Jump to content

தமிழ் நாட்டில் முதல் நாள்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg

இந்த காணொளியில் வரும் தம்பி யாரென தெரியாது..!

ஆனால், இவர் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டின் சென்னையில் இறங்கி, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, தமிழ் தாய்நாட்டின் பூமியை தொட்டு வணங்கியபோது நேசத்தில் கண்கள் கலங்கியது உண்மை. 💔

வாழ்க வளமுடன்..! 🙌

வெகுளி மனதோடு செங்கல்பட்டு அருகேயிருக்கும் கிராமத்து கடைகளிலும், வீதியோரம் செல்பவர்களோடும் ஈழத்து தமிழில் பேச முயலும்போது அவர் அனுபவித்த சுகமான சிரமங்கள் அலாதியானது.

(சில வருடங்களுக்கு முன் துபை வந்த பாஞ் மற்றும் அவரின் துணைவியாரிடமும் நான் தமிழக தமிழில் பேச, அவர்கள் ஈழத்து தமிழில் பேச, நாங்கள் தடுமாறிய நொடிகளின் இனிமையான தருணங்களை நினைத்து இன்னமும் ரசிக்கிறேன்..!)

காணொளி முடிவில், ஒரு அம்மா "என்னையும் ஈழத்துக்கு கூட்டிட்டு போய் கொண்டு வந்து விடு..!" என சொல்வது ரசிக்கத்தக்க வேடிக்கை. இந்த தம்பி, சென்னையின் நகர்புறம் சென்று பேசினால் இந்த அன்னோன்யம் இருக்குமாவென தெரியவில்லை

ஈழம் சென்று கதைக்க, தரிசிக்க எங்களுக்கும் ஆவல் பெருகுகிறது..! 😍

 

 

  • Like 9
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரை அப்படியே மார்த்தாண்டம் போக சொல்லுங்க யாழ்ப்பாணத்துக்கும் மார்த்தாண்டத்துக்கும் ஒரு வித்தியாசம் காணமுடியாது தமிழிலும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இவரை அப்படியே மார்த்தாண்டம் போக சொல்லுங்க யாழ்ப்பாணத்துக்கும் மார்த்தாண்டத்துக்கும் ஒரு வித்தியாசம் காணமுடியாது தமிழிலும் .

அது எங்கை இருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

இவரை அப்படியே மார்த்தாண்டம் போக சொல்லுங்க யாழ்ப்பாணத்துக்கும் மார்த்தாண்டத்துக்கும் ஒரு வித்தியாசம் காணமுடியாது தமிழிலும் .

உண்மைதான்.. ஆனால் மார்த்தாண்டம் பகுதி இன்னமும் செழிப்புடன் (பனை மரக்காடுகள் பொட்டல் வெளிகள் இல்லாமல்) இருக்குமென எண்ணுகிறேன்.

6 minutes ago, குமாரசாமி said:

அது எங்கை இருக்கு?

கீழேயுள்ள நதியின் மண்டபத்தை பல தமிழ் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். கு.சா. இது மார்த்தாண்டம் அண்மித்த பகுதியில்தான் உள்ளது.

thirparappu-falls.jpg?w=1200&h=-1&s=1

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

அது எங்கை இருக்கு?

கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் .

நம்ம ஊர் போலவே கிணறுகள் கப்பி மூலமா தண்ணீர் அள்ளுவது பேச்சு வழக்கு யாழில் உள்ளது போல் ஒவ்வொரு வீட்டிலும் பாக்கு தென்னை வெத்தலை துளசி போன்றன இருக்கும் .

3 minutes ago, ராசவன்னியன் said:

உண்மைதான்.. ஆனால் மார்த்தாண்டம் பகுதி இன்னமும் செழிப்புடன் (பனை மரக்காடுகள் பொட்டல் வெளிகள் இல்லாமல்) இருக்குமென எண்ணுகிறேன்.

கீழேயுள்ள நதியின் மண்டபத்தை பல தமிழ் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். கு.சா. இது மார்த்தாண்டம் அண்மித்த பகுதியில்தான் உள்ளது.

thirparappu-falls.jpg?w=1200&h=-1&s=1

எப்படி அவர்களின் தமிழ் உச்சரிப்பு  யாழில் உள்ளது போல் இருக்கு ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

..எப்படி அவர்களின் தமிழ் உச்சரிப்பு  யாழில் உள்ளது போல் இருக்கு ?

