Jump to content

ஐபிஎல் 2022 செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

CSK vs SRH தோனி தலைமையில் சிஎஸ்கே வெற்றி: ஜடேஜா தலைமை குறித்து தோனி கூறியது என்ன?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

Dhoni, Mahendra Singh Dhoni, MSD, महेंद्र सिंह धोनी, धोनी, CSK, CSKvsSRH, Captain Cool

பட மூலாதாரம்,BCCI/IPL

ஐபிஎல் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்விகளை சந்தித்துவந்தது. இதற்கு முன்புவரை நடந்த 8 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே சிஎஸ்கே வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், கேப்டன் பதவியில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகினார். மீண்டும் சிஎஸ்கே கேப்டனாக தோனி பொறுப்பேற்று முதல் ஆட்டத்திலேயே சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சிஎஸ்கே 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

வெற்றிக்குப் பிறகு ஜடேஜாவின் தலைமை குறித்தும், அவருக்கு என்ன நெருக்கடி இருந்தது என்பது குறித்தும் தோனி பேசியவை டிரெண்டாகி வருகின்றன.

 

CSK vs SRH மேட்சுக்குப் பிறகு ஜடேஜாவுடன் தோனி.

பட மூலாதாரம்,BCCI/IPL

 

படக்குறிப்பு,

மேட்சுக்குப் பிறகு ஜடேஜாவுடன் தோனி.

வெற்றி பெற்ற அணியின் கேப்டனாக மேட்ச் முடிந்த பின் பேசிய தோனி, சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது, அதனை ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கியது, பின் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றது என பலவற்றை குறித்து பேசினார்.

இந்த மேட்சுக்கு ஒருநாள் முன்னதாக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஜடேஜா, அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு தோனியை கேட்டுக்கொண்டார். அதனை 'கேப்டன் கூல்' ஏற்றுக்கொண்டார்.

ஒரே இரவில் ஏற்பட்ட இந்த மாற்றம் கிரிக்கெட் உலகிலும் பொதுமக்கள் மத்தியிலும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

இந்த மாற்றம் குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு பதில் அளித்த அவர், "இந்த சீசனில் ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்புக்கான வாய்ப்பு வழங்கப்படும் என்பது கடந்தாண்டிலேயே அவருக்கு தெரியும். அதற்காக தயார்படுத்துவதற்கு அவருக்கு போதிய கால அவகாசம் இருந்தது. முதல் இரு மேட்ச்களில் அவருடைய பணியை நான் கண்காணிக்க மட்டுமே செய்தேன். அதன்பிறகு, அவரே முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும், அம்முடிவுகளுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவரிடம் வலியுறுத்தினேன்" என தெரிவித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

"கேப்டனாக பொறுப்பேற்கும் போது பல விஷயங்களை கவனிக்கவேண்டும் வேண்டும். ஆனால், தொடர் செல்ல செல்ல, கேப்டன் பொறுப்பின் அழுத்தம் அவரது விளையாட்டை பாதிக்க செய்தது.

கேப்டன் பொறுப்பை ஏற்றுச் செய்வது என்பது மெதுவாக நடக்கும் மாற்றம். கேப்டனாக இருக்கும்போது நாம் பலவற்றை கவனிக்க வேண்டியிருக்கும். அதில் ஒன்று உங்களின் விளையாட்டு" என தெரிவித்தார்.

 

CSK vs SRH ஜடேஜா

பட மூலாதாரம்,BCCI/IPL

கேப்டன் பொறுப்பின் அழுத்தத்திலிருந்து விடுபட்டதால், ஜடேஜா மீண்டும் புத்துணர்ச்சியுடன் 'ஆல்-ரவுண்ட்'டராக விளையாட்டை தொடர்வார் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்த தோனி, குறிப்பாக 'பீல்டிங்'கில் கவனம் செலுத்துவார் என தெரிவித்தார். இந்த சீசனில் பீல்டிங்கில் மிக மோசமாக உள்ள சிஎஸ்கே, எளிமையான கேட்ச்களை கூட தவறவிட்டது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் இத்தகைய எளிமையான கேட்ச்களை சிஎஸ்கே நழுவவிட்டது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

"இந்த மேட்ச்கள் கடினமானவை, எனினும் நாங்கள் வலுவுடன் திரும்பிவருவோம்" என தெரிவித்தார்.

இந்த சீசனில் ஜடேஜா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்பது முன்னரே திட்டமிடப்பட்டது என்றும் அம்முடிவை தான் ஆதரித்ததாகவும் தோனி கூறினார். மேலும், கேப்டனாக ஜடேஜாவின் முடிவுகளில் தலையிட வேண்டாம் என தான் நினைத்ததாகவும் கூறினார்.

 

தோனி CSK vs SRH

பட மூலாதாரம்,BCCI/IPL

நேற்றைய மேட்ச்சில் முதலாவதாக விளையாடிய சென்னை அணி 202 ரன்களை அடித்தது, இதில் பாதி அதாவது 99 ரன்களை ருதுராஜ் கேய்க்வாட் அடித்தார். டேவன் கான்வே 85 ரன்கள் (நாட் அவுட்) அடித்தார். அடுத்ததாக விளையாடிய ஹைதராபாத் 189 ரன்களை அடித்தது. இதையடுத்து இந்த மேட்ச்சில் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

"நான் வித்தியாசமாக எதுவும் செய்யவில்லை. கேப்டன் மாறிவிட்டதால் அனைத்துமே மாறிவிட்டது என பொருள் அல்ல" என வெற்றி குறித்து தோனி தெரிவித்துள்ளார்.

 

CSK vs SRH ஜடேஜா, தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களுள் ஒருவராக தோனி உள்ளார். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 14 ஆண்டுகளாக சென்னை அணியின் கேப்டனாக அவர் உள்ளார்.

