந்த மண்ணிலே

என்னை

சுற்றுலா பயணியாக..

எந்த நாடு ,எந்த ஊர்

எங்கு போகவேண்டும்

இங்கு.. 

யாரைத்தெரியுமென

ஏதேதோ கேள்விகள் 

என்னைச்சுற்றி

குவிந்தன..

 

ஊர்ப்பற்றோடு உறுதியாக 

வாழ்ந்து..

மறைந்துபோன எம்

தாய்,தந்தையைக்கூட 

தெரிய வாய்ப்பில்லை.

ஏனென்றால்..

அந்த ஊரில் வசித்திராத

புது முகங்கள்.

 

அங்கு ஓடித்திரியும் 

பிள்ளைகளை பார்க்கிறேன்

அவர்களும் மூண்றாவது

தலைமுறையினர்

அவர்களை எனக்கோ

என்னை அவர்களுக்கோ

தெரியவோ,புரியவோ

முடியவில்லை.

 

ஆனால்..

எங்களை அணைத்து

பாசம் காட்டிய

ஒரு பாட்டி 

வீட்டுக்கருகாமையில்

புடாரியம்மன் 

கோயிலுக்கு- முன்

இன்றும் இருக்கிறாள்.

 

எம் சொந்தமென்று 

சொல்ல இந்த

மூதாதையர்களைத்தவிர 

வேறு யாருமில்லை.

 

அவளின்.. 

காலடியில் இருந்து

நாங்கள் வாழ்ந்த-அந்த 

பொற்க்காலங்களை

எண்ணியெண்ணி

இருவரும் மெளன.. 

மொழியில் பேசுகின்றோம்.

 

இவளின் நிழலில் வளர்ந்து

கிளித்தட்டு,கிட்டிப்புள்ளு

கால் பந்து 

கொடியெடுத்தோடிய

தோழர்,தோழிகளை 

நினைத்துப்பார்க்கிறேன்.

 

இதே ஆலயவீதியில் 

அண்ணாவி பொன்னுத்துரை

அண்ணரின் 

பண்டாரவன்னியன்

அவர் போட்ட மேடையில்

அன்றே கிறுக்கிய.

எங்கள் கவிதைகள்

திடீர் நாடகங்களென

இளைஞர்,யுவதிகள் கூடிய

ஆனந்தமான பொழுதுகள்

அந்த குறுப்புத்தனங்கள்

எத்தனை எத்தனை.

 

எல்லாம் கனவாக வந்து 

போகிறது

ஆச்சியின் அருகில்

தலை சாய்ந்தபடியே

கண்கள் சத்தமின்றி 

அழுகின்றன.

 

போய்வா மகனே-என 

அம்மா,ஐயாவின் 

குரல் போல் ஒரு

அசரீதி கேட்கிறது.

…………….

எழுந்து நடக்கிறேன்.

அந்த அழியா 

நினைவுகளுடன்.

 மீண்டும் ஒருமுறை

அகதியாகவே

விமானம் ஏறுவதற்கு!

அன்புடன் -பசுவூர்க்கோபி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்......எமது நினைவுகளில் நாம் இளமையாகத்தான் இருக்கின்றோம்......ஊர் சென்று மூன்றாம் தலைமுறையினரைப் பார்க்கும் போதுதான் முதுமையின் நிதர்சனம் தெரிகின்றது.......!   😇

நல்ல கவிதை நன்றி கோபி .......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மை அறியாமலே காலம் விரைவாக சென்று விட்ட்து. தொலைத்தவைகள் ஏராளம். தேடியும் பெற முடியாதவை . அவை நம் நினைவுகளில் மட்டுமே வாழ்கிறது. அது ஒருபொற்காலம்.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமெல்லாம் அந்நியர்தான் அங்கே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, suvy said:

ஆம்......எமது நினைவுகளில் நாம் இளமையாகத்தான் இருக்கின்றோம்......ஊர் சென்று மூன்றாம் தலைமுறையினரைப் பார்க்கும் போதுதான் முதுமையின் நிதர்சனம் தெரிகின்றது.......!   😇

நல்ல கவிதை நன்றி கோபி .......!

பேரன்புடன் நன்றிகள் அன்ணா

16 hours ago, நிலாமதி said:

நம்மை அறியாமலே காலம் விரைவாக சென்று விட்ட்து. தொலைத்தவைகள் ஏராளம். தேடியும் பெற முடியாதவை . அவை நம் நினைவுகளில் மட்டுமே வாழ்கிறது. அது ஒருபொற்காலம்.  
 

பேரன்புடன் நன்றிகள் அக்கா

16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாமெல்லாம் அந்நியர்தான் அங்கே. 

பேரன்புடன் நன்றிகள் சுமேரியர்

16 hours ago, nunavilan said:

கவிதைக்கு நன்றி, கோபி. 

பேரன்புடன் நன்றிகள் நுனாவிலன் அவர்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2022 at 17:08, பசுவூர்க்கோபி said:

அந்த அழியா 

நினைவுகளுடன்.

