Jump to content

மனிதர்கள் ஏன் முத்தமிடுகின்றனர்? - அறிவியல் கூறும் காரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது, அவர்களின் சுவாசம் ஆழமடைந்து சீரற்றதாக மாறும்; இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கும்; கண்கள் விரிவடையும். இது முத்தமிடும்போது பலரும் தங்கள் கண்களை மூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

முத்தமிடுவது பற்றி, ஒருவர் மூன்று விஷயங்களை தெரிந்துக்கொள்ளவேண்டும். முதலில், நம் உதடுகளுக்கு உணரும் திறன் அதிகம் இருப்பதால், தொடுதல் போன்ற அற்புதமான உணர்வு ஏற்படும்.

இரண்டாவது, நமது பிறப்புறுப்பில் உள்ள சில பகுதிகளைத் தவிர, நம் உடலில் உள்ள வேறு எந்த பகுதிகளை விடவும் நம் உதடுகளின் ஓரத்தில் அதிகமான நரம்பணுக்கள் உள்ளன.

மூன்றாவது, அதில் சுவை இருக்கிறது. ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்துவமான சுவை இருக்கும். சிலர் மற்றவர்களை விட சுவையை கண்டறிவதில் மிகவும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

பின்னர், அதில் ஒருவித வாசனையும் இருக்கும். ஓவிட் என்ற கவிஞர், தனது கவிதைகளில், மார்பில் பழுக்க வைக்கும் ஆப்பிள்கள் போன்றவை முத்தங்கள் என்று வர்ணிக்கிறார்.

நாம் ஏன் முத்தமிடுகிறோம் என்பதற்கு நிறைய கோட்பாடுகள் உள்ளன. ஆனால் அவற்றில், சில நாம் பூமியில் பிறக்கும்போது ஏற்படும் அனுபவங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

நாம் குழந்தைகளாக இருக்கும்போது, பெற்றோர் நம்மை முத்தமிடுக்கின்றனர். இதனால், நம் மூளையில் உள்ள நரம்பியல் வழிகள் மூலம் நேர்மறையான உணர்ச்சிகளுடன் பல உதடு தூண்டுதல்கள் (lip stimulations) தொடர்புபடுத்தப்படுகின்றன.

 
Mom and child

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதனால், முத்தத்திற்குக் காரணமான இந்த நரம்பியல் பாதைகளை உருவாக்குகிறோம்.

மேலும், அன்பும், அரவணைப்பும் மற்றும் பல அற்புதமான நிகழ்வுகள் நம் வாழ்வில் நிகழும்போது, நாம் அதனை வெளிப்படுத்த விரும்பினால், நாம் நம் உதடுகளைப் பயன்படுத்தி இவ்வாறு வெளிப்படுத்துகிறோம்.

மனிதர்களிடையே முதல் முத்தம் எப்போது, எங்கு, எப்படி நடந்தது என்பதைக் கண்டறியலாம். நாம் அறிந்தவரை, பிற உயிரினங்களில் அதன் பெண் இணைகள் உச்சக்கட்ட கருத்தரிப்புத் திறனைப் பெற்றிருக்கும்போது, அவர்களின் பிறப்புறுப்பு பகுதியால் ஈர்க்கப்படுக்கின்றன.

உதடுகளை 'பிறப்புறுப்பின் எதிரொலி' (Genital echo) என்று அழைக்கிறார்கள் என்று சில மானுடவியலாளர்கள் நினைக்கின்றனர். அவை பெண் பிறப்புறுப்புகளின் வடிவம், நிறம் மற்றும் அமைப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன.

பிரிட்டனின் விலங்கியல் நிபுணரான டெஸ்மண்ட் மோரிஸ், உதட்டுச்சாயம் குறித்து சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அவர் ஆண்களிடம் பெண்களின் முகங்கள் கொண்டிருக்கும் வெவ்வேறு படங்களை காட்டினார். அப்போது, ஆண்கள் மீண்டும் மீண்டும் உதடுகள் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் பெண்களையே தேர்தேடுத்தார்கள் என்று இவரது ஆய்வு காட்டியது.