ஐபிஎல் தொடர்களை சிஎஸ்கே வெல்ல தோனியின் தலைமைப் பண்பு காரணமாக இருந்ததாக அவர் பலராலும் பாராட்டப்படுகிறார்.

கேப்டனாக இருந்தபோது ஜடேஜாவின் ஆட்டமும் சிறந்ததாக இல்லை என்ற கருத்து உள்ளது. இதுவரை 112 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார்.

https://www.bbc.com/tamil/sport-61295561

Link to comment
Share on other sites

  • Replies 155
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தா அணியை கரைசேர்த்த ரிங்கு சிங், ராணா ஜோடி

KKR

ரிங்கு சிங், ராணா ஜோடி

ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்த முறையும் பவர் பிளேவில் தேவ்தத் படிக்கல் விக்கெட்டை வீழ்த்தி கொல்கத்தாவுக்கு நல்ல தொடக்கத்தைத் தந்தார் உமேஷ் யாதவ். இதனால், ராஜஸ்தான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த திணறியது. சற்று தாக்குப்பிடித்து விளையாடி அதிரடிக்கு மாற முயற்சித்த ஜாஸ் பட்லர் 25 பந்துகளில் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் நிலைத்து நின்று விளையாடி 38-வது பந்தில் அரைசதத்தை எடுத்தார்.

இதனிடையே, கருண் நாயரும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் சற்று அதிரடி காட்டி ரன் ரேட்டை உயர்த்தினார். கடைசி நேரத்தில் அதிரடிக்கு உதவ வேண்டிய நேரத்தில் 17-வது ஓவரில் பராக் 12 பந்துகளில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அடுத்த பந்திலேயே சாம்சனும் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால், டிம் சௌதி வீசிய 19-வது ஓவரில் ஷிம்ரோன் ஹெத்மயர் 2 சிக்ஸர் விளாச அந்த ஓவரில் ராஜஸ்தானுக்கு 20 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியால் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிம்ரோன் ஹெத்மயர் 13 பந்துகளில் 27 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 5 பந்துகளில் 6 ரன்களும் எடுத்தனர்.

கொல்கத்தா தரப்பில் டிம் சௌதி 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், அனுகுல் ராய் மற்றும் ஷிவம் மவி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான இந்திரஜித், ஃபிஞ்ச் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், பின்னர் ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ், ராணா சிறப்பான பேட்டிங் செய்தனர். 

ஷ்ரேயஸ் 34 ரன்களுக்கு தங்களது விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், ராணா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் வந்த ரிங்கு சிங், கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். இறுதியில், 7 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.

அதிகபட்சமாக கொல்கத்தா அணி சார்பாக ராணா 48 ரன்களும் ரிங்கு சிங் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

 

https://www.dinamani.com/sports/2022/may/02/rinku-singh-rana-stars-as-kkr-registers-fourth-victory-3837808.html

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவான், ராஜபக்ச அதிரடி: பஞ்சாப் அசத்தல் வெற்றி

Punjab_Kings

தவான், ராஜபக்ச அதிரடி

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்க்கிழமை) லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் 9 ரன்களுக்கு ரன் அவுட் ஆன நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயதான சாய் சுதர்சன் களமிறங்கினார். 

தொடக்கத்தில் ரன் குவிக்க சற்று தடுமாறியபோதிலும், மறுமுனையிலவ் ரித்திமான் சஹா பவுண்டரி அடித்தது சுதர்சனுக்கு உதவியது.
இதன்பிறகு, சஹா 17 பந்துகளில் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் பெவிலியனுக்கு திரும்பிய வண்ணம் இருந்தனர்.

ஹார்திக் பாண்டியா (1), டேவிட் மில்லர் (11), ராகுல் தெவாட்டியா (11) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறியதால் கடைசி நேரத்தில் அதிரடி காட்டுவதற்கு ஆள் இல்லாமல் குஜராத் அணி திணறியது. 

மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடி வந்த சாய் சுதர்சன், அர்ஷ்தீப் சிங் வீசிய 18-வது ஓவரில் சிக்ஸரை பறக்கவிட்டு 42வது பந்தில் அரைசதத்தை எட்டினார். 

கடைசி நேரத்தில் அவர் காட்டிய அதிரடியே குஜராத்தை 140 ரன்களைத் தாண்டச் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சுதர்சன் 50 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். 

பின்னர் ஆட்டத்தை தொடங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பேர்ஸ்டோ, ஒரு ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும், பின்னர், வந்த ராஜபக்ச, தவானுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

40 ரன்களில் ராஜபக்த வெளியேற, பின்னர் வந்த லிவிங்ஸ்டன் மைதானத்திற்கு வெளியே சிக்சர்களை பறக்க விட்டு அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில், 4 ஓவர்கள் மிச்சமிருக்க 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. தவான் ஆட்டமிழாக்காமல் 62 ரன்களும் லிவிங்ஸ்டன் ஆட்டமிழாக்காமல் 30 ரன்களும் எடுத்திருந்தனர். 

 

https://www.dinamani.com/sports/2022/may/03/dhawan-rajapaksa-shines-as-punjab-pips-gujarat-3838312.html

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கான்வே அரைசதம் வீண்: பெங்களூரு வெற்றி

RCB beat CSK by 13 runs

கான்வே

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.

174 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னைக்கு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே நல்ல தொடக்கத்தைத் தந்தனர். கெயக்வாட் நிதானம் காட்ட கான்வே துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக பெங்களூருவின் சிறப்பான பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்கா ஓவரில் இருவரும் தலா 1 சிக்ஸர் அடித்ததையடுத்து, ரன் சற்று உயர்ந்தது. பவர் பிளே முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் சேர்த்தது.

