Jump to content

உங்கள் இலக்குகளை அடைவது எப்படி?


Recommended Posts

உங்கள் இலக்குகளை அடைவது எப்படி ?

தமிழ்ல வேடிக்கையான பழமொழிகள் நிறைய உண்டு. 'கிட்டாதாயின் வெட்டென மற'ன்னு ஒரு பழமொழி. 'முயற்சி திருவினையாக்கும்'னு ஒரு பழமொழி. என்ன இது ஒண்ணுகொண்ணு முரணா இருக்கு. 'முயற்சி திரு வினையாக்கும்'னு செய்யறதைத் தொடர்வதா? 'இது ஒண்ணும் கிட்டாது. வெட்டென மறப்போம்'னு எழுந்து போயிடலாமா?

ஆசைகளிலே நிறைவேறக் கூடியது, நிறைவேற முடியாததுனு ரெண்டு வகை. எடுத்துக் காட்டா எனக்கு கணினி பற்றி நல்லா கத்துக்கணும்னு தோணினா, அதுக்குன்னு புத்தகம், சொல்லி தரும் இடம் எல்லாம் இருக்கு. முயற்சி எடுத்து படிச்சா திருவினையாகும். நான் அஞ்சடி எட்டங்குலம் உசரம், ஆறடி பத்தங்குலமா வளரணும்னா பேத்தல். அதை வெட்டென மறப்பது நல்லது.

இலக்குகளை அடைவது எப்படினு ஒரு புத்தகம் இருக்கு.

******எதற்கு இலக்கு தேவை*****

மனிதத் தேவைகளில் ஏழு வகையான விசயங்களுக்கு இலக்குகள் தேவை என்கிறார்கள். அவை என்னென்ன?

1. மனம் (நினைவாற்றல், ஈடுபாடு,கற்றல், படைப்பு)

2. உடல் நிலை (ஆரோக்கியம், எடை குறைப்பு, கொழுப்பு குறைப்பு)

3. குடும்பம் (குடும்பத்தினரிடையே நல்லுறவு)

4. சமூகம் (நண்பர்களிடையே நல்லுறவு)

5. ஆன்மீகம் (தேடல், மன அமைதி, பொது சேவை)

6. வேலை (பிடித்த வேலை, அதிக ஊதியம் தரும் வேலை)

7. சொத்து (நிம்மதியான வாழ்க்கைக்குத் தேவையான அளவு)

****ஆசை மட்டும் போதாது*****

ஒரு காரியம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவது மட்டும் போதாது. அதை எப்படி முடிக்க வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கு வேண்டும். 'நான் ஆணையிட்டால்...அது நடந்துவிட்டால்'னு பாடிட்டா காரியம் ஆயிடுமா? இதை நான் செஞ்சாகணூம்னு ஒரு இலக்கு நிர்ணயம் பண்ணிக் கொண்டு அதற்கு உ¨ழைக்க வேண்டும்.

*****உழைக்கத் தயாராயிரு*****

ஒரு இலக்கு உள்ளவனுக்கும் அது இல்லாதவனுக்கும் நல்லா வித்தியாசம் தெரியும். இலக்கு உள்ளவனுக்கு வெற்றி பெறணும்னு ஒரு வெறி இருக்கும். அதற்கு அவன் உழைக்க தயாரா இருப்பான். கருமமே கண்ணாயினார் எப்படி இருப்பாங்க..கண் துஞ்சார், பசி நோக்கார் etc., etc., அல்லவா? இலக்கு இல்லாதவன் காத்து அடிக்கும், கிளை அசையும், பழம் உதிரும், வாயில வந்து விழும்னு குருட்டுக்கனா கண்டுட்டு இருப்பான்.

****இலக்கை எழுத்தில் வடி*****

முதல்படி என்ன? உனக்கு என்ன இலக்கு? என்னத்தை சாதிக்கணும் ? ஒரு பேப்பர் பெனிசில் எடுத்து எழுது.

மனம்: ஞாபகமறதி அதிகமா இருக்கு. எதையாவது மறந்திடறேன். அதுனால நேரம், பொருள் விரயம், உறவு முறிவு. மனக் கஷ்டம் நினைவாற்றலை அதிகமாக்கணும். ஒரு நாவல் எழுதணும்.

உடல் நிலை: எடையைக் குறைக்கணும்.

குடும்பம்: மனைவி, குழந்தைகளோட சண்டை வராம இருக்கணூம்

சமூகம்: புது நண்பர்கள் வேண்டும்.

ஆன்மீகம்: மக்களுக்கு தொண்டு செய்யணும். மன அமைதி வேணும்.

