Jump to content

"என்னுடைய நிர்வாணப் படங்களை டெலிகிராம் நீக்காதது ஏன்?"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமூக ஊடகமான டெலிகிராம் செயலியில், பெண்களின் அந்தரங்க படங்கள் பெருமளவில் பகிரப்பட்டு வருவதை, பிபிசியின் கள விசாரணை கண்டறிந்துள்ளது. இது அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தவும், மிரட்டவும், அவமானப்படுத்தவும் பகிரப்படுகிறது.

எச்சரிக்கை: இந்த கட்டுரை பாலியல் தொடர்பான விஷயங்களை உள்ளடக்கியது.

ஒரே விநாடியில், சாரா தனது நிர்வாணப் படம் டெலிகிராம் செயலியில் வெளியாகி, பகிரப்பட்டிருப்பதை அறிந்தார். அவரது வாழ்க்கை முற்றிலும் மாறியது. அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளும்  அதில் இணைக்கப்பட்டிருந்தன; அவரது அலைபேசி எண்களும் இருந்தன.  அடையாளம் தெரியாத  ஆண்கள் மேலும்  புகைப்படங்களை கேட்டு, அவரை தொடர்ந்து தொடர்பு கொண்டனர். "என்னை  ஒரு பாலியல் தொழிலாளி போல் அவர்கள் நினைக்க வைத்தனர். ஏனென்றால், நான் என்னுடைய அந்தரங்கப் படங்களை பகிர்ந்தேன் (அவர்கள்நினைக்கிறார்கள்). ஒரு பெண்ணாக எனக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது போல் இருந்தது",என்று அவர் கூறுகிறார்.

 

Photograph of Sara

 

படக்குறிப்பு,

தனதுபுகைப்படங்கள் டெலிகிராமில் பகிரப்பட்டது முதல், சாரா வெளியில் செல்வதை தவிர்த்தார்.

சாரா  (அவரது நிஜ பெயரல்ல) ஒரு நபருடன் அந்த புகைப்படத்தை பகிர்ந்தார்.  ஆனால் அது,18,000 பின்தொடர்பவர்கள் கொண்ட  ஒரு டெலிகிராம் குழுவில் பகிரப்பட்டது. அவர்களுள் கியூபாவின் ஹாவனா நகரிலுள்ள அவரது பகுதிகளிலிருந்து இருப்பவர்கள்.  இப்போது வீதிகளில் இருக்கும்  அடையாளம் தெரியாத நபர்கள் அவரது நிர்வாண புகைப்படத்தைப் பார்த்திருப்பார்கள் என்று அவர் அஞ்சுகிறார். "நான் வெளியில் செல்ல விரும்பவில்லை. என் நண்பர்களுடன் நான் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை.  நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதுதான் உண்மை". என்கிறார்.

இதில் அவர் மட்டும் இல்லை.  டெலிகிராம் செயலியை  பல மாதங்களாக ஆய்வு செய்ததில்,  குறைந்தப்பட்சம் 20 நாடுகளில்,  ரகசியமாகப் படப்பிடித்த அல்லது திருடப்பட்ட அல்லது தவறுதலாக வெளியான ஆயிரக்கணக்கான படங்களை,பல குழுக்கள் பகிர்வது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை செயலி சரிசெய்கிறது என்பதற்கு மிக குறைந்த ஆதாரமே உள்ளது.  

கியூபாவில்இருந்து ஆயிரக்கணக்கான  மைல்களை கடந்து உள்ள நிகர், தனது புதியவாழ்க்கை வாழப் பழகிக்கொண்டிருக்கிறார்.  

 
Photograph of Nigar
 
படக்குறிப்பு,

தன் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன் என்று நிகர் கூறுகிறார்.

அவர் அஜர்பைஜான் நாட்டைச் சேர்ந்தவர். ஆனால், தனது தாய்நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.  கடந்த 2021 ஆண்டு, அவர் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ, அவரது குடும்பத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகு, டெலிகிராமில் உள்ள குழுவுக்கு பகிரப்பட்டது.  

"என் அம்மா அழத்தொடங்கிவிட்டார். ஒரு வீடியோ எனக்கு அனுப்பப்பட்டது என்று கூறினார். நான் நொறுங்கிப் போனேன்; முற்றிலும் நொறுங்கிப் போனேன்", என்றார்.