இதன்பிறகு முதல் ஓவரை வீசிய ஷபாஸ் அகமது மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்டார். இதற்குப் பலனாக கெய்க்வாட் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

3-வது வரிசை வீரராகக் களமிறங்கிய ராபின் உத்தப்பா, கிளென் மேக்ஸ்வெல் பந்தில் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தும் மொயீன் அலி களமிறக்கப்படாமல் அம்பதி ராயுடு களமிறக்கப்பட்டார். அவர் ஒரு சிக்ஸர் அடித்தாலும், மேக்ஸ்வெல் வீசிய அடுத்த ஓவரில் 10 ரன்னுக்கு போல்டானார்.

சென்னை அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பிறகு, கான்வேவுடன் இணைந்து மொயீன் அலி பாட்னர்ஷிப் அமைத்தார்.

கான்வே ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்து பவுண்டரியும், சிக்ஸரும் அடித்து வந்தார். 33-வது பந்தில் அவர் அரைசதத்தை எட்டினார். ஆனால், 56 ரன்கள் எடுத்திருந்தபோது ஹசரங்கா பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜடேஜாவும் அடுத்த ஓவரிலேயே 3 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 

கடைசி 3 ஓவரில் சென்னை வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டன. ஹர்ஷல் படேல் வீசிய முதல் பந்தை மொயீன் அலி சிக்ஸருக்கு அனுப்பினாலும் அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார். மொயீன் அலி 27 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு, அந்த ஓவரை ஹர்ஷல் சிறப்பாக வீசியதால், மொத்தமே 8 ரன்கள்தான் கிடைத்தன. ஜோஷ் ஹேசில்வுட் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்திலேயே மகேந்திர சிங் தோனியும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்தை டுவைன் பிரிடோரியஸ் சிக்ஸருக்கு அனுப்பினாலும், அடுத்த பந்தில் பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். மகேஷ் தீக்ஷனாவும் ஒரு சிக்ஸர் அடித்தார். ஆனால் இலக்கை அடைய முடியவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/04/rcb-beat-csk-by-13-runs-3838714.html

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிஎஸ்கே அணி பெங்களூருவிடம் தோல்வி: சென்னையின் பிளேஆஃப் கனவு தகர்ந்ததா?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தோனி - விராட் கோலி

பட மூலாதாரம்,BCCI/IPL

 

படக்குறிப்பு,

போட்டி முடிந்த பின் தோனியை ஆரத்தழுவும் விராட் கோலி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் 15வது சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் கடினம் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 49-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியை எதிர்த்துக் களமிறங்கியது. இதில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. இதில், மஹிபால் லாம்ரோர் 42 ரன்களையும் விராட் கோலி 30 ரன்களையும் கேப்டன் டூ பிளஸ்ஸிஸ் 38 ரன்களையும் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 26 ரன்களையும் எடுத்தனர். இந்த நான்கு கிரிக்கெட் வீரர்களும் 99 பந்துகளில் மொத்தமாக 136 ரன்களை எடுத்தனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இதையடுத்துக் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முதல் விக்கெட்டுக்கு 54 ரன்களை சேர்த்தனர். அடுத்து களமிறங்கிய உத்தப்பா, ராயுடு, ஜடேஜா, கேப்டன் தோனி, டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சென்னை அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக, டெவான் கான்வே 56 ரன்களையும் மொயீன் அலி 34 ரன்களையும் ருதுராஜ் கெய்க்வாட் 28 ரன்களையும் எடுத்தனர்.

சென்னை தரப்பில் மஹீஷ் தீக்ஷணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் டுவைன் பிரிட்டோரியஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆனால், சென்னை அணியின் டெவான் கான்வே அரை சதத்தை (56) எட்டியபோதும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இந்த மேட்ச்சில் வென்ற பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலிருந்து 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆனால், நடைபெற்ற 10 மேட்ச்களில் சென்னை அணி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. இனி அடுத்துள்ள 4 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்றாலும், பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது.

 

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி

பட மூலாதாரம்,BCCI/IPL

தோனி கூறியது என்ன?

போட்டி நிறைவுற்றபின் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன், "பேட்டிங்கில் நீங்கள் உங்கள் இயல்பான கிரிக்கெட்டை விளையாடலாம். ஆனால், பேட்டிங் செய்த பிறகு நீங்கள் இலக்கை கண்காணித்து அதற்கேற்ப கணக்கிட வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் அந்த விஷயங்களில் முடிவுகளை எடுக்க வேண்டும். இன்றைய ஆட்டத்தில் இது ஒரு பிரச்னையாக இல்லை.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

எங்கு தவறு நடந்தது என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புள்ளிப்பட்டியலில் உள்ள புள்ளிகளின் எண்ணிக்கையால் திசைதிருப்பப்படுவது எளிது. புள்ளிகள் அட்டவணையில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை விட செயல்முறையே முக்கியம்" என்றார்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பட மூலாதாரம்,BCCI/IPL

இனி, மே 8 அன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடனும் மே 12 அன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடனும் மே 15 அன்று குஜராத் டைட்டன்ஸ் அணியுடனும் மே 20 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோத உள்ளது.

https://www.bbc.com/tamil/sport-61329695

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

சிஎஸ்கே அணி பெங்களூருவிடம் தோல்வி: சென்னையின் பிளேஆஃப் கனவு தகர்ந்ததா?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தோனி - விராட் கோலி

பட மூலாதாரம்,BCCI/IPL

 

படக்குறிப்பு,

போட்டி முடிந்த பின் தோனியை ஆரத்தழுவும் விராட் கோலி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் 15வது சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் கடினம் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 49-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியை எதிர்த்துக் களமிறங்கியது. இதில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. இதில், மஹிபால் லாம்ரோர் 42 ரன்களையும் விராட் கோலி 30 ரன்களையும் கேப்டன் டூ பிளஸ்ஸிஸ் 38 ரன்களையும் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 26 ரன்களையும் எடுத்தனர். இந்த நான்கு கிரிக்கெட் வீரர்களும் 99 பந்துகளில் மொத்தமாக 136 ரன்களை எடுத்தனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இதையடுத்துக் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முதல் விக்கெட்டுக்கு 54 ரன்களை சேர்த்தனர். அடுத்து களமிறங்கிய உத்தப்பா, ராயுடு, ஜடேஜா, கேப்டன் தோனி, டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சென்னை அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக, டெவான் கான்வே 56 ரன்களையும் மொயீன் அலி 34 ரன்களையும் ருதுராஜ் கெய்க்வாட் 28 ரன்களையும் எடுத்தனர்.