நாம் உதடுகளுக்கும் சிவப்பு நிறத்துக்கும் ஈர்க்கப்படுவதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. ஒரு பாலியல் சமிக்ஞையை வெளிப்படுத்த பல இனங்கள் பயன்படுத்தும் நிறமே சிவப்பு. எந்த வகையான முத்தத்திற்கும் நாம் கண்டறிந்த ஆரம்பகால ஆதாரம் என்பது சுமார் இருபத்தி ஐந்நூறு, ஒருவேளை, முப்பத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கின்றன.

அது இந்தியாவில் இருக்கும் சில ஆரம்பகால வேத நூல்களில், உங்கள் கண்களுக்கு கீழே உள்ள பகுதியில் செபாசியஸ் (Sebaceous) சுரப்பிகள் உள்ளன என்றும், அது ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்துவமான வாசனையை உருவாக்குகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

 
lips

பட மூலாதாரம்,GETTY IMAGES

வட இந்தியாவில் இருந்த பண்டைய இந்தியர்கள் ஒருவரையொருவர் முகர்ந்து பார்த்தனர். அவர்கள் தங்கள் மூக்கையும், கன்னங்களையும் ஒருவருக்கொருவர் உரசி ஓட்டியபடி இருந்திருக்கலாம். அப்போது, யாரோ ஒருவர் நழுவி உதடுகளை அடைந்திருக்கலாம்.

அவர்களின் உதடுகள் மிகவும் உணர்திறன் கொண்டவையாக இருப்பதால், ஒருவரையொருவர் முகர்ந்து பார்ப்பதை விட இது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருப்பதாக அவர்கள் கண்டறிந்திருக்கலாம். ரோமானியர்கள் உண்மையில் முதல் மிகப்பெரிய முத்த கலாசாரத்தை உருவாக்கினர் என்று கருதப்படலாம். அவர்கள் மூன்று விதமான முத்தங்களை ஒருவருக்கொருவர் கொடுத்தனர்.

இன்று நாம் பயன்படுத்தும் 'சலவா' என்ற வார்த்தை, அடிப்படையில் ஒரு பிரஞ்சு முத்தமாக அழைக்கப்பட்ட 'சேவியம்' என்ற பதத்தில் இருந்து வந்தது. அவர்கள் இதை அனைத்து சமயங்களிலும் செய்து மகிழ்ந்தனர். முத்தமிடுவது அருவருப்பானது என்று மக்கள் நினைக்கும் இடங்களும் உள்ளன. பெரும்பாலான மக்கள் பல் துலக்கவில்லை என்பதை நீங்கள் கருத்தில் கொண்டால், இதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இருப்பினும், அவர்கள் அதைச் செய்யாத இடத்தில் கூட, அவர்கள் முகர்ந்து பார்த்துக்கொண்டனர்; சுவைத்துக்கொண்டனர்; ஒருவருக்கொருவர் இணைக்கும் விஷயங்களைச் செய்தனர். அந்த பிணைப்புதான், இறுதியில், நம்மை ஒன்றாக வைத்திருப்பதற்கு முக்கியமானது.

நமது பிணைப்புகளை வலுவாக வைத்திருப்பதற்கும், நம் உடலில் உள்ள பல்வேறு ஹார்மோன்கள் மற்றும் நரம்பியக்கடத்திகள் (neurotransmitters) அனைத்தையும் அதிகரிப்பதற்கும், நமது நெருக்கமான உறவுகளை பராமரிக்கவும், முத்தமிடுவது என்பது ஒரு பெரிய பங்கு வகுக்கிறது.

மனிதர்கள் ஏன் முத்தமிடுகின்றனர்? - அறிவியல் கூறும் காரணம் - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.