வேலை : இப்ப இருக்கற வேலையில ஊதியம் இல்ல. வேலையில் திருப்தி, மன நிறைவு இல்லை. அதை எப்படி அதிகமாக்குவது? சொத்து : கார், வீடு, பாங்கில பணம் வேணும்

இப்படி நமக்கு என்ன வேணும் என்பதை எழுதிக் கொள்ளுங்கள். எண்ணத்தை எழுத்தில் எழுதும் போது மனத்தில் அது பதிகிறது. கடவுள் பிரசன்னமாகி "என்னப்பா வேணும்"னு கேட்டப்ப, நித்யத்துவம் (சாகாவரம்)னு கேட்கறதுக்கு பதிலா நித்ரத்துவம் (தூக்கம்)னு வாய் குழறி சொல்லி தூங்கும் வரம் பெற்றானாம் ஒருவன். எழுதி வெச்சு ஒழுங்கா கேட்டிருந்தா இது மாதிரி ஆயிருக்குமா?

*****இலக்கு அளவிடக் கூடியதாக இருக்கவேண்டும்*****

இலக்கை எழுதிட்டா காரியம் ஆயிடுச்சா? இல்ல. அளவிடக்கூடிய இலக்கா இருக்கான்னு பார்க்கணும். எடை குறையணும், சரி..எவ்வளவு? அஞ்சு பவுண்டா, அம்பது பவுண்டா? அதிக சம்பளம் வேணும் சரி ஆயிரமா, பத்தாயிரமா? எதுக்குன்னா, நம் முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றி கொடுத்திருக்கு, நம்ம முயற்சியை அதிகப்படுத்தணுமா வேணாமான்னு தெரியணூம். விசுவல் பேசிக் படிக்கணும்னு ஆசை, இலக்கு. அதில 'ஏ' வாங்கப்போறியா, சும்மா பாஸ் மார்க்கா, பேருக்கு சர்ட்டிபிகேட்டா?

*******இலக்கு ஒரு கால கட்டத்துக்குள் செய்ய இயல்வதாய் இருக்க வேண்டும்*****

சரி இலக்கு இருக்கு, அளவு நிர்ணயம் பண்ணியாச்சு. அப்புறம்? இதை எவ்வளவு நாளில அடையணும். இருவது பவுண்டு எடை குறையணும் மூணு நாளில. நடக்கற காரியமா? சதையைக் கத்தியால வெட்டினாத்தான் இது நடக்கும். அதுக்குனு மூணு வருச காலம்கிறது பேத்தல். அதுக்குள்ள என்ன என்னவோ ஆயிடலாம்.

சரிய்யா. இலக்கு இருக்கு, என்ன அளவு வேணும்னு தெரியும், என்ன கால கட்டத்துல இதை அடையணும்னு தெரியும். அப்புறம்.

******இலக்கை அடையும் வழிகளை ஆய்ந்து பார்****

இதை எப்படி அடைவது என்று பகுத்துப் பார். எடையைக் குறைக்கணும்.

அனாவசிய தீனியை நிறுத்தல்.

சர்க்கரை போட்ட கோலாக்கு பதில் தண்ணி.

அரிசி சாதம் ரெண்டு கப்பு போதும்.

உருளைக்கிழங்கு வேணாம் கீரை போதும்.

தினம் 2 மைல் நடக்கணும்.

தேகப்பயிற்சி செய்யணும்.

******இலக்கின் கதியை (progress) சோதித்துப் பார்*****

நம்ம இலக்குல எவ்வளவு தூரம் போயிருக்கோம்னு சோதிக்க வரிசயா பல நாள் குறிச்சுக்கணும். சோதிக்கணும். முப்பது நாள்ல பத்து பவுண்டு குறைக்க எண்ணினோம், பத்து நாளில் ரெண்டு பவுண்டுதான் குறைஞ்சிருக்கு. இதே வேகத்துல இலக்கு முழுமையாக அடைய முடியாது. அதிக முயற்சி தேவை.

*******இலக்கை பாதிக்கும் எதிர்மறை விசயத்தை ஒழி******

எதிர்மறையான விசயங்களை இனங்கண்டு அழியுங்கள். "ஒரு ஜோஸ்யர் சொன்னாரு, எனக்கு நல்ல வேலையே கிடைக்காதுன்னு. அதான் நான் முயற்சியே செய்யல". "என்னை விட குண்டா எத்தனை பேரு இருக்காங்க. எடை குறையாட்டா என்ன?" "படிக்கணும்னு ஆசை? யாரு போயி கிளாசுல உட்கார்ந்து...?" "நான் உதவாட்டா என்ன, எத்தனை தன்னார்வத் தொண்டர்கள் இருக்கிறார்கள்?" "எல்லாரும் ஜாலியா டிவி பாக்கறாங்க, நான் மட்டும் முட்டாத்தனமா பரிட்சையில மார்க் வாங்கணும்னு இலக்கு வெச்சிட்டு..."