இந்த வீடியோ 40,000 பேர் கொண்ட  ஒருகுழுவில்  பகிரப்பட்டது.  இதில்,   நிகரின், தற்போது முன்னாள் கணவரின் முகம்மறைக்கப்பட்டுள்ளது.  ஆனால், அவரது முகம் தெளிவாக தெரிகிறது.

அஜர்பைஜான் அதிபரை கடுமையாக விமர்சிக்கும் விமர்சகரான தனது சகோதரரை மிரட்டவே, நிகரின் முன்னாள் கணவர் அவரை ரகசியமாக படம் பிடித்திருக்கிறார் என்று அவர் நம்புகிறார்.  அவரது சகோதரர் தனது புரட்சியை நிறுத்தாவிட்டால்,  டெலிகிராமில் இந்த வீடியோ பகிரப்படும் என்று அவரது தாய்க்கு கூறப்பட்டது.    

"உங்களை  ஓர் அவமானமாக பார்ப்பார்கள். திருமணமானவர் என்று யார் அக்கறை எடுத்துகொள்வார்கள்? என்று கேட்கிறார் நிகர்.

இந்த வீடியோ குறித்து முன்னாள் கணவரிடம் அவர் விசாரித்து இருக்கிறார். ஆனால், தான் அதை செய்யவில்லை என்று மறுத்துள்ளார். அவரிடம் பேச முயற்சி செய்தோம். ஆனால், அவர் பதில் அளிக்கவில்லை.

நிகர் இன்னும் அதிலிருந்து மீண்டு, தனது வாழ்வை முன் நடத்திச் செல்ல போராடிக்கொண்டு இருக்கிறார். "என்னால் மீளமுடியவில்லை.  நான் வாரத்திற்கு இரண்டு முறை மனநல  ஆலோசகரைப் பார்க்கிறேன். அவர்கள் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறுகின்றனர். என்னால் மறக்க முடியுமா என்று அவர்கள் கேட்கின்றனர். நான் முடியாது என்கிறேன்", என்று கூறுகிறார்.

டெலிகிராம் செயலியில் நிகர் மற்றும் சாராவின் புகைப்படங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் பதிலளிக்கவில்லை. அவர்களின் அனுபவம் மிகவும் வேறாக இருந்தது.

ரஷ்யா முதல் பிரேசில் வரை,  கென்யா முதல் மலேசியா வரை,  டெலிகிராம் செயலியில் 18 சேனல்களையும், 24 குழுக்களையும் பிபிசி கண்காணித்தது.  அதிலுள்ள மொத்தம் சப்ஸ்கிரைபர்கள் 2 மில்லியன் பேர்.

 
Screenshot from inside a Telegram channel says "Secret Archives 18" and "Only young girls"

வீட்டு முகவரி முதல் பெற்றோர்களின் அலைபேசி எண்கள் வரையிலான தனிப்பட்ட விவரங்கள், தெளிவான புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டுள்ளன.

இந்த குழுக்களின் நிர்வாகிகள் தானியங்கி கணக்கிற்கு தங்களின் சக மாணவர்கள்,  ஊழியர்கள், முன்னாள் இணையர்களின்  அந்தரங்கப் படங்களைப் பகிருமாறு தங்கள் குழு உறுப்பினர்களைக் கேட்பதை நாங்கள் கவனித்தோம். அதனால், அனுப்புநரின் அடையாளம் தெரியாமல் அவை வெளியிடப்படுக்கின்றன.

உலகம் முழுவதும்  ஒரு பில்லியனின் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இப்போது டெலிகிராம் செயலியில் உள்ளனர் என்று டெலிகிராம் கூறுகிறது.  அதில் தனிநபர் தரவுகள் குறித்த விஷயங்கள் காரணமாக பலர் ஈர்க்கப்பட்டனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாட்ஸ் ஆப்பை விட்டு வெளியேறி, டெலிகிராம் செயலிக்கு மாறினர்.  இதற்கு காரணம், வாட்ஸ் ஆப் செயலி தனது தனிநபர் விதிமுறைகளை  மாற்றியதுதான்.

