Jump to content

கஜன்களின் ‘பல்லிளிக்கும்’ அரசியல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கஜன்களின் ‘பல்லிளிக்கும்’ அரசியல்

புருஜோத்தமன் தங்கமயில்

தமிழீழ விடுதலைப் புலிகள், தனிநாடு கோரிப் போராடவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (கஜன்கள் அணி) செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் பேசிய விடயம், கடந்த வாரம் சர்ச்சையானது.

அதுபோல, அதேவாரத்தில் வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பில், பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டுவரத் தீர்மானித்திருந்த முன்னணி, இந்திய தூதரக அதிகாரியின் தொலைபேசி அழைப்பை அடுத்து, அந்த ஒத்திவைப்புப் பிரேரணையைக் கைவிட்டது. இது, வடக்கு மீனவர் அமைப்புகளால் நம்பிக்கைத் துரோகமாக விமர்சிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நெருக்கடியான காலப்பகுதியில், (குறிப்பாக, 2010 பொதுத் தேர்தலுக்கு அண்மித்த நாள்களில்) தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்வதாகக் கூறிக்கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் உள்ளிட்டவர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆரம்பித்தார்கள்.

முன்னணி  ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், அதை அரசியல் கட்சியாக முன்னிறுத்திய கஜேந்திரகுமார், அதைக் கட்சியாகப் பதிவு செய்வதைத் தவிர்த்து வந்தார். அதன்மூலம், முன்னணியை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில், தேர்தல்களில் போட்டியிட வைக்க முடியும் என்பது அவரது நிலைப்பாடு. அத்தோடு, முன்னணியைக் கட்சியாகப் பதிவு செய்தால், ‘மாற்ற முடியாத ஒற்றைத் தலைமை’ எனும் தன்னுடைய இடம், கேள்விக்கு உள்ளாக்கப்படும் எனும் அச்சமும் அவரைச் சூழ்ந்து கொண்டது.

அதனால், முன்னணியை புறத் தோற்றமாகக் காட்டினாலும், காங்கிரஸ் எனும் குடும்பக் கட்சியில் தங்கியிருக்க விரும்பினார். இந்த விடயம், மெல்லமெல்ல விமர்சனங்களாக மேலெழுந்த போது, “முன்னணி, அரசியல் கட்சியல்ல; அது ஓர் அரசியல் இயக்கம். அதைப் பதிவு செய்தால், எதிர்கால நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படும்” என்று, கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அறிவிப்பை கஜேந்திரகுமார் வெளியிட்டார்.

முன்னணியை ஒரு கட்சியாக முன்னிறுத்திய அதன் ஆதரவாளர்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும், கஜேந்திரகுமாரின் இந்த அறிவிப்பால், மக்களுக்கு பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஏனெனில், கடந்த காலங்களில் அவர்கள் முன்னணி, பதவி செய்யப்பட்ட கட்சியாக மாறும், காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் தொடர்ந்தும் தங்கியிருக்காது என்று பேசி வந்திருக்கிறார்கள்.

கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும், தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்புகளையும் நோக்கி, துரோகப் பட்டத்தை சூட்டி வந்திருக்கிறார்கள். அதுபோல, முன்னணியின் செயற்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் ஆதரவாளர்கள், உறுப்பினர்களை ‘துரோகி’கள் என்று அடையாளப்படுத்துவதில் குறியாக இருந்திருக்கிறார்கள்.

என்றைக்குமே கேள்விக்கு அப்பாலான தரப்பாக, தங்களை வைத்துக் கொள்ளவே அவர்கள் விரும்பினார்கள். தாங்கள், யாரை நோக்கியும் எந்தவிதமான கேள்வியையோ, விமர்சனத்தையோ, துரோகப் பட்டங்களையோ வழங்கலாம். ஆனால், தங்களை நோக்கி, மற்றவர்கள் அவ்வாறான செயற்பாடுகளை செய்யக் கூடாது என்று எதிர்பார்ப்பது, ஒரு வகையில் பாசிச மனநிலை. அந்த மனநிலையை முன்னணியின் தொண்டர்களிடமும் மிக நுட்பமாக அவர்கள் வளர்த்திருக்கின்றார்கள். ஒரு வகையில் அது மூளைச்சலவைக்கு ஒப்பானது. 