சென்னை தரப்பில் மஹீஷ் தீக்ஷணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் டுவைன் பிரிட்டோரியஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆனால், சென்னை அணியின் டெவான் கான்வே அரை சதத்தை (56) எட்டியபோதும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இந்த மேட்ச்சில் வென்ற பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலிருந்து 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆனால், நடைபெற்ற 10 மேட்ச்களில் சென்னை அணி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. இனி அடுத்துள்ள 4 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்றாலும், பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது.

 

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி

பட மூலாதாரம்,BCCI/IPL

தோனி கூறியது என்ன?

போட்டி நிறைவுற்றபின் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன், "பேட்டிங்கில் நீங்கள் உங்கள் இயல்பான கிரிக்கெட்டை விளையாடலாம். ஆனால், பேட்டிங் செய்த பிறகு நீங்கள் இலக்கை கண்காணித்து அதற்கேற்ப கணக்கிட வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் அந்த விஷயங்களில் முடிவுகளை எடுக்க வேண்டும். இன்றைய ஆட்டத்தில் இது ஒரு பிரச்னையாக இல்லை.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

எங்கு தவறு நடந்தது என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புள்ளிப்பட்டியலில் உள்ள புள்ளிகளின் எண்ணிக்கையால் திசைதிருப்பப்படுவது எளிது. புள்ளிகள் அட்டவணையில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை விட செயல்முறையே முக்கியம்" என்றார்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பட மூலாதாரம்,BCCI/IPL

இனி, மே 8 அன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடனும் மே 12 அன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடனும் மே 15 அன்று குஜராத் டைட்டன்ஸ் அணியுடனும் மே 20 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோத உள்ளது.

https://www.bbc.com/tamil/sport-61329695

ஆஹா CSK தோற்கிறதை பார்ப்பது எவ்வளவு ஆனந்தம்!!

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

ஆஹா CSK தோற்கிறதை பார்ப்பது எவ்வளவு ஆனந்தம்!!

ஆகா ஆகா எனக்கும் தான்.

ஆனால் @MEERA  ரொம்பவும் கடுப்பில இருக்கிறாப்பல.
இந்தப்பக்கம் ஆளையே காணோம்.

மும்பையும் வீழ்கிறது இரட்டிப்பு சந்தோசம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹைதராபாத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி

Delhi Capitals vs Sunrisers Hyderabad IPL

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50வது ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வார்னர், பாவெல் அதிரடி காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 92 ரன்களுடனும், பாவெல் 67 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இதனைத்தொடர்ந்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. 

தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக், கேன் வில்லியம்சன் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து வந்த திரிபாதி, மார்க்கரன் ஓரளவுக்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிக்கோலஸ் பூரன் நம்பிக்கையளிக்கும் விதமாக அரைசதம் கடந்தார். 

எனினும் டெல்லி அணியின் அபார பந்துவீச்சால் ஹைதராபாத் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 

முடிவில் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் 5வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/05/delhi-capitals-vs-sunrisers-hyderabad-ipl-3839452.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

ஹைதராபாத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி

Delhi Capitals vs Sunrisers Hyderabad IPL

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50வது ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வார்னர், பாவெல் அதிரடி காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 92 ரன்களுடனும், பாவெல் 67 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இதனைத்தொடர்ந்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. 

தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக், கேன் வில்லியம்சன் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து வந்த திரிபாதி, மார்க்கரன் ஓரளவுக்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிக்கோலஸ் பூரன் நம்பிக்கையளிக்கும் விதமாக அரைசதம் கடந்தார். 

எனினும் டெல்லி அணியின் அபார பந்துவீச்சால் ஹைதராபாத் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 

முடிவில் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் 5வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/05/delhi-capitals-vs-sunrisers-hyderabad-ipl-3839452.html

சன் ரைசேர்ஸ் இப்பத்தான் யோசிக்கும் அநியாயமா டேவிட் வார்னேரை விட்டுட்டோமே என்று!! கேன் வில்லியம்சன் powell இன் அந்த லட்டு கேட்சை விட்டதுதான் தோல்விக்கு முக்கிய காரணம்!!

23 hours ago, ஈழப்பிரியன் said:

ஆகா ஆகா எனக்கும் தான்.

ஆனால் @MEERA  ரொம்பவும் கடுப்பில இருக்கிறாப்பல.
இந்தப்பக்கம் ஆளையே காணோம்.

மும்பையும் வீழ்கிறது இரட்டிப்பு சந்தோசம்.

உந்த Pollard  ஐ கலைக்குமட்டும் மும்பை இந்தியன்ஸ் வெல்லுறதுக்கு சான்சே இல்லை!!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி ஓவரில் மும்பை ‘த்ரில்’ வெற்றி

FSF7tLlakAAj6LS

படம்: டிவிட்டர்/ஐபிஎல்

ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஆட்டத்தில் முதலில் மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. அடுத்து குஜராத் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களே எட்டியது.

முன்னதாக டாஸ் வென்ற குஜராத் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. மும்பை இன்னிங்ஸை தொடங்கியோரில் ரோஹித் சா்மா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். சூா்யகுமாா் யாதவ் 1 சிக்ஸருடன் 13 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா்.