ஊடக தணிக்கை உள்ளநாடுகளில் ஜனநாயக ஆதரவாளர்களிடையே டெலிகிராம் நீண்ட காலமாக பிரபலமாக உள்ளது.  அதில், பயனர்கள் தங்கள் பெயர் அல்லது தொலைபேசி எண்ணைப் பகிராமல் பதிவிடலாம்.  மேலும், 200,000 உறுப்பினர்கள் வரை பொது அல்லது தனிப்பட்ட குழுக்களை உருவாக்கலாம் . மேலும், எண்ணற்ற நபர்களுக்கு ஒளிபரப்பு கூடிய சேனல்களை உருவாக்கலாம்.

 
Crowd of pro-democracy protesters waving red and white flags in Belarus

பட மூலாதாரம்,EPA

 
படக்குறிப்பு,

பெலாரூஸ் பகுதியில் அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்த டெலிகிராம் பயன்படுத்தப்பட்டது

தனியுரிமைக்கான டெலிகிராமின் பெயர் பெற்று  இருந்தாலும், "சீக்ரட் சாட்" (secret chat) விருப்பத் தேர்வில் மட்டுமே எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்குகிறது.  இது அக்குறுஞ்செய்திகளை பரிமாற்றிக் கொள்ளும்  இருவர் மட்டுமே  அதனைப் பார்க்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.  சிக்னல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பாதுகாப்பான சாட் செயலி பயன்பாடுகளில் இது டிஃபால்ட் செட்டிங் (default setting) ஆக உள்ளது.

மற்ற தளங்களில்இருந்து தடை செய்யப்பட்டவர்கள் உட்பட, குறைவான ஒழுங்குபடுத்தப்பட்ட தளத்தை தேடும் பயனர்களையும் இந்த தளம் ஈர்க்கிறது.

"டெலிகிராம் மற்றும் அதன் உரிமையாளரின் கூற்றுப்படி, அவர்கள் பயனர்களை தணிக்கை செய்ய விரும்பவில்லை", என்று டிஜிட்டல் உரிமைகள் குழுவான அக்ஸஸ் நவ்-வின் (AccessNow) தொழில் நுட்ப சட்ட ஆலோசகராக நடாலியா கிராபிவா கூறுகிறார்.

ஆனால், டெலிகிராமின் இந்த லேசான அல்லது மிதமான அணுகுமுறை, அந்தரங்கப் படங்களை வெளியிடுதல் மற்றும் பகிர்வுக்கான புகலிடமாக இந்த செயலி மாறியுள்ளது என்பதை எங்களின் ஆய்வு காட்டுகிறது.

டெலிகிராமில் அந்தரங்கப் படங்களைச் சம்மதிக்காத பகிர்வைச் கையாளுவதற்கான பிரத்யேகக் கொள்கை இல்லை, ஆனால் அதன் சேவை விதிமுறைகள் பயனர்கள் "பொதுவாகக் காணக்கூடிய டெலிகிராம் சேனல்கள், போட்கள் போன்றவற்றில் சட்டவிரோத ஆபாச உள்ளடக்கத்தை இடுகையிட வேண்டாம்" என்று ஒப்புக்கொள்ள வைக்கிறது.

டெலிகிராமில் அந்தரங்கப் படங்களைச் அனுமதியின்றி பகிரப்படும் பிரச்னைக்கு தீர்வு காண பிரத்யேகக் கொள்கை எதுவும் இல்லை. ஆனால், பயனர்களை "பொதுவாகக் காணக்கூடிய டெலிகிராம் சேனல்கள், போட்கள் (Bots) போன்றவற்றில் சட்டவிரோதமான, ஆபாசமான செய்திகளை பதிவு செய்ய வேண்டாம்", என்று அதன் சேவை விதிமுறைகளை ஒப்புக்கொள்ள வைக்கிறது.

மேலும், இது பொது மற்றும் தனிப்பட்ட குழுக்களும், சேனலகளும், பயனர்களும் ஆபாசமான பகிர்வு குறித்து புகாரளிக்கக்கூடிய வசதிகளையும் கொண்டுள்ளது.

 
Screenshot of Telegram's in-app reporting tool for reporting content that breaks their terms of service.