யாழ்ப்பாண உணவு முறைகள், பேச்சு வழக்கு முதலியன மலையாள பச்சைத் தமிழை ஒட்டியே இருக்கின்றன. கலாச்சார வரலாற்று தொடர்புகளால் இவை ஒன்றியிருக்கலாம்.

முப்பது வருடங்களுக்கு முன் அரசுப் பணியில் நான் இருந்தப்போது, இப்பகுதிகளில் சர்வே சம்பந்தமாக சுற்றியிருக்கிறேன். பல கடைகளில் பேக்கறி, லாறி என வியாபார கடைகளில் எழுத்துக்களும், அவர்களின் தமிழ் உச்சரிப்பில் மலையாளமும் கலந்து வீசும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

உண்மைதான்.. ஆனால் மார்த்தாண்டம் பகுதி இன்னமும் செழிப்புடன் (பனை மரக்காடுகள் பொட்டல் வெளிகள் இல்லாமல்) இருக்குமென எண்ணுகிறேன்.

தமிழகம்- ஈழம்

கேடு கெட்ட அரசியலால் எல்லாவற்றையும் தொலைத்து விட்டோமோ என எண்ணத்தோன்றுகின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

Picture1.jpg

இந்த காணொளியில் வரும் தம்பி யாரென தெரியாது..!

ஆனால், இவர் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டின் சென்னையில் இறங்கி, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, தமிழ் தாய்நாட்டின் பூமியை தொட்டு வணங்கியபோது நேசத்தில் கண்கள் கலங்கியது உண்மை. 💔

வாழ்க வளமுடன்..! 🙌

வெகுளி மனதோடு செங்கல்பட்டு அருகேயிருக்கும் கிராமத்து கடைகளிலும், வீதியோரம் செல்பவர்களோடும் ஈழத்து தமிழில் பேச முயலும்போது அவர் அனுபவித்த சுகமான சிரமங்கள் அலாதியானது.

(சில வருடங்களுக்கு முன் துபை வந்த பாஞ் மற்றும் அவரின் துணைவியாரிடமும் நான் தமிழக தமிழில் பேச, அவர்கள் ஈழத்து தமிழில் பேச, நாங்கள் தடுமாறிய நொடிகளின் இனிமையான தருணங்களை நினைத்து இன்னமும் ரசிக்கிறேன்..!)

காணொளி முடிவில், ஒரு அம்மா "என்னையும் ஈழத்துக்கு கூட்டிட்டு போய் கொண்டு வந்து விடு..!" என சொல்வது ரசிக்கத்தக்க வேடிக்கை. இந்த தம்பி, சென்னையின் நகர்புறம் சென்று பேசினால் இந்த அன்னோன்யம் இருக்குமாவென தெரியவில்லை

ஈழம் சென்று கதைக்க, தரிசிக்க எங்களுக்கும் ஆவல் பெருகுகிறது..! 😍

 

 

கோப்பையில் இருந்த, இட்லியை வர்ணித்த தவகரன்….
அந்த வடை எப்பிடி இருந்தது, என்றும் சொல்வார் என எதிர்பார்தேன்.
கடைசி வரை சொல்லவேயில்லை. 😁

கழுகுப் பார்வையில் (ட்ரோன் படப் பிடிப்பு) செங்கல் பட்டு பசுமையாக இருந்தது,
ஆச்சரியமாக இருந்தது.

நல்ல ஒரு காணொளி இணைப்பிற்கு, நன்றி ராஜவன்னியன். 👍🏽 🙂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

யாழ்ப்பாண உணவு முறைகள், பேச்சு வழக்கு முதலியன மலையாள பச்சைத் தமிழை ஒட்டியே இருக்கின்றன. கலாச்சார வரலாற்று தொடர்புகளால் இவை ஒன்றியிருக்கலாம்.

