Jump to content

இறைச்சி உணவை விட வீகன் உணவு ஆரோக்கியமானதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இறைச்சி உணவை விட வீகன் உணவு ஆரோக்கியமானதா? - இரட்டையர்கள் மேற்கொண்ட ஒரு பரிசோதனை முயற்சி

இரட்டையர்களான ஹியூகோவும் ரோஸ் டர்னரும், ஒரு பரிசோதனை முயற்சியாக 12 வாரங்கள் டயட்டில் இருந்தனர். ஹியூகோ 'வீகன்' உணவு உண்பவராக மாறினார். ரோஸ் தொடர்ந்து இறைச்சி சாப்பிட்டார். என்ன நடந்தது?

" நாங்கள் மரபணு ரீதியில் இரட்டையர்களாக இருப்பதால், பல்வேறு உணவுகள், உடற்பயிற்சி முறைகளை ஒப்பிட்டுப் பார்த்து, எங்களுக்கு எது சரியாக இருக்கிறது என்பதை கண்டறியலாம். அதனால், தாவர வகை உணவுகள், இறைச்சி வகை உணவுகளில் எது எங்களுக்கு சிறந்தது என்பதையும் சோதிக்க விரும்பினோம்," என்று சாகச தடகள வீரரான ரோஸ் டர்னர் கூறுகிறார்.

இந்த இரட்டையர்கள் 12 வார பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஹியூகோ வீகன் உணவு உண்பவராக மாறினார். ரோஸ் இறைச்சி சாப்பிடுவதைத் தொடர்ந்தார். இருவரும் ஒரு நாளைக்கு ஒரே அளவு கலோரிகளை உட்கொண்டு, ஒரே விதமான உடற்பயிற்சியை மேற்கொண்டனர்.

முதல் முறையாக, வீகன் உணவு உண்ணும் ஹியூகோவுக்கு, அவரது உடல் தொடக்கத்தில் அவ்வளவு எளிதாக ஒத்துழைக்கவில்லை.

.

"நான் வீகன் உணவை எடுத்துக்கொண்டேன். அது உண்மையில் என் உடலைப் பாதிக்கிறது. முதல் இரண்டு வாரங்களில், அது இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் சீஸ் ஆகியவற்றுக்காக ஏங்கியது. நான் இப்போது பழங்களையும், பருப்புவகைகளையும் சாப்பிட வேண்டியிருக்கிறது. என் உடலில் சர்க்கரையின் அளவு பகல் நேரங்களில் சரியாக இருக்கிறது. எனக்கு அதிக ஆற்றல் இருப்பது போல் உணர்கிறேன்," என்று ஹியூகோ டர்னர் கூறுகிறார்.

"எனது இறைச்சி உணவில் செயல்திறன் ஏற்றத்தாழ்வுடன் இருந்தது. நான் சில நாட்கள் ஜிம்மில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தேன். அதன் பிறகு நான் அதிக ஓய்வை பெறுவேன். அதே சமயம், ஹியூனோ மிகவும் நீடித்த ஆற்றல் அளவை கொண்டிருந்தார்," என்கிறார் ரோஸ்.

 
Vegan vs Meat

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீங்கள் சாப்பிடும் சர்க்கரையின் அளவு மட்டும் முக்கியமல்ல. உங்கள் உடல் சர்க்கரையை எவ்வாறு எடுத்துக்கொள்கிறது என்பதும் முக்கியமே.

"ஒரே மாதிரியான இரட்டைக் குழந்தைகளாக இருந்தாலும், சர்க்கரையும் கொழுப்பும் எவ்வாறு இவர்களின் உடலில் எதிர்வினையாற்றுகிறது என்பது சுவாரஸ்யமான விஷயம். உண்மையில், ரோஸ் உடல் கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகளை பதப்படுத்திய விதம் சராசரிக்கு மேலாக இருந்தது. ஆனால், ஹியூகோவுக்கு சராசரிக்கும் குறைவாக இருந்தது," என்கிறார் டாக்டர் டிம் ஸ்பெக்டர்.