பின்னா் இஷான் கிஷண் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினாா். கைரன் பொல்லாா்டு 4 ரன்களுக்கு பௌல்டாக்கப்பட்டாா். திலக் வா்மா 2 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு ரன் அவுட் செய்யப்பட்டாா். டேனியல் சாம்ஸ் டக் அவுட்டானாா்.

ஓவா்கள் முடிவில் டிம் டேவிட் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 44, முருகன் அஸ்வின் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் பௌலிங்கில் ரஷீத் கான் 2, அல்ஸாரி ஜோசஃப், லாக்கி ஃபொ்குசன், பிரதீப் சங்வான் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய குஜராத்தில் ரித்திமான் சாஹா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 55 ரன்கள் சோ்க்க, உடன் வந்த ஷுப்மன் கில்லும் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 52 ரன்கள் அடித்தாா். கேப்டன் ஹாா்திக் பாண்டியா 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்தாா்.

சாய் சுதா்சன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14, ராகுல் தெவாதியா 3 ரன்களுக்கு வீழ்ந்தனா். ஓவா்கள் முடிவில் டேவிட் மில்லா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 19, ரஷீத் கான் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலிங்கில் முருகன் அஸ்வின் 2, கைரன் பொல்லாா்டு 1 விக்கெட் கைப்பற்றினா்.
 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/06/mumbai-thrill-win-in-the-last-over-3839993.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமாக குஜராத் வென்றிருக்க வேண்டும், நூலிழையில் தோற்று விட்டது......!

இப்ப எனக்கொரு சந்தேகம் இந்த கிரிக்கட் விளையாட்டுகள் எல்லாம் ஒரு நிகழ்ச்சி நிரலில் நடைபெறுகின்றதோ என்று.......!   🤔

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

நியாயமாக குஜராத் வென்றிருக்க வேண்டும், நூலிழையில் தோற்று விட்டது......!

இப்ப எனக்கொரு சந்தேகம் இந்த கிரிக்கட் விளையாட்டுகள் எல்லாம் ஒரு நிகழ்ச்சி நிரலில் நடைபெறுகின்றதோ என்று.......!   🤔

சில மேட்ச்களை பார்க்கும்போது எனக்கும் உந்த சந்தேகம் வருகிறது! இன்றைய பஞ்சாப் கிங்ஸின் பேட்டிங் ஓடரை பார்த்தால் புரியும். லிவிங்ஸ்டனை கடைசி 3 ஒவருக்கு மாத்திரமே பேட் செய்ய அனுப்புகிறார்கள்???

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய்ஸ்வால் அரைசதம்: பஞ்சாபை வீழ்த்தியது ராஜஸ்தான்

rr

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஐபிஎல் தொடரின் 52ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி, பஞ்சாப் அணி பலப்பரீட்சை இன்று நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் தமிழக வீரர் ஷாருக் கானுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்கவில்லை. ராஜஸ்தான் அணியில் கருண் நாயருக்குப் பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வாகியுள்ளார். பஞ்சாப் வீரர் பேர்ஸ்டோ இன்று சிறப்பாக விளையாடி அரை சதமெடுத்தார். 40 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து, 15-வது ஓவரில் சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

பனுகா 18 பந்துகளில் 27 ரன்களும் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா, 18 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 38 ரன்களும் எடுத்தார்கள். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. சஹால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஐபிஎல் 2022 போட்டியில் 22 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், பட்லர் ஆகியோர் நல்ல துவக்கம் அளித்தனர். 

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் 16 பந்துகளில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களம்கண்ட சஞ்சு சாம்சனும் அதிரடியில் இறங்கினார். அவர், 12 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்றொருபுறம் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார். இருப்பினும் அவர் 68 ரன்களின்போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின்னர் வந்த படிக்கல், ஹெட்மயரும் தங்கள் பங்கிற்கு சிறப்பாக விளையாடினர். இதனால் ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/07/ipl2022-rajasthan-beat-punjab-by-6-wickets-3840459.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தா ‘ஆல்-அவுட்’: லக்னெள அபார வெற்றி

FSK7s9iVIAcbX7W

படம்: டிவிட்டர்/ஐபிஎல்

லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் 101 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளயும் கொல்கத்தா இழந்து தோல்வி அடைந்தது.

ஐபிஎல் தொடரின் 53ஆவது லீக் ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை லக்னெள அணி குவித்தது. அதிகபட்சமாக டி காக் 50 ரன்கள், தீபக் ஹூடா 41 ரன்கள் எடுத்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 15வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

லக்னெள அணியின் அவேஷ் கான், ஜேசன் ஹோல்டர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். 

இந்த வெற்றியின் மூலம் மீண்டும் புள்ளிப்பட்டியலின் முதலாவது இடத்திற்கு லக்னெள முன்னேறியது.
 

https://www.dinamani.com/sports/sports-news/2022/may/07/kolkata-all-out-lucknow-win-by-a-huge-margin-3840579.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹசரங்கா சுழலில் சிக்கிய ஹைதராபாத்: பெங்களூரு அணிக்கு 7ஆவது வெற்றி

RB

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

நடப்பு ஐபிஎல் தொடரின் 54ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத், பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர், களமிறங்கிய ராஜத் பட்டிடர், டு பிளெஸ்ஸி உடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 38 பந்துகளில் 48 ரன்களை எடுத்திருந்துபோது பட்டிடர் சுச்சித் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

இருப்பினும், நான்காவது ஆட்டக்காரராக களமிறங்கிய மாக்ஸ்வெல்லும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். 24 பந்துகளி்ல் 33 ரன்கள் எடுத்திருந்தபோது அவரும் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். முதல் இன்னிங்ஸ் பரபரப்பான கட்டத்தை நோக்கி சென்றபோது, தினேஷ் கார்த்திக் களமிறங்கி சரவெடி நிகழ்த்தினார்.  நான்கு சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 192 ரன்களை எடுத்தது.  நிலைத்து நின்று ஆடிய டு பிளெஸ்ஸிஸ் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

ஹைதராபாத் அணி சார்பாக சுச்சித் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 193 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த ராகுல திரிபாதி சிறப்பாக விளையாடினார். அவர் 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எஞ்சிய பேட்டர்களில் மார்க்ரம் 21, நிக்கோலஸ் பூரன் 19 மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். 