 மீண்டும் ஒருமுறை

அகதியாகவே

விமானம் ஏறுவதற்கு!

சொந்த நாட்டிலும் அந்நியர்! புலம்பெயர் நாட்டிலும் அந்நியர்!

இதே அனுபவம் எனக்கும் ஏற்பட்டது..

மண்ணில் ஒரு சொந்தம் என்று சொல்ல ஒரு மரம் நட்டால் என்னவென்று யோசிப்பதுண்டு.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

சொந்த நாட்டிலும் அந்நியர்! புலம்பெயர் நாட்டிலும் அந்நியர்!

இதே அனுபவம் எனக்கும் ஏற்பட்டது..

மண்ணில் ஒரு சொந்தம் என்று சொல்ல ஒரு மரம் நட்டால் என்னவென்று யோசிப்பதுண்டு.!

உளமார்ந்த  நன்றிகள் கிருபன்  அண்ணா..
விருப்புக்குறியிட்ட  புங்கையூரன் அவர்களுக்கும் பாலபத்திர ஓணான் அவர்களுக்கும் மகிழ்வுடம் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2022 at 22:38, பசுவூர்க்கோபி said:

large.c344a8fa-f5e1-41dc-874f-18aaa052722a.jpg.394bdd74e5841e53f8602b3e9cefdeda.jpg

புளிய மரமும் பொற்க்காலமும்.!

*************************

முற்பது வருடம் கழித்து

என் மண்ணுக்கு 

போனபோது-என்னை

யாருக்கும் தெரியவில்லை.

 

சொந்த மண்ணிலே

என்னை

சுற்றுலா பயணியாக..

எந்த நாடு ,எந்த ஊர்

எங்கு போகவேண்டும்

இங்கு.. 

யாரைத்தெரியுமென

ஏதேதோ கேள்விகள் 

என்னைச்சுற்றி

குவிந்தன..

 

ஊர்ப்பற்றோடு உறுதியாக 

வாழ்ந்து..

மறைந்துபோன எம்

தாய்,தந்தையைக்கூட 

தெரிய வாய்ப்பில்லை.

ஏனென்றால்..

அந்த ஊரில் வசித்திராத

புது முகங்கள்.

 

அங்கு ஓடித்திரியும் 

பிள்ளைகளை பார்க்கிறேன்

அவர்களும் மூண்றாவது

தலைமுறையினர்

அவர்களை எனக்கோ

என்னை அவர்களுக்கோ

தெரியவோ,புரியவோ

முடியவில்லை.

 

ஆனால்..

எங்களை அணைத்து

பாசம் காட்டிய

ஒரு பாட்டி 

வீட்டுக்கருகாமையில்

புடாரியம்மன் 

கோயிலுக்கு- முன்

இன்றும் இருக்கிறாள்.

 

எம் சொந்தமென்று 

சொல்ல இந்த

மூதாதையர்களைத்தவிர 

வேறு யாருமில்லை.

 

அவளின்.. 

காலடியில் இருந்து

நாங்கள் வாழ்ந்த-அந்த 

பொற்க்காலங்களை

எண்ணியெண்ணி

இருவரும் மெளன.. 

மொழியில் பேசுகின்றோம்.

 

இவளின் நிழலில் வளர்ந்து

கிளித்தட்டு,கிட்டிப்புள்ளு

கால் பந்து 

கொடியெடுத்தோடிய

தோழர்,தோழிகளை 

நினைத்துப்பார்க்கிறேன்.

 

இதே ஆலயவீதியில் 

அண்ணாவி பொன்னுத்துரை

அண்ணரின் 

பண்டாரவன்னியன்

அவர் போட்ட மேடையில்

அன்றே கிறுக்கிய.

எங்கள் கவிதைகள்

திடீர் நாடகங்களென

இளைஞர்,யுவதிகள் கூடிய

ஆனந்தமான பொழுதுகள்

அந்த குறுப்புத்தனங்கள்

எத்தனை எத்தனை.

 

எல்லாம் கனவாக வந்து 

போகிறது

ஆச்சியின் அருகில்

தலை சாய்ந்தபடியே

கண்கள் சத்தமின்றி 

அழுகின்றன.

 

போய்வா மகனே-என 

அம்மா,ஐயாவின் 

குரல் போல் ஒரு

அசரீதி கேட்கிறது.

…………….

எழுந்து நடக்கிறேன்.

அந்த அழியா 

நினைவுகளுடன்.

 மீண்டும் ஒருமுறை

அகதியாகவே

விமானம் ஏறுவதற்கு!

அன்புடன் -பசுவூர்க்கோபி.

மலரும் நினைவுகளை கவிதையாக வடித்து பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழர்.💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2022 at 15:02, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மலரும் நினைவுகளை கவிதையாக வடித்து பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழர்.💐

நெஞ்சார்ந்த நன்றிகள் தோழரே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.