ஜோஸ்யன் சொல்லட்டும். அதுதான் வேதவாக்கா? மத்தவன் குண்டா இருந்துட்டு போகட்டும், நீ ஏன் குண்டா இருக்கணும்? கிளாசுல உட்கார்ந்து படிக்க முடியலனா, நூலகத்துல போயி புத்தகம் வாங்கி படி, காசு குடுத்து புத்தகம் வாங்கி நீயே கத்துக்க. தொண்டர்கள் இருக்காங்க சரிய்யா, நீ போய் உன்னால முடிஞ்சதைச் செய்யேன். யார் டிவி பாத்தா உனக்கு என்ன? உன் இலக்கு வேற. நீ எங்கியோ போக வேண்டியவன்.

**********இலக்கை உன்னால் அடைய முடியும் என நம்பு*********

இலக்கில் உறுதியான பிடிப்பு தேவை. நாம் ஜெயிக்கமாட்டோம் என்ற எண்ணத்தை ஒழி. மலையேறுபவர்களில், நாம் விழுந்து விடுவோமோ என்று அஞ்சுபவர்களே அதிகம் கீழே விழுகிறார்கள். நான் ஜெயிப்பேன், அதுவரை ஓய மாட்டேன் என்று உறுதி கொள்.

********திட்டமிட்டு படிப்படியாய் செய்********

படிப்படியாய் செய். To do list என்று கேள்விப்பட்டதுண்டா? இன்னிக்கி இதெல்லாம் செய்யணும் என்று பட்டியலிடு. அப்புறம் அதை எந்த வரிசையில் செய்வது உசிதம் என்று மாற்றி அமை. செய்ய முடியாமல் போனதை மறுநாள் பட்டியலில் போடு. ஏன் சில காரியம் முடியாமல் போனது? சிந்தி, சீராக்கு.

*******இலக்கை அடையும் வழிகளை இனங்காண்*******

எதை எப்படிச் செய்யலாம் என்று நம்மாலேயே சில சமயம் முடிவு செய்வது கடினம். ஏன்னா அதற்கான பின்புலம், பயிற்சி, திறமை, அறிவு நம்மிடம் இல்லை. மற்றவர்களைக் கேள். படி. தெரிந்தவர்களை நாடு. இணையத்திலே கேள். கூகிளில் போட்டு தேடு.

******எதுவும் அடையக் கூடியதே*************

சரிதான் எனக்கு படிப்பு வாணாம், வேலை வேணாம், மனநலம் வேணாம், உடல் நலம் வேனாம், சமூக நலம் வேனாம், குடும்ப நலம் வாணாம், சொத்து சேர்த்து பணக்காரனாயிடணும். எந்த இலக்கானாலும் முறை ஒன்றே. இலக்கை ஏற்படுத்து, அளவிடக்கூடியதாக செய், முடிக்க வேண்டிய காலம் ஏற்படுத்திக் கொள், அடிக்கடி வெற்றி அடைஞ்சிருக்கமானு சோதிச்சு, முயற்சியை விரிவு படுத்து, அதிக செய்தி சேகரி....

முதல் ஆறு இலக்கும் இருந்தா ஏழாவது சொத்து சேர்ப்பு தேவையில்லை. மனநலம்,உடல்நலம், குடும்பநலம், சமூகநலம், ஆன்மீகநலம்,நல்ல வேலை இருந்தாலே எதற்கு சொத்து ?

சொத்து எப்படி வரும்?

திருமணத்தால், சொத்துரிமையால் வருவதை விடுங்கள். பாக்கி என்ன? லாட்டிரி, சேமிப்பு, முதலீடு. முதலீடுன்னா வீடு வாங்குதல், பங்கு மார்க்கட், வியாபாரம், காப்பீடு. லாட்டிரியில் வெறி கொண்டு பணமிழக்காதீர்கள். யாரோ ஒரு கிழவிக்கு ஒரு டாலர் டிக்கட்டுக்கு 200 மில்லியன் டாலர் கிடைச்சுதுன்னா, ஆசை வரும்தான். ஒழிஞ்சு போறது வாரம் ஒரு டிக்கட் வாங்குங்க, அதுலயும் பத்து பேரா சேர்ந்து வாங்கினா ஜெயிக்கும் வாய்ப்பு சற்று கூடுதல் அல்லவா? வீடு வாங்குங்கள். வாங்க காசில்லயா? பத்து பேரா சேர்ந்து வாங்கி வாடகைக்கு விடுங்கள். விலை மேல போனவுடன் விற்று தனியாக வாங்க முடியுமா என்று பார். அனாவசிய செலவை நிறுத்து. காசை சேமி. பங்கு மார்க்கட் பத்தி படித்துவிட்டு கொஞ்சம் அதிலும் போடு. எல்லா முட்டையையும் ஒரே கூடையில் வைக்காதே என்பது முதுமொழி. ஒரு கூடை சரிஞ்சாலும் பாக்கியிலுள்ளது மிச்சம்தானே. வியாபாரம் செய்யுங்கள். நெளிவு சுளிவை கற்றுக் கொண்ட பிறகு. எதற்கு சேர்த்து வைக்கிறோம் என்று தெளிவாக இருங்கள். குழந்தைகளுக்கு கொடுக்க என்பது முட்டாள்தனம். ஒருவனுக்கு ஒரு மீன் கொடுத்தால் ஒரு வேளை உணவிட்ட மாதிரியாம், ஒருவனுக்கு மீன் பிடிக்கச் சொல்லிக் கொடுத்தால் வாழ்க்கை முழுவதும் அவனுக்கு சோறிட்ட மாதிரியாம். ஒரு பேச்சுக்கு சொன்னேன், நான் மீன் திங்கறதில்லனு சொல்லி அறுக்காதீங்க. குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுங்கள். உழைப்பின் உயர்வை, போதுமென்ற மனதுடன் வாழ்வதை கற்றுக் கொடுங்கள். சும்மா வந்தால் அவர்களுக்கு அதன் அருமை தெரியாது. 'எங்கப்பன் கஞ்சன் வயித்தைக் கட்டி வாயைக் கட்டி சேர்த்தான்' என்று சொல்லிக் கொண்டே அழிக்கும்! இன்சூரன்ஸ் காப்பீடு ஒரு சுலப வழி. குறைந்த செலவில் பாதுகாப்பு. "எங்க தாத்தா 80 வயசு வரைக்கும் இருந்தாரு", "இன்சூரன்சு ஏஜெண்டு ரெண்டு லச்சம் டாலர் பாலிசில இருநூறு டாலர் கமிசன் சம்பாதிச்சிருவானோ"ன்னு சனங்கள் எடுக்காது. கார்ல அடிபட்டு சாகும். எடுத்துப் போட எட்டு பேரு தருமம் பண்ணணும். மூலையை பயன்படுத்து. தேவைக்கு அதிகமாய் காப்பீடு செய்யாதே. காசு வீணாக செலவாகும்.

*********இலக்கிலும் உண்டோ சின்னது பெரியது********

சொத்து இருந்தா நல்லதுதான். நல்ல வேலை இருந்தா கசக்காது. ஆனால், மன நலத்தை பாதுகாக்கணும். உடல் நலமும் அவசியம். சித்திரம் எழுத சுவரு வாணாமா? குடும்ப உறவுகள் ஒழுங்கா இருந்தாதான் வாழ்க்கை இனிக்கும். சமூகத்தில நல்ல நண்பர்கள் தேவை. நம்முடைய ஆன்மீக வளர்ச்சி மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது வளர்கிறது. ஆன்மீகத் தேடல்னு சொல்லிட்டு புத்தகத்துல தேடுவது பேத்தல். எழுந்து போய் ஒருத்தருக்கு உதவியா ஒரு கை பிடிச்சா நீங்களே இறைவனாகிற, ஆமாம் சார் நிஜமாகவே, வாய்ப்பு உள்ளது (குறைஞ்ச பட்சம் உதவி பெறுபவன் எண்ணத்தில் !)

*********புதுப்புது இலக்குகள் வைத்து மேன்மேலும் கற்க ஆவல் கொள்************

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
    • தனிப்பட்ட செல்வாக்கு? அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.    
    • எங்களுடைய கட்சியின் பலம் பலவீனங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளே பல இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். திகதியை மறுத்த சுமந்திரன் அடுத்தடுத்த கலந்துரையாடல்கள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்றினை கொழும்பில் உள்ள சம்பந்தன்(R.Sampanthan) ஐயாவின் வீட்டிலே நடத்தியிருந்தோம்.                                சில முரண்பாடான நிலைகள் தொடர்பில் இதன்போது கலுந்துரையாடப்பட்டது. இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் உள்ளிட்டோர் மறுதினம்(11 ஜனவரி) என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தில் கலந்துரையாடியிருந்தோம். அதன் பின்னர் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் நான் ஒரு திகதி கூறியிருந்தேன். சுமந்திரன் அதனை மறுத்து மற்றுமொரு திகதி குறிப்பிட்டார். எனினும் மத்திய செயற்குழு கூட்டம் நிறுத்தப்பட்டது. மாவை சேனாதிராஜா தான் நிறுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவர் சத்தியலிங்கம் பேசும் நிலையிலேயே இல்லை. இதற்கிடையில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.    https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-current-issues-1713545072
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.