Jump to content

திறந்தநிலை கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன? இதில் இலவசப் பயிற்சி தரும் குழு எங்குள்ளது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திறந்தநிலை கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன? இதில் இலவசப் பயிற்சி தரும் குழு எங்குள்ளது?

  • ஆ. லட்சுமி காந்த் பாரதி
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

திறந்தவெளி கட்டற்ற மென்பொருள்

பட மூலாதாரம்,VISUAL GENERATION

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

ஒரு காலத்தில் மனிதன் உழைப்பின் மூலம் மட்டுமே பொருள்கள் உற்பத்தி ஆகும். தொழில்நுட்பம் வளர்ந்து, வளர்ந்து இன்றைக்கு கட்டளை பிறப்பித்தால் போதும், அந்தப் பொருள் முழுமையாக உற்பத்தியாகி வந்து நிற்கும்.

உதாரணமாக ஒரு புகைப்படத்தை நாம் நகல் எடுக்க வேண்டும் என்றால், எத்தனை நகல்கள் வேண்டும் என்று கட்டளையிட்டால், நமக்கு அந்த எண்ணிக்கையில் அந்த நகல்கள் நமக்குக் கிடைக்கும். இப்படி நாம் சொல்லக்கூடிய கட்டளைகளை எடுத்துக்கொண்டு அதற்கான வேலையை செய்வதற்கு மென்பொருள் மிகவும் முக்கியமானது.

கணிப்பொறி, மென்பொருளின் அடிப்படையிலேயே இயங்குகிறது. அப்படிப்பட்ட மென்பொருள்களில் ஒரு வகை, திறந்தநிலை கட்டற்ற மென்பொருள் ( Free and open-source software) என்று அழைக்கப்படும்.

திறந்தநிலை கட்டற்ற மென்பொருள் (Free and open-source software) என்றால் என்ன?

ஒரு மென்பொருள் திறந்த நிலை கட்டற்ற மென்பொருள் என்றால், அந்த மென்பொருளை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட கணினி நிரல்கள் (Computer Programing), பொது வெளியில் அனைவருக்கும் கிடைக்கும் என்று பொருள். குறிப்பாக இது பயனர்களுக்கு நான்கு சுதந்திரங்களை தருகிறது.

  • எந்த வேலைக்கும் இதைப் பயன்படுத்த முடியும்.
  • இந்த மென்பொருளின் கணினி நிரல்களைப் பார்த்து படித்து தெரிந்துகொள்ள முடியும்.
  • இது அனைவருக்கும் பகிரும் வகையில் இருக்கும்.
  • இந்த மென்பொருளின் கணினி நிரல்களை மாற்றி அமைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏன் திறந்தநிலை கட்டற்ற மென்பொருள் தேவை ?

நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய மென்பொருள், தனியுரிமை மென்பொருள்( Proprietary software) ஆகும். தனியுரிமை மென்பொருள் என்றால், அதனை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் பல கட்டுப்பாடுகள் இருக்கும்.

அந்த மென்பொருளில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதனை பயனரே சரி செய்ய முடியாது. ஏனெனில், அந்த மென்பொருள் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் பகிரப்படாது. இதனால் பயனர்கள் அந்த மென்பொருளை உற்பத்தி செய்த நிறுவனங்களை சார்ந்தே இயங்க வேண்டியது இருக்கும்.

மேலும், திறந்த நிலை கட்டற்ற மென்பொருள்கள் கொடுப்பது போன்ற நான்கு விதமான சுதந்திரங்களை இந்தத் தனியுரிமை மென்பொருள் ‌தராது.

இந்த திறந்தவெளி கட்டற்ற மென்பொருளை மையமாக வைத்து விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் (VGLUG) இயங்கி வருகிறது.

 

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம்

இந்தக் குழு கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு இலவசமாக திறந்த நிலை கட்டற்ற மென்பொருள் கணினி நிரல் பயிற்சிகளை வழங்குகிறது.

இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணிமாறனிடம் பிபிசி தமிழ் பேசியது. "சமூகத்தில் அறிவு சார்ந்த விஷயங்களை, அறிவியல் பார்வையோடு அனைவருக்கும் கடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இதை நாங்கள் கூட்டு முயற்சியாக செய்கிறோம்.

இந்தப் பயிற்சி மூலம் உயர் கல்வி முடித்தவுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மாணவ மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு கிடைப்பது எளிதாகிறது.

 

மணிமாறன்

 

படக்குறிப்பு,

மணிமாறன்

இதைத் தவிர, பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக பிரத்தியேகமாக ஒரு செயலியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அது அவர்கள் செவி வழியே கற்க உதவும்.

விரைவில் இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும். அதேபோல, விழுப்புரம் மாநிலங்களவை உறுப்பினர் ரவிக்குமாரிடம், விழுப்புரம் மாவட்ட மக்களின் பிரச்சனைகளை கொண்டு சேர்ப்பதற்காக ஒரு பிரத்தியேக செயலியை உருவாக்கியுள்ளோம்.

இதே போன்ற செயலியை மற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கும் செய்து தர நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.

இந்தப் பயிற்சியில் பங்கெடுத்த கௌசல்யா என்ற மாணவி கூறும்போது, "பைத்தான் என்ற கணினி நிரலை இலவசமாக கற்றுத் தருவதாக எங்கள் கல்லூரி மூலமாக எங்களுக்கு செய்தி கிடைத்தது. அந்தப் பயிற்சிக்கு விண்ணப்பித்தேன். ஆறு மாதம், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்தப் பயிற்சி தொடர்ச்சியாக நடைபெற்றது.

கல்லூரி முடித்த உடன், இந்தப் பயிற்சியின் உதவியாலும், இந்தக் குழுவின் வழியாகவும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது.

 

கௌசல்யா

 

படக்குறிப்பு,

கௌசல்யா

என்னைப் போல பல மாணவர்களும் அந்தப் பயிற்சியில் கலந்து கொண்டனர். அது உண்மையிலேயே எனக்கு மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருந்தது. தற்போது நான் மீண்டும் இந்தக் குழுவில் இணைந்து என்னைப் போன்ற மற்ற மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க உதவுகிறேன்," என்றார்.

https://www.bbc.com/tamil/science-60142815

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.