ட்ரில்லியன் கணக்கான வெவ்வேறு நுண்ணுயிரிகள் நமது குடலில் வாழ்கின்றன என்று சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன. நீங்கள் அதை சரியாக கவனித்து கொண்டால், அவை ஆயிரக்கணக்கான வெவ்வேறு ரசாயனங்களை உற்பத்தி செய்யும். அவை உங்கள் உடலை சிறந்த நிலையில் வைத்திருக்க உதவும். அவை உங்கள் மூளைக்குச் சென்று பசியை அதிகமாக உணரச்செய்தல், மன அழுத்தம் ஆகியவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.

சராசரியாக, இரட்டையர்கள் தங்கள் நுண்ணுயிரிகளில் 25 முதல் 30 சதவிகிதம் வரை மட்டுமே ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதை நாங்கள் பார்க்கிறோம் என்கிறார் டாக்டர் டிம். நாம் ஒவ்வொருவரின் உடலும் உணவுகளை எடுத்துக்கொள்வதில் வெவ்வேறாக எதிர்வினையாற்றுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

"வீகன் உணவை உண்டதாலும், அந்த 12 வார காலத்தைக் கடந்து சென்றதாலும், எனது குடல் பாக்டீரியாவின் பன்முகத்தன்மை கடுமையாக குறைந்தது," என்கிறார் ஹியூகோ."

"என்னுடையது அப்படியே இருந்தது, அதாவது நான் நோய்க்கு ஆளாகவில்லை," என்கிறார் ரோஸ்.

ஹியூகோவும் ரோஸும் ஆரோக்கியமான தடகள வீரர்கள். ஆனால், குறைந்த அளவிலான ஊட்டச்சத்துடன் தொடங்குபவர்கள், அவர்களின் குடலை பல்வேறு உணவு வகைகளுடன் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.

"அதனால், முதலில், ஒரு வாரத்திற்கு 30 வெவ்வேறு வகையான தாவரம் சார்ந்த உணவை சாப்பிட்ட வேண்டும். இரண்டாவதாக, பாலிபினால்கள் (Polyphenols) எனப்படும் இயற்கை ரசாயனங்கள் கொண்ட தாவர வகை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பிரகாசமான நிறமுள்ள பெர்ரி, பருப்புவகைகள், விதைகள், காபி போன்றவை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, புரோபயாடிக் (Probiotic) - நேரடி நுண்ணுயிரிகளைக் கொண்ட உணவுகளான தயிர் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்," என்று டாக்டர் டிம் ஸ்பெக்டர் அறிவுறுத்துகிறார்.

ஒட்டுமொத்தமாக கவனித்தால், ஹியூகோவுக்கும் ரோஸ்ஸிற்கும் அவ்வளவு வேறுபாடுகள் இல்லை.

 
Vegan vs meat

பட மூலாதாரம்,GETTY IMAGES

"எங்களை கண்காணிக்கும் மருத்துவம் மற்றும் அறிவியல் ஆய்வுகள், இரண்டு உணவு முறைகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறது," என்று ஹியூகோ டர்னர் கூறுகிறார்.

ஒரே மரபணுக்களை பகிர்ந்து கொள்ளும் இரட்டையர்களாக இருந்தாலும், அனைவருக்கும் ஒரே மாதிரியாக செயல்படும் உலகளாவிய உணவுமுறை (டியட்) என்று எதுவும் இல்லை என்பதை புரிந்து கொள்ள இவை அனைத்தும் நமக்கு உதவுகின்றன.

"உங்களிடம் யாராவது குறிப்பிட்ட உடல் அமைப்பை பெறுவதற்கு இந்த பயிற்சிகளையும், உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினால், அவர்களிடம் கொஞ்சம் கேள்வி கேளுங்கள். உங்களுக்கு எது சிறந்தது என்று நீங்களை சோதனை செய்து பாருங்கள்," என்கிறார் ரோஸ் டர்னர்.

இறைச்சி உணவை விட வீகன் உணவு ஆரோக்கியமானதா? - இரட்டையர்கள் மேற்கொண்ட ஒரு பரிசோதனை முயற்சி - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.