தங்களைக் கேள்விகள் இன்றி ஆதரித்தால், அவர்களின் பின்னணி, கடந்த கால வரலாறுகள் எல்லாவற்றுக்கும் புனித வட்டங்களை வரையத் தயாராக இருந்தார்கள். சுரேஷ் பிரேமசந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப், தர்மலிங்கம் சித்தார்த்தனின் புளொட் ஆகியவற்றுடன் தமிழ் மக்கள் பேரவையில் இயங்கியதும் ஒரே மேடையில் தமிழ்த் தேசியம் பற்றிய அறைகூவல்களை இணைந்து விடுத்ததும் வரலாறு.

ஈ.பி.ஆர்.எல்.எப்போடு இணைந்து தேர்தலில் போட்டியிடுவது வரையில் கஜன்கள் (கஜேந்திரகுமார், கஜேந்திரன்) தயாராக இருந்தார்கள். அப்போதெல்லாம், ஈ.பி.ஆர்.எல்.எப்பும் புளொட்டும் போராட்ட காலங்களில் புரிந்த படுகொலைகளும் குற்றங்களும் அவர்கள் கண்ணுக்கு தெரியாது. அதை மறந்து நின்று, ஒரே நிலைப்பாட்டில் பயணிப்பதாகக் கூறுமளவுக்கு இருந்திருக்கிறார்கள்.

ஆனால், தங்களின் எதிர்பார்ப்புகளை மற்றக் கட்சிகள் நிறைவேற்றவில்லை என்றால், அவர்களின் கடந்த கால வரலாறுகளை எல்லாம் தோண்டியெடுத்து, துரோக அரசியல் பற்றிப் பேசுவார்கள். இவ்வாறான நிலை, ஒரு கட்டத்தில் முன்னணியில் கஜன்களின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்து, கேள்வியெழுப்பிய மணிவண்ணன் தலைமையிலான குழுவை பிளவுபடவும் வைத்தது.

இன்றைக்கு, முன்னணியின் உரிமை கோரும் நடவடிக்கையில், மணி அணியும் ஈடுபட்டிருக்கின்றது. மணி அணியிலுள்ள பலரையும் நோக்கி, கஜன்கள் அணியினர், ‘ஆவா’ குழு உறுப்பினர்கள், கஞ்சா கடத்தல்காரர்கள் என்று பட்டம் சூட்டி விமர்சிக்கின்றார்கள். ‘ஆவா’ குழு உறுப்பினர்களாகவும் கஞ்சாக் கடத்தல்காரர்களாகவும் தற்போது கஜன்கள் அணியால் அடையாளப்படுத்தப்படும் இளைஞர்கள், கடந்த காலங்களில் கஜன்களின் ஆதரவாளர்களாக, ஒரு வகையில் பாதுகாப்பு படை போல அவர்களைச் சூழ இருந்தவர்கள்.

இப்படியான குறைபாட்டுச் சிந்தனையும் வறட்டுவாதமும் செய்யும் கஜன்கள் அணியினர்தான், கடந்த வாரம் தங்களின் இரு வேறு நிலைப்பாடுகளால் விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.

கடந்த மாத இறுதியில், வத்திராயன் பகுதி மீனவர்கள் இருவர் தொழிலுக்குச் சென்ற நிலையில், நான்கு நாள்களின் பின்னர் சடலங்களாக கரை ஒதுங்கினர். அவர்களின் மரணம், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய இழுவைப் படகுகளால் நிகழ்த்தப்பட்டதாக மீனவ அமைப்புகள் குற்றஞ்சாட்டி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன.

அந்த நிலையில், பாராளுமன்றத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ள இழுவை மடி தடைச்  சட்டத்தை, நடைமுறைப்படுத்தக் கோரும் சபை ஒத்திவைப்புப் பிரேரணையை கொண்டுவர, தமிழ்த் தேசிய  கூட்டமைப்பு தீர்மானித்தது. ஆனால், அவ்வாறான பிரேரணை ஒன்றைக் கொண்டுவர, முன்னணியின் கஜன்கள் முயன்ற போது, அதற்கான ஆதரவை வழங்கி, அதில் கலந்து கொண்டு பேசும் முடிவை கூட்டமைப்பு எடுத்தது.