முப்பது வருடங்களுக்கு முன் அரசுப் பணியில் நான் இருந்தப்போது, இப்பகுதிகளில் சர்வே சம்பந்தமாக சுற்றியிருக்கிறேன். பல கடைகளில் பேக்கறி, லாறி என வியாபார கடைகளில் எழுத்துக்களும், அவர்களின் தமிழ் உச்சரிப்பில் மலையாளமும் கலந்து வீசும்

என்ன பறைஞ்சு கொண்டு இருக்கிறியள்? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ராசவன்னியன் said:

கீழேயுள்ள நதியின் மண்டபத்தை பல தமிழ் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். கு.சா. இது மார்த்தாண்டம் அண்மித்த பகுதியில்தான் உள்ளது.

thirparappu-falls.jpg?w=1200&h=-1&s=1

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

கோப்பையில் இருந்த, இட்லியை வர்ணித்த தவகரன்….
அந்த வடை எப்பிடி இருந்தது, என்றும் சொல்வார் என எதிர்பார்தேன்.
கடைசி வரை சொல்லவேயில்லை. 😁

கன கட்டிங்,எடிட்டிங் நடந்திருக்கு போல.......ஒரு இடத்திலை எல்லாத்தையும் சொல்லேலாது 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையின் முதல் விமானப் பயணம் எவ்வளவு எதிர்ப்பார்ப்புடனும், சிலிர்ப்புடனும் இருக்குமென்பதை அனுபவபூர்வமாக வர்ணித்து எழுதியுள்ளது சிறப்பு. இந்தக் காணொளியின் இறுதியில் சென்னையில் இறங்கி, வெளிவரும்போது சொல்லிருப்பார்.

காணொளிகளின் கீழே தமிழக உறவுகளின் பின்னூட்டங்களில், இவருக்கு எவ்வளவு வரவேற்பு இங்கே இருக்கிறதென்பதை அறியக்கூடியதாக உள்ளது.

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

17 hours ago, பெருமாள் said:

கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் .

நம்ம ஊர் போலவே கிணறுகள் கப்பி மூலமா தண்ணீர் அள்ளுவது பேச்சு வழக்கு யாழில் உள்ளது போல் ஒவ்வொரு வீட்டிலும் பாக்கு தென்னை வெத்தலை துளசி போன்றன இருக்கும் .

எப்படி அவர்களின் தமிழ் உச்சரிப்பு  யாழில் உள்ளது போல் இருக்கு ?

சரசுவதி என்றாலே அவர் கைகளில் யாழைக் காணலாம். யாழுடன் பிறந்த சரசுவதி பேசிய மழலைதான் மலையாளம் என்று சொல்வார்கள். அதனால்தான் அவர்களின் தமிழ் உச்சரிப்பு  யாழில் உள்ளது போல் இருக்கிறது.

 th?id=OIP.aEUTh2V77x7qUpMJDqpH7gAAAA&pid=Api&P=0&w=182&h=179

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ராசவன்னியன் said:

இந்த காணொளியில் வரும் தம்பி யாரென தெரியாது..!

ஆனால், இவர் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டின் சென்னையில் இறங்கி, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, தமிழ் தாய்நாட்டின் பூமியை தொட்டு வணங்கியபோது நேசத்தில் கண்கள் கலங்கியது உண்மை

அவர் பெயர் தவகரன், யாழ்பாணத்திலிருந்து  யூரியூப் காணொலிகள் பதிவேற்றும் யாழ் சுதன் ஷங்கர்  ஜெசி போன்ற பிரபல்யமான பலரில் இவரும் ஒருவர்.

எந்த உலகத்தில் வாழ்ந்தாலும் இந்திய விசா பெற்றுத்தான் அங்கு வரவேண்டுமென்றாலும், சென்னை என்பது உலக தமிழர்களின் தலை நகரம்,

அழுக்கான சினிமாவும் அரசியலும் அங்கிருந்தாலும்,  யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு போகும் தூரம்கூட இல்லாத தமிழகமும் எங்கள் தாய் மண்ணே.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணொளி பார்க்கும் போது கண் கலங்கியது.

நாம் தமிழ்நாட்டினர் என்ற உணர்வு அடி மனதை வருடிச்சென்றது.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இந்த காணொளி பார்க்கும் போது கண் கலங்கியது.