மற்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. பெங்களூரு பௌலிங்கில் ஹசரங்கா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.   
 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/08/ipl2022-royal-challengers-bangalore-beat-sunrisers-hyderabad-by-67-runs-3840957.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லிக்கு தோல்வி: 91 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி

spacer.png

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 55ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதின. நவிமும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ருதுராஜ், கான்வே ஜோடி டெல்லி அணியின் பந்துவீச்சை நான்கு புறமாக பறக்கவிட்டனர். அணியின் ஸ்கோர் 110ஆக இருந்தபோது ருதுராஜ் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபேவும் தன்பங்கிற்கு அதிரடியில் கலக்கினார்.

சிறப்பாக விளையாடிய கான்வே 49 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து துபே 19 பந்துகளில் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தோனி 21(8பந்துகள்), பிராவோ 1 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், ஸ்ரீகர் பாரத் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். எனினும் அதன் பிறகு வந்த மிட்சல், ரிஷப் பந்த் அதிரடி காட்ட ஆரமித்தனர்.

எனினும் சென்னை அணியின் அபார பந்துவீச்சால் டெல்லி அணியில் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்தனர். வார்னர் 19 ரன்களுக்கும், ஸ்ரீகர் 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மிட்சல் 20 பந்துகளில் 25 ரன்களையும், பந்த் 11 பந்துகளில் 21 ரன்களையும் எடுத்தனர். 

அடுத்தடுத்து வந்த வீரர்களில் ஷர்துல் தாக்குர் மட்டும் 24 ரன்களை சேர்த்தார். முடிவில் 17.4 ஓவர்களுக்கு டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப்டனாக தோனி சாதனை

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் தோனி, டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக 6,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/08/chennai-super-kings-vs-delhi-capitals-55th-match-3841037.html

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

டெல்லிக்கு தோல்வி: 91 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி

spacer.png

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 55ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதின. நவிமும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ருதுராஜ், கான்வே ஜோடி டெல்லி அணியின் பந்துவீச்சை நான்கு புறமாக பறக்கவிட்டனர். அணியின் ஸ்கோர் 110ஆக இருந்தபோது ருதுராஜ் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபேவும் தன்பங்கிற்கு அதிரடியில் கலக்கினார்.

சிறப்பாக விளையாடிய கான்வே 49 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து துபே 19 பந்துகளில் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தோனி 21(8பந்துகள்), பிராவோ 1 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், ஸ்ரீகர் பாரத் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். எனினும் அதன் பிறகு வந்த மிட்சல், ரிஷப் பந்த் அதிரடி காட்ட ஆரமித்தனர்.

எனினும் சென்னை அணியின் அபார பந்துவீச்சால் டெல்லி அணியில் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்தனர். வார்னர் 19 ரன்களுக்கும், ஸ்ரீகர் 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மிட்சல் 20 பந்துகளில் 25 ரன்களையும், பந்த் 11 பந்துகளில் 21 ரன்களையும் எடுத்தனர். 

அடுத்தடுத்து வந்த வீரர்களில் ஷர்துல் தாக்குர் மட்டும் 24 ரன்களை சேர்த்தார். முடிவில் 17.4 ஓவர்களுக்கு டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப்டனாக தோனி சாதனை

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் தோனி, டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக 6,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/08/chennai-super-kings-vs-delhi-capitals-55th-match-3841037.html

 

அடடா இவங்கள் வெல்லுறதை பார்க்க ஒரே கடுப்பாய் இருக்குதே!!😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

அடடா இவங்கள் வெல்லுறதை பார்க்க ஒரே கடுப்பாய் இருக்குதே!!😡

நோ டென்ஷன்........!  😂

Stressed GIFs - Get the best gif on GIFER

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிஎஸ்கே அணி ரன் ரேட்டில் முன்னேற்றம்: டெல்லிக்கு எதிரான வெற்றி கை கொடுக்குமா?

9 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சிஎஸ்கே அணி வெற்றி

பட மூலாதாரம்,BCCI/IPL

பிளே ஆஃபுக்குள் நுழையும் வாய்ப்பை ஏற்கெனவே சிஎஸ்கே அணி இழந்துவிட்டதாக சொல்லப்பட்டபோதும், டெல்லி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமான இந்த ஆட்டத்தில், தன் அதிரடி ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

நடப்பு தொடரின் 55ஆவது போட்டி டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நவிமும்பையில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்த டெல்லி அணிக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடத்தொடங்கிய ருதுராஜ்-கான்வே கூட்டணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 5 சிக்ஸர்கள் உட்பட 12 பவுண்டரிகளுடன் 49 பந்துகளில் 87 ரன்களை கான்வேயும், 33 பந்துகளில் 41 ரன்களை ருதுராஜும் எடுத்து அணிக்கு வலுவான தொடக்கத்தை தந்தனர். 10.5 ஓவர்களில் 110 ரன்கள் வரை முதல் விக்கெட்டை கூட இழக்காமல் தொடர்ந்தது இந்தக் கூட்டணி.

ருதுராஜை அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அணியின் ரன்களை உயர்த்தினார்.

பின்னர் களமிறங்கிய அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இடையில், ராயுடு விக்கெட்டுக்குப் பின் களமிறமிங்கிய தோனி தன் பாணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்தது சென்னை அணி. 

