Jump to content

இலங்கை வங்குரோத்து நிலையை அடையும்! - Financial Times தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச முதலீட்டாளர்களை மேற்கோள்காட்டி Financial Times வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2019ம் பாரிய வரிக் குறைப்பு செய்யப்பட்டதுடன், கோவிட் தொற்று காரணமாக சுற்றுலா துறை பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது.

வட்டி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக இந்த ஆண்டு சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டும். ஆனால் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 3 பில்லியனுக்கு குறைவான அமெரிக்க டொலர்களே இருக்கிறது.

இந்நிலையில், இலங்கை பெரும்பாலும் வங்குரோத்து நிலையை அடையும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அடுத்த பெரும் சவால் எதிர்வரும் ஜூன் மாதமாகும் போது ஒரு பில்லியன் டொலர் இறையாண்மை முறிகளை மீள செலுத்த வேண்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதனை செலுத்தத் தவறினால், கோவிட் பரவலையடுத்து கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சுரினாம், பெலிஸ், ஜாம்பியா மற்றும் ஈக்வடார் உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கையும் இணையும்.      

https://tamilwin.com/article/sri-lanka-reaches-bankruptcy-status-1644524816?itm_source=parsely-detail

https://www.ft.com/content/21217f9e-9c4c-4483-968c-25433e62d9c0

Link to comment
Share on other sites

26 minutes ago, பெருமாள் said:

 

இலங்கை அரசாங்கத்தின் அடுத்த பெரும் சவால் எதிர்வரும் ஜூன் மாதமாகும் போது ஒரு பில்லியன் டொலர் இறையாண்மை முறிகளை மீள செலுத்த வேண்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

/

இறையாண்மை முறி என்றால் என்ன, ஏன் அதனை கட்ட வேண்டும் என எவருக்காவது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நிழலி said:

இறையாண்மை முறி என்றால் என்ன, ஏன் அதனை கட்ட வேண்டும் என எவருக்காவது தெரியுமா?

@ஏராளன்  போன்றவர்கள் இத்துறையில் வல்லவர்கள் இப்படியான கடன் முறி பத்திரங்கள் அதிகளவில் இறுதிக்கட்ட போரின் மூன்றுவருடங்கள் கணக்கு வழக்கு இல்லாமல் விற்கப்பட்டன ஒன் மில்லியன் அளவுக்கு கடன் வாங்கியுள்ளேன் வட்டியுடன் முதலை திருப்பி கொடுப்பதாகும் என்று இலங்கை அரசு அந்த துண்டை விற்கும் அது பல மில்லியனர்களின் கைகளில் கைமாறி கொண்டு இருக்கும் அதிக விளக்கம் என்னிடமும் இல்லை ஆனால் FT யில் போட்ட பந்தி இணைக்கிறேன் பாருங்கள் .



Many investors think Sri Lanka will become the latest to default on its sovereign debt during the pandemic, after the likes of Belize, Zambia and Ecuador. The country has almost $7bn in debt payments due this year but less than $3bn of foreign reserves.

இந்தவருடமுடிவுக்கு முன் 7 பில்லியன் டொலர் கவனிக்க மில்லியன் அல்ல பில்லியன் திருப்பி கொடுக்கணும் ஆனால் கையிருப்பில் இருப்பதோ 3 பில்லியன் இந்த கைருப்பில்தான் அத்தியவசிய மருந்து இத்யாதிகள் .

The lack of foreign currency reserves has caused power cuts and shortages of imports, including fuel and milk powder, which have exacerbated double-digit inflation.

இந்த பணவீக்கம் நெல்லியடியில் லண்டன் புது 50 பவுன் நோட்டுக்கு 400 கொடுக்கும் அளவுக்கு பெருத்துள்ளது 10 ஆயிரம் லண்டன் 50 பவுன் தாள் புதுசு கொண்டுபோனால் குறைந்த பட்சம் 3ஆயிரம் பவுன் லாபம் காட்டும் அளவுக்கு நிலைமை மோசம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் இந்தியாவிடம் இருந்தும் பீஜிங்கில் இருந்தும் சமீபத்தில்  வாங்கப்படும் கடன்களை dollar-denominated debt என்கிறார்கள் இது என்னும் ஆபத்தானது பல நாடுகளை நிர்மூலம் செய்த  ஒன்று என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பெருமாள் said:

அத்துடன் இந்தியாவிடம் இருந்தும் பீஜிங்கில் இருந்தும் சமீபத்தில்  வாங்கப்படும் கடன்களை dollar-denominated debt என்கிறார்கள் இது என்னும் ஆபத்தானது பல நாடுகளை நிர்மூலம் செய்த  ஒன்று என்கிறார்கள்.

அப்ப இலங்கையில் பங்கு பிரிப்பதில் சண்டை வரும் என்கிறியள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இறையாண்மை முறி என்றால் என்ன, ஏன் அதனை கட்ட வேண்டும் என எவருக்காவது தெரியுமா?

Sovereign Bond என்பதைத் தான் இவ்வாறு முழி பெயர்த்துள்ளார்கள் போல உள்ளது…!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

@ஏராளன்  போன்றவர்கள் இத்துறையில் வல்லவர்கள் இப்படியான கடன் முறி பத்திரங்கள் அதிகளவில் இறுதிக்கட்ட போரின் மூன்றுவருடங்கள் கணக்கு வழக்கு இல்லாமல் விற்கப்பட்டன ஒன் மில்லியன் அளவுக்கு கடன் வாங்கியுள்ளேன் வட்டியுடன் முதலை திருப்பி கொடுப்பதாகும் என்று இலங்கை அரசு அந்த துண்டை விற்கும் அது பல மில்லியனர்களின் கைகளில் கைமாறி கொண்டு இருக்கும் அதிக விளக்கம் என்னிடமும் இல்லை ஆனால் FT யில் போட்ட பந்தி இணைக்கிறேன் பாருங்கள் .



Many investors think Sri Lanka will become the latest to default on its sovereign debt during the pandemic, after the likes of Belize, Zambia and Ecuador. The country has almost $7bn in debt payments due this year but less than $3bn of foreign reserves.

இந்தவருடமுடிவுக்கு முன் 7 பில்லியன் டொலர் கவனிக்க மில்லியன் அல்ல பில்லியன் திருப்பி கொடுக்கணும் ஆனால் கையிருப்பில் இருப்பதோ 3 பில்லியன் இந்த கைருப்பில்தான் அத்தியவசிய மருந்து இத்யாதிகள் .

The lack of foreign currency reserves has caused power cuts and shortages of imports, including fuel and milk powder, which have exacerbated double-digit inflation.

இந்த பணவீக்கம் நெல்லியடியில் லண்டன் புது 50 பவுன் நோட்டுக்கு 400 கொடுக்கும் அளவுக்கு பெருத்துள்ளது 10 ஆயிரம் லண்டன் 50 பவுன் தாள் புதுசு கொண்டுபோனால் குறைந்த பட்சம் 3ஆயிரம் பவுன் லாபம் காட்டும் அளவுக்கு நிலைமை மோசம் .

 

சத்தியமா எனக்கு ஒன்றும் தெரியாது.
கடஞ்சா, வசி, கோசான்சே இவர்களை கேட்டால் தெரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.