நாம் தமிழ்நாட்டினர் என்ற உணர்வு அடி மனதை வருடிச்சென்றது.

எமக்கும் அப்படித்தான்.

ஆனாலும் சிலர் "எலேய், இந்தியனா இருக்கப் பாரு, இல்லைனா சிலோனுக்கு போயிடு.." என பிரிப்பதும் இங்கே உண்டு.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, குமாரசாமி said:

இந்த காணொளி பார்க்கும் போது கண் கலங்கியது.

நாம் தமிழ்நாட்டினர் என்ற உணர்வு அடி மனதை வருடிச்சென்றது.

 

 

நான் நெகிழ்ந்திட்டன்...
அன்பு மழையில்  என்னை அறியாமலேயே வாயெல்லாம் பல்லாகிவிட்டது.

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியில் பேசுபவர்களின்படி, ஈழ தமிழர்களின் உண்மை மனநிலை இதுதானா..? என தெளியவில்லை. மலையக தமிழர்களின் நிலை போலவே தோன்றுகிறது.

வசதியுள்ள பலரும் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா என புலம்பெயர்ந்துவிட, பாவம் எளிய மக்கள் இங்கே வந்து எந்த உரிமையும் இல்லாமல் வாழ்வது வேதனை.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ராசவன்னியன் said:

ஆனாலும் சிலர் "எலேய், இந்தியனா இருக்கப் பாரு, இல்லைனா சிலோனுக்கு போயிடு.." என பிரிப்பதும் இங்கே உண்டு.

மனிதர்கள் எல்லோரும் ஒரே மனநிலையுடன் இருப்பது, இல்லைத்தானே...
இங்கும்... சிலர், துவேசத்தை கக்கிக் கொண்டு இருப்பார்கள்.

ஆனாலும்... பார்த்த காணொளிகளில், பலரும் எம் மேல்...
பாசம் கொண்டிருப்பது மனதிற்கு இதமாக உள்ளது. 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

ந்தக் காணொளியில் பேசுபவர்களின்படி, ஈழ தமிழர்களின் உண்மை மனநிலை இதுதானா..? என தெளியவில்லை. மலையக தமிழர்களின் நிலை போலவே தோன்றுகிறது.

வசதியுள்ள பலரும் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா என புலம்பெயர்ந்துவிட, பாவம் எளிய மக்கள் இங்கே வந்து எந்த உரிமையும் இல்லாமல் வாழ்வது வேதனை.

 பல இடங்களில்  கதைக்க பயப்பிடுகின்றார்கள் என தெரிகின்றது.அது நியானமானதும் கூட....ஏனெனில் கமாராவுடன் வருகின்றவர் வேறு யாராகவும் இருக்கக்கூடும் அல்லவா.

தமிழினத்திற்குள் கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் மொழியால்  இணைவோம். 🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

 பல இடங்களில்  கதைக்க பயப்பிடுகின்றார்கள் என தெரிகின்றது.அது நியானமானதும் கூட....ஏனெனில் கமாராவுடன் வருகின்றவர் வேறு யாராகவும் இருக்கக்கூடும் அல்லவா.

தமிழினத்திற்குள் கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும், மொழியால்  இணைவோம். 🙏

நன்றி, கு.சா. 🙏

இந்தக் காணொளியின் சில பின்னூட்டங்களை பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது.

உள்நாட்டு போரின்போது, தானும், தன்னை சார்ந்தவர்களும் தப்பித்தால் போதுமென வசதிபடைத்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடி செட்டிலாகிவிட, வசதியற்ற எளியவர்கள் தோணி மூலம் தமிழகம் வந்து ஏழ்மை நிலையில் இன்னமும் வாழ்கிறார்கள்.