டெலிகிராம் தனதுகொள்கைகளை எவ்வளவு கடுமையாகச் செயல்படுத்தியது என்பதைச் சோதித்து, 100 ஆபாசப் படங்கள் என ஆப்ஸ்-இன்-ஆப்ரிப்போர்ட் வசதி மூலம் கண்டறிந்து புகாரளித்தோம்.  ஒரு மாதம் கழித்து, அதில் 96 படங்கள் அப்படியே இருந்தது. மேலும், நான்கு படங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் அவற்றை கொண்டுள்ள குழுக்களை எங்களால் பயன்படுத்த முடியவில்லை.

மேலும் கவலையளிக்கும் விதமாக, இந்தக் குழுக்களை நாங்கள் ஆய்வு செய்து கொண்டிருந்த போது, ரஷ்யாவிலிருந்து வந்த ஒரு பயனர் கணக்கு, குழந்தைகளை பாலியல் துன்புறுத்த96ல் செய்த வீடியோக்கள் அடங்கிய கோப்பை, ஒரு காபியின் விலையை விடக் குறைவாக எங்களுக்கு விற்க முயற்சி செய்தது.

நாங்கள் அதை டெலிகிராம் மற்றும் பெருநகர காவல்துறையிடம் புகாரளித்தோம், ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகும், அந்த பதிவும் சேனலும் அப்படியே இருந்தன.  நாங்கள் டெலிகிராம் மீடியா குழுவைத் தொடர்பு கொண்ட பிறகே அந்த கணக்கு நீக்கப்பட்டது.

தளர்வான தணிக்கை முறை இருந்த போதிலும், டெலிகிராம் குறிப்பிட்ட சில பகிர்வுகள், பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.

எங்களுக்கு அனுப்பபட்ட வீடியோக்கள் இருக்கும் காரணத்தால், ஆப்பிள் நிறுவனம் டெலிகிராமை அதன் ஆப் ஸ்டோரில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு நீக்கியது. அதன் பின், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் படங்கள் குறித்து டெலிகிராம் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த தளத்தில் பெருமளவு ஐஎஸ் அமைப்பின் உள்ளடக்கத்தைக் கொண்ட பதிவுகளை நீக்க, 2019 ஆம் ஆண்டு, ஈ.யூ குற்றவியல் நிறுவனமான யூரோபால் (Europol) உடன் இணைந்து செயல்பட்டது.

"டெலிகிராம் தீவிரவாதம் தொடர்பான உள்ளடக்கப் பதிவுகள் அல்லது மிகவும் தீவிரமான அரசியல் உள்ளடக்கங்களை நீக்க முடியும்; அச்செயலி அத்தகையவற்றை நீக்குகிறது என்பதை நாங்கள் அறிவோம்," என்கிறார் ஆக்ஸ்போர்டு இன்டர்நெட் இன்ஸ்டிட்யூட்டின் (Oxford Internet Institute) ஆராய்ச்சியாளர் டாக்டர் அலியாக்சாண்டர் ஹெராசிமென்கா (Aliaksandr Herasimenka). 

 
Members of the far-right group Proud Boys attend a rally in Portland, Oregon, U.S. September 26, 2020

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

Members of far-right groups moved to Telegram

ஆனால், அந்தரங்கப் படங்களை நீக்குவது என்பது அதன் முக்கிய நோக்கமாக இல்லை என்று தெரிகிறது. பெயர் வெளியிட விரும்பாத டெலிகிராமின் உள்ளடக்க மதிப்பிட்டாளர்கள் ஐந்து பேரிடம் நாங்கள் பேசினோம். தானியங்கி தொழில்நுட்ப அமைப்பு மூலம் தங்களுக்கு பயனர்களிடம் இருந்து புகார்கள் வரும் என்று எங்களிடம் கூறுகின்றனர். அதில், அவர்கள் ஸ்பேம் மற்றும் 'ஸ்பேம் இல்லை' என்று இரண்டாகப் பிரிப்பார்கள் என்று கூறுகின்றனர்.