பாய்ந்து வந்த பந்துவீச்சு

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின், தொடக்க வீரர்களான டேவிட் வார்னரும், ஸ்ரீகர் பரத்தும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து களமிறங்கியவர்களில் மிச்சல் மார்ஷ் மற்றும் ரிஷப் பண்ட் முறையே 25 மற்றும் 21 ரன்கள் எடுத்தனர். ஷர்துல் தாக்கூர் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். மற்றபடி எந்தவீரரும் பெரிதாக சோபிக்கவில்லை.

 

ருதுராஜ்-கான்வே கூட்டணி

பட மூலாதாரம்,BCCI/IPL

 

படக்குறிப்பு,

ருதுராஜ்-கான்வே கூட்டணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இறுதியில், 17.4 ஒவர்களில் 117 ரன்களுடன் 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது டெல்லி அணி.

டெல்லி அணிக்கு எதிராக, மொய்ன் அலி எடுத்த 3 விக்கெட்டுகள் சென்னை அணியின் வெற்றிக்குக் கூடுதல் காரணமாக அமைந்தன.  

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

கவனம் ஈர்த்த டெவான் கான்வே:

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

27 பந்துகளில் அரை சதத்தை எட்டிய டெவான் கான்வே நேற்றைய ஆட்டத்தில் கவனிக்கப்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தார்.

மூன்றாவது முறையாக தொடர்ந்து அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார் டெவான் கான்வே.

 

சிஎஸ்கே அணி வெற்றி

பட மூலாதாரம்,BCCI/IPL

2021இல் ஃபாப் டூ ப்ளெசிஸ் 4 முறை தொடர்ந்து அரைசதம் அடித்தார். பின்னர் 2020ஆம் ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் 3 முறை அரைசதம் அடித்தார். இந்த வரிசையில், தற்போது 3 தொடர் அரைசதங்களை விளாசி டெவான் கான்வேயும் இணைந்துள்ளார்.

டெல்லி அணியில் பந்து வீச்சாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அணி மொத்தமும் சோதனை செய்யப்பட்டு பிறகே இந்த ஆட்டம் நடந்தது. இதையடுத்து உளவியல் ரீதியாக எப்படி தயாராக இருந்தது டெல்லி அணி என்பதும் கவனிக்க வேண்டிய அம்சம்.

புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்: தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் 8 ஆவது இடத்தை வகிக்கிறது சென்னை அணி. இதுவரை 11 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்ற நிலையில், இனிவரும் 3 போட்டிகளில் வெற்றிபெற்றால் மொத்தம் 14 புள்ளிகளை பெற முடியும். பிளே ஆஃப் செல்ல 16 புள்ளிகள் தேவை என்ற நிலையில், 14 புள்ளிகளுடன் அதிக நெட் ரன் ரேட் இருந்தால், மற்ற அணிகளின் தோல்விகளைப் பொறுத்து சிஎஸ்கே பிளே ஆஃபுக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்கலாம்.

https://www.bbc.com/tamil/sport-61375166

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை...52 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி

KKRvsMI

கொல்கத்தா அணி வீரர்கள்

ஐபிஎல் தொடரின் 56ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதின. நவிமும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத தேர்வு செய்தார்.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், ரஹானே ஆகியோர் நல்ல துவக்கம் அமைத்து கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 24 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார். தொடர்ந்து ரஹானேவும் 25 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

எஞ்சிய பேட்டர்களில் நிதிஷ் ராணா, ரிங்கு சிங் மட்டுமே பொறுப்புடன் விளையாடினர். ராணா 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். ரிங்கு சிங் 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து, களமிறங்கிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இஷான் கிஷனை தவிர்த்து மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் விளையாடிய கிஷன் 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த மும்பையால் 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளையும் ரஸ்ஸல் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் புள்ளிபட்டியலில் கொல்கத்தா ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  
 

https://www.dinamani.com/sports/2022/may/09/mi-collapses-after-bumrahs-stunning-show-3841516.html

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லக்னெள அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அசத்தல் வெற்றி

GUJvsLuc

குஜராத் அணி வீரர்கள்

ஐபிஎல் தொடரின் 57ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் இன்று மோதின. மகாராஷ்டிர கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான விர்த்திமான் சாஹா சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். எனினும் சுப்மான் கில் நிதானமாக ஆடி ரன்களை சேர்க்கத் தொடங்கினார். 

லக்னெள அணியில் ஆவேஷ் கானின் அபார பந்துவீச்சால் மாத்திவ் வாடே (10), ஹார்திக் பாண்டியா (11), ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லர் 24 பந்துகளில் 26 ரன்களை எடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்த ராகுல் தெவாடியா 16 பந்துகளில் 22 ரன்களை சேர்த்தார். எனினும் மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில் அரை சதம் கடந்து 63 ரன்களைக் குவித்தார்.

முடிவில் 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி 144 ரன்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னெள அணி களமிறங்கியது.

எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக லக்னெள அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டி காக், கே.எல். ராகுல், கரண் சர்மா, க்ருணால் பாண்டியா என அடுத்தடுத்த வந்த பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். தீபக் ஹூடா மட்டும் 27 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற அனைவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். 

13.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்த லக்னெள அணியால் 82 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம், 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது. அந்த அணியின் சார்பாக சிறப்பாக பந்து வீசிய ரஷித் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  

இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

 

https://www.dinamani.com/sports/2022/may/10/gujarat-bowlers-pips-as-they-clinch-top-spot-3842046.html

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு 6-ஆவது வெற்றி

dc

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் பிளே-ஆஃப் நம்பிக்கையை அந்த அணி தக்கவைத்துக் கொண்டது.

ஆட்டத்தில் முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அடுத்து டெல்லி 18.1 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சோ்த்து வென்றது.