ஆனால், அந்த ஒத்திவைப்புப் பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்படவிருந்த நாளில், சபாநாயகருக்கு கடிதம் ஒன்றின் மூலம், குறித்த பிரேரணையை மீளப்பெறுவதாக கஜேந்திரன் அறிவித்தார். அதற்கான காரணமாக, வடக்கு மீனவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, இந்திய தூதரக அதிகாரி, தொலைபேசியில்  வாக்குறுதி அளித்திருப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த காலங்களில், தென்னிலங்கையின் கட்சிகள், அமைப்புகளிடமோ இந்தியா, அமெரிக்கா, மேற்கு நாடுகள் உள்ளிட்ட தரப்புகளிடமோ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் கூட்டமைப்பு உள்ளிட்ட எந்தத் தரப்பை நோக்கியும், பேச்சுகளின் முடிவில் எழுத்து மூல உத்தரவாதத்தைக் கோரவில்லை என்று முன்னணி விமர்சித்து வந்திருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட்டமைப்பு ஆதரவளித்த தருணத்தில், எழுத்து மூலமான உத்தரவாதம் வாங்கப்படவில்லை என்கிற விடயம், கடந்த பொதுத் தேர்தலில், முன்னணியால் பெரும் பிரசாரமாகவே முன்னெடுக்கப்பட்டது. 

அப்படியான முன்னணி, தூதரக அதிகாரி ஒருவரின் தொலைபேசி அழைப்பில், வடக்கு மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும் என்ற நிலைப்பாட்டுக்கு எப்படி வந்தது என்ற கேள்வி எழுகின்றது? அதுவும், முன்னணியை இந்திய தூதர் அழைத்துப் பேசவில்லை; மாறாக, தூதரக அதிகாரி ஒருவரே பேசியிருக்கின்றார். அந்த அதிகாரி, இந்திய தூதரகத்தில் எந்தத் தரநிலையில் இருக்கின்றார் என்ற விடயம் கூறப்படவில்லை. இந்த விடயத்தை, கஜேந்திரகுமாரிடம் ஊடகங்கள் கேள்வியாக எழுப்பினால், “உத்தரவாதமளித்துவிட்டார்கள்; அதனால் நாங்கள் பிரேரணையை கைவிட்டோம். எழுத்துமூலம் எல்லாம் உத்தரவாதத்தை எப்படிக் கோர முடியும்” என்கிற தோரணையில் பதலளிக்கின்றார்.

இவ்வாறான நடவடிக்கையில் இன்னொரு தரப்பு ஈடுபட்டிருந்தால் துரோகி, கைக்கூலி ஆகிய பட்டங்களோடு, கஜன்கள் ஊடக சந்திப்புகளை நடத்தியிருப்பார்கள். அதுபோலவே, விடுதலைப் புலிகள் தனிநாடு கோரிப் போராடவில்லை என்கிற பொய்யை, இன்னொரு தரப்பினர் சொல்லியிருந்தால், “மாவீரர்களின் தியாயத்தைக் கொச்சைப்படுத்தி விட்டார்கள்” என்று கூறியிருப்பார்கள்.

புலிகள், தனி நாட்டுக்கான அர்ப்பணிப்போடு போராடினார்கள். சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, வடக்கு-கிழக்கு தமிழர் தாயகம் எனும் தேசக் கோட்பாட்டு அதிகாரப் பகிர்வு நிலை குறித்துப் பேசியிருக்கின்றார்கள். ஆனால், அவர்களின் இறுதி இலக்கு என்பது, சுயநிர்ணயம் சார்ந்தது. அது தமிழீழ தாயகம் என்றவாறாகவே இருந்தது. போராட்டத்தில் மக்களை இணையக் கோரிய போதெல்லாம் புலிகள், தனிநாட்டுக்காகவே அர்ப்பணிக்கக் கோரினார்கள்.

அப்படியான நிலையில், ஏட்டிக்குப் போட்டியாகப் பேச வேண்டும் என்பதற்காக கஜேந்திரன், “புலிகள் தனிநாடு கோரவில்லை” என்று கூறியவிடயம் சர்ச்சையானதும் ஊடக அறிக்கை என்கிற பெயரில், நிறைந்த எழுத்துப் பிழைகள், தகவல் பிழைகளுடன் மன்னிப்புக் கோரும் அறிக்கையை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடயத்தை சமாளிக்க முயன்றிருக்கிறார். மாறாக, திறந்த மனதோடு மன்னிப்புக் கோரும் முகமாக, அதைப் பார்க்க முடியவில்லை.