அவர்கள் அந்தரங்கப் படங்களைத் தீவிரமாக தேட மாட்டார்கள் என்று கூறுகின்றனர். அவர்களுக்கு அறிந்தவரை, டெலிகிராம் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence ) பயன்படுத்துவதில்லை என்று கூறுகின்றனர். இதனால், பெண்கள் தாங்களே முன்வந்து சில முயற்சிகளை எடுக்கின்றனர்.

 
Photograph of Joanna
 
படக்குறிப்பு,

Joanna reported images that were shared without consent in Telegram

ஜோன்னாவுக்கு 13 வயதாக இருந்தபோது, ஒரு மோசமான மலேசிய டெலிகிராம் குழுவில், அவரது நிர்வாணப் புகைப்படம் வெளியானதை கண்டுபிடித்தார்

அவர் அந்த குழுவில் சேர ஒரு போலியான டெலிகிராம் கணக்கை உருவாக்கினார், அங்கு அவர் அடையாளம் தெரியாமல் அவரது நிர்வாண படங்களைத் தேடி அவற்றைப் புகார் அளித்தார்.  அவர் தான் கண்டுபிடித்ததை தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

தீவிரமாக ஊடகங்கள் அளித்த அழுத்தத்தின் மத்தியில், அந்த குழு இறுதியில் மூடப்பட்டது.  ஆனால் எங்கள் ஆய்வின் போது, குறைந்தது இரண்டு போலியான குழுக்கள் ஒரே மாதிரியான படங்களைப் பகிர்வதைக் கண்டறிந்தோம்.

"சில நேரங்களில் எதுவும் செய்யமுடியாத உதவியற்றவராக உணர்வீர்கள். ஏனென்றால் இந்தக் குழுக்களை நீக்க நாங்கள் பல முயற்சிகள் செய்ய முயற்சித்தோம். ஆனால் அவை மீண்டும் பகிரப்படுகிறது. இதனால், உண்மையில் இதற்கு ஒரு முடிவு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை," என்று ஜோன்னா கூறுகிறார்.

டெலிகிராம் எங்கள் நேர்காணல் செய்ய மறுத்துவிட்டது. ஆனால் ஒரு அறிக்கையில், அது பொது தளங்களை முன்கூட்டியே கண்காணிக்கிறது என்றும், அதன் சேவை விதிமுறைகளை மீறும் உள்ளடக்கத்தைப் பற்றிய பயனர் புகார்களை விசாரிக்கிறது என்றும் கூறியுள்ளது அனுமதியின்றி மக்களின் அந்தரங்கப் படங்களை அதன் தளங்களில் வெளியிடுவது அனுமதிக்கப்படுமா அல்லது அவை நீக்கப்படுமா என்பதை டெலிகிராம் உறுதியாக எதுவும் கூறவில்லை.

டெலிகிராமில் சில பொதுச் சேனல்களில் வெளியிடப்பட்ட முதலீட்டுடன் கூடிய விளம்பரங்கள் - நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) இந்த தளத்தை பணமாக்க விரும்புகிறார் என்பதைக் குறிக்கிறது

இது டெலிகிராம் மற்றும் அதன் நிறுவனர் மீது அழுத்தத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக போட்டியாளர்களுடன் ஒத்துப்போகிறது. இது நெருக்கமான படங்களைப் பகிர்வதற்கு எதிரான கொள்கைகளை அறிமுகப்படுத்தத் தொடங்கியது.

இந்த நிறுவனம் புதிய சந்தைகளுக்குச் சென்று வருவாயை ஈட்டத் தொடங்கும் போது, அதிக கட்டுப்பாட்டை கொண்ட நிலையை எவ்வளவு காலம் எதிர்க்கும் என்பதைப் பார்க்க வேண்டும்.

டெலிகிராமில் தங்களின் அந்தரங்கப் படங்களைப் பகிர்வதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, ஒரு மாற்றம் விரைவில் வரவேண்டும்.

பிபிசி உலகச் சேவை டிஸ் இன்ஃபார்மேஷன் குழு நடந்திய ஆய்வு (Investigation by the BBC World Service Disinformation team.)

டெலிகிராம் செயலியில் பகிரப்படும் பெண்களின் நிர்வாணப் படங்கள்: தடுக்க முடியாதது ஏன்? பிபிசி புலனாய்வு - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.