ராஜஸ்தான் இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின், தேவ்தத் படிக்கல் பேட்டிங்கில் அசத்த, அதை முறியடிக்கும் விதமாக டெல்லி அணியில் டேவிட் வாா்னா், மிட்செல் மாா்ஷ் ஆட்டம் இருந்தது.

முன்னதாக, டாஸ் வென்ற டெல்லி பௌலிங்கிற்கு தயாரானது. ராஜஸ்தான் பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, உடன் வந்த ஜோஸ் பட்லா் 7 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். 3-ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சோ்ந்த அஸ்வின் - படிக்கல் கூட்டணி, விக்கெட் சரிவைத் தடுத்து அணியின் ஸ்கோரை உயா்த்தியது.

இதில் அஸ்வின் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 50 ரன்களுக்கு ஆட்டமிழக்க, படிக்கல் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 48 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா். கேப்டன் சஞ்சு சாம்சன் 6, ரியான் பராக் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் ராஸி வான் டொ் 12, டிரென்ட் போல்ட் 3 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி பௌலிங்கில் சேத்தன் சக்காரியா, அன்ரிங் நோா்கியா, மிட்செல் மாா்ஷ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினா்.

பின்னா் ஆடிய டெல்லி அணியில் ஸ்ரீகா் பரத் டக் அவுட்டாக, மறுமுனையில் நிலைத்த வாா்னருடன் இணைந்தாா் மாா்ஷ். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சோ்த்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது.

எனினும் மாா்ஷ் 5 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 89 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். ஓவா்கள் முடிவில் வாா்னா் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52, ரிஷப் பந்த் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் பௌலிங்கில் டிரென்ட் போல்ட், யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

ipl.jpg
 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/11/ipl-2022-marsh-warner-help-dc-win-by-8-wickets-3842615.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை வெற்றி: பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சென்னை!

Mumbai Indians beat Chennai Super Kings by 5 wickets

துபே விக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த சென்னை அணி 16 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

97 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரை சிறப்பாக வீசிய முகேஷ் சௌதரி கிஷன் விக்கெட்டை வீழ்த்தி நல்ல தொடக்கத்தைத் தந்தார். இதன்பிறகு, ரோஹித் சர்மா சற்று பவுண்டரிகள் அடித்து நெருக்கடியை சென்னை பக்கம் திருப்பினார். ஆனால், சிமர்ஜித் சிங் சிறப்பான பந்துவீச்சில் ரோஹித் (18) விக்கெட்டை வீழ்த்தினார்.

5-வது ஓவரை வீசிய முகேஷ் சௌதரி டேனியல் சாம்ஸ் (1) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (0) விக்கெட்டை வீழ்த்தி மிரட்டினார்.

இதனால், முதல் 8 ஓவர்களை இவர்கள் இருவருமே வீசினர்.

எனினும், திலக் வர்மா மற்றும் ஹ்ரித்திக் ஷோகீன் இளம் வீரர்களாக இருந்தாலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு ரன்னாக எடுத்தாலும் இலக்கு குறைவு என்பதால், மும்பைக்கு அது பலனளித்தது.

வெற்றியை நெருங்கியபோது மொயீன் அலி பந்தில் சிக்ஸர் அடிக்க ஆசைபட்டு ஷோகீன் போல்டானார். அவர் 23 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய டிம் டேவிட் இரண்டு சிக்ஸரை பறக்கவிட்டு மும்பை வெற்றியை உறுதி செய்தார்.

14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்த மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 32 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். டேவிட் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்.

இந்த தோல்வியின் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் தவறவிட்டுள்ளது.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/12/mumbai-indians-beat-chennai-super-kings-by-5-wickets-3843220.html

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

மும்பை வெற்றி: பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சென்னை!

Mumbai Indians beat Chennai Super Kings by 5 wickets

துபே விக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த சென்னை அணி 16 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

97 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரை சிறப்பாக வீசிய முகேஷ் சௌதரி கிஷன் விக்கெட்டை வீழ்த்தி நல்ல தொடக்கத்தைத் தந்தார். இதன்பிறகு, ரோஹித் சர்மா சற்று பவுண்டரிகள் அடித்து நெருக்கடியை சென்னை பக்கம் திருப்பினார். ஆனால், சிமர்ஜித் சிங் சிறப்பான பந்துவீச்சில் ரோஹித் (18) விக்கெட்டை வீழ்த்தினார்.

5-வது ஓவரை வீசிய முகேஷ் சௌதரி டேனியல் சாம்ஸ் (1) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (0) விக்கெட்டை வீழ்த்தி மிரட்டினார்.

இதனால், முதல் 8 ஓவர்களை இவர்கள் இருவருமே வீசினர்.

எனினும், திலக் வர்மா மற்றும் ஹ்ரித்திக் ஷோகீன் இளம் வீரர்களாக இருந்தாலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு ரன்னாக எடுத்தாலும் இலக்கு குறைவு என்பதால், மும்பைக்கு அது பலனளித்தது.

வெற்றியை நெருங்கியபோது மொயீன் அலி பந்தில் சிக்ஸர் அடிக்க ஆசைபட்டு ஷோகீன் போல்டானார். அவர் 23 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய டிம் டேவிட் இரண்டு சிக்ஸரை பறக்கவிட்டு மும்பை வெற்றியை உறுதி செய்தார்.

14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்த மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 32 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். டேவிட் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்.

இந்த தோல்வியின் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் தவறவிட்டுள்ளது.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/12/mumbai-indians-beat-chennai-super-kings-by-5-wickets-3843220.html

ஆஹா CSK யும் MI யம் Play off இற்கு போகாது என்று நினைக்க எவ்வளவு ஆனந்தமா இருக்கு.😃

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாரோடு சேர்ந்து பூவும் நாறிடிச்சு .........ரொம்ப மோசமான மாட்ச் ........!  😴

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.