Jump to content

யாழில் 3 மாத கைக்குழந்தையுடன் ஹெரோயின் விற்ற இளம்பெண் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளம் பெண்ணை யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

அரியாலை, பூம்புகார் பகுதியை சேர்ந்த 33 வயதான பெண்ணொருவரே ஹெரோயினுடன் சிக்கினார். பிறருக்கு சந்தேகம் ஏற்படாத விதத்தில் தனது 3 மாத கைக்குழந்தையுடன் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று, யாழ் மாவட்ட செயலகத்திற்கு  அண்மையான பிரதேசத்தில் வைத்து அவர் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும் வேளை பெண்ணிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தூய ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இதன் பெறுமதி 5 தொடக்கம் 6 இலட்சம் ரூபாவாகும்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் ஹெரோயின் விற்பனையில் ஈடுபடும் உள்ளூர் தரகர்கள் தொடர்பிலும் கொழும்பு முகவர்கள் தொர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

https://pagetamil.com/2022/02/17/யாழில்-3-மாத-கைக்குழந்தைய/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போதை வஸ்து  வியாபாரிகள், கைக்குழந்தையுடன் ஹெரோயின் வியாபாரம் செய்தால்,
கண்டு பிடிக்க மாட்டார்கள் என்று... இவரை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.  
ஆனாலும்... அப்பெண் செய்தது... மாபெரும் குற்றமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களவு, விபசாரம் போன்ற தவறுகள் மன்னிக்கப்படலாம். ஆனால் இவ்வாறான கொலைக்கு சமானமான போதைப்பொருள் விற்பனை ஒருபோதும் மன்னிக்கப்படக்கூடாது. கடும் தண்டனை வழங்கப்படவேண்டும். இந்தோனேஷியா மலேசியா போன்ற நாடுகளில் இவ இருந்திருந்தால் கெலீம ஸ்வர்க ராஜ்ய தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பெண்ணின் கடந்த கால நடவடிக்கைகள் முதலில் தெரியணும் எடுத்தவுடன் கவுட்டு  கொட்டினது போல் சட்டங்களை அப்பாவி மனிதர்கள் மேல் பாயவிட கூடாது .

சிலவேளை அந்த குழந்தைக்கு பால்மா போன்ற அத்தியாவசிய பொருள்கள் வாங்க பணமில்லாமல் இருந்ததை பின்னால்  இருக்கும் மாபியா கும்பல் உபயோகப்படுத்தி இருக்கலாம் அல்லது ஆவா குறூப்பை பிடிக்க வக்கத்து  இருக்கும் இலங்கை போலீஸ் திணைக்களத்தின் செட்டப் பிடிப்பாக இருக்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

10 கிராம் தூய ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

 

18 hours ago, பெருமாள் said:

இதன் பெறுமதி 5 தொடக்கம் 6 இலட்சம் ரூபாவாகும்.

நம்மவர்கள் தானே வாங்குகிறார்கள்?

Link to comment
Share on other sites

8 hours ago, வாலி said:

களவு, விபசாரம் போன்ற தவறுகள் மன்னிக்கப்படலாம். ஆனால் இவ்வாறான கொலைக்கு சமானமான போதைப்பொருள் விற்பனை ஒருபோதும் மன்னிக்கப்படக்கூடாது. கடும் தண்டனை வழங்கப்படவேண்டும். இந்தோனேஷியா மலேசியா போன்ற நாடுகளில் இவ இருந்திருந்தால் கெலீம ஸ்வர்க ராஜ்ய தான்!

Marlboro rot

பாவம் அந்த இளம்பெண் கெரோயின் பொதிகளில், போதைப்பொருள் கொல்லும் என்று எழுதி, வெளிப்படையாகவே விற்றிருந்தால் பிரச்சனையே வந்திராது. 😋🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, வாலி said:

களவு, விபசாரம் போன்ற தவறுகள் மன்னிக்கப்படலாம். ஆனால் இவ்வாறான கொலைக்கு சமானமான போதைப்பொருள் விற்பனை ஒருபோதும் மன்னிக்கப்படக்கூடாது. கடும் தண்டனை வழங்கப்படவேண்டும். இந்தோனேஷியா மலேசியா போன்ற நாடுகளில் இவ இருந்திருந்தால் கெலீம ஸ்வர்க ராஜ்ய தான்!

நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள்....போதை பொருளை வைத்திருந்தாலோ,போதை பொருளை அருந்தியிருந்தாலோ .....போதை தெளிந்தவுடன் புத்திமதி கூறி அவர்களை திருத்தி ஒரு பக்கட் போதை பொருளையும் கொடுத்து மன்னித்து விடுவோம் ...அது தான் நாங்கள் அவர்களுக்கு காட்டும் "கெலீம ஸ்வர்க ராஜ்ய"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள்....போதை பொருளை வைத்திருந்தாலோ,போதை பொருளை அருந்தியிருந்தாலோ .....போதை தெளிந்தவுடன் புத்திமதி கூறி அவர்களை திருத்தி ஒரு பக்கட் போதை பொருளையும் கொடுத்து மன்னித்து விடுவோம் ...அது தான் நாங்கள் அவர்களுக்கு காட்டும் "கெலீம ஸ்வர்க ராஜ்ய"

அந்த பெண்ணுக்கு தண்டனை வேணும் அதுவும் தீர விசாரித்து   அந்த பெண்ணிடம் விற்க  கொடுத்த திமிங்கிலம் அரசியல் செல்வாக்குடன் சொகுசாக உலா வந்துகொண்டு இருக்கும் போதை வியாபாரம் எந்தகாலத்திலும் அனுமதிக்க முடியாத ஒன்று .அந்த பெண்ணின் கைபேசியில் இரண்டாம் மூன்றாம் நிலையில் உள்ள திமிங்கிலம்கள் தொடர்பு எண் கட்டாயம் இருக்கும் அவர்களை பிடித்து விசாரிக்கும் முறையில் விசாரிக்க உண்மை வரும் .

அதைவிட்டு பிடிபட்ட பெண்ணுக்கு மாத்திரம் கடும் தண்டனை கொடுப்பது இன்னும் பலர் உள்ளே வருவினம் மெயின் திமிங்கிலம் இன்னும் சிங்கள இனவாத  அரச ஆசியுடன் உலா வரும் எது நல்லது என்று முடிவெடுத்து கொள்ளுங்கள் .

மாட்டுக்கள்ளன் ஆட்டுக்கள்ளனுக்கு அந்த இடத்திலே கட்டி வைத்து அடித்தால் தான் அடுத்தமுறை வராயினம் இந்த விடயம் அதுபோல் அல்ல இனத்தையே கருவறுக்கும் செயல் மெயின் திமிங்கிலம் மாட்டுப்படணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போதைப்பொருள் என்பது வடக்கில் நான் அறிவது புலிகள் நயவஞ்சகமாக அழிக்கப்பட்ட பின்தான். வேண்டுமென்றே நமது இளம் சமுதாயத்தை, கலாச்சாரத்தை சீரழிக்க  குறி வைத்து புகுத்தப்பட்டது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

போதைப்பொருள் என்பது வடக்கில் நான் அறிவது புலிகள் நயவஞ்சகமாக அழிக்கப்பட்ட பின்தான். வேண்டுமென்றே நமது இளம் சமுதாயத்தை, கலாச்சாரத்தை சீரழிக்க  குறி வைத்து புகுத்தப்பட்டது.  

கஞ்சா வழக்கில் கைது செய்யப் பட்டவர்களை விடுவிக்க….
சுமந்திரனே வழக்காடிய கேவலமும் நம் மண்ணில் நடந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.