இங்கிருக்கும் அரசியல் மிக மிக மோசமானதுதான்(இவர்கள் சுதந்திரமாக வாழ, குடியுரிமையை கொடுக்க மறுக்கும் நிலையும் சேர்த்து), அவற்றை புரிந்துகொண்டு, இங்கிருக்கும் தமிழர்களின் வாழ்க்கை தரத்தையும் பார்த்தால், குழப்பங்களை, ஏமாற்றங்களை தவிர்க்கலாம். (அரசியல் சூழலை பொறுத்து, காலப்போக்கில் இவர்களுக்கு குடியுரிமையும் கிடைக்கலாம், யார் கண்டா..? 😕)

மேற்கத்திய நாடுகளை போல தமிழ்நாடு பொருளாதர, சமூக வாழ்வளவில் உயர்ந்தது இல்லை, இங்கிருக்கும் தமிழர்களின் வாழ்வு நிலையும் மிக சுமாரானதுதான்.

அந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் "ஈழத்தில் நாங்கள் அப்படியிருந்தோம், இப்படியிருந்தோம் தமிழகத்தில் வந்து சிரமப்படுகிறோம், அவர்களை திருப்பி அனுப்பிவிடுங்கள்.." என வெளிநாட்டிற்கு தாங்கள் வசதியாக தப்பியோடி செட்டிலாகிவிட்டு, அங்கிருந்து கூப்பாடு போடுவது எந்த விதத்தில் நியாயம்?

அப்படிபட்டவர்கள் ஒன்றாக சேர்ந்து, இவர்கள் நாடு திரும்ப விரும்பினால் அழைத்துக்கொள்ளலாமே..? இவர்கள் இழந்த வாழ்வை மீட்டுக் கொடுக்கலாமே..?

'கொதிக்கும் எண்ணெய் சட்டிக்கு பயந்து,நெருப்பில் விழுந்த கதையாக போச்சுதே, இவர்களின் வாழ்க்கை.,!' என எமக்கும் மிகுந்த வருத்தமே.😢

 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

நன்றி, கு.சா. 🙏

இந்தக் காணொளியின் சில பின்னூட்டங்களை பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது.

உள்நாட்டு போரின்போது, தானும், தன்னை சார்ந்தவர்களும் தப்பித்தால் போதுமென வசதிபடைத்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடி செட்டிலாகிவிட, வசதியற்ற எளியவர்கள் தோணி மூலம் தமிழகம் வந்து ஏழ்மை நிலையில் இன்னமும் வாழ்கிறார்கள்.

இங்கிருக்கும் அரசியல் மிக மிக மோசமானதுதான்(இவர்கள் சுதந்திரமாக வாழ, குடியுரிமையை கொடுக்க மறுக்கும் நிலையும் சேர்த்து), அவற்றை புரிந்துகொண்டு, இங்கிருக்கும் தமிழர்களின் வாழ்க்கை தரத்தையும் பார்த்தால், குழப்பங்களை, ஏமாற்றங்களை தவிர்க்கலாம். (அரசியல் சூழலை பொறுத்து, காலப்போக்கில் இவர்களுக்கு குடியுரிமையும் கிடைக்கலாம், யார் கண்டா..? 😕)

மேற்கத்திய நாடுகளை போல தமிழ்நாடு பொருளாதர, சமூக வாழ்வளவில் உயர்ந்தது இல்லை, இங்கிருக்கும் தமிழர்களின் வாழ்வு நிலையும் மிக சுமாரானதுதான்.

அந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் "ஈழத்தில் நாங்கள் அப்படியிருந்தோம், இப்படியிருந்தோம் தமிழகத்தில் வந்து சிரமப்படுகிறோம், அவர்களை திருப்பி அனுப்பிவிடுங்கள்.." என வெளிநாட்டிற்கு தாங்கள் வசதியாக தப்பியோடி செட்டிலாகிவிட்டு, அங்கிருந்து கூப்பாடு போடுவது எந்த விதத்தில் நியாயம்?

அப்படிபட்டவர்கள் ஒன்றாக சேர்ந்து, இவர்கள் நாடு திரும்ப விரும்பினால் அழைத்துக்கொள்ளலாமே..? இவர்கள் இழந்த வாழ்வை மீட்டுக் கொடுக்கலாமே..?

'கொதிக்கும் எண்ணெய் சட்டிக்கு பயந்து,நெருப்பில் விழுந்த கதையாக போச்சுதே, இவர்களின் வாழ்க்கை.,!' என எமக்கும் மிகுந்த வருத்தமே.😢

 

யதார்த்தம் .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.