துரோகி அடையாளத்தை மற்றவர்களுக்கு சூட்டுவதற்கான அதிகாரத்தைக் கொண்டவர்கள் போல, எடுத்ததற்கெல்லாம் துரோகி பட்டத்தை சூட்டிய முன்னணியின் கஜன்கள்தான், இன்றைக்கு தங்களின் ‘பல்லிளிக்கும்’ அரசியலை கமுக்கமாகக் கடக்க நினைக்கிறார்கள்.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கஜன்களின்-பல்லிளிக்கும்-அரசியல்/91-291364

 

Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:

கஜன்களின் ‘பல்லிளிக்கும்’ அரசியல்

புருஜோத்தமன் தங்கமயில்

தமிழீழ விடுதலைப் புலிகள், தனிநாடு கோரிப் போராடவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (கஜன்கள் அணி) செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் பேசிய விடயம், கடந்த வாரம் சர்ச்சையானது.

 

கஜன்களின் அரசியலை புரிந்து கொண்டவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சியான செய்தி அல்ல. இநஇன்று புலிகள் தனி நாட்டுக்காக போராடவில்லை என்று சொல்கின்றவர்கள் நாளை இதற்கு மேலும் சொல்வார்கள்.
 

 

5 hours ago, கிருபன் said:

 

அதுபோல, அதேவாரத்தில் வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பில், பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டுவரத் தீர்மானித்திருந்த முன்னணி, இந்திய தூதரக அதிகாரியின் தொலைபேசி அழைப்பை அடுத்து, அந்த ஒத்திவைப்புப் பிரேரணையைக் கைவிட்டது. இது, வடக்கு மீனவர் அமைப்புகளால் நம்பிக்கைத் துரோகமாக விமர்சிக்கப்பட்டது.

முன்னணி  ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், அதை அரசியல் கட்சியாக முன்னிறுத்திய கஜேந்திரகுமார், அதைக் கட்சியாகப் பதிவு செய்வதைத் தவிர்த்து வந்தார். அதன்மூலம், முன்னணியை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில், தேர்தல்களில் அதுவும், முன்னணியை இந்திய தூதர் அழைத்துப் பேசவில்லை; மாறாக, தூதரக அதிகாரி ஒருவரே பேசியிருக்கின்றார். அந்த அதிகாரி, இந்திய தூதரகத்தில் எந்தத் தரநிலையில் இருக்கின்றார் என்ற விடயம் கூறப்படவில்லை. இந்த விடயத்தை, கஜேந்திரகுமாரிடம் ஊடகங்கள் கேள்வியாக எழுப்பினால், “உத்தரவாதமளித்துவிட்டார்கள்; அதனால் நாங்கள் பிரேரணையை கைவிட்டோம். எழுத்துமூலம் எல்லாம் உத்தரவாதத்தை எப்படிக் கோர முடியும்” என்கிற தோரணையில் பதலளிக்கின்றார்.

 

 

இந்திய அரசை நம்பமாட்டோம், இந்திய இலங்ககை ஒப்பந்தம் கொடுத்த 13 இனை நிராகரிப்போம் என்று சூளுரைத்தவர்கள் இந்திய தூதரக அதிகாரி ஒருவரின் தொலைபேசிக்கே அச்சப்படுகின்றனர். 

 

5 hours ago, கிருபன் said:

 

கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும், தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்புகளையும் நோக்கி, துரோகப் பட்டத்தை சூட்டி வந்திருக்கிறார்கள். அதுபோல, முன்னணியின் செயற்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் ஆதரவாளர்கள், உறுப்பினர்களை ‘துரோகி’கள் என்று அடையாளப்படுத்துவதில் குறியாக இருந்திருக்கிறார்கள்.

 


இப்ப அவர்கள், குணா கவியழகனுக்கு துரோகிப் பட்டம் கொடுத்து கொண்டு இருப்பதில் பிசியாக உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

இப்ப அவர்கள், குணா கவியழகனுக்கு துரோகிப் பட்டம் கொடுத்து கொண்டு இருப்பதில் பிசியாக உள்ளார்கள்.

குணாவுக்கு இதொன்றும் புதிது அல்லதானே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனித் தங்கமயிலுக்கு இருக்கு அர்ச